என் மலர்
செய்திகள்

டெல்லி நட்சத்திர ஓட்டலில் துப்பாக்கியை உருவி மிரட்டிய பகுஜன் சமாஜ் தலைவர் மகன் மீது வழக்கு
டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தனது கைத்துப்பாக்கியை உருவி மிரட்டிய பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் எம்.பி.யின் மகன் மீது போலீசார் இன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். #BSPleader #Delhi5starhotel #DelhiHyattRegency #AshishPandey
புதுடெல்லி:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ராகேஷ் பான்டே. பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான இவர் முன்னர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவரது தம்பியான ரிட்டேஷ் பான்டே உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபையில் தற்போது உறுப்பினராக உள்ளார்.

இந்த காட்சிகளை பலர் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்தனர். நாட்டின் தலைநகரான டெல்லியில் சட்டம்-ஒழுங்கு எவ்வளவு சீர்கெட்டு கிடக்கிறது என்பதை இந்த வீடியோ தெளிவுப்படுத்துவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகனான ராபர்ட் வதேரா குறிப்பிட்டிருந்தார்.
இதைதொடர்ந்து, இந்த வீடியோ பதிவை ஆதாரமாக வைத்து உத்தரப்பிரதேசம் மாநில போலீசார் லக்னோ நகரில் உள்ள ஆஷிஷ் பான்டேவின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது ஆஷிஷ் பான்டே வீட்டில் இல்லாததால் தேடப்படும் குற்றவாளியாக அவரை அறிவித்து அம்மாநில போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில், டெல்லி போலீசார் இன்று ஆஷிஷ் பான்டே மீது பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #BSPleader #Delhi5starhotel #DelhiHyattRegency #AshishPandey
உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ராகேஷ் பான்டே. பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான இவர் முன்னர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவரது தம்பியான ரிட்டேஷ் பான்டே உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபையில் தற்போது உறுப்பினராக உள்ளார்.
இந்நிலையில், லக்னோ நகரை சேர்ந்த ராகேஷ் பான்டேவின் மகனான ஆஷிஷ் பான்டே என்பவர் நேற்று முன்தினம் டெல்லியின் ஆர்.கே.புரம் பகுதியில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஓட்டலில் குடிபோதையில் தனது கைத்துப்பாக்கியை உருவி ஒரு பெண் உள்பட சிலரை மிரட்டும் வீடியோ காட்சி சமீபத்தில் இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த காட்சிகளை பலர் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்தனர். நாட்டின் தலைநகரான டெல்லியில் சட்டம்-ஒழுங்கு எவ்வளவு சீர்கெட்டு கிடக்கிறது என்பதை இந்த வீடியோ தெளிவுப்படுத்துவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகனான ராபர்ட் வதேரா குறிப்பிட்டிருந்தார்.
இதைதொடர்ந்து, இந்த வீடியோ பதிவை ஆதாரமாக வைத்து உத்தரப்பிரதேசம் மாநில போலீசார் லக்னோ நகரில் உள்ள ஆஷிஷ் பான்டேவின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது ஆஷிஷ் பான்டே வீட்டில் இல்லாததால் தேடப்படும் குற்றவாளியாக அவரை அறிவித்து அம்மாநில போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில், டெல்லி போலீசார் இன்று ஆஷிஷ் பான்டே மீது பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #BSPleader #Delhi5starhotel #DelhiHyattRegency #AshishPandey
Next Story






