search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் வழியாக   ஹைதராபாத்-கொல்லம் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
    X

    திருப்பூர் வழியாக ஹைதராபாத்-கொல்லம் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

    • இரவு 8:45 மணிக்கு கொல்லத்தில் புறப்படும் ரெயில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1:30 க்கு ைஹதாரபாத் சென்று சேரும்.
    • ெரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி நடந்து வருகிறது என தெற்கு ரெயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக, ைஹதராபாத் - கொல்லம் இடையே சிறப்பு ெரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    வருகிற 22 மற்றும், 29ந் தேதி மதியம் 12 மணிக்கு ைஹதராபாத்தில் புறப்படும் சிறப்பு ெரயில், மறுநாள் மாலை 6 மணிக்கு சென்று சேரும். மறுமார்க்கமாக நவம்பர் 16, 23 மற்றும் 30-ந் தேதி (புதன்கிழமை) இரவு 8:45 மணிக்கு கொல்லத்தில் புறப்படும் ரெயில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1:30 க்கு ைஹதாரபாத் சென்று சேரும்.

    இந்த சிறப்பு ெரயில் காயன்குளம், மாவேலிக்கரா, செங்கனூர், திருவல்லா, செங்கனஞ்சேரி, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ெரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி நடந்து வருகிறது என தெற்கு ரெயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×