search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "movement"

    • பொன்மனை வன ரேஞ்சர் ராஜேந்திரன் தலைமையிலான வன குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
    • சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே கணியக்குளம் பஞ்சாயத்துக் குட்பட்ட உழவன் கோணம் பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை புலி நடமாட்டம் இருந்து வருகிறது.

    அந்த பகுதியில் சிறுத்தை உலா வந்த காட்சிகள் அங்குள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளில் பதிவாகி இருந்தது. இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பொன்மனை வன ரேஞ்சர் ராஜேந்திரன் தலைமையிலான வன குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

    கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்த காட்சிகளையும் ஆய்வு செய்தபோது சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். இந்தநிலையில் அந்த பகுதியில் வனத்துறை சார்பில் கண்காணிப்பு கேமிரா அமைத்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றும், குழந்தைகளை தனியாக வெளியே விடக்கூடாது என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் 2 கன்றுகுட்டிகள் இறந்து கிடந்தது. மேலும் ஆடுகளும் உயிரிழந்திருந்தது.

    எனவே சிறுத்தை தான் அடித்து கொன்று இருக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கருதுகிறார்கள். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் சிறுத்தை உலா வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    • புகழூர் நகராட்சி பகுதியில் ஆன்லைன் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது
    • நகராட்சித் தலைவர் குணசேகரன் தொடங்கி வைத்தார்

    வேலாயுதம்பாளையம்,

    புகழூர் நகராட்சி பகுதியில் நீட் விலக்கு நம் இலக்கு குறித்த ஆன்லைன் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.  நகராட்சித் தலைவர் குணசேகரன், பதிவு செய்து தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி துணைத் தலைவர் பிரதாபன்,கரூர் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் மற்றும் புகழூர் நகராட்சி கவுன்சிலர்கள், நகர வார்டு தி.மு.க. பொறுப்பாளர்கள், மாவட்ட, பேரூர் தி.மு.க. பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவிற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
    • இந்த தகவலை தெற்கு ரெயில்வே மதுரை கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    திருச்செந்தூரில் நடை பெறும் கந்த சஷ்டி விழாவிற்கு லட்சக் கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம். எனவே பயணிகளின் வசதிக்காக சென்னை-திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் -தாம்பரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி சென்னை-திருநெல்வேலி சிறப்பு ரெயில் (06001) சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 17 இன்று இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு மறு நாள் மதியம் 12.45 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். மறு மார்க்கத்தில் திருச்செந்தூர்-தாம்பரம் சிறப்பு ரெயில் (06002) திருச்செந்தூரில் இருந்து இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.45 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

    இந்த ரெயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்ப கோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக் கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலை யங்களில் நின்று செல்லும்.

    திருச்செந்தூர்-தாம்ப ரம் சிறப்பு ரெயில் கூடுத லாக ஆறுமுகநேரி, நாச ரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் ஆகிய ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும். இந்த ரெயில்களில் ஒரு குளிர் சாதன 2 அடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர் சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டி, 8 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு பொதுப்பட்டிகள், 2 மாற்றுத் திறனாளி களுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.

    இந்த தகவலை தெற்கு ரெயில்வே மதுரை கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • இன்று (சனிக்கிழமை) முதல் 14-ந் தேதி வரை கோவை-திண்டுக்கல் இடையே முன்பதிவு வசதியில்லாத சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
    • ஒட்டன்சத்திரத்துக்கு 12.04 மணிக்கும், அக்கரைப்பட்டிக்கு 12.20 மணிக்கும், திண்டுக்கல்லுக்கு 1 மணிக்கும் சென்று சேரும்.

    திருப்பூர்:

    தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளின் வசதிக்காக இன்று (சனிக்கிழமை) முதல் 14-ந் தேதி வரை கோவை-திண்டுக்கல் இடையே முன்பதிவு வசதியில்லாத சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் கோவையில் காலை 9.20 மணிக்கு புறப்பட்டு போத்தனூருக்கு 9.31 மணிக்கும், கிணத்துக்கடவுக்கு 9.52 மணிக்கும், பொள்ளாச்சிக்கு 10.13 மணிக்கும், கோமங்கலத்துக்கு 10.46 மணிக்கும், உடுமலைக்கு 11 மணிக்கும், மைவாடி ரோடுக்கு 11.09 மணிக்கும், மடத்துக்குளத்துக்கு 11.14 மணிக்கும், புஷ்பத்தூருக்கு 11.22 மணிக்கும், பழனிக்கு 11.38 மணிக்கும், சத்தரப்பட்டிக்கு 11.55 மணிக்கும், ஒட்டன்சத்திரத்துக்கு 12.04 மணிக்கும், அக்கரைப்பட்டிக்கு 12.20 மணிக்கும், திண்டுக்கல்லுக்கு 1 மணிக்கும் சென்று சேரும்.

    இதுபோல் திண்டுக்கல்லில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு அக்கரைப்பட்டிக்கு 2.11 மணிக்கும், ஒட்டன்சத்திரத்துக்கு 2.27 மணிக்கும், சத்தரப்பட்டிக்கு 2.36 மணிக்கும், பழனிக்கு 2.55 மணிக்கும், புஷ்பத்தூருக்கு 3.11 மணிக்கும், மடத்துக்குளத்துக்கு 3.18 மணிக்கும், மைவாடி ரோடுக்கு 3.24 மணிக்கும், உடுமலைக்கு 3.33 மணிக்கும், கோமங்கலத்துக்கு 3.47 மணிக்கும், பொள்ளாச்சிக்கு 4.18 மணிக்கும், கிணத்துக்கடவுக்கு 4.43 மணிக்கும், போத்தனூருக்கு மாலை 5.08 மணிக்கும், கோவைக்கு 5.30 மணிக்கும் சென்று சேரும். இந்த ரெயிலில் 10 பொதுப்பெட்டிகள், 2 லக்கேஜ் பெட்டிகள் இணைக்கப்படுகிறது.

    இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மங்களூரில் இருந்து தாம்பரத்துக்கு வருகிற 12-ந்தேதி, 19-ந்தேதி, 26-ந்தேதி ஆகிய நாட்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
    • மங்களூரில் இருந்து தாம்பரத்துக்கு போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    திருப்பூர்:

    தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் மங்களூரில் இருந்து தாம்பரத்துக்கு போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி மங்களூரில் இருந்து தாம்பரத்துக்கு வருகிற 12-ந்தேதி, 19-ந்தேதி, 26-ந்தேதி ஆகிய நாட்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் 12, 19,26-ந்தேதிகளில் போத்தனூருக்கு மாலை 5.50 மணிக்கும், திருப்பூருக்கு 6.40 மணிக்கும், ஈரோட்டுக்கு இரவு 7.45 மணிக்கும், சேலத்துக்கு இரவு 9 மணிக்கும் வந்து செல்லும். இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • எப்போது முன் பதிவு செய்தாலும் பட்டியலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

    திருப்பூர்:

    கோவையில் இருந்து பெங்களூருக்கு உதய் எக்ஸ்பிரஸ் (எண்:22666) தினமும் காலை 5:40 மணிக்கு இயக்கப்படுகிறது. மற்ற வகையில் கோவையில் இருந்து பெங்களூருவுக்கு நேரடி ெரயில் இல்லை. தினசரி ெரயில்களாக உள்ள கன்னியாகுமரி - பெங்களூரு (எண்:16525), கண்ணூர்- யஷ்வந்த்பூர் (எண்:16528), கொச்சுவேலி - மைசூரு (எண்:16316), எர்ணாகுளம் - பெங்களூரு (எண்:12678) எக்ஸ்பிரஸ்களில் பயணிகள் கோவை, திருப்பூரில் இருந்து பயணிக்க வேண்டியுள்ளது.

    மேற்கண்ட ெரயில்கள் கேரளாவில் இருந்து புறப்பட்டு, பல நிலையங்களை கடந்து வருவதால், கோவை, திருப்பூருக்கான இருக்கைகள் ஒதுக்கீடு குறைவாக உள்ளது. முன்பதிவு இருக்கை, படுக்கை வசதி மேற்கு மண்டல பயணிகளுக்கு கிடைப்பதில்லை. எப்போது முன் பதிவு செய்தாலும் பட்டியலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

    இது குறித்து ெரயில் பயணிகள் சிலர் கூறியதாவது:-

    பெங்களூருவில் நிறைய தொழில் வாய்ப்புகள் உள்ளதால், மேற்கு மண்டலத்தில் இருந்து அங்கு சென்று, பலரும் பணிபுரிகின்றனர். கோவை - பெங்களூரு இடையே பகல் அல்லது இரவில் நேரடி ெரயில் இயக்கினால், பயனுள்ளதாக இருக்கும்.முன்பதிவு செய்வோருக்கும் இருக்கை உறுதியாகும்.

    சேலம் கடந்து பெங்களூரு செல்லும் ெரயில்களில், கோவையில் இருந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், ஓசூர் பகுதிக்கு பயணிப்பவர்கள் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். எனவே அதிகரிக்கும் டிக்கெட் முன்பதிவை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு முன்னதாக பரீட்சார்த்த முறையில் கோவை - பெங்களூரு இடையே ெரயில் இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    திருப்பூர்: 

    திருப்பூர், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டல தொழில் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று மும்பைக்கு மற்றொரு விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்க உள்ளது. வருகிற டிசம்பர் மாதம் 15-ந்தேதியில் இருந்து இந்த விமானம் வாரம் 7 நாட்களும் இயக்கப்படவுள்ளது. தினமும் இரவு 9:35 மணிக்கு கோவையில் புறப்படும் இந்த விமானம் 11:20 மணிக்கு மும்பையை சென்றடையும்.

    மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தின் பன்னாட்டு முனையத்துக்கே (டி 2) இந்த விமானம் செல்வதால் அங்கிருந்து வேறு விமானம் மாறி வெளிநாடுகளுக்கு செல்ல முடியும்.

    கோவையில் இருந்து ஒரே டிக்கெட்டாக பதிவு செய்தால், சீம்லெஸ் கனெக்ட்டிவிட்டி என்ற முறையில் பொருட்களை விமானத்துக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. மும்பை டி 2வில் இமிக்ரேசன் மற்றும் கஸ்டம்ஸ் சோதனைகளுக்கு பின் விமானம் மாறிச் செல்லலாம்.

    இதனால் கோவையில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு 19 மணி நேரம் 50 நிமிடங்களில் சென்று விட முடியும். அமெரிக்க நகரங்களுக்கு மட்டுமின்றி, லண்டன், முனிச், பாரிஸ், மொரிஷியஸ், ஆம்ஸ்டர்டாம், ரியாத், ஜெட்டா, எகிப்து, தோஹா, துபாய், அபுதாபி, மஸ்கட் உள்ளிட்ட 20 வெளிநாட்டு நகரங்களுக்கு இந்த ஏர் இந்தியா விமான சேவை இணைப்பாக அமையும்.மும்பைக்கு 3 இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா விமானங்கள் இயக்கப்படும் நிலையில் இது 6-வது விமான சேவையாகும்.

    கோவையிலிருந்து மும்பைக்கு காலை 6:45 மணிக்கு, இண்டிகோ விமானம் முதல் சேவையை தொடங்குகிறது. அதையடுத்து ஏர் இந்தியா-காலை 9 மணி, விஸ்தாரா-மதியம் 2:30 மணி, இண்டிகோ-மாலை 4:45 மணி, ஏர் இந்தியா-இரவு 9:35 (டிசம்பர் 15-ந்தேதியில் இருந்து ), இண்டிகோ-இரவு 10:20 மணி என மொத்தம் 6 விமானங்கள் கோவையில் இருந்து மும்பைக்கு இயக்கப்படுகின்றன. 

    • அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் கல்விக்காக ஏராளமான திட்டங்களை அறிவித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா்.
    • பெண்கள் மற்றும் மாணவிகள் பயன்பெறும் வகையில், அரசு பேருந்துகளில் இலவச பயணத்திட்டம், அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

     திருப்பூர்:

    திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் உள்ள எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலைக் கல்லூரியில் சுற்றுப் பகுதியை சோ்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா்.இந்த கல்லூரியானது காலை 9 மணி முதல் பிற்பகல் 1.55 மணி வரையில் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் திருப்பூா் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து காலை 8 மணி முதல் 9 மணி வரை பல்லடம் வழித்தடத்தில் போதுமான அளவில் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என தெரிகிறது. இதனால் இலவச பயணத்தை நம்பியுள்ள மாணவிகள் வேறு வழியின்றி தனியாா் பேருந்துகளில் கட்டணம் செலுத்தி கல்லூரிக்கு செல்கின்றனா்.

    இது குறித்து எல்.ஆா்.ஜி., கல்லூரி மாணவிகள் கூறியதாவது:-

    அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் கல்விக்காக ஏராளமான திட்டங்களை அறிவித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா். அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் மாணவிகள் பயன்பெறும் வகையில், அரசு பேருந்துகளில் இலவச பயணத்திட்டம், அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்நிலையில் திருப்பூா்-பல்லடம் வழித்தடத்தில் காலை வேளைகளில் போதிய அளவு அரசு பேருந்துகள் இல்லாததால் தனியாா் பேருந்துகளில் கட்டணம் செலுத்தி கல்லூரிக்கு செல்ல வேண்டியுள்ளது. இதற்காகவே மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.எனவே திருப்பூா்-பல்லடம் வழித்தடத்தில் கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

    தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    அரியலூர்,  

    அரியலூர் மாவட்டம் தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் நீட் விலக்கை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

    குழுமூர் கிராமத்தில் உள்ள மறைந்த மாணவி அனிதா திடலில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவச ங்கர் கலந்து கொண்டார். அனிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், நீட் விலக்கை வலியுறுத்திகையெ ழுத்திட்டு இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில், தி.மு.க. சட்டத்திட்ட திருத்த குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அ.பெருநற்கிள்ளி, தலைமை செயற்குழு உறுப்பினர் பி.பாலசுப்ரமணியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெய்வ.இளையராஜா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆர்.ராமராஜன், மருத்துவர் அணி அமைப்பாளர் சஞ்சய் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர தி.மு.க. நிர்வாகிகள், இளைஞரணி, மாணவரணி, மருத்துவர் அணி நிர்வாகி கள் பலரும் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.

    • ராஜபாளையத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் பயிலகம் தொடங்கியது
    • முதல் நாளிலேயே 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலகத்தில் ஆர்வமுடன் பயில வந்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சமந்தாபுரம் மேல பள்ளிவாசல் தெருவில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் பயிலகம் தொடக்க விழா நடைபெற்றது. விஜய் மக்கள் இயக்க விருது நகர் மாவட்ட செயலாளர் பாலா ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

    பயிலக திறப்பு விழா ஏற்பாடுகளை நகர பொருளாளர் சமீர், திவான், நாகராஜ் உள்பட இயக்க நிர்வாகிகள் செய் திருந்தனர். மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இரு ஆசிரியர்கள் கொண்டு தொடங்கப்பட்டுள்ள விஜய் பயில கத்தில் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலகத்தில் ஆர்வமுடன் பயில வந்தனர். அவர்களுக்கு நோட்டு, பென்சில், பேனா, புத்தகம் உட்பட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    • நாடு முழுவதும் வயதில் மூத்தோர்களுக்கு கற்பிக்கும் நோக்கில், புதிய பாரத எழுத்தறிவு இயக்கத்தை மத்திய அரசு தொடங்கி யுள்ளது.
    • இத்திட்டத்தின் கீழ், வாழப்பாடி வட்டா ரத்தில் வாழப்பாடி, பேளூர் பேரூராட்சிகள் மற்றும் 20 கிராம ஊராட்சிகளிலும் புதிய பாரத எழுத்த றிவு இயக்கம் தொடங்கப் பட்டது.

    நாடு முழுவதும் வயதில் மூத்தோர்களுக்கு கற்பிக்கும் நோக்கில், புதிய பாரத எழுத்தறிவு இயக்கத்தை மத்திய அரசு தொடங்கி யுள்ளது. இத்திட்டத்தின் கீழ், வாழப்பாடி வட்டா ரத்தில் வாழப்பாடி, பேளூர் பேரூராட்சிகள் மற்றும் 20 கிராம ஊராட்சிகளிலும் புதிய பாரத எழுத்த றிவு இயக்கம் தொடங்கப் பட்டது. சிறப்பு பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள், வயதில் மூத்தவர்களுக்கு மாலை நேரத்தில் கல்வி கற்பிக்கும் பணியை தொடங்கினர்.வாழப்பாடி அண்ணா நகர் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் நடைபெற்ற தொடக்க விழாவில், பள்ளி தலைமை ஆசிரியை ஷபிராபானு, தன்னார்வலர்கள் ஈஸ்வரி, சந்தியா ஆகியோருக்கு சான்றிதழ்களையும், வயதில் மூத்தவர்களுக்கு பயிற்சி ஏடுகளையும் வழங்கினார். வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து மையங்களிலும் பயிற்சியில் கலந்து கொண்ட வயதில் மூத்தோர்களுக்கு, எழுது பொருட்கள், பயிற்சி ஏடுகள் வழங்கப்பட்டது.

    • அமராவதி அணையில் நீர் இருப்பு உள்ளதால் அணைப்பகுதிக்குள் வனவிலங்குகள் முகாமிட்டு வருகின்றன.
    • யானைகள் மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்பவோ அவற்றின் மீது கற்களை வீசுவது, செல்பி புகைப்படம் எடுப்பதற்கு முயற்சி செய்யக் கூடாது.

    உடுமலை:

    உடுமலை அமராவதி அணையில் நீர் இருப்பு உள்ளதால் அணைப்பகுதிக்குள் வனவிலங்குகள் முகாமிட்டு வருகின்றன. இதனால் அவற்றுக்கான உணவு ,தண்ணீர் தேவை தற்காலிகமாக பூர்த்தியடைந்துள்ளது. மேலும் யானைகள் காலை நேரத்தில் உடுமலை -மூணாறு சாலையை கடந்து வனப்பகுதிக்கு செல்வதும் மாலையில் அணை பகுதிக்கு வருவதுமாக உள்ளது.

    எனவே யானைகள் சாலையை கடக்கும் வரையில் வாகன ஓட்டிகள் அமைதியாக இருந்து சாலை பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

    யானைகள் மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்பவோ அவற்றின் மீது கற்களை வீசுவது, செல்பி புகைப்படம் எடுப்பதற்கு முயற்சி செய்யக் கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ×