search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    9 தாலுகாவில் ரேஷன் வினியோகம் குறித்த குறைதீர் முகாம்
    X

    9 தாலுகாவில் ரேஷன் வினியோகம் குறித்த குறைதீர் முகாம்

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 9 தாலுகாவில் ரேஷன் வினியோகம் குறித்த குறைதீர் முகாம் 14-ந் தேதி நடைபெறுகிறது.
    • நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    ராமநாதபுரம்

    தமிழக அரசின் ஆணைக் கிணங்க மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை மாவட் டத்தின் அனைத்து வட்டங் களிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வரு கிறது. இந்த நிலையில் வருகிற 14-ந் தேதி கீழ்க்கா ணும் கிராமங்களில் குறை தீர் முகாம் நடத்தப்பட உள் ளது.

    ராமநாதபுரம் மாவட் டத்தில், ராமநாதபுரம் வட்டம் சக்கரக்கோட்டை கிராமம் (ரேசன்கடை), ராமேசுவரம் வட்டம் தங்கச்சிமடம் (ரேசன் கடை), திருவாடானை வட்டம் தோட்டா மங்களம் கிராமம் (ரேசன் கடை), பரமக்குடி வட்டம் விளத்தூர் கிராமம் (இ-சேவை மையக் கட்டி டம்) முதுகுளத்தூர் வட்டம் விளங்குளத்தூர் கிராமம் (ரேசன் கடை), கடலாடி வட்டம் மேலக்கிடாரம் கிராமம் (ஊராட்சிமன்ற பஞ்சாயத்து அலுவலகம்) கமுதி வட்டம் முஸ்டகுறிச்சி கிராமம்(ரேசன்கடை) கீழக்கரை வட்டம் - மல்லல் கிராமம் (ரேசன் கடை) ஆர்.எஸ்.மங்கலம் வட்டம் சாத் தனூர் கிராமம் (ரேசன் கடை) ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல், குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம், புகைப் படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை நகல், குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப் படும். மேலும் ரேசன் கடை களில் பொருள்பெற வரு கை தர இயலாத மூத்த குடி மக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளி களுக்கு அங்கீகாரச்சான்று வழங்க நடவடிக்கை எடுக் கப்படும்.

    மேலும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப் படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொது மக்கள் இம்முகாமில் தெரி வித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும். ராமநாதபுரம் மாவட் டத்திலுள்ள 9 வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர் கள் எதிர் வரும் 14-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள இந்த குறைதீர் முகாமில் மனுக்களை அளித்து பயன் பெறலாம்.

    இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×