search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை வழியாக பீகாருக்கு சிறப்பு ரெயில்
    X

    மதுரை வழியாக பீகாருக்கு சிறப்பு ரெயில்

    • நெல்லையில் இருந்து மதுரை வழியாக பீகாருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக, நெல்லையில் இருந்து பீகார் மாநிலம் தானாப்பூர் ரெயில் நிலையத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    நெல்லையில் இருந்து வருகிற 18, 25-ந் தேதி செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலை 3 மணிக்கு புறப்படும் ரெயில் மதுரை, பழனி, கோவை, சேலம் வழியாக வியாழக்கிழமைகளில் மதியம் 2.30 மணிக்கு தானப்பூர் செல்லும்.

    மறு மார்க்கத்தில் தானாப்பூரில் இருந்து வருகிற 21-ந் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6.50 மணிக்கு புறப்படும் ரெயில் சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல் வழியாக, திங்கட்கிழமை அதிகாலை 4.20 மணிக்கு நெல்லை செல்லும்.

    நெல்லையில் இருந்து தானாப்பூர் செல்லும் சிறப்பு ரெயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, பொள்ளாச்சி, போத்தனூர், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார் பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், கூடூர், நெல்லூர், ஓங்கோல் வழியாக பாட்னாவில் நின்று செல்லும்.

    தானாப்பூரில் இருந்து நெல்லை வரும் ரெயில் கோவை, போத்தனூர், பொள்ளாச்சி, பழனி, ஒட்டன்சத்திரம் வழியாக செல்லாமல், சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும். மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×