search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewellery"

    • இன்று காலை ஜோதி வீட்டுக்கு சென்றார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
    • தூத்துக்குடியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகர் 7-வது தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன். இவரது மனைவி ஜோதி (வயது 64). இவர்களது மகள் பகவதி, ஜோதிநகரில் வசித்து வருகிறார். நேற்று இரவு ஜோதி அவர் மகள் வீட்டில் தங்கி உள்ளார்.

    நகை-பணம் கொள்ளை

    இந்நிலையில் இன்று காலை ஜோதி வீட்டுக்கு சென்றார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோவில் உடைக்கப்பட்டு அதில் இருந்த 9 பவுன் தங்கநகை, 180 கிராம் வெள்ளி மற்றும் ரூ.11 ஆயிரம் ரொக்கப்பணம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

    இது குறித்து அவர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர். மேலும் தூத்துக்குடியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரமேஷ் (39). இவர் கார் மற்றும் லாரி பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.
    • அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் ரமேஷ் மற்றும் அவரது நண்பர்களை தாக்கி 2 பவுன் தங்க செயின், ரூ.450-ஐ பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர்.

    சேலம்:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாரசிராம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ரமேஷ் (39). இவர் கார் மற்றும் லாரி பட்டறை வைத்து நடத்தி வருகிறார். ேநற்று முன்தினம் இரவு சேலம் டவுன் தாதுபாய்குட்டை அருகே உள்ள ஒரு ஓட்டலில் தன் நண்பர்கள் அண்ணாதுரை, சுரேஷூடன் சாப்பிட சென்றார்.

    அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் ரமேஷ் மற்றும் அவரது நண்பர்களை தாக்கி 2 பவுன் தங்க செயின், ரூ.450-ஐ பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர்.

    பூ வியாபாரி

    இதேபோல், சேலம் பொன்னம்மாபேட்ைட வாசக சாலை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (42). பூ வியாபாரியான இவர் நேற்று முன்தினம் இரவு சேலம் பழைய நிலையம் அண்ணா சிலை அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது இவரை வழிமறித்து தாக்கிய 3 வாலிபர்கள், அவரிடம் இருந்த ரூ.500-ஐ பறித்துக் கொண்டனர்.

    இந்த 2 சம்பவங்கள் குறித்து சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பழனியம்மான் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக சேலம் கிச்சிப்பாளையம் களரம்பட்டி மெயின்ரோடு காந்தி நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த ராஜா மகன் ரவிக்குமார் என்கிற போலீஸ் ரவி (32), கோவிந்த சாமி நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (33), கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்த பிரசாத் (25) ஆகியோரை கைது செய்து பணம், நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். 

    • மாதம் 2 முறை கடையில் உள்ள நகைகளை சரி பார்ப்பது வழக்கம்.
    • நகை வாங்குவது போல் கடைக்கு வந்து, அரை பவுன் தங்க மோதிரத்தை திருடி சென்றது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    காரைக்கால் புதுத்துறையை சேர்ந்தவர் சித்ரா. இவர், காரைக்கால் மாதா கோவில் வீதியில் உள்ள நகைக்கடையில் வேலை செய்து வருகிறார். கடை உரிமையாளர் மற்றும் இவரது மகன் ஆகியோர் மாதம் 2 முறை கடையில் உள்ள நகைகளை சரி பார்ப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த 10-ந் தேதி நகைகளை சரிபார்த்து விட்டு நேற்று முன்தினமும் சரி பார்த்தனர். அப்போது, அரை பவுன் தங்க மோதிரம் குறைவது தெரியவந்தது.

    மோதிரம் குறைவதால் கடையில் உள்ள சி.சி.டிவி கேமரா பதிவுகளை பார்த்தனர். அப்போது, கடையில் இருந்த சித்ராவிடம், 45 வயது மதிக்கத்தக்க நபரும், ஒரு பெண்ணும் நகை வாங்குவது போல் கடைக்கு வந்து, அரை பவுன் தங்க மோதிரத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து காரைக்கால் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து திருடி சென்ற நபர்களை தேடி வந்த நிலையில் மோதிரத்தை திருடிசென்ற திருவாரூர் அய்யம்பேட்டையைச் சேர்ந்த தனலட்சுமி (வயது 45) நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் புருசோத்தமன், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இவருடன் வந்த குபேரனை போலீசார் தேடி வருகின்றனர்.

    • சேலம் அம்மாப்பேட்டை மற்றும் ஆட்டையாம்பட்டி பகுதியில் முத்ரா ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடைகள் செயல்பட்டு வந்தன.
    • சேலம் பொரு ளாதார குற்றப்பிரிவு அலு வலகத்தில் புகார் கொடுக்க லாம் என போலீஸ் இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை மற்றும் ஆட்டையாம்பட்டி பகுதியில் முத்ரா ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடைகள் செயல்பட்டு வந்தன. இந்த 2 கடைகளிலும் நகைகள் வாங்குவதற்கு சுலப மாத தவணை ரூ.500 முதல் ரூ.2 லட்சம் வரை கட்டும் திட்டம், பழசுக்கு புதுசு திட்டம் மற்றும் தங்க முன்பதிவு திட்டங்கள் இருப்பதாகவும், முதிர்வு காலங்கள் முடிந்தவுடன் தங்க நகைகள் திருப்பி கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    புகார்

    இந்த திட்டத்தில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா மரப்பரை தென்னமரத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (வயது 52) என்பவர் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். ஆனால் முதிர்வு காலம் முடிந்த பிறகு முதலீடு ரூபாய், அல்லது அதற்கான தங்க நகை கொடுக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த விஜயகுமார் சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

    தங்க நகை திட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ந்தேதி எனது பெயரில் முதல் மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் 9 மாதங்கள் ரூ.90 ஆயிரம் முத்ரா ஜூவல்லர்ஸ் கடை உரிமையாளர் முருகவேல் கணக்கில் செலுத்தினேன். மேலும் 2 மாதம் ரூ.20 ஆயிரம் நேரடியாக கட்டினேன்.

    மேலும் நான் திருச்செங்கோட்டில் வைத்திருந்த வீட்டு மனை நிலத்தை விற்று அந்த பணத்தை எஸ்.எம். கோல்டு ஸ்வர்ண விருட்ஷா தங்க முன்பதிவு திட்டத்தில் சேர்ந்து அதில் மாதம் மாதம் ரூ. 2 லட்சம் வீதம் 10 மாதங்களுக்கு ரூ. 20 லட்சம் கட்டினேன். தொடர்ந்து நெக்லஸ் செய்வதற்காக ரூ.10 லட்சம் கட்டினேன். ஆனால் முதலீடு செய்த பணத்தையும், நகையையும் திருப்பி தரவில்லை.

    இதனால் விஜயகுமார் ஆட்டையாம்பட்டியில் முத்ரா நகைக்கடையில் சென்றபோது, அந்த நகைக்கடை பூட்டப்பட்டு இருந்தது. அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது கடை உரிமையாளர்கள் முருக வேல், அவரது மனைவி கலைவாணி இருவரும் உன்னைப்போல் பல பேர்க ளிடம் நகை சீட்டில் பணத்தை வாங்கி ஏமாற்றி விட்டு ஓடி விட்டார்கள் என கூறி னார்கள். இதனால் நான், முருகவேல் வசிக்கும் அம்மாப்பேட்டையில் உள்ள வீட்டிற்கு சென்றேன். அங்கும் அவர் வீடு பூட்டியிருந்தது.

    பிறகு நான் தொலை பேசியில் அவர்களை தொடர்பு கொண்டபோது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு பல இடங்களில் தேடி பார்த்தபோது அவர்களை கண்டுபிடிக்க முடிய வில்லை. முருகவேல், கலை வாணி ஆகியோர் தலை மறைவாகி விட்டார்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை திருப்பி தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.

    அதன்பேரில் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், முத்ரா ஜூவல்லர்ஸ் நகைக்கடை உரிமையாளர்கள் முருக வேல் மற்றும் இவரது கலைவாணி ஆகியோர் மீது 120 (பி), 420 ஐ.பி.சி. மற்றும் டி.என்.பி.ஐ.டி. சட்ட பிரிவு 5 உள்ளிட்ட பிரிவுகளின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட பொது மக்கள் சம்பந்தப்பட்ட அனைத்து அசல் ஆவ ணங்கள், அடையாள அட்டையுடன் சேலம் பொரு ளாதார குற்றப்பிரிவு அலு வலகத்தில் புகார் கொடுக்க லாம் என போலீஸ் இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.

    • மதுரையில் பள்ளி ஆசிரியர் வீட்டில் ரூ.10 லட்சம் நகைகள் கொள்ளை நடந்தது.
    • மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை தெப்பக்குளம் கொண்டிதொழு தெருவை சேர்ந்தவர் பீமல் ராய் (32), பள்ளி ஆசிரியர். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 வயது குழந்தையும் உள்ளனர்.

    நேற்று இரவு 8 மணியளவில் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.

    பின்னர் திரும்பி வந்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதை பார்த்து அதிர்ச்சி யடைந்த பீமல் ராய் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோவில் பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 26 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம், ஒரு கைக்கடி காரம் ஆகியவை திருடப் பட்டிருந்தது. யாரோ மர்ம நபர்கள் நோட்டமிட்டு வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

    இது குறித்து தெப்பக்கு ளம் போலீசில் பீமல்ராய் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து வீடு புகுந்து நகை, பணம் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    மதுரை தெற்கு வாசல் தெற்கு கிருஷ்ணன் கோவில் 3-வது தெருவை சேர்ந்தவர் ரத்தினகிரி (54). சம்பவத் தன்று அதிகாலை இவரது வீட்டில் புகுந்த மர்மநபர் பீரோவில் வைத்திருந்த 9 பவுன் தங்க நகை, வெள்ளி பொருட்களை திருடி சென்று விட்டார். இது குறித்து தெற்கு வாசல் போலீசில் ரத்தினகிரி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • நான் உங்கள் ஊர் வழியாக தான் செல்கிறேன் என்றார்.
    • தங்க நகைகளை அந்த நபர் எடுத்து கொண்டு தப்பி ஓடினார்.

    திருவோணம்:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா பாப்பாநாடு அருகே உள்ள வடசேரி கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 45) வயது இவர் நேற்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு பஸ்ஸில் திரும்பி ஊருக்கு வந்தார்.

    அப்போது பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த ஒரு மர்மநபர் அவரிடம் பேச்சு கொடுத்தார்.

    இதைத் தொடர்ந்து தான் உங்கள் ஊர் வழியாக தான் செல்கிறேன். என்னுடன் மோட்டார் சைசக்கிளில் வாருங்கள் என்று கூறினார்.

    இதை நம்பிய கனகராஜ் அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தார்.

    மோட்டார் சைக்கிளில் அலிவலம் என்ற இடத்தின் அருகே சென்ற போது இயற்கை உபாதை கழிப்பதற்காக இருவரும் இறங்கினர்.

    அப்போது கனகராசிடம் இருந்த தங்க நகைகளை அந்த நபர் எடுத்துக் கொண்டு தப்பி ஓடினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கனகராஜ் இது குறித்து உடனடியாக ஒரத்தநாடு போலீஸ் துணை சூப்பிரண்டு

    பிரசன்னாவுக்கு தகவல் கொடுத்தார்.

    அவரது உத்தரவின் பெயரில் பாப்பா நாட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ வன் தலைமையிலான குற்றப்பிரிவு தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் குமாரவேல் மற்றும் அதிரடிப்படை ராஜா சின்னத்துரை ஜெகன் உள்ளிட்ட படையினர் அதிரடியாக செயல் பட்டு நகையை பறித்த கொள்ளையனை மடக்கி பிடத்தனர்.

    விசாரணையில் அவர் வட்டாத்தி கோட்டை தோப்பநாயக்கத்தைச் சேர்ந்த சித்திரைவேல் (42) என்பது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து அவரை கைது செய்தனர்.

    துரிதமாக செயல் பட்ட குற்றபிரிவு போலீசாரை

    போலீஸ் அதிகாரிகள் பாராட்டினார்கள்.

    கொள்ளையடிக்கப்பட்ட சில மணி நேரங்களில் கொள்ளையனை கைது செய்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

    • வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் ஹரிகரன் (வயது 37). தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
    • இந்த நிலையில், சம்பவத்தன்று இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

    சேலம்:

    சேலம் அருகே கருப்பூர், கோட்டகவுண்டம்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் ஹரிகரன் (வயது 37).

    இவர் சீரகாப்பாடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 23-ந் தேதி வீட்டை பூட்டை விட்டு குடும்பத்துடன் ராமேஸ்வரன் கோவிலுக்கு சென்றார்.

    இந்த நிலையில், சம்பவத்தன்று இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனை, அருகில் வசிக்கும் சீனிவாசன் என்பவர் பார்த்து, ஹரிகரனுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து ஹரிகரன் தனது நண்பரான சிவபாரதி என்பவரிடம் கூறி நேரில் சென்று பார்க்குமாறு தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த சிவபாரதி, இந்த கொள்ளை குறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து பார்த்தபோது, வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் அதில் இருந்து 2 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, பட்டப்பகலில் இச்சம்பவத்தை கொள்ளையர்கள் அரங்கேற்றியிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • மதுரை நகைக்கடைகளில் கைவரிசை காட்டிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
    • நகைக்கடை பஜாருக்கு சென்றனர்.

    மதுரை

    மதுரை கீழவெளிவீதி கிருஷ்ணா அவென்யூவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது59). இவர் தெற்கா வணி மூல வீதியில் நகைக் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு 2பெண்கள் வந்த னர். அவர்கள் கடையில் ½பவுன் தோடு வாங்குவது போல் நடித்து அதனை திருடிச் சென்று விட்டனர். இது குறித்து செல்வராஜ் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார்.

    இந்த சம்பவம் நடந்து சில நாட்களுக்கு பின் காம ராஜர் சாலை ரெங்கநாயகி தெருவை சேர்ந்த சிவகுமார் (48) என்பவர் தெற்கு சித்திரை வீதியில் நடத்தி வரும் கடையில் 2 பெண்கள் நகை வாங்குவது போல் நடித்து ¾பவுன் தோடு திருடிச்சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்தும் கடை உரிமையாளர் சிவக்குமார் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ேமலும் கடை உரிமை யாளர்களும், போலீசாரும் கடையில் பதிவாகி இருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது 2 கடைகளிலும் நகையை திருடிச்சென்றது அதே பெண்கள் தான் என தெரியவந்தது.

    அவர்கள் யார்? என்று போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் ஏற்கனவே திருடி மாட்டிக் கொள்ளா ததால் தங்களை அடையா ளம் தெரியவில்லை என அந்த திருடிகள் நம்பியுள்ள னர். இதனால் தைரியமாக மீண்டும் கைவரிசை காட்டு வதற்காக நகைக்கடை பஜாருக்கு சென்றனர்.

    ஏற்கனவே திருடிய நகைக்கடை வழியாக சென்றபோது கடையின் உரிமையாளர்கள் அவர்களை அடையாளம் கண்டு விரட்டிப்பிடித்தனர். பின்னர் அவர்களை விளக்குத்தூண் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசாரின் விசாரணை யில், அவர்கள் ஒத்தக்கடை அய்யப்பன் நகர் 4-வது தெருவை சேர்ந்த செல்லம் மகள் தரணி (32), சக்கரா நகரை சேர்ந்த ஜெகதீஷ குமார் மனைவி சந்தியா (27) என்பது தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • பெண்ணிடம் 5 பவுன் நகை பறிக்கப்பட்டது.
    • செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு தென்றல் நகரை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி கவிதா(வயது45). இவர் சம்பவத்தன்று கோரிப்பாளையம் ஏ.வி.மேம்பாலம் அருகில் உள்ள பெண்கள் கல்லூரி ரோட்டில் மொபட்டில் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம ஆசாமி கவிதாவை வழிமறித்து கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பினான்.

    இதுகுறித்த புகாரின் பேரில் செல்லூ ர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அய்யனாரப்பன் கோவில் தெருவை சேர்ந் தவர் சீனிவாசன் (வயது 36). இவர் ஆட்டோ உதிரி பாகங்கள் விற்பனை செய்து வருகிறார்.
    • பூட்டிவிட்டு வெளியே சென்ற சீனிவாசன், மதியம் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சேலத்தாம்பட்டி அய்யனாரப்பன் கோவில் தெருவை சேர்ந் தவர் சீனிவாசன் (வயது 36). இவர் ஆட்டோ உதிரி பாகங்கள் விற்பனை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று காலை வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்ற சீனி வாசன், மதியம் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 2 பவுன் தங்கச் செயின் மற்றும் ரூ.46 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இது குறித்து சீனிவாசன் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

    • கிழக்கு கடற்கரை சாலை வழியாக மீண்டும் வீடு திரும்பி உள்ளனர் .
    • நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த நிஷாவின் தலையில் படுகாயம் அடைந்து ரத்தம் கொட்டிஉள்ளது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பம் மீனவர் கிராம பகுதியை சேர்ந்தவர் தியாகு வயது (35) இவரது மனைவி நிஷா வயது (30 )இவர்கள் இருவரும் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் புதுவைக்கு சென்று அங்கு தனது வேலைகளை முடித்துக் கொண்டுகிழக்கு கடற்கரை சாலை வழியாக மீண்டும் வீடு திரும்பி உள்ளனர் . இவர்கள் மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தின் அருகில் வந்த போது இவர்களின் வாகனத்தை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் ைசக்கிளில் அமர்ந்து வந்த நிஷாவின் கழுத்தில் இருந்த 7 பவுன் தாலி செயினை பறித்துள்ளனர்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நிஷா தனது தாலி செயினை பிடிக்க முயற்சி செய்து உள்ளார் .அப்போது மர்ம நபர்கள் நிஷாவை தள்ளி உள்ளனர். இதனால் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த நிஷாவின் தலையில் படுகாயம் அடைந்து ரத்தம் கொட்டிஉள்ளது. அந்த நேரத்தில் தாலி செயினை பறித்த மர்ம நபர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் மோட்டார்சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர். தன் கண் எதிரிலேயே இச்சம்பவத்தை கண்ட தியாகு ஒன்றும் செய்ய முடியாமல் கதறியபடி தன் மனைவியை மீட்டு சிகிச்சைக்காக மரக்காணத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுவை மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நிஷா அழைத்துச் செல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து தியாகு மரக்காணம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இந்த தகவலின் பேரில் மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதேபோல் கடந்த வாரம் மரக்காணம்அருகே கோட்டக்குப்பத்தில் கத்தியால் வெட்டிவிட்டு தனியார் ஊழியரிடம் மர்ம நபர்கள் செல்போனை பறித்து சென்று விட்டனர். இதுபோல் தொடர்ந்து இப்பகுதியில் வழிப்பறி கொள்ளை நடைபெற்று வருவதால் எந்த நேரத்தில் என்ன ஆகுமோ என பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    • மதுரையில் பெண் ஆடிட்டர் வீட்டில் 25 பவுன் நகைகள், ரூ2 லட்சம் திருட்டு சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • பெண் வேலையாள் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மதிச்சியம் காந்தி நகர் ஆசாத் தெருவை சேர்ந்தவர் கீதா. இவர் செராமிக்ஸ் கடையில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவரது வீட்டில் வைத்திருந்த 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை திருட்டு போனது.

    திருட்டு

    நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்றது யார்? என்பது தெரியவில்லை. இந்த திருட்டு குறித்து ஆடிட்டர் கீதா மதிச்சியம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அவர் தனது புகாரில், தன்னுடைய வீட்டில் வேலை செய்யும் பெண் வேலையாள் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். திருட்டு போன நகைகள் மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.14 லட்சம் என்று கூறப்படுகிறது. திருட்டு சம்பவம் தொடர்பாக ஆடிட்டர் கீதா வீட்டில் பணிபுரியும் பெண் ஊழியர் மற்றும் சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மதுரை புதூர் மண்மலைச் சாமி தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இவர் செக்யூரிட்டி சர்வீஸ் மற்றும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நடத்தி வருகிறார். இவருடைய அலுவலகம் திலகர்திடல் பகுதியில் உள்ளது. இவர் வெளியே சென்றிருந்தபோது அலுவலகத்துக்குள் புகுந்த மர்ம நபர், அங்கு வைக்கப் பட்டிருந்த

    ரூ.36ஆயிரம் பணம் மற்றும் கம்ப்யூட்டர் மானிட்டர், சி.பி.யூ., கீபோர்டு, மவுஸ் முதலியவைகளையும் திருடிச் சென்றுவிட்டார்.

    இந்த திருட்டு குறித்து திலகர்திடல் போலீசில் ஆனந்த் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அலுவலகத்தில் புகுந்து பணம் மற்றும் பொருட்களை திருடி சென்ற மர்மநபர் யார்? என்று துப்பு துலக்குகின்றனர்.

    ×