search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டியில்  வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை கொள்ளை
    X

    கொள்ளை நடந்த வீடு.

    கோவில்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை கொள்ளை

    • இன்று காலை ஜோதி வீட்டுக்கு சென்றார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
    • தூத்துக்குடியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகர் 7-வது தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன். இவரது மனைவி ஜோதி (வயது 64). இவர்களது மகள் பகவதி, ஜோதிநகரில் வசித்து வருகிறார். நேற்று இரவு ஜோதி அவர் மகள் வீட்டில் தங்கி உள்ளார்.

    நகை-பணம் கொள்ளை

    இந்நிலையில் இன்று காலை ஜோதி வீட்டுக்கு சென்றார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோவில் உடைக்கப்பட்டு அதில் இருந்த 9 பவுன் தங்கநகை, 180 கிராம் வெள்ளி மற்றும் ரூ.11 ஆயிரம் ரொக்கப்பணம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

    இது குறித்து அவர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர். மேலும் தூத்துக்குடியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×