search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Goa"

    கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்சி அமைக்க அழைக்குமாறு கவர்னருக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. #ManoharParrikar #GoaCM #Congress #ChandrakantKavlekar
    பனாஜி:

    கோவா மாநிலத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 40 தொகுதிகள் கொண்ட இந்த மாநிலத்தில் 16 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், 14 தொகுதிகளில் பாஜகவும் வென்றன. ஆனால், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைத்தது.

    தற்போது, கோவா மாநில முதல்மந்திரி மனோகர் பாரிக்கர் உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து முதல்வர் பொறுப்புக்கு யார் வருவது என்ற உட்கட்சி பூசல் அங்கு நிலவுவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், கோவா மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரி, கவர்னர் மாளிகையில் இன்று மனு அளித்துள்ளது.



    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித்தலைவர் சந்திரகாண்ட் கவ்லேகர், அமைச்சரவையை கலைக்கும் முடிவை எடுக்க வேண்டாம் எனவும், அதற்கு பதிலாக எதிர்க்கட்சியை ஆட்சி அமைக்க அழைக்குமாறு மனு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், இதர கட்சிகளின் ஆதரவு தற்போது தங்களுக்கே இருப்பதாகவும், வாய்ப்பு அளித்தால் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் தங்களது பெரும்பான்மையை நிரூபிப்பதாகவும் கூறியுள்ளார். #ManoharParrikar #GoaCM #Congress #ChandrakantKavlekar
    முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் நேற்று கோவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். #ManoharParrikar
    பனாஜி:

    கோவா முதல் மந்திரியாக உள்ள மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதற்காக கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றார். 3 மாதத்துக்கு பிறகு ஜுன் 14-ல் அவர் இந்தியா திரும்பினார். இதன் பின்னர், இருமுறை அமெரிக்கா சென்று சிகிச்சை மேற்கொண்ட மனோகர் பாரிக்கர் கடந்த வாரம் இந்தியா திரும்பினார்.

    இந்நிலையில், தற்போது கோவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கோவா முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.  

    இதுதொடர்பாக, துணை சபாநாயகரும், பாஜக எம் எல் ஏவுமான மைக்கேல் லோபோ மருத்துவமனைக்கு சென்று மனோகர் பாரிக்கரை சந்தித்தார். அவர் நல்முடன் இருப்ப்தாகவும் அவர் தெரிவித்துள்ளார். #ManoharParrikar
    அமெரிக்காவில் தனது சிகிச்சையை முடித்துக்கொண்டு முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று கோவா திரும்பினார். #ManoharParrikar #ReturnIndia
    பனாஜி:

    கோவா முதல் மந்திரியாக உள்ள மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றார். 3 மாதத்துக்கு பிறகு ஜூன் 14-ல் அவர் இந்தியா திரும்பினார்.

    அதன்பின்னர், மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனோகர் பாரிக்கர் கடந்த மாதம் 29-ம் தேதி மேல் சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா சென்றார்.

    இந்நிலையில், அமெரிக்காவில் தனது சிகிச்சையை முடித்துக்கொண்டு முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று கோவா திரும்பினார்.

    அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக மனோகர் பாரிக்கருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு அளிக்கப்பட்டது.
     
    தற்போது அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை நிறைவுற்றுள்ளது. இதையடுத்து, மனோகர் பாரிக்கர் இன்று மாலை நாடு திரும்பினார். அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் வந்த மனோகர் பாரிக்கர் கோவா விமான நிலையம் வந்தார். அங்கு செய்தியாளர்களை பார்ப்பதை தவிர்த்த அவர் நேராக வீட்டுக்கு சென்றார். #ManoharParrikar #ReturnIndia
    கோவாவுக்கு முழு நேர முதல் மந்திரி தேவைப்படுகிறது என அப்பகுதி காங்கிரசார் வலியுறுத்தி உள்ளனர். #ManoharParrikar
    பனாஜி:

    கோவா முதல் மந்திரியாக உள்ள மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக, கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றார். மூன்று மாதங்களுக்கு பிறகு ஜுன் 14-ல் அவர் இந்தியா திரும்பினார். இதன் பின்னர், இம்மாதம் 10-ம் தேதி அவர் மீண்டும் அமெரிக்கா சென்று 17-ம் தேதி திரும்பினார்.

    இதற்கிடையே, தற்போது மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மனோகர் பாரிக்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார்
    என கோவா முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், கோவாவுக்கு முழு நேர முதல் மந்திரி தேவைப்படுகிறது என அப்பகுதி காங்கிரசார் வலியுறுத்தி உள்ளனர்.
    இதுதொடர்பாக கோவா காங்கிரசை சேர்ந்த கிரிஷ் சோடோன்கர் கூறுகையில், கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் உடல் நிலை விரைவில் குணமடைய வேண்டும்.

    முதல் மந்திரி முறையாக பணி செய்யாததால் நிர்வாகம் ஐசியுவில் உள்ளது. எனவே, முதல் மந்திரி அலுவலகம் கோவா மக்களுக்கு முதல் மந்திரியின் உடல் நிலை குறித்து உண்மையை விளக்க வேண்டும். 

    கோவாவுக்கு முழு நேர முதல் மந்திரி தேவைப்படுவதால், மனோகர் பாரிக்கர் தகுந்த நபரிடம் தாது பொறுப்புகளை ஒப்படைத்து விட்டுச் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
    மனோகர் பாரிக்கர் வெளிநாட்டில் இருப்பதால், கோவா சபாநாயகர் தேசிய கொடியேற்றுவதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. #ManoharParrikar #IndependenceDay
    பனாஜி:

    கோவா முதல் மந்திரியாக இருந்து வருபவர் மனோகர் பாரிக்கர். சமீபத்தில் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

    இதற்கிடையே, மனோகர் பாரிக்கர் மீண்டும் சிகிச்சை பெறுவதற்காக, நேற்று அமெரிக்கா சென்றார். வரும் 17ம் தேதி அவர் கோவா திரும்புகிறார்.

    இதையடுத்து, வரும் சுதந்திர தினத்தில் சபாநாயகர் பிரமோத் சாவந்த் தேசிய கொடி ஏற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சபாநாயகர் தேசிய கொடி ஏற்றுவதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் சங்கல்ப் அமோன்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  சுதந்திர தினவிழாவில் முதல்மந்திரி டான் கொடியேற வேண்டும். அவர் அப்படி வரமுடியாத  நிலையில், அமைச்சரவையில் இரண்டாம் இடத்தில் உள்ளவர் தான் கொடியேற்ற வேண்டும். சபாநாயகர் தேச்ய கொடி ஏற்றுவது விதிகளை மீறிய செயலாகும் என தெரிவித்துள்ளார்.
    பொது இடங்களில் மது குடித்தால் அபராதமாக 2500 ரூபாய் வசூலிக்கப்படும் என கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் அதிரடியாக அறிவித்துள்ளார். #ManoharParrikar
    பனாஜி:

    கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

    பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் இனி மது குடித்தால் கடுமையான அபராதம் விதிக்கப்படும். அப்படி யாராவது மது குடிப்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு 2500 ரூபாய் அபராதம்  விதிக்கப்படும். இந்த நடைமுறை வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார்.
    எனக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகளை விட மக்களின் பிரார்த்தனைகளால் தான் விரைவில் குணமாகினேன் என கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார். #GoaCM #ManoharParrikar
    பனாஜி:

    கோவா முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் மனோகர் பாரிக்கர். கடந்த பிப்ரவரி மாதம் திடீரென் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து, கோவா மற்றும் மும்பை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். மேல் சிகிச்சைக்காக அமெரிக்க சென்ற அவர் கடந்த மாதம் சிகிச்சை முடிந்து திரும்பி வந்தார். ஆனாலும், உடல்நிலை காரணமாக எந்த நிகழ்ச்சியிலும் பாரிக்கர் கலந்து கொள்ளவில்லை.

    இந்நிலையில், கோவாவில் நேற்று நடந்த பெண்கள் பேரணியில் மனோகர் பாரிக்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், 

    உடல்நலக் குறைவால் நான் நோய் வாய்ப்பட்டிருந்த நேரம். எனது மன தைரியம் மற்றும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பால் நான் குணமடைந்து விட்டேன்.

    ஆனால், உண்மையான காரணம், எனது நலனில் அக்கறையுள்ள பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் உண்மையான பிரார்த்தனையே. அவர்களது பிரார்த்தனையால் தான் நான் விரைவில் குணமாகி உங்கள் முன் நிற்கிறேன். எனது நலனுக்காக பிரார்த்தனை செய்த இங்கு கூடியுள்ள பெண்கள் அனைவருக்கும் நன்றி என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். #GoaCM #ManoharParrikar
    குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை முதல் 2 நாள் அரசு முறை பயணமாக கோவா செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #RamNathGovind #Goa
    புதுடெல்லி:

    கோவா மாநில பல்கலைகழகத்தின் 30-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இந்த விழா உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை கோவா செல்ல உள்ளார்.

    பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அடுத்து, மாநில அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாகவும், ஞாயிற்று கிழமை பாம் ஜீசஸ் தேவாலயம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #RamNathGovind #Goa
    நெல் வயலில் மந்திரங்களை தொடர்ந்து உச்சரித்துக் கொண்டிருந்தால் விளைச்சல் அதிகரிக்கும் என விவசாயிகளுக்கு கோவா மாநில விவசாய துறை மந்திரி அறிவுரை கூறினார். #VijaySardesai #ShivYogCosmicFarming
    பனாஜி:

    கோவாவில் பாஜக தலைமையிலாக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மனோகர் பாரிக்கர் முதல் மந்திரியாக இருந்து வருகிறார். கூட்டணி கட்சியான கோவா முற்போக்கு கட்சியைச் சேர்ந்த விஜய் சர்தேசாய் விவசாய துறை மந்திரியாக உள்ளார்.

    கோவாவைச் சேர்ந்த, சிவ யோகா பவுண்டேஷன் என்ற அமைப்பு, அண்டவெளி விவசாயம் என்ற புதிய விவசாய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்த மந்திரி விஜய் சர்தேசாய் பேசியதாவது:

    அண்டவெளி விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்கள் பாதுகாப்பானவை; அவை ரசாயன உரங்கள் கலக்காமல் நச்சுத்தன்மை அற்றதாக இருக்கும். விவசாயிகள் தங்கள் வயல்வெளியில் நின்று தொடர்ந்து 30 நிமிடங்கள் வேத மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். 

    இப்படி சொல்லும்போது அதிலிருந்து உருவாகும் அண்ட சக்தியால் நெற்பயிர்கள் அமோகமாக விளைச்சல் கொடுக்கும். இதற்கு சிவயோக விவசாயம் என்று பெயர். இந்த முறையினால் ஏராளமான விவசாயிகள் பலனடைந்து உள்ளனர். இது எதிர்காலத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார். இவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. #VijaySardesai #ShivYogCosmicFarming
    கோவாவில் இருந்து மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பைக்கு இன்று வந்த ஏர் இந்தியா விமானம் என்ஜின் கோளாறு காரணமாக மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. #AirIndia

    புதுடெல்லி:

    ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமான ஒன்று, கோவாவில் இருந்து மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பைக்கு புறப்பட்டது. 

    அந்த விமானம் வந்து கொண்டிருந்த போது என்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக மும்பை விமான நிலையத்துக்கு 8.36 மணியளவில் தகவல் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து அந்த விமானம் 9.18 மணியளவில் மும்பையில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. உடனடியாக கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் சிப்பந்திகள் பத்திரமாக உயிர் தப்பினர். 

    விமான கோளாறு சரிசெய்யப்பட்டு வருகிறது. என்ஜின் கோளாறுக்காண காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. #AirIndia
    சாகர் புயல் காரணமாக இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, மராட்டியம் மற்றும் லட்சத்தீவுகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது. #Sagar
    திருவனந்தபுரம்:

    அரபிக்கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது தற்போது புயலாக மாறி உள்ளது. இதற்கு வானிலை மையம் சாகர் என பெயரிட்டுள்ளது.

    இப்புயல் ஏடன் வளைகுடாவில் ஏமனுக்கு கிழக்கு-வடகிழக்கில் 390 கி.மீ. தொலைவிலும், ஸ்கோட்ரா தீவுகளில் இருந்து 560 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து செல்ல வாய்ப்புள்ளது.


    இதன் காரணமாக ஏடன் வளைகுடா மற்றும் அதையொட்டி உள்ள மேற்கு மத்திய பகுதிகள் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளது. 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும், புயலின் தாக்கம் அதிகரிக்கும்போது காற்றின் வேகம் 90 கி.மீட்டருக்கு அதிகமாகவும் வீச வாய்ப்புள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    சாகர் புயல் காரணமாக இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, மராட்டியம் மற்றும் லட்சத்தீவுகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது. #Sagar
    கர்நாடகாவில் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க அழைத்ததை மேற்கோள்காட்டி, கோவா மற்றும் மணிப்பூரில் தனிப்பெரும் கட்சியாக இருக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்களை ஆட்சியமைக்க அழைக்குமாறு கவர்னரிடம் கடிதம் அளித்துள்ளனர். #congress #bjp
    பனாஜி:

    கர்நாடகாவில் பெரும்பான்மை இல்லாத நிலையில் பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். தனிப்பெரும் கட்சியாக பாஜக இருப்பதால் அக்கட்சியை ஆட்சியமைக்க அழைத்ததாக விளக்கம் கூறப்பட்டது. இந்நிலையில், இதற்கு பதிலடி தரும் வகையில் கோவா மற்றும் மணிப்பூரில் தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என கவர்னரை சந்திக்க திட்டமிட்டனர்.

    கோவாவில் இன்று மதியம் காங்கிரஸ் தலைவர் சந்திரகாந்த் கவ்லேகர் தலைமையில், கவர்னர் மிருதுலா சின்ஹாவை ராஜ்பவனில் சந்தித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள், தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க அழைக்குமாறு கடிதம் அளித்துள்ளனர்.

    இதுகுறித்து சந்திரகாந்த் கவ்லேகர் கூறுகையில், 'கர்நாடகா தேர்தலில் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் இல்லாவிட்டாலும், தனிப்பெரும் கட்சியையே ஆட்சி அமைக்குமாறு அம்மாநில கவர்னர் அழைத்துள்ளார். அதுபோல கோவா கவர்னரும், கோவாவில் தனிப்பெரும் கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்’ என கூறியுள்ளார்.

    மேலும், இதுதொடர்பாக ஆளுனர் முடிவெடுக்க 7 நாட்கள் அவகாசம் அளிப்பதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.

    இதே போல மணிப்பூரிலும் தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளது. #congress #bjp 
    ×