என் மலர்
நீங்கள் தேடியது "Mysuru Dasara"
- கொஞ்சம் நேரம் உங்களால் உட்கார்ந்து இருக்க முடியாதா?
- நான் ஒரு தடவை சொன்னா உங்களுக்கு புரியலயா?
மைசூரு தசரா திருவிழா உலக புகழ் பெற்றது. இந்த தசரா விழா மைசூருவில் இன்று தொடங்கியது. தொடக்க விழாவில் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும்போது சிலர் இருக்கையில் இருந்து எழுந்து கூச்சலிட்டு ஏதோ கூறிக்கொண்டே இருந்தனர். இதனால் சித்தராமையாக நிதானத்தை இழந்தார்.
நிதானத்தை இழந்து அவர் ஆவேசமாக பேசியதாவது:-
கொஞ்சம் நேரம் உங்களால் உட்கார்ந்து இருக்க முடியாதா? உட்காருங்கள். அது யாரு? நான் ஒரு தடவை சொன்னா உங்களுக்கு புரியலயா? நீங்கள் ஏன் இங்க வந்தீர்கள்? நீ வீட்டிலேயே இருந்திருக்கனும்" என்றார்.
காவல் அதிகாரிகளிடம் அவர்களை வெளியேற விட்டு விடாதீர்கள். அரைமணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் உட்கார முடியாதா? அப்படி என்றால், ஏன் இந்த விழாவில் பங்கேற்க வந்தீர்கள்.
இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.
மைசூரி தசாரா விழாவை தொடங்கி வைக்க Booker Prize வின்னர் பானு முஷ்தாக்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், நீதிமன்றம் அழைப்பு விடுத்ததை தடைசெய்ய மறுப்பு தெரிவித்துவிட்டது.
கர்நாடக மாநிலம் மைசூரு நகரில் ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு 10 நாட்கள் அரசு சார்பில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான தசரா விழா இன்று தொடங்கி 19-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இது 408-வது ஆண்டு தசரா விழாவாகும். இந்த ஆண்டு மழையால் குடகு, தட்சிணகன்னடா ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டதால், தசரா விழாவை எளிமையாக நடத்த அரசு முடிவு செய்தது.

தசரா விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. மைசூரு அரண்மனையில் தர்பார் நடக்கிறது. இதில் தங்க சிம்மாசனத்தில் இளவரசர் யதுவீர் அமர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்கிறார். இந்த தர்பார் விழா நிறைவடையும் 19-ந்தேதி வரை நடக்கிறது.
வரலாற்று சிறப்பு மிக்க தசரா விழாவையொட்டி மைசூரு நகர் முழுவதும் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இரவில் மைசூரு நகர் மின்னொளி அலங்காரத்தில் ஜொலிக்கிறது. மைசூருவுக்கு வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. இதனால் மைசூரு நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. #MysuruDasara #Karnataka #Kumaraswamy #SudhaMurthy






