search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Specials"

    • ஆகஸ்ட் மாதம் 22-ந்தேதியில் இருந்து 28-ந்தேதிவரை உள்ள முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்
    • வருகிற 25-ந்தேதி வரலட்சுமி விரதம்.

    22-ந் தேதி (செவ்வாய்)

    * சஷ்டி விரதம்.

    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தருமிக்கு பொற்கிழி அருளுல்.

    * திருநெல்வேலி குறுக்குத்துறை முருகப்பெருமான் புறப்பாடி கண்டருளல்

    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    * சமநோக்கு நாள்.

    23-ந் தேதி (புதன்)

    * மதுரை சோமசுந்தரர் உலவாய்க்கோட்டை அருளிய திருவிளையாடல்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.

    * கீழ்நோக்கு நாள்.

    24-ந் தேதி (வியாழன்)

    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்.

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.

    * சமநோக்கு நாள்.

    25-ந் தேதி (வெள்ளி)

    * வரலட்சுமி விரதம்.

    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வளையல் விற்ற திருவிளையாடல்.

    * சங்கரன் கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.

    * திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    * சமநோக்கு நாள்

    26-ந்தேதி (சனி)

    * திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் மாலை தங்கச் சப்பரம்.

    * கீழ்நோக்கு நாள்.

    27-ந் தேதி (ஞாயிறு)

    * சர்வ ஏகாதசி.

    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் புட்டுக்கு மண் சுமந்த லீலை.

    * திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளி கைக்கு எழுந்தருளல். கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

    28-ந் தேதி (திங்கள்)

    * பிரதோஷம்.

    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் விறகு விற்ற திருவிளையாடல்.

    * திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம்.

    * மேல்நோக்கு நாள்.

    • சேலத்தில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • ஒவ்ெவாரு தமிழ் மாதத்தில் வரும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகை, ஆயுதப்பூஜைக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவது வழக்கம். மேலும் ஒவ்ெவாரு தமிழ் மாதத்தில் வரும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இந்த நிலையில் வருகிற 28-ந்ேததி ஆனி அமாவாசையையொட்டி மாதேஸ்வரன் மலைக்கு சேலம் புதிய பஸ் நிலையம், மேட்டூர் பஸ் நிலையத்தில் இருந்து 27 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதைத்தவிர தருமபுரி மண்டலத்தில் இருந்து 8 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 35 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு பஸ்கள் 28-ந்தேதி அதிகாலையில் இருந்து இரவு வரை இயக்கப்படும் என்று சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×