search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மைசூர்-தூத்துக்குடி இடையே சிறப்பு ெரயில்
    X

    மைசூர்-தூத்துக்குடி இடையே சிறப்பு ெரயில்

    • மதுரை, விருதுநகர் கோவில்பட்டி வழியாக மைசூர்-தூத்துக்குடி இடையே சிறப்பு ெரயில் 4-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.
    • மைசூர்- தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயிலை இயக்க தென்மேற்கு ரெயில்வே முடிவு செய்து உள்ளது.

    மதுரை

    மைசூர்- தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயிலை இயக்க தென்மேற்கு ரெயில்வே முடிவு செய்து உள்ளது. அதன்படி மைசூர் - மைசூரில் இருந்து வருகிற 4, 11, 18-ந் தேதி வரும் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 12.05 மணிக்கு புறப்படும் ரெயில், அடுத்தநாள் அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து வருகிற 5, 12, 19-ந் தேதி சனிக்கிழமைகளில் மாலை 3 மணிக்கு புறப்படும் ரெயில், அடுத்தநாள் காலை 8.30 மணிக்கு மைசூரை சென்றடையும். இந்த ரெயில்கள் யெலியூர், மாண்டியா, பெங்களூர், பெங்களூர் கண்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×