search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு,சேலம், திருவண்ணாமலை பஸ்கள் நாளை முதல் திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கம்
    X

    கோப்புபடம். 

    ஈரோடு,சேலம், திருவண்ணாமலை பஸ்கள் நாளை முதல் திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கம்

    • ஈரோடு, சேலம், திருவண்ணாமலைக்கு பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் முடிவு செய்தனர்.
    • தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் எப்போதும் போல் கோவில் வழி பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் திருப்பூர் பழைய பஸ் நிலையம் புதிதாக கட்டும் பணி நடைபெறுகிறது. இறுதிகட்ட பணிகள் முடிந்து விரைவில் பஸ் நிலையம் திறக்கப்பட உள்ளது.

    மேலும் புதிய பஸ் நிலையத்திலும் பணிகள் நடைபெற்று வந்தது. பஸ் நிலைய கட்டுமான பணியால் ஈரோடு, சேலம் பஸ்கள் யூனிவர்சல் தியேட்டர் அருகே தற்காலிகமாக அமைக்கப்பட்ட பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் புதிய பஸ் நிலையத்தில் பணிகள் முடிந்த நிலையில், இடங்கள் காலியாக கிடந்ததால் அங்கிருந்து ஈரோடு, சேலம், திருவண்ணாமலைக்கு பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    அதன்படி நாளை முதல் ஈரோடு, சேலம், திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் பஸ்கள் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் எப்போதும் போல் கோவில் வழி பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×