search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hotel"

    பாகிஸ்தானின் குவாதர் நகரில் நட்சத்திர ஓட்டலில் புகுந்து தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் எல்லையையொட்டி அமைந்துள்ளது. இங்குள்ள துறைமுக நகரான குவாதருக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

    இந்த குவாதர் துறைமுகத்துக்கு அருகே உள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு நேற்று மாலை சுமார் 4.45 மணியளவில் பயங்கர ஆயுதங்களுடன் 3 பயங்கரவாதிகள் திடீரென நுழைந்தனர். இதைப் பார்த்த ஓட்டல் காவலாளி அவர்களை தடுக்க முயன்றார். உடனே பயங்கரவாதிகள் அந்த காவலாளியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.



    அதன்பின், ஓட்டலில் தங்கியிருந்தவர்கள் மீது பயங்கரவாதிகள் அங்கு துப்பாக்கிச்சூடு நடத்த முயன்றனர்.

    தகவலறிந்து வந்த போலீசார், பயங்கரவாத தடுப்பு பிரிவினர் ஓட்டலில் நுழைந்த பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். இந்த பயங்கரவாத சம்பவத்துக்கு பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதல் சம்பவத்தால் குவாதர் நகர் முழுதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
    கூடலூர் பகுதியில் ஓட்டல் மற்றும் டீக்கடைகளில் சமையல் கியாஸ் சிலிண்டர் பயன்படுத்துவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    கூடலூர்:

    தேனி அருகே கூடலூர் நகரம் மற்றும் கிராமப்புறங்களான குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, ஆங்கூர்பாளையம், லோயர்கேம்ப் ஆகிய பகுதி மக்களுக்கு 2 தனியார் நிறுவனங்கள் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வினியோகிக்கப்படுகிறது.

    இந்த சிலிண்டர்கள் வீட்டு இணைப்பு மற்றும் வர்த்தக இணைப்பு என்று இருவகையான இணைப்புகளாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது.

    கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் வர்த்தக எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக மத்திய அரசு மானியத்துடன் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை குறிப்பாக வீட்டு இணைப்பிற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர்களை முறைகேடாக பயன்படுத்துகின்றனர். இதனால் சில நேரங்களில் வீட்டு இணைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

    எனவே மானிய விலையில் வழங்கப்படும் வீட்டு இணைப்பிற்கான எரிவாயு சிலிண்டர்கள் முறையாக பயன்படுத்தப்படுகிறதா? என்று மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் ஓட்டல் மற்றும் டீக்கடைகளில் பயன்படுத்தப்படுவதை தடுக்க சம்மந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    திருப்பத்தூர் அருகே நெற்குப்பையில் மின் கசிவால் 3 கியாஸ் சிலிண்டர்கள் வெடித்ததில் ஓட்டல்-3 கடைகள் நாசமானது.

    நெற்குப்பை:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பையை சேர்ந்தவர் சேகர். இவர் ராஜவீதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் சேகர் ஓட்டலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    இன்று அதிகாலை 2 மணி அளவில் ஓட்டலில் மின்கசிவு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த பொருட்கள் மீது தீப்பற்றியது.

    ஓட்டல் சமையல் அறையில் 3 சிலிண்டர்கள் வைக்கப்பட்டு இருந்தன. எதிர் பாராதவிதமாக அதிலும் தீ பரவியது. சிறிது நேரத்தில் 3 சிலிண்டர்களும் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

    இதில் ஓட்டல் இடிந்து தரைமட்டமானது. மேலும் அருகில் இருந்த குமார் என்பவரின் சலூன் கடையும், காஜாமுகமதுவின் பெட்டிக்கடை, கதிர்வேல் என்பவரின் அடகு கடை ஆகியவையும் சேதம் அடைந்தது.

    சிலிண்டர்கள் வெடித்த சத்தத்தை கேட்ட தூங்கி கொண்டிருந்த அந்த பகுதி மக்கள் பீதியில் உறைந்தனர். தகவல் அறிந்த நெற்குப்பை போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிலிண்டர் வெடித்ததில் 4 கடைகளில் உள்ள அனைத்து பொருட்களும் சேதம் அடைந்தன. இதன் மதிப்பு பல லட்சம் ஆகும்.

    விபத்து குறித்து நெற்குப்பை போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மின்கசிவு காரணமாக இந்த விபத்து நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

    எம்.எஸ்.சி. படித்து விட்டு வேலை கிடைக்காததால் டாஸ்மாக்கில் மது திருடி ஓட்டலில் விற்ற பட்டதாரி வாலிபரை நண்பர்களுடன் போலீசார் கைது செய்தனர்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அருகே உள்ள ரமணமுதலி புதூரில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் கடந்த ஆகஸ்டு மாதம் ‌ஷட்டரை உடைத்து ரூ. 1 லட்சத்து 5 ஆயிரம் மதிப்புள்ள 1,321 மது பாட்டிகல்கள் திருட்டு போனது.

    இதே போல் கடந்த செப்டம்பர் மாதம் அய்யாமடை பிரிவில் உள்ள டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளையிட்டு ரூ. 80 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களும் திருட்டு போனது.

    இந்த இரு சம்பவங்களிலும் ஈடுபட்டவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் அம்மாதுரை தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் வால்பாறை ரோடு நா.மூ. சுங்கத்தில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் அவர்கள் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த சரவணக்குமார் (39), கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டியை சேர்ந்த விநாயக மூர்த்தி என்பது தெரிய வந்தது. இவர்கள் 2 பேரும் டாஸ்மாக் கடையில் திருடிய வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்த மதுரை மேலூரை சேர்ந்த பார்த்தீபன் (26) என்பவரை பிடித்தனர்.அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இவர்களில் சரவணக்குமார் எம்.எஸ்.சி. பட்டதாரி ஆவார். படித்து விட்டு வேலை இல்லாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. சரவணக்குமாரும், விநாயக மூர்த்தியும் சேர்ந்து கருமத்தம் பட்டியில் ஓட்டல் நடத்தி வந்துள்ளனர். டாஸ்மாக் கடைகளில் திருடிய மது பாட்டில்களை அங்கு வைத்து விற்பனை செய்தும், வெளியில் அதிக விலைக்கு விற்பனை செய்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

    கைதான 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆரோக்கிய தாஸ், மணிகண்டன், கணேஷ் ஆகியோர் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர். #tamilnews
    டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தனது கைத்துப்பாக்கியை உருவி மிரட்டிய பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் எம்.பி.யின் மகன் மீது போலீசார் இன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். #BSPleader #Delhi5starhotel #DelhiHyattRegency #AshishPandey
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ராகேஷ் பான்டே. பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான இவர் முன்னர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவரது தம்பியான ரிட்டேஷ் பான்டே உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபையில் தற்போது உறுப்பினராக உள்ளார்.

    இந்நிலையில், லக்னோ நகரை சேர்ந்த ராகேஷ் பான்டேவின் மகனான ஆஷிஷ் பான்டே என்பவர் நேற்று முன்தினம் டெல்லியின் ஆர்.கே.புரம் பகுதியில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஓட்டலில் குடிபோதையில் தனது கைத்துப்பாக்கியை உருவி ஒரு பெண் உள்பட சிலரை மிரட்டும் வீடியோ காட்சி சமீபத்தில் இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



    இந்த காட்சிகளை பலர் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்தனர். நாட்டின் தலைநகரான டெல்லியில் சட்டம்-ஒழுங்கு எவ்வளவு சீர்கெட்டு கிடக்கிறது என்பதை இந்த வீடியோ தெளிவுப்படுத்துவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகனான ராபர்ட் வதேரா குறிப்பிட்டிருந்தார்.

    இதைதொடர்ந்து, இந்த வீடியோ பதிவை ஆதாரமாக வைத்து உத்தரப்பிரதேசம் மாநில போலீசார் லக்னோ நகரில் உள்ள ஆஷிஷ் பான்டேவின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது ஆஷிஷ் பான்டே வீட்டில் இல்லாததால் தேடப்படும் குற்றவாளியாக அவரை அறிவித்து அம்மாநில போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இந்நிலையில், டெல்லி போலீசார் இன்று ஆஷிஷ் பான்டே மீது பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #BSPleader #Delhi5starhotel #DelhiHyattRegency #AshishPandey
    திருச்சிற்றம்பலத்தில் நடந்த தீ விபத்தில் 7 கடைகள் எரிந்து ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமானது.

    திருச்சிற்றம்பலம்:

    தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் கடைவீதியில் ஓட்டல் நடத்தி வருபவர் மணிகண்டன். இவரது ஓட்டலில் அடுப்பு தீ சரியாக அணைக்கப்படாதால் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் காற்றில் தீ பொறி பறந்து ஓட்டலில் விழுந்து தீப்பிடித்தது. இதில் அங்கிருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அப்போது காற்று பலமாக வீசியதால் அருகில் உள்ள கடைகளுக்கும் தீ மளமளவென பரவியது.

    இந்த தீவிபத்தில் மணிகண்டனின் ஓட்டல், பாண்டியனின் டீக்கடை, வெள்ளைச்சாமியின் ஓர்க்ஷாப், பெட்டிக்கடை, கணேசனின் காய்கறிகடை, ராஜேந்திரனின் பர்னிச்சர் கடை, மாரி முத்துவின் மர இழைப்பகம் ஆகிய 7 கடைகள் எரிந்து சேதமானது. இவைகளில் எரிந்து நாசமான பொருட்களின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. தீவிபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் திருச்சிற்றம்பலம் மின்வாரிய அலுவலக ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின் இணைப்பை துண்டித்தனர். மேலும் பட்டுக்கோட்டை, பேராவூரணி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

    வருவாய் ஆய்வாளர் பார்த்த சாரதி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடம் வந்து தீவிபத்தில் பாதிக்கப்பட்ட கடைகளை பார்வையிட்டனர்.

    திருச்சிற்றம்பலத்தில் நடந்த தீவிபத்தில் 7 கடைகள் எரிந்து ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமானது. வியாபாரிகள், பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை விருகம்பாக்கத்தில் பிரியாணி கடையில் தகராறு செய்து, ஊழியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடந்தது. இதில் புகாருக்கு ஆளான தி.மு.க.வினர் 2 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். #DMK #ChennaiHotel #Attack
    பூந்தமல்லி:

    சென்னை விருகம்பாக்கத்தில் பிரியாணி கடை நடத்தி வருபவர் தமிழ்ச்செல்வன். இவரது தம்பி பிரகாஷ் (வயது 42), கடையை நிர்வகித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி இரவு உணவுகள் தீர்ந்து போனதால் கடையின் முன்பக்கத்தில் உள்ள ஒரு ‘ஷட்டரை’ சாத்தி விட்டு கணக்கு பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது விருகம்பாக்கம் தி.மு.க. நிர்வாகி பாக்சர் யுவராஜ் தலைமையில் வந்த 10-க்கும் மேற்பட்டோர் கடைக்குள் சென்று பிரகாசிடம் சாப்பிட பிரியாணி வேண்டும் என்று கேட்டனர்.

    அவரோ, “நேரம் ஆகிவிட்டதால் உணவுகள் தீர்ந்துவிட்டன” என்று கூறினார். அதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த பாக்சர் யுவராஜ் “நான் லோக்கல் ஆளு எனக்கே பிரியாணி இல்லையா?” என்று கேட்டு அங்கு இருந்த பொருட்களை கைகளால் தள்ளிவிட்டார்.



    அப்போது கடை ஊழியர்கள் 2 பேர், “ஏன் பிரச்சினை செய்கிறீர்கள்?” என்று கேட்டனர். இதில் மேலும் ஆத்திரம் அடைந்த பாக்சர் யுவராஜ் தனது ஆதரவாளர்களுடன் புடை சூழ தனக்கே உரிய ‘பாக்சிங்’ (குத்துச்சண்டை) பாணியில் பிரகாஷின் முகத்தில் ஓங்கி குத்துவிட்டார்.

    இதில் பிரகாசின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. இதனை தடுக்க வந்த ஊழியர்களையும் அவரது ஆதரவாளர்கள் விட்டுவைக்கவில்லை. ஊழியர்களில் ஒருவரை கடைக்கு வெளியே இழுத்து சென்றும், மற்றொரு ஊழியரை கடைக்குள்ளும் வைத்து சரமாரியாக தாக்கிவிட்டு பின்னர் அங்கிருந்து வெளியேறி கடையின் ஷட்டரை இழுத்து மூடிவிட்டு சென்றுவிட்டனர். இந்த தாக்குதல் சம்பவம், கடையில் பொருத்தப்பட்டு உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவில் (சி.சி.டி.வி.) பதிவாகி உள்ளது.

    இதில் படுகாயம் அடைந்த பிரகாஷ், கருணாநிதி (33), நாகராஜ் (55) ஆகிய 3 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவிட்டு இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் பாக்சர் யுவராஜ், திவாகரன் உள்ளிட்ட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம், விருகம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் பாக்சர் யுவராஜ் தாக்குதல் நடத்திய பிரியாணி கடைக்கு அடிக்கடி சென்று, விழாக்கள் ஆர்ப்பாட்டம் நடக்கிறபோது, தான் உள்ளூர்காரர் என்பதால் கேட்கிற விலைக்கு பிரியாணி தர வேண்டும் என்றும், நண்பர்களுடன் சென்று சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் சென்றுவிடுவார் என்றும், கடைக்கு முன்னால் தனது காரை நிறுத்தி இடையூறு செய்து வந்து உள்ளார் என்றும், இதனால் இரு தரப்பினருக்கும் முன் விரோதம் இருந்து வந்து உள்ளது என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

    பிரியாணி கடை ஊழியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய யுவராஜ், திவாகரன் ஆகியோர் மீது தி.மு.க. தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்து உள்ளது. இதுதொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை தெற்கு மாவட்டம் விருகம்பாக்கம் வடக்கு பகுதியை சேர்ந்த யுவராஜ், திவாகரன் ஆகியோர் தி.மு.க.வின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த ஒழுங்கு நடவடிக்கை அறிக்கையுடன் தி.மு.க. தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் அறிவிப்பை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-



    விருகம்பாக்கத்தில் உள்ள கடை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தி இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. தி.மு.க. கட்டுப்பாட்டை மீறியவர்கள் நீக்கப்பட்டு உள்ளார்கள். தி.மு.க. நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். 
    கும்பகோணம் ஓட்டலில் வேலை பார்த்த வாலிபர் மாயமனார். இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள சேங்காழிபுரத்தைச் சேரந்தவர் தமிழ்வாணன். விவசாயி. இவரது மகன் பிரவின் ஆலிஸ் (வயது 22). இவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் கடந்த 26-ந் தேதி சொந்த ஊருக்கு வந்துவிட்டு ஹோட்டலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் பிரவின் ஆலிஸ் மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.

    இதுபற்றி குடவாசல் போலீசில் தமிழ்வாணன் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்கு பதிவு செய்து மாயமான பிரவின் ஆலிஸை தேடி வருகிறார்.

    பா.ஜனதாவின் முயற்சியை முறியடிக்க ஜே.டி.எஸ். மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.#KarnatakaElections2018 #BJP #Congress #JDS
    பெங்களூர்:

    கர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற பா.ஜனதா ஆட்சி அமைத்துள்ளது.

    அதற்கு 104 எம்.எல். ஏ.க்களே உள்ளனர். மெஜாரிட்டிக்கு இன்னும் 8 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவைப்படுகிறது.

    2 சுயேட்சைகளில் ஒருவரான சங்கர் காலையில் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் மாலையில் காங்கிரசை ஆதரிப்பதாக பல்டி அடித்தார். இப்போது இரு சுயேச்சைகளுமே காங்கிரஸ் பக்கம் சாய்ந்து விட்டனர். இதனால் காங்கிரசின் பலம் 78-ல் இருந்து 80 ஆக அதிகரித்துள்ளது.

    இதற்கிடையே எதிர் அணியில் இருந்து 8 எம்.எல்.ஏ.க் களின் ஆதரவைப் பெற பா.ஜனதா மறைமுகமாக குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாக ஜே.டி.எஸ். தலைவர் குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார். இதற்காக வருமான வரித்துறை சி.பி.ஐ. போன்ற அமைப்புகளை பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

    இந்த நிலையில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், 3 ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ.க்களும் மாயமாகி விட்டதாக பெங்களூரில் தகவல் பரவியது. இதனால் காங்கிரஸ், ஜே.டி.எஸ். வட்டாரத்தில் பரபரப்பு நிலவியது.



    இதையடுத்து எம்.எல். ஏ.க்களுடன் பா.ஜனதாவினர் தொடர்பு கொண்டு பேரம் பேசுவதை தடுக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் நேற்று பகலில் பஸ்கள், கார்களில் அழைத்துச் செல்லப்பட்டு ராமநகரம் அருகே பிடதியில் உள்ள கோல்டன் ரிசார்ட் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

    ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ.க் கள் பெங்களூரில் கவர்னர் மாளிகை அருகில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க் களை பாதுகாக்கும் பொறுப்பு முன்னாள் மந்திரி டி.கே.சிவகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டெல்லி மேல்- சபை தேர்தலின் போது கட்சி தாவாமல் இருக்க குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இந்த கோல்டன் ரிசார்ட் விடுதியில்தான் தங்க வைக்கப்பட்டனர்.

    அபபோது மந்திரியாக இருந்த சிவகுமார்தான் எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் பொறுப்பை கவனித்தார். இதற்காக சிவகுமார் வீடு - அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.#KarnatakaElections2018 #BJP #Congress #JDS
    ×