search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜார்க்கண்ட்டில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 3 நக்சல்கள், ஒரு சிஆர்பிஎப் வீரர் பலி
    X

    ஜார்க்கண்ட்டில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 3 நக்சல்கள், ஒரு சிஆர்பிஎப் வீரர் பலி

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெல்பா காட் வனப்பகுதியில் நக்சல்களுடன் நடைபெற்ற சண்டையில் 3 நக்சல்கள், மற்றும் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் பலியாகினர். #JharkhandEncounter
    கிரிதிக்:

    மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர், இரு வர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.

    பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.

    ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிக் மாவட்டத்திற்குட்பட்ட பெல்பா காட் வனப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, அந்த பகுதிக்கு சென்ற எல்லை பாதுகாப்பு படையினர் நக்சல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு மறைந்திருந்த நக்சல்களுக்கும், பாதுகாப்பு படைவீரர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. சிறிது நேரம் தொடர்ந்த இந்த துப்பாக்கி சண்டையில், சிஆர்பிஎப் வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 நக்சல்கள் பலியாகினர். அவர்களிடமிருந்து ஒரு ஏகே 47 ரக துப்பாக்கி, தோட்டாக்கள் போடப்பயன்படும் 3 மேகசின்கள், 4 வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.  #JharkhandEncounter
    Next Story
    ×