search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jharkhand"

    • கேட் மீது டிராக்டர் மோதியதும் டிரைவர் கீழே இறங்கி தப்பிச் சென்றுவிட்டார்.
    • ரெயில்வே கிராசிங்கில் பணியாற்றிய கேட் மேன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    பொகோரோ:

    ஜார்க்கண்ட் மாநிலம் பொகோரா மாவட்டம், போஜுதிஹ் ரெயில் நிலையம் அருகே சந்தால்டிஹ் ரெயில்வே கிராசிங் உள்ளது. நேற்று மாலையில் அந்த வழித்தடத்தில் டெல்லி-புவனேஸ்வர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. இதனால் ரெயில்வே கிராசிங் மூடப்பட்டது. ரெயில் வந்துகொண்டிருந்தசமயத்தில், அந்த கிராசிங்கின் கேட்டில் ஒரு டிராக்டர் திடீரென மோதியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எனினும் ரெயில் டிரைவர் உடனடியாக பிரேக் பிடித்து ரெயிலை நிறுத்தினார். இதனால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

    ரெயில்வே கேட் மீது டிராக்டர் மோதியதும் டிரைவர் கீழே இறங்கி தப்பிச் சென்றுவிட்டார். அந்த டிராக்டர், ரெயில்வே அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில்வே கிராசிங்கில் பணியாற்றிய கேட் மேன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    நாட்டையே உலுக்கிய ஒடிசா ரெயில் விபத்து நிகழ்ந்து சில நாட்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பகா நகர் பஜார் ரெயில் நிலையத்துக்கு முன்பு பிரதான ரெயில் பாதையில் செல்ல வேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் லூப் லைனில் சென்று சரக்கு ரெயில் மீது மோதியது. இதன் காரணமான தடம்புரண்ட ரெயில் பெட்டிகள், அருகில் இருந்த தண்டவாளத்தில் சிதறி விழ, அந்த பாதையில் வந்த மற்றொரு விரைவு ரெயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.

    இந்த கோர விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ரெயில்கள் மோதலுக்கு மனித தவறு காரணமா? அல்லது சிக்னல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமா? என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

    • ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.
    • ெரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.

     திருப்பூர்:

    ஆலப்புழா, மங்களூரு ரெயில்கள் புறப்படும், சென்று சேரும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.தினமும் மாலை 4:05 மணிக்கு கேரள மாநிலம், ஆலப்புழாவில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள் காலை 5:50 மணிக்கு சென்னை சென்று சேரும். இன்று முதல் இந்த ரெயில் மாலை 3:40 க்கு ஆலப்புழாவில் இருந்து புறப்படும். 20 நிமிடம் முன்பாக காலை 5:30 மணிக்கு சென்று சேரும். இந்த ெரயில் திருப்பூருக்கு இரவு 11 மணிக்கு பதிலாக இரவு 10:33 க்கே வந்து விடும்.இதுவரை மதியம் 1:30 க்கு மங்களூருவில் புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ெரயில் (12602) இனி மதியம் 1:55க்கு புறப்படும். சென்னைக்கு மறுநாள் காலை 5:35மணிக்கு பதில் மாலை 6:10மணிக்கு சென்று சேரும். இந்த ெரயில் திருப்பூருக்கு இரவு 10:30மணிக்கு பதிலாக10:45 மணிக்கு வரும்.

    ெரயில் பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்க, ஜார்கண்ட் மாநிலம் ஹட்டியாவில் இருந்து எர்ணாகுளத்துக்கு நவம்பர் 14, 21, 28ந் தேதி சிறப்பு ெரயில் இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக நவம்பர் 17, 24, டிசம்பர் 1ம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து ஹட்டியாவுக்கு ெரயில் இயக்கப்படும். இந்த ெரயில் அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக பயணித்து ஆந்திரா, ஒடிசா மாநிலங்களை கடந்து ஜார்கண்ட் மாநிலம் ஹட்டியா சென்று சேர்கிறது. 5 ஏ.சி., 11 படுக்கை வசதி, 3 பொது பெட்டி உள்ளிட்ட 22 பெட்டிகளை கொண்டதாக இந்த ெரயில் இருக்கும். ெரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.

    கேரள மாநிலம், கோழிக்கோடு - கண்ணனூர் வழித்தடத்தில், தலசேரி - எடக்கோடு இடையே மின்வழித்தடம் சிக்னல் பராமரிப்பு மேலாண்மை பணி நடக்கிறது. இதனால் சென்னை எழும்பூரில் இருந்து மங்களூரு இயக்கப்படும் ெரயில் இயக்கம் மாற்றப்பட்டுள்ளது. நேற்றிரவு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட மங்களூரு எக்ஸ்பிரஸ் ெரயில் இன்று கோழிக்கோடு வரை மட்டும் இயக்கப்படும். வடகரா, தலச்சேரி, கண்Èர், கண்ணபுரம், பையனூர்,கொடிகுலம், காசர்கோடு வழியாக மங்களூரு செல்லாது. அதே நேரம், மங்களூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் ெரயில் இயக்கத்தில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு.
    • ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் பேருந்துகள் முலம் பயணம்.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இணைந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை அமைத்துள்ளன. முதலமைச்சராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் பதவி வகித்து வரும் நிலையில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை தன் பெயரில் சோரன் பெற்றதாக அம்மாநில எதிர்க்கட்சியான பா.ஜ.க. குற்றம் சாட்டியது.

    மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி இது குற்றம் என்பதால், அவரை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என அம்மாநில ஆளுநரிடம் பா.ஜ.க. மனு கொடுத்தது. இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்தின் கருத்துக்களை ஆளுநர் ரமேஷ் பைஸ் கேட்டிருந்தார். இதையடுத்து சோரனை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்வது தொடர்பான தனது பரிந்துரையை ஜார்க்கண்ட் ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் சோரனின் முதலமைச்சர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தார்மீக அடிப்படையில் முதலமைச்சர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என்றும், ஜார்கண்ட் மாநில சட்டசபையை கலைத்து விட்டு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தி உள்ளது.

    இதனிடையே, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் குதிரை பேர முயற்சியில் எதிர்க்கட்சியான பாஜக ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்தது. ஹவுராவில் கார் ஒன்றில் கட்டுக்கட்டாக பணத்துடன் மூன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பிடிப்பட்ட நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜகவின் ஆபரேஷன் தாமரை' திட்டம் அம்பலமாகி விட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்திருந்தார்.

    மகாராஷ்டிராவில் ஆட்சியை கவிழ்த்ததுபோல், ஜார்கண்ட் மாநிலத்திலும் சோரன் ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். இந்நிலையில் ஜார்க்கண்ட்டில் ஆளும் கூட்டணியை சேர்ந்த எம்எல்ஏக்களை பாதுகாக்கும் நடவடிக்கையை சோரன் அரசு மேற்கொண்டுள்ளது.

    இதையடுத்து தலைநகர் ராஞ்சியில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் லக்கேஜ்களுடன் எம்எல்ஏக்கள் குவிந்தனர். அவர்களுடன் ஹேமந்த் சோரன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் இரண்டு பேருந்துகள் மூலம் எம்எல்ஏக்கள் புறப்பட்டுச் சென்றனர்.

    குந்தி மாவட்டத்தில் உள்ள லத்ரது அணை பகுதிக்கு அமைச்சர்கள் மற்றும் ஏஎம்எல்ஏக்களுடன் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் சென்ற  காட்சி வெளியானது. அங்குள்ள விருந்தினர் விடுதியில் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டனர். இதையடுத்து அந்த பகுதியில் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 


    நாங்கள் வேறு இடங்களுக்கு செல்ல உள்ளதாகவும், எங்கு செல்வோம் என தெரியவில்லை என்றும் அமைச்சர் சத்யானந்த் போக்தா தெரிவித்துள்ளார். இதனிடையே, ஜார்க்கண்ட் எம்எல்ஏக்கள் சத்தீஷ்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    81 உறுப்பினர்களை கொண்ட ஜார்கண்ட் சட்டசபையில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 49 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு மட்டும் 30 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் கட்சியில் 18 எம்எல்ஏக்களும், ராஷ்டிரிய ஜனதாதளத்திற்கு ஒரு எம்எல்ஏவும் உள்ளனர். எதிர்க்கட்சியான பாஜகவிற்கு 26 எம்எல்ஏக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஜார்க்கண்டின் சரைகேலா பகுதியில் நக்சலைட்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 11 சி.ஆர்.பி.எப். வீரர்கள் காயம் அடைந்தனர்.
    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலம் சரைகேலாவில் உள்ள குசாய் பகுதியில் சி.ஆர்.பி.எப். வீரர்களுடன் இணைந்து மாநில போலீசாரும் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த நக்சல்கள் திடீரென கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள், மாநில போலீசார் என 11 பேர் காயமடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
    அனில் அம்பானியை போன்ற திருடனுக்கு பிரதமர் மோடி காவலாளியாக உள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காட்டமாக விமர்சித்துள்ளார். #LokSabhaElections2019 #RahulGandhi #Modi #AnilAmbani
    ஜார்க்கண்ட்:

    ஜார்க்கண்ட் மாநிலம் சாய்பாசாவில் உள்ள டாடா கல்லூரியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

    பிரதமர் மோடி அனில் அம்பானிக்கு தான் காவலாளியாக உள்ளார். மக்களின் பைகளில் இருந்து பணத்தை எடுத்து அனில் அம்பானி, நிரவ் மோடி, மெகுல் சோஸ்கி உள்ளிட்டோருக்கு வழங்குகிறார்.



    தனியார் நிறுவனங்களுக்காக அளிக்கப்பட்ட பஸ்தார் உள்ளிட்ட பழங்குடியினரது நிலங்களை திரும்ப அவர்களுக்கு அளிக்கும் வரலாற்று சிறப்புமிக்க முடிவை சத்தீஸ்கர் மாநில அரசு எடுத்துள்ளது.

    மோடிஜி அவர்களே, அடுத்த முறை நீங்கள் ஜார்க்கண்ட் வரும்போது பா.ஜ.க. அரசினால் திரும்ப அளிக்கப்பட்ட நிலங்கள் குறித்த தகவல்களை அளிக்க வேண்டும் என தெரிவித்தார். #LokSabhaElections2019 #RahulGandhi #Modi #AnilAmbani
    ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெல்பா காட் வனப்பகுதியில் நக்சல்களுடன் நடைபெற்ற சண்டையில் 3 நக்சல்கள், மற்றும் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் பலியாகினர். #JharkhandEncounter
    கிரிதிக்:

    மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர், இரு வர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.

    பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.

    ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிக் மாவட்டத்திற்குட்பட்ட பெல்பா காட் வனப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, அந்த பகுதிக்கு சென்ற எல்லை பாதுகாப்பு படையினர் நக்சல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு மறைந்திருந்த நக்சல்களுக்கும், பாதுகாப்பு படைவீரர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. சிறிது நேரம் தொடர்ந்த இந்த துப்பாக்கி சண்டையில், சிஆர்பிஎப் வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 நக்சல்கள் பலியாகினர். அவர்களிடமிருந்து ஒரு ஏகே 47 ரக துப்பாக்கி, தோட்டாக்கள் போடப்பயன்படும் 3 மேகசின்கள், 4 வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.  #JharkhandEncounter
    ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று சிறப்பு படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஐந்து நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #Jharkhandnaxaldead
    ராஞ்சி:

    மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர், இரு வர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.

    பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்களை வேட்டையாட சிறப்பு தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.

    இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் குந்தி மற்றும் மேற்கு சிங்பம் மாவட்ட எல்லையில் இன்று காலை 6.20 மணி அளவில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் உள்ளூர் நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த ஐந்து நக்சலைட்களை சிறப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்களிடமிருந்து ஏகே47 மற்றும் ஏ303 ரக துப்பாக்கிகள், 5 பிஸ்டல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. #Jharkhandnaxaldead
    ஜார்க்கண்டில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் தலைக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சலைட் இன்று சுட்டுக் கொல்லப்பட்டான். #NaxalKilled
    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் உள்ளூர் போலீசாரும், மாநில போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது, அந்த பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் டலா டா என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரிட இருந்த ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய டலா டா தலைக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது.

    நக்சலைட்களின் நடமாட்டத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. #NaxalKilled
    ஜார்கண்டில் ரே‌ஷன் பொருள் கிடைக்காததால் 2 பேர் பட்டினியால் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Rationcard #Ration

    ராஞ்சி:

    ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் உள்ள மகாயத்தினார் கிராமத்தை சேர்ந்தவர் காலேஸ்வர் சோரன்(45).

    இவர் சாப்பிட உணவின்றி பட்டினியாக இருந்ததால் உயிரிழந்தார் என்ற தகவல் வெளியானது. இதுகுறித்து உண்மை கண்டறியும் குழுவினர் நேரில் சென்று விசாரித்தனர். அப்போது, அரசின் பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரே‌ஷன் பொருட்கள் கிடைக்காததால் பட்டினி கிடந்து இறந்தது உறுதி செய்யப்பட்டது.

    காலேஸ்வர் சோரன் தனது ஆதார்கார்டு நம்பரை ரே‌ஷன் கார்டில் சேர்க்காததால் கடந்த 2016-ம் ஆண்டு அவரது ரே‌ஷன் கார்டு ரத்து செய்யப்பட்டது. இதனால் அவரது குடும்பத்துக்கு கடந்த 2 ஆண்டுகளாக ரேசன் பொருட்கள் கிடைக்கவில்லை.

     


    இதனால் தனது குடும்பத்துக்கு சொந்தமான விவசாய விளை நிலங்களை அடமானம் வைத்தார். ஒரு ஜோடி காளை மாடுகளை விற்று செலவு செய்தார். அவரது 2 மகன்களும் ராஜஸ்தான் சென்று கடந்த 2 ஆண்டுகளாக கூலி வேலை செய்து வருகின்றனர்.

    தனது தந்தை இறந்ததை அறிந்தும் கூட அவர்களால் வர முடியவில்லை. இந்த தகவலை உண்மை கண்டறியும் குழுவை சேர்ந்த சிராஜ்தத்தா தெரிவித்தார்.

    இவரை போன்று மேலும் ஒரு பெண் பட்டினியால் மரணம் அடைந்து இருக்கிறார். அவரது பெயர் சீதா தேவி (75). இவர் இதே பகுதியில் உள்ள கும்ளா என்ற இடத்தை சேர்ந்தவர்.

    காலேஸ்வர் சோரனும், சீதா தேவியும் கடந்த 25 நாட்களில் பட்டினியால் மரணம் அடைந்துள்ளனர். ஜார்கண்டில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து 17 பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளதாக உணவு உரிமை பிரசார இயக்கத்தின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.#Rationcard #Ration

    விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜார்கண்ட், ஐதராபாத் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. #VijayHazareTrophy
    பெங்களூரு:

    விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. 37 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் முடிவில் 8 அணிகள் கால்இறுதியை எட்டின.

    இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று நடந்த 3-வது கால்இறுதி ஆட்டத்தில் மராட்டியம்-ஜார்கண்ட் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த ஜார்கண்ட் அணி, மராட்டியத்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதன்படி முதலில் பேட் செய்த மராட்டிய அணி, ஜார்கண்ட் வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 42.2 ஓவர்களில் 181 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக ரோஹித் மோத்வானி 52 ரன்னும், கேப்டன் ராகுல் திரிபாதி 47 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஜார்கண்ட் அணி தரப்பில் அன்குல் ராய் 4 விக்கெட்டும், ராகுல் சுக்லா 3 விக்கெட்டும், வருண் ஆரோன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் இலக்கை நோக்கி ஜார்கண்ட் அணி பேட்டிங் செய்கையில் 2 முறை மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி ஜார்கண்ட் அணிக்கு 34 ஓவர்களில் 127 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஜார்கண்ட் அணி 32.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது. ஆனந்த் சிங் 12 ரன்னிலும், கேப்டன் இஷான் கிஷன் 28 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ஷஷீம் ரதோர் 53 ரன்னுடனும், சவுரப் திவாரி 29 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    பெங்களூருவில் நடந்த மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் ஐதராபாத்-ஆந்திரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சந்தீப் 96 ரன்கள் எடுத்தார். கேப்டன் அம்பத்தி ராயுடு 28 ரன்னில் ‘ரன்-அவுட்’ ஆனார். பின்னர் 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆந்திரா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 267 ரன்களே எடுத்தது. இதனால் ஐதராபாத் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. ஆந்திர அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹனுமா விஹாரி 95 ரன்னும், ரிக்கி புய் 52 ரன்னும் எடுத்தனர்.

    பெங்களூருவில் நாளை நடைபெறும் முதலாவது அரைஇறுதிப்போட்டியில் மும்பை-ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. நாளை மறுநாள் நடைபெறும் 2-வது அரைஇறுதியில் டெல்லி-ஜார்கண்ட் அணிகள் சந்திக்கின்றன. #VijayHazareTrophy
    ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த முதியவர் 5 ஆண்டுகள் கழித்து மகனிடம் ஒப்படைக்கப்பட்டார்.
    திருவண்ணாமலை:

    கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதியவர் ஒருவர் சட்டை போடாமல், லுங்கியுடன் இருந்ததை பார்த்து அவரிடம் நேரில் சென்று விசாரித்தார். மேலும் முதியவரை தனது அலுவலகத்திற்கு அழைத்து சென்று முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் ஆகியோரை அழைத்து முதியவர் குறித்து விவரங்கள் சேகரிக்க உத்தரவிட்டார்.

    முதியவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் பேசினார். ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் எழுதியும் காண்பித்தார். அதில் அவர் பெயர் அலோசியல் பர்னபாஸ்டோபோ எனவும், அவரது சொந்த மாநிலம் ஜார்க்கண்ட் எனவும் தெரியவந்தது.

    இதையடுத்து அவரது குடும்பத்தினரை கண்டு பிடிப்பதற்காகவும், தொடர்பு கொள்வதற்காகவும் முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் மூலமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட சமூக நல அலுவலர் மூலமாக அந்த முதியவர், டேனியல் மெமோரியல் நேசம் முதியோர் பராமரிப்பு இல்லத்தில் அனுமதிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள முதியவரின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு வீடியோ அழைப்பு மூலம் முதியவர் அடையாளம் காணப்பட்டு அங்கிருந்து அவரது மகனை வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் முதியவரை அவரது மகனிடம் கலெக்டர் கந்தசாமி ஒப்படைத்தார்.

    மேலும் முதியவருக்கு கலெக்டர், புதிய துணி வாங்கி கொடுத்து அதனை முதியவருக்கு அணிவித்து மகிழ்ந்தார்.

    வயது முதிர்வின் காரணமாக சில நேரங்களில் நினைவு இழந்ததால், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்து கடைசியாக திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளார். தனது தந்தையை கண்ட மகன் கண்கலங்கி, கலெக்டருக்கு நன்றி தெரிவித்து ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு அழைத்து சென்றார்.

    அப்போது உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் விஜயகுமார், மாவட்ட சமூக நல அலுவலர் கிறிஸ்டீனா தா.டார்த்தி, நேசம் முதியோர் இல்ல பொறுப்பாளர் குளோரி ஆகியோர் உடனிருந்தனர். 
    ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக எம்பியின் காலை தொண்டர் ஒருவர் கழுவி அந்த நீரைக் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #NishikantDubey
    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலம் கோடா பகுதியில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கோடா தொகுதியின் பாஜக எம்.பி. நிசிகாந்த் துபே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிசிகாந்த் துபே தனது உரையை முடித்து மேடையில் அமர்ந்தபோது, பாஜக தொண்டர் ஒருவர், அவரது கால்களை தண்ணீரால் கழுவி, அந்த நீரையே குடித்தது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

    இதனைப் பார்த்த பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். தொண்டரை தன் கால்களை கழுவ அனுமதித்தது சரியல்ல என்றும் பலர் கூறினர். பாஜக தலைவர்களின் ஆணவம் உச்சத்தை எட்டியிருப்பதாக காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.


    ஆனால் நடந்த சம்பவத்திற்கு நியாயம் கற்பித்துள்ளார் நிசிகாந்த் துபே. தனது ஆதரவாளர்கள் தன் மீது வைத்துள்ள அன்பை எதிர்ப்பாளர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார். ஒருநாள் அந்த தொண்டரின் பாதங்களை கழுவும் வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். #NishikantDubey 
    ×