search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dibrugarh"

    • சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட நிலையங்கள் வழியாக ரெயில் இயக்கப்படும்.
    • வருகிற 8, 15-ந் தேதிகளில் இச்சிறப்பு ெரயில் இயக்கப்படும்.

    திருப்பூர்:

    வடமாநிலங்களில் தொடர் பண்டிகை எதிரொலியாக வருகிற 6, 13, 20 ஆகிய தேதிகளில், கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகருக்கு வாராந்திர சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது. கன்னியாகுமரியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 5:20 மணிக்கு புறப்படும் ரெயில் (வ.எண்:05905), புதன்கிழமை இரவு 8:50 மணிக்கு திப்ருகர் சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் செவ்வாய்கிழமைகளில் திப்ருகரில் இருந்து இரவு 7:25மணிக்கு புறப்படும் ெரயில்(05906) வெள்ளிக்கிழமை இரவு 10மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். வருகிற 8, 15-ந் தேதிகளில் இச்சிறப்பு ெரயில் இயக்கப்படும். இந்த ெரயிலில், ஏ.சி., இரண்டடுக்கு 1, மூன்றடுக்கு 5, படுக்கை வசதி 11, பொது இரண்டாம் வகுப்பு 3, சரக்கு பெட்டி ஒன்று என 21 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

    சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட நிலையங்கள் வழியாக ெரயில் இயக்கப்படும். கன்னியாகுமரி-திப்ருகர் ரெயில், திங்கட்கிழமை காலை 4:12 மணிக்கு கோவை ரெயில் நிலையம், காலை, 5:03மணிக்கு திருப்பூர் வந்து செல்லும். திப்ருகர்-கன்னியாகுமரி ரெயில் வெள்ளிக்கிழமை அன்று திருப்பூருக்கு காலை 9:43மணிக்கும் கோவைக்கு காலை 10:42மணிக்கும் வந்து செல்லும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×