என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
- பெண்ணிடம் 5 பவுன் நகை பறிக்கப்பட்டது.
- செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு தென்றல் நகரை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி கவிதா(வயது45). இவர் சம்பவத்தன்று கோரிப்பாளையம் ஏ.வி.மேம்பாலம் அருகில் உள்ள பெண்கள் கல்லூரி ரோட்டில் மொபட்டில் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம ஆசாமி கவிதாவை வழிமறித்து கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பினான்.
இதுகுறித்த புகாரின் பேரில் செல்லூ ர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






