search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இயக்கம்"

    • இந்நிலையில் ஸ்ரீஹரி தமிழ் சினிமாவில் 'என்ட்ரி' கொடுக்க உள்ளதாக தகவல் வெளியானது
    • பிரபுசாலமன் இயக்கத்தில் புதிய படத்தில் விஜய் ஸ்ரீஹரி கதாநாயகனாக அறிமுகம் ஆக உள்ளார்

    நடிகை வனிதா விஜயகுமார் - ஆகாஷ் தம்பதியின் மூத்த மகன் விஜய் ஸ்ரீஹரி. இந்நிலையில் வனிதா-ஆகாஷ் தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக விவாகரத்து பெற்று உள்ளனர்.

    இதனால் விஜய் ஸ்ரீஹரி தனது அப்பா ஆகாஷுடன் வசித்து வருகிறார். தற்போது விஜய் ஸ்ரீஹரி வாலிபனாக வளர்ந்து ஹீரோ தோற்றத்தில் உள்ளார்.லேட்டஸ்ட் புகைப்படங்களை அவர் இணைய தளத்தில் பகிர்ந்து உள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

    இந்நிலையில் ஸ்ரீஹரியின் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் பலவித 'கமெண்ட்ஸ்கள்' பதிவிட்டனர். அதில் அவரது மாமா அருண் விஜய் போன்று இருப்பதாக கூறி உள்ளனர்.

    அழகான தோற்றத்தில் பிட்டாகவும் , ஹேண்ட்சம் ஆகவும் இருக்கிறார் என வர்ணித்தும் உள்ளனர்.இந்தி நடிகர் ரன்பீர் கபூர் தோற்றத்தில் இருப்பதாகவும் கூறி உள்ளனர். வனிதாவின் ஜாடை போன்றும் தாத்தா விஜயகுமார் இளம்வயது தோற்றம் போன்று அவர் இருப்பதாகவும் கூறி உள்ளனர்.

    விஜய் ஸ்ரீஹரியின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை விரைவில் சினிமாவில் எதிர்பார்க்கலாம் என கூறி உள்ளனர்.

    இந்நிலையில் ஸ்ரீஹரி தமிழ் சினிமாவில் 'என்ட்ரி' கொடுக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து பிரபல இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் விஜய் ஸ்ரீஹரி கதாநாயகனாக அறிமுகம் ஆக உள்ளார் என தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புதிய 'Mr X ' திரைப்படத்திற்க்கான அவரது உடலமைப்பு தொடர்பான புகைப்படங்கள் பகிர்ந்து உள்ளார்
    • இந்த படம் அதிரடி காட்சி நிறைந்த படம்

    பிரபல நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் படம் 'மிஸ்டர் எக்ஸ்'. இந்த படத்தை மனு ஆனந்த் இயக்குகிறார். சரத்குமார் மற்றும் கொளதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார். திபு நின்னன் தாமஸ் இசையமைக்கிறார்.

    இந்நிலையில் நடிகர் ஆர்யா இன்று தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கத்தில் தனது புதிய 'Mr X ' திரைப்படத்திற்க்கான அவரது உடலமைப்பு தொடர்பான புகைப்படங்கள் பகிர்ந்து உள்ளார்.

    அந்த பதிவில்,ஆர்யா கூறி இருப்பதாவது :-

    எனது 'Mr.X' புதிய படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக் கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. இந்த படத்தை சகோதரர் மனு ஆனந்த் இயக்குகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்தப்படத்தை தயாரிக்கிறது.

    மிஸ்டர் எக்ஸ்' படத்திற்கு. மார்ச் 2023 - ல் ஸ்கிரிப்ட் தயாரானது. புதிய உடல் தோற்ற பொலிவுக்கான வேலை ஏப்ரல் 2023-ல் தொடங்கியது. அதன் பின் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கியது.



    இறுதியாக, நாங்கள் படத்தின் கடைசி ஷெட்யூலில் இருக்கிறோம். இலக்கை நோக்கி தொடர்ந்து சென்றுகொண்டு இருக்கிறோம். தற்போது ஒரு வருடம் ஆகிவிட்டது. தற்போது மார்ச் 2024-ல் இருக்கிறேன். எனது உடல்வாகு தொடர்பான புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளேன்.இந்த படம் அதிரடி காட்சி நிறைந்த படம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புகழூர் நகராட்சி பகுதியில் ஆன்லைன் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது
    • நகராட்சித் தலைவர் குணசேகரன் தொடங்கி வைத்தார்

    வேலாயுதம்பாளையம்,

    புகழூர் நகராட்சி பகுதியில் நீட் விலக்கு நம் இலக்கு குறித்த ஆன்லைன் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.  நகராட்சித் தலைவர் குணசேகரன், பதிவு செய்து தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி துணைத் தலைவர் பிரதாபன்,கரூர் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் மற்றும் புகழூர் நகராட்சி கவுன்சிலர்கள், நகர வார்டு தி.மு.க. பொறுப்பாளர்கள், மாவட்ட, பேரூர் தி.மு.க. பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவிற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
    • இந்த தகவலை தெற்கு ரெயில்வே மதுரை கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    திருச்செந்தூரில் நடை பெறும் கந்த சஷ்டி விழாவிற்கு லட்சக் கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம். எனவே பயணிகளின் வசதிக்காக சென்னை-திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் -தாம்பரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி சென்னை-திருநெல்வேலி சிறப்பு ரெயில் (06001) சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 17 இன்று இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு மறு நாள் மதியம் 12.45 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். மறு மார்க்கத்தில் திருச்செந்தூர்-தாம்பரம் சிறப்பு ரெயில் (06002) திருச்செந்தூரில் இருந்து இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.45 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

    இந்த ரெயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்ப கோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக் கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலை யங்களில் நின்று செல்லும்.

    திருச்செந்தூர்-தாம்ப ரம் சிறப்பு ரெயில் கூடுத லாக ஆறுமுகநேரி, நாச ரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் ஆகிய ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும். இந்த ரெயில்களில் ஒரு குளிர் சாதன 2 அடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர் சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டி, 8 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு பொதுப்பட்டிகள், 2 மாற்றுத் திறனாளி களுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.

    இந்த தகவலை தெற்கு ரெயில்வே மதுரை கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • இன்று (சனிக்கிழமை) முதல் 14-ந் தேதி வரை கோவை-திண்டுக்கல் இடையே முன்பதிவு வசதியில்லாத சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
    • ஒட்டன்சத்திரத்துக்கு 12.04 மணிக்கும், அக்கரைப்பட்டிக்கு 12.20 மணிக்கும், திண்டுக்கல்லுக்கு 1 மணிக்கும் சென்று சேரும்.

    திருப்பூர்:

    தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளின் வசதிக்காக இன்று (சனிக்கிழமை) முதல் 14-ந் தேதி வரை கோவை-திண்டுக்கல் இடையே முன்பதிவு வசதியில்லாத சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் கோவையில் காலை 9.20 மணிக்கு புறப்பட்டு போத்தனூருக்கு 9.31 மணிக்கும், கிணத்துக்கடவுக்கு 9.52 மணிக்கும், பொள்ளாச்சிக்கு 10.13 மணிக்கும், கோமங்கலத்துக்கு 10.46 மணிக்கும், உடுமலைக்கு 11 மணிக்கும், மைவாடி ரோடுக்கு 11.09 மணிக்கும், மடத்துக்குளத்துக்கு 11.14 மணிக்கும், புஷ்பத்தூருக்கு 11.22 மணிக்கும், பழனிக்கு 11.38 மணிக்கும், சத்தரப்பட்டிக்கு 11.55 மணிக்கும், ஒட்டன்சத்திரத்துக்கு 12.04 மணிக்கும், அக்கரைப்பட்டிக்கு 12.20 மணிக்கும், திண்டுக்கல்லுக்கு 1 மணிக்கும் சென்று சேரும்.

    இதுபோல் திண்டுக்கல்லில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு அக்கரைப்பட்டிக்கு 2.11 மணிக்கும், ஒட்டன்சத்திரத்துக்கு 2.27 மணிக்கும், சத்தரப்பட்டிக்கு 2.36 மணிக்கும், பழனிக்கு 2.55 மணிக்கும், புஷ்பத்தூருக்கு 3.11 மணிக்கும், மடத்துக்குளத்துக்கு 3.18 மணிக்கும், மைவாடி ரோடுக்கு 3.24 மணிக்கும், உடுமலைக்கு 3.33 மணிக்கும், கோமங்கலத்துக்கு 3.47 மணிக்கும், பொள்ளாச்சிக்கு 4.18 மணிக்கும், கிணத்துக்கடவுக்கு 4.43 மணிக்கும், போத்தனூருக்கு மாலை 5.08 மணிக்கும், கோவைக்கு 5.30 மணிக்கும் சென்று சேரும். இந்த ரெயிலில் 10 பொதுப்பெட்டிகள், 2 லக்கேஜ் பெட்டிகள் இணைக்கப்படுகிறது.

    இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மங்களூரில் இருந்து தாம்பரத்துக்கு வருகிற 12-ந்தேதி, 19-ந்தேதி, 26-ந்தேதி ஆகிய நாட்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
    • மங்களூரில் இருந்து தாம்பரத்துக்கு போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    திருப்பூர்:

    தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் மங்களூரில் இருந்து தாம்பரத்துக்கு போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி மங்களூரில் இருந்து தாம்பரத்துக்கு வருகிற 12-ந்தேதி, 19-ந்தேதி, 26-ந்தேதி ஆகிய நாட்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் 12, 19,26-ந்தேதிகளில் போத்தனூருக்கு மாலை 5.50 மணிக்கும், திருப்பூருக்கு 6.40 மணிக்கும், ஈரோட்டுக்கு இரவு 7.45 மணிக்கும், சேலத்துக்கு இரவு 9 மணிக்கும் வந்து செல்லும். இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • மதுரை, விருதுநகர் வழியாக திருநெல்வேலிக்கு கூடுதல் வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
    • இந்த சிறப்பு ரெயில் வழக்கம் போல தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    மதுரை

    தென்னக ரெயில்வேயின் மதுரை கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக திருநெல்வேலிக்கு கூடுதலாக ஒரு வந்தே பாரத் ரெயில் இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது. வழக்கமான வந்தே பாரத் ரெயில் திரு நெல்வேலியில் இருந்து பய ணத்தை துவக்கி திருநெல்வே லியில் முடிக்கும்.

    ஆனால் இந்த சிறப்பு ரெயில் சென்னை எழும்பூ ரில் பயணத்தை தொடங்கி சென்னை எழும்பூரில் பய ணத்தை முடிக்கிறது. இதன்படி (நவம்பர் 9) நாளை சென்னை-திருநெல்வேலி வந்தே பாரத் சிறப்பு ரயில் (06067) சென்னை எழும்பூ ரில் இருந்து காலை 06.00 மணிக்கு புறப்பட்டு மதியம் 02.15 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

    மறு மார்க்கத்தில் திரு நெல்வேலி-சென்னை வந்தே பாரத் ரயில் (06068) மாலை 03.00 மணிக்கு திரு நெல்வேலியில் இருந்து புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு சென்னை எழும் பூர் சென்று சேரும். இந்த சிறப்பு ரெயில் வழக்கம் போல தாம்பரம், விழுப்பு ரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

    • வடமாநில தொழிலாளர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் எர்ணாகுளத்தில் இருந்து ஜார்க்கண்ட் வழியாக தன்பாத் வரை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
    • ரெயிலில் பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 22 மற்றும் சரக்கு பெட்டிகள் 2 எண்ணிக்கையில் இணைக்கப்படுகிறது.

    திருப்பூர்:

    தீபாவளி பண்டிகையையொட்டி வடமாநில தொழிலாளர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் எர்ணாகுளத்தில் இருந்து ஜார்க்கண்ட் வழியாக தன்பாத் வரை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. முன்பதிவு வசதியில்லாத இந்த ரெயில் வருகிற 10-ந் தேதி எர்ணாகுளத்தில் இருந்து நள்ளிரவு 11.55 மணிக்கு புறப்பட்டு 12-ந்தேதி இரவு 11 மணிக்கு தன்பாத் சென்றடையும். இந்த ரெயிலில் பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 22 மற்றும் சரக்கு பெட்டிகள் 2 எண்ணிக்கையில் இணைக்கப்படுகிறது.

    கோவைக்கு 11-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கும், திருப்பூருக்கு 5.28 மணிக்கும், ஈரோட்டுக்கு 6.25 மணிக்கும், சேலத்துக்கு 7.22 மணிக்கும் வந்து செல்லும். இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • எப்போது முன் பதிவு செய்தாலும் பட்டியலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

    திருப்பூர்:

    கோவையில் இருந்து பெங்களூருக்கு உதய் எக்ஸ்பிரஸ் (எண்:22666) தினமும் காலை 5:40 மணிக்கு இயக்கப்படுகிறது. மற்ற வகையில் கோவையில் இருந்து பெங்களூருவுக்கு நேரடி ெரயில் இல்லை. தினசரி ெரயில்களாக உள்ள கன்னியாகுமரி - பெங்களூரு (எண்:16525), கண்ணூர்- யஷ்வந்த்பூர் (எண்:16528), கொச்சுவேலி - மைசூரு (எண்:16316), எர்ணாகுளம் - பெங்களூரு (எண்:12678) எக்ஸ்பிரஸ்களில் பயணிகள் கோவை, திருப்பூரில் இருந்து பயணிக்க வேண்டியுள்ளது.

    மேற்கண்ட ெரயில்கள் கேரளாவில் இருந்து புறப்பட்டு, பல நிலையங்களை கடந்து வருவதால், கோவை, திருப்பூருக்கான இருக்கைகள் ஒதுக்கீடு குறைவாக உள்ளது. முன்பதிவு இருக்கை, படுக்கை வசதி மேற்கு மண்டல பயணிகளுக்கு கிடைப்பதில்லை. எப்போது முன் பதிவு செய்தாலும் பட்டியலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

    இது குறித்து ெரயில் பயணிகள் சிலர் கூறியதாவது:-

    பெங்களூருவில் நிறைய தொழில் வாய்ப்புகள் உள்ளதால், மேற்கு மண்டலத்தில் இருந்து அங்கு சென்று, பலரும் பணிபுரிகின்றனர். கோவை - பெங்களூரு இடையே பகல் அல்லது இரவில் நேரடி ெரயில் இயக்கினால், பயனுள்ளதாக இருக்கும்.முன்பதிவு செய்வோருக்கும் இருக்கை உறுதியாகும்.

    சேலம் கடந்து பெங்களூரு செல்லும் ெரயில்களில், கோவையில் இருந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், ஓசூர் பகுதிக்கு பயணிப்பவர்கள் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். எனவே அதிகரிக்கும் டிக்கெட் முன்பதிவை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு முன்னதாக பரீட்சார்த்த முறையில் கோவை - பெங்களூரு இடையே ெரயில் இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    திருப்பூர்: 

    திருப்பூர், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டல தொழில் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று மும்பைக்கு மற்றொரு விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்க உள்ளது. வருகிற டிசம்பர் மாதம் 15-ந்தேதியில் இருந்து இந்த விமானம் வாரம் 7 நாட்களும் இயக்கப்படவுள்ளது. தினமும் இரவு 9:35 மணிக்கு கோவையில் புறப்படும் இந்த விமானம் 11:20 மணிக்கு மும்பையை சென்றடையும்.

    மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தின் பன்னாட்டு முனையத்துக்கே (டி 2) இந்த விமானம் செல்வதால் அங்கிருந்து வேறு விமானம் மாறி வெளிநாடுகளுக்கு செல்ல முடியும்.

    கோவையில் இருந்து ஒரே டிக்கெட்டாக பதிவு செய்தால், சீம்லெஸ் கனெக்ட்டிவிட்டி என்ற முறையில் பொருட்களை விமானத்துக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. மும்பை டி 2வில் இமிக்ரேசன் மற்றும் கஸ்டம்ஸ் சோதனைகளுக்கு பின் விமானம் மாறிச் செல்லலாம்.

    இதனால் கோவையில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு 19 மணி நேரம் 50 நிமிடங்களில் சென்று விட முடியும். அமெரிக்க நகரங்களுக்கு மட்டுமின்றி, லண்டன், முனிச், பாரிஸ், மொரிஷியஸ், ஆம்ஸ்டர்டாம், ரியாத், ஜெட்டா, எகிப்து, தோஹா, துபாய், அபுதாபி, மஸ்கட் உள்ளிட்ட 20 வெளிநாட்டு நகரங்களுக்கு இந்த ஏர் இந்தியா விமான சேவை இணைப்பாக அமையும்.மும்பைக்கு 3 இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா விமானங்கள் இயக்கப்படும் நிலையில் இது 6-வது விமான சேவையாகும்.

    கோவையிலிருந்து மும்பைக்கு காலை 6:45 மணிக்கு, இண்டிகோ விமானம் முதல் சேவையை தொடங்குகிறது. அதையடுத்து ஏர் இந்தியா-காலை 9 மணி, விஸ்தாரா-மதியம் 2:30 மணி, இண்டிகோ-மாலை 4:45 மணி, ஏர் இந்தியா-இரவு 9:35 (டிசம்பர் 15-ந்தேதியில் இருந்து ), இண்டிகோ-இரவு 10:20 மணி என மொத்தம் 6 விமானங்கள் கோவையில் இருந்து மும்பைக்கு இயக்கப்படுகின்றன. 

    • செங்கோட்டை ரெயில்கள் மின்சார என்ஜினில் இயக்கப்படுகிறது.
    • பொதுமக்கள் மின் வழித்தடத்தை நெருங்கவோ, தொடவோ முயற்சிக்க வேண்டாம் என ரெயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ராஜபாளையம்

    விருதுநகர்-செங் கோட்டை ரெயில்வே பிரிவு மின்மயமாக்கல் பணிகள் முழுமையாக நிறைவு பெற்று விட்டன. இதையடுத்து இன்று முதல் செங்கோட்டையில் இருந்து புறப்படும் பொதிகை, சிலம்பு மற்றும் மயிலாடு துறை விரைவு ரெயில்கள் மின்சார என்ஜின் மூலம் இயக்கப்படுகின்றன.

    இதற்காக இந்த பிரிவில் அமைக்கப்பட்டுள்ள மின் வழித்தடத்தில் 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்பட இருக்கிறது. ஆகவே இந்த ரெயில் தடம் செல்லும் பகுதியில் உள்ள பொதுமக்கள் மின் வழித்தடத்தை நெருங்கவோ, தொடவோ முயற்சிக்க வேண்டாம் என ரெயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மழை மற்றும் மின்னல் வெட்டும் நேரங்களில் குடையுடன் மின் வழித் தடத்தின் கீழே கடப்பதும் ஆபத்தை விளைவிக்கும். மேம்பாலங்களில் இருந்து மின்வழித்தடத்தின் மேல் ஏதாவது ஒரு பொருளை எறிந்தாலும் கடும் மின்சார தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். ரெயில்வே நிர்வா கத்தின் அனுமதியில்லாமல் மின் வழித்தடத்தின் அருகில் உள்ள மரங்களை வெட்டு வது, மரக்கிளைகளை செம்மைப்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும்.

    லெவல் கிராசிங்குகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ரெயில்வே நிர்வாகம் செய்திருந்த போதிலும், ரெயில்வே லெவல் கிராசிங்குகளை கடக்கும்போது நீண்ட இரும்பு கம்பிகளை செங்குத்தாக வைத்துக் கொண்டு நடப்பதும், வாகனங்கள் மேல் பகுதி யில் அமர்ந்து பயணிப்ப தும், வாகனங்களில் சரக்கு களை உயரமாக அளவுக்கு அதிகமாக வைத்து செல்வ தும் ஆபத்தை விளைவிக்க கூடிய செயல்கள் ஆகும்.

    சென்னையில் இருந்து புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ், சிலம்பு எக்ஸ் பிரஸ் மற்றும் மயிலாடுதுறை இருந்து புறப்படும் செங் கோட்டை விரைவு ரெயில் கள் மின்சார என்ஜினில் இயக்கப்படுகின்றன.

    அதேபோல் இன்று செங்கோட்டையில் இருந்து புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ், நாளை

    (2-ந்தேதி) செங்கோட்டை யில் இருந்து புறப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் மற்றும் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ஆகியவற்றில் மின்சார என்ஜினில் இயக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் முதல் முறையாக மின்சார என்ஜினுடன் வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு ராஜபாளையம் ெரயில் பயனாளர் சங்கம் சார்பில் ராஜபாளையம் ரெயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ரெயில் என்ஜினுக்கு மாலை, அலங்காரங்கள் செய்யப்பட்டு ஓட்டுநர், உதவி ஓட்டுநர் மற்றும் என்ஜின் ஆய்வாளர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.

    • அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் கல்விக்காக ஏராளமான திட்டங்களை அறிவித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா்.
    • பெண்கள் மற்றும் மாணவிகள் பயன்பெறும் வகையில், அரசு பேருந்துகளில் இலவச பயணத்திட்டம், அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

     திருப்பூர்:

    திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் உள்ள எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலைக் கல்லூரியில் சுற்றுப் பகுதியை சோ்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா்.இந்த கல்லூரியானது காலை 9 மணி முதல் பிற்பகல் 1.55 மணி வரையில் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் திருப்பூா் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து காலை 8 மணி முதல் 9 மணி வரை பல்லடம் வழித்தடத்தில் போதுமான அளவில் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என தெரிகிறது. இதனால் இலவச பயணத்தை நம்பியுள்ள மாணவிகள் வேறு வழியின்றி தனியாா் பேருந்துகளில் கட்டணம் செலுத்தி கல்லூரிக்கு செல்கின்றனா்.

    இது குறித்து எல்.ஆா்.ஜி., கல்லூரி மாணவிகள் கூறியதாவது:-

    அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் கல்விக்காக ஏராளமான திட்டங்களை அறிவித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா். அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் மாணவிகள் பயன்பெறும் வகையில், அரசு பேருந்துகளில் இலவச பயணத்திட்டம், அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்நிலையில் திருப்பூா்-பல்லடம் வழித்தடத்தில் காலை வேளைகளில் போதிய அளவு அரசு பேருந்துகள் இல்லாததால் தனியாா் பேருந்துகளில் கட்டணம் செலுத்தி கல்லூரிக்கு செல்ல வேண்டியுள்ளது. இதற்காகவே மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.எனவே திருப்பூா்-பல்லடம் வழித்தடத்தில் கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

    ×