search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூரமங்கலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
    X

    சூரமங்கலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

    • அய்யனாரப்பன் கோவில் தெருவை சேர்ந் தவர் சீனிவாசன் (வயது 36). இவர் ஆட்டோ உதிரி பாகங்கள் விற்பனை செய்து வருகிறார்.
    • பூட்டிவிட்டு வெளியே சென்ற சீனிவாசன், மதியம் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சேலத்தாம்பட்டி அய்யனாரப்பன் கோவில் தெருவை சேர்ந் தவர் சீனிவாசன் (வயது 36). இவர் ஆட்டோ உதிரி பாகங்கள் விற்பனை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று காலை வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்ற சீனி வாசன், மதியம் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 2 பவுன் தங்கச் செயின் மற்றும் ரூ.46 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இது குறித்து சீனிவாசன் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

    Next Story
    ×