search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேஷன்"

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 9 தாலுகாவில் ரேஷன் வினியோகம் குறித்த குறைதீர் முகாம் 14-ந் தேதி நடைபெறுகிறது.
    • நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    ராமநாதபுரம்

    தமிழக அரசின் ஆணைக் கிணங்க மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை மாவட் டத்தின் அனைத்து வட்டங் களிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வரு கிறது. இந்த நிலையில் வருகிற 14-ந் தேதி கீழ்க்கா ணும் கிராமங்களில் குறை தீர் முகாம் நடத்தப்பட உள் ளது.

    ராமநாதபுரம் மாவட் டத்தில், ராமநாதபுரம் வட்டம் சக்கரக்கோட்டை கிராமம் (ரேசன்கடை), ராமேசுவரம் வட்டம் தங்கச்சிமடம் (ரேசன் கடை), திருவாடானை வட்டம் தோட்டா மங்களம் கிராமம் (ரேசன் கடை), பரமக்குடி வட்டம் விளத்தூர் கிராமம் (இ-சேவை மையக் கட்டி டம்) முதுகுளத்தூர் வட்டம் விளங்குளத்தூர் கிராமம் (ரேசன் கடை), கடலாடி வட்டம் மேலக்கிடாரம் கிராமம் (ஊராட்சிமன்ற பஞ்சாயத்து அலுவலகம்) கமுதி வட்டம் முஸ்டகுறிச்சி கிராமம்(ரேசன்கடை) கீழக்கரை வட்டம் - மல்லல் கிராமம் (ரேசன் கடை) ஆர்.எஸ்.மங்கலம் வட்டம் சாத் தனூர் கிராமம் (ரேசன் கடை) ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல், குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம், புகைப் படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை நகல், குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப் படும். மேலும் ரேசன் கடை களில் பொருள்பெற வரு கை தர இயலாத மூத்த குடி மக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளி களுக்கு அங்கீகாரச்சான்று வழங்க நடவடிக்கை எடுக் கப்படும்.

    மேலும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப் படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொது மக்கள் இம்முகாமில் தெரி வித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும். ராமநாதபுரம் மாவட் டத்திலுள்ள 9 வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர் கள் எதிர் வரும் 14-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள இந்த குறைதீர் முகாமில் மனுக்களை அளித்து பயன் பெறலாம்.

    இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • வேறு எங்காவது ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என சோதனை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:,

    தஞ்சை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த மதுக்கூர் அருகே கண்டியங்காடு பிள்ளையார் கோவில் அருகில் ஒரு பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.

    அதில் 120 கிலோ ரேஷன் அரிசி, 500 கிலோ குருணை மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது.

    இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கியவர் அருகே உள்ள மதுக்கூர் அருகே உள்ள வேப்பங்குளத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 46) என்பது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து செந்தில்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் அவர் பதுக்கிய 620 கிலோ ரேஷன் அரிசி, குருணை மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து வேறு எங்காவது ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு ள்ளதா? என சோதனை நடத்தி வருகின்றனர். 

    • எம்எல்ஏ ஸ்டாலின் குமார் திறந்து வைத்தார்.
    • பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று புதிய ரேஷன் கடை

    துறையூர்,

    திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட எட்டாவது வார்டு மற்றும் ஒன்பதாவது வார்டு பகுதி மக்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் ரேஷன் கடை மூலம் பொருட்கள் பெற்று வந்தனர். இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு சொந்தமாக புதிய ரேஷன் கடை அமைத்து தருமாறு துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமாரிடம் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையை ஏற்ற சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்து, கட்டிடப் பணிகள் முடிவுற்றது. இதனை தொடர்ந்து நேற்று புதிய ரேஷன் கடை திறக்கும் நிகழ்ச்சி சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதிய ரேஷன் கடையினை ரிப்பன் வெட்டி எம்எல்ஏ ஸ்டாலின் குமார் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் துறையூர் நகர்மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், நகர்மன்ற துணைத் தலைவர் மெடிக்கல் முரளி, நகர்மன்ற உறுப்பினர்கள் இளையராஜா, சுதாகர், கார்த்திகேயன், மாவட்ட பிரதிநிதி மதியழகன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், நகர துணை செயலாளர்கள் இளங்கோ, பிரபு, நகர இளைஞரணி அமைப்பாளர் சிலம்பரசன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சங்ககிரியில் இருந்து கேரளாவிற்கு ரெயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாசில்தார் ராஜேஷ்குமார் தலைமையில் அலுவலர்கள் நேற்று இரவு சங்ககிரி ரெயில் நிலையத்தில் சோதனை நடத்தினர்.
    • ரேஷன் அரிசி கடத்த முயன்றவர்கள் அங்கிருந்து தலைமறைவாகினர். இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த 500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சங்ககிரி:

    சங்ககிரியில் இருந்து கேரளாவிற்கு ரெயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாசில்தார் ராஜேஷ்குமார் தலைமையில் அலுவலர்கள் நேற்று இரவு சங்ககிரி ரெயில் நிலையத்தில் சோதனை நடத்தினர். அப்போது ரெயில் நிலைய நடைமேடை பகுதியில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது. போலீசார் வருவதை பார்த்ததும் ரேஷன் அரிசி கடத்த முயன்றவர்கள் அங்கிருந்து தலைமறைவாகினர். இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த 500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த ரேஷன்அரிசி மூட்டைகள் சங்ககிரி நுகர்பொருள் வாணிப கழக குடோனில் ஒப்படைக்கப்பட்டன. ரெயிலில் ரேஷன்அரிசி கடத்த முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரி அருகே உள்ள பொம்மயம்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்து இருப்பதாக மேட்டூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ஆய்வு செய்தபோது அந்த பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து மேச்சேரி காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரி அருகே உள்ள பொம்மயம்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்து இருப்பதாக மேட்டூர் போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து மேச்சேரி இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் பொம்மியம்பட்டி மாரியம்மன் கோவில் அருகே ஆய்வு செய்தபோது அந்த பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து மேச்சேரி காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர். இந்த மூட்டைகளை பதுக்கியது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கைப்பற்றப்பட்ட மண்எண்ணை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
    • கடத்தல் ஆட்டோ வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    வட்டவழங்கல் அதிகாரி கே.புரந்தரதாஸ் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரெதன் ராஞ்குமார் கொண்ட குழு களியக்காவிளை அருகே பி.பி.எம் சந்திப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக கேரள பதிவெண் கொண்ட ஆட்டோ ஒன்று வந்தது.

    அந்த ஆட்டோவை நிறுத்துமாறு சைகை காட்டினர் இருந்தும் அந்த ஆட்டோ நிறுத்தாமல் சென்று விட்டது. தொடர்ந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று கோழிவிளை பகுதியில் வைத்து ஆட்டோவை மடக்கி பிடித்தனர். ஆனால் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.

    ஆட்டோவை சோதனை செய்து பார்த்த போது 13 கேன்களில் சுமார் 500 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ரேஷன் மண்ணெண்ணை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

    ஆட்டோவில் இருந்து கைப்பற்றப்பட்ட மண்எண்ணை காப்பிக் காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் ஆட்டோ வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஒப்ப டைக்கப்பட்டது. தப்பி ஓடிய ஓட்டுநர் யார் என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

    • மார்த்தாண்டம் அருகே சினிமா போல சம்பவம்
    • அரிசியை கேரளாவுக்கு கொண்டு செல்ல முயற்சி

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட உண்ணாமலைகடை பகுதியில் மார்த்தாண்டம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ்,தலைமை காவலர் ராஜகுமார் மற்றும் போலீசார் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு ஒரு கார் வேகமாக வந்தது. அதனை நிறுத்தும் படி போலீசார் சைகை காட்டினர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீ சார் பின்னர் சுதாரித்துக் கொண்டு காரை விரட்டிச் சென்றனர்.

    சுமார் 5 கி.மீட்டர் தூரம் காரை போலீசார் பின் தொடர்ந்த நிலையில் திக்குறிச்சி வழியாக சென்ற கார் பேரை பகுதியில் சாலை ஓரம் திடீரென நின்றது. அதில் இருந்து 2 பேர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.

    போலீசார் அந்தக் காரை சோதனை செய்த போது மூடை மூடையாக ரேசன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.விசாரணையில் அந்த அரிசியை கேரளாவுக்கு கொண்டு செல்ல முயற்சித்தது தெரியவந்தது.

    இதையடுத்து காரில் இருந்த 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் காருடன் பறிமுதல் செய்தனர். பின்னர் காரை விளவங்கோடு தாலுகா அலு வலகத்திலும், அரி சியை காப்புக்காடு அரசு குடோ னிலும் ஒப்படைத்தனர்.தொடர்ந்து அரிசி கடத்தி யது யார்? எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? தப்பியோடியவர்கள் யார்? என்பது தொடர்பாக போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதனை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு தகவல் வந்தது.
    • அப்போது அங்குள்ள ரைஸ் மில்லில் 280 மூட்டைகளில் சுமார் 14 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பதுக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் பூலாவரி லட்சுமனூர் பகுதியில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதனை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் டி.எஸ்.பி. விஜயகுமார் உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி குடிமைப் பொருள் வழங்கள் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மலர்விழி மற்றும் போலீசார் பூலாவரி லட்சுமனூர் கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது அங்குள்ள ரைஸ் மில்லில் 280 மூட்டைகளில் சுமார் 14 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பதுக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. மில் உரிமையாளர் செந்தில்குமார் (வயது 42)போலீசார் வருவதைக் கண்டு தப்பி ஓடிவிட்டார், இதை யடுத்து அவர் தலைமறைவாக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று சேலம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொ) விவேகானந்தன், சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி மற்றும் போலீசார் சேலம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரில் வீட்டில் அருகில் இருந்த செந்தில்குமாரை கைது செய்தனர். 

    ×