search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manohar Parrikar"

    கோவா முதல் மந்திரி காலமானதால் சட்டசபையில் ஆளும்கட்சியின் பலம் குறைந்துள்ள நிலையில் ஆட்சி அமைக்க தங்களை அழைக்க வேண்டும் என 14 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். #ManoharParrikar #Congressstakesclaim #Goagovernment
    பனாஜி:

    கோவா சட்டசபையில் உள்ள 40 இடங்களில் முன்னர் பெரும்பான்மை பலம் கொண்ட பாஜக 13 சொந்தக்கட்சி உறுப்பினர்கள் மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த 9 உறுப்பினர்களின் ஆதரவுடன் அங்கு ஆட்சி அமைத்தது.

    முன்னாள் ராணுவ மந்திரியான மனோகர் பாரிக்கர் கோவா முதல் மந்திரியாக பதவி வகித்து வந்தார். சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 14 உறுப்பினர்கள் உள்ளனர்.



    இதற்கிடையில், பாஜகவை சேர்ந்த சட்டசபை உறுப்பினரான பிரான்சிஸ் டி சோசா என்பவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 14-2-2019 அன்று காலமானார். இதனால், ஆளும்கட்சியான பாஜக சட்டசபையில் தற்போது ஒரு உறுப்பினரை இழந்துள்ளது. இதுதவிர 2 இடங்கள் ஏற்கனவே காலியாக இருந்தது.

    புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த கோவா முதல் மந்திரி மனோகர் நேற்றிரவு திடீரென்று மரணம் அடைந்ததையடுத்து ஆளும்கட்சியின் பலம் மேலும் குறைந்துள்ளது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் இன்று பிற்பகல் கவர்னர் மிருதுளா சின்ஹாவை சந்தித்தனர். சட்டசபையில் அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி என்ற வகையில் காங்கிரஸ் தலைமையில் புதிய ஆட்சி அமைக்க தங்களை அழைக்க வேண்டும் என்ற கடிதத்தை அவர்கள் கவர்னரிடம் அளித்தனர்.

    இதற்கிடையில், கோவாவில் புதிய முதல் மந்திரியை தேர்வு செய்ய பாஜக மேலிட ஆலோசனை கூட்டம் இன்று பிற்பகல் 2 மணியளவில் நடைபெறும். புதிய முதல் மந்திரியின் பெயர் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என பாஜக சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. #ManoharParrikar #Congressstakesclaim  #Goagovernment 
    கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். #ManoharParrikar #EdappadiPalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    கோவா மாநிலத்தின் முதல்-அமைச்சரும், சிறந்த அரசியல் தலைவருமான மனோகர் பாரிக்கர் உடல் நலக்குறைவால் புதுடெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி, நேற்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.



    கோவா மாநிலத்திற்கு பாரதிய ஜனதா கட்சியிலிருந்து முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சர் என்ற பெருமைக்குரியவர் மனோகர் பாரிக்கர். இவர் இரண்டு முறை கோவா மாநிலத்தின் முதல்-அமைச்சராக இருந்து சிறப்பாக மக்கள் பணியாற்றியவர். இவர் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் திறம்பட செயலாற்றியவர் என்ற பெருமைக்குரியவர்.

    இவர் சிறந்த ஆட்சியாளராகவும், கடின உழைப்பாளியாகவும், அனைவரிடமும் அன்பாக பழகும் தன்மையுடையவராகவும் இருந்தார். கோவா மாநிலத்தின் முதல்-அமைச்சர் மனோகர் பாரிக்கரின் மறைவு கோவா மாநிலத்திற்கு ஒரு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பாரதிய ஜனதா கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ManoharParrikar #EdappadiPalaniswami
    கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவைத் தொடர்ந்து, பாஜக கூட்டணி கட்சி முதல்வர் பதவியை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. #ManoharParrikar #GoaNextCM
    பனாஜி:

    கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவை தொடர்ந்து, அங்கு புதிய முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பா.ஜனதா தனது கூட்டணி கட்சிகளுடன் இவ்விவகாரம் தொடர்பாக தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. 

    இன்று அதிகாலை கோவா வந்த நிதின் கட்காரி, கூட்டணி கட்சி தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்த உள்ளார். தற்போது வரை புதிய முதல்வர் யார்? என்பதில் எந்த ஒருமித்த கருத்தும் எட்டப்படவில்லை என்று பாஜக எம்.எல்.ஏ மைக்கேல் லோபோ தெரிவித்தார்.

    மைக்கேல் லோபோ

    பாஜகவின் கூட்டணி கட்சியான மகாராஷ்டிரவதி கோமண்டக் கட்சியைச் சார்ந்த எம்.எல்.ஏ சுதின் தவாலிகர், முதல் மந்திரியாக விரும்புவதாக பாஜக எம்.எல்.ஏ.வும் துணை சபாநாயகருமான மைக்கேல் லோபோ தெரிவித்தார். இதனால், ஆலோசனையில் முட்டுக்கட்டை நீடிப்பதாகவும், இன்று மாலை இவ்விவகாரத்தில் முடிவு எட்டும் என்றும் அவர் கூறினார்.

    பாஜக தனது கட்சியைச் சேர்ந்த ஒருவரை முதல் மந்திரியாக்க விரும்புவதால் ஆலோசனையில் உடன்பாடு எட்டப்படவில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜகவில் முதல்வர் பதவிக்கு விஸ்வஜித்  ரானே, பிரமோத் சாவந்த் ஆகியோரின் பெயர்களை எம்எல்ஏக்கள் முன்மொழிந்துள்ளனர்.

    இதற்கிடையே, 14 உறுப்பினர்களை கொண்டுள்ள காங்கிரஸ், தனிப்பெரும் கட்சியாக உள்ளதால், ஆட்சி அமைக்க அக்கட்சியும் முயற்சித்து வருகிறது. 40 எம்.எல்.ஏக்களை கொண்ட கோவா சட்டமன்ற தொகுதியில் 4 இடங்கள் காலியாக உள்ளன. #ManoharParrikar #GoaNextCM

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தொண்டர்கள் ஒன்றுதிரண்டு உழைத்தால் ராமாயண காலத்தில் இலங்கைக்கு நேர்ந்த கதிபோல் காங்கிரஸ் கட்சி அழிந்துப் போகும் என மனோகர் பரிக்கர் குறிப்பிட்டுள்ளார். #Congresswillmeet #fatelikeSriLanka #ManoharParrikar
    கோவா:

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து வரும் நிலையில் பா.ஜ.க.தலைவர் அமித் ஷா மாநில வாரியாக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டங்களை நடத்தி வருகிறார்.

    அவ்வகையில், கோவாவில் இன்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமித் ஷா, பா.ஜ.க.வுக்கு எதிராக ஒன்று திரண்டுள்ள எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி வரும் தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சியை பிடித்தால் திங்கட்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரை ஒரு நாளைக்கு ஒருவர் பிரதமராக இருப்பார்கள் என்று வேடிக்கையாக குறிப்பிட்டார்.

    அவரை தொடர்ந்து பேசிய கோவா முதல் மந்திரி மனோகர் பரிக்கர், ‘வரும் தேர்தலிலும் பா.ஜ.க. வெற்றி பெற வேண்டும். பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி பதவியேற்க வேண்டும் என நமது கட்சி தொண்டர்கள் அனைவரும் சபதமேற்க வேண்டும். மனவேறுபாடுகளை மறந்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த வெற்றிக்காக உழைக்க வேண்டும்.

    இந்த மனஉறுதியுடன் சுமார் 25-30 ஆயிரம் பா.ஜ.க. தொண்டர்கள் ஒன்று திரண்டு உழைத்தால் ராமாயண காலத்தில் இலங்கைக்கு நேர்ந்த கதிபோல் காங்கிரஸ் கட்சி அழிந்துப் போகும்’ என குறிப்பிட்டார். #Congresswillmeet #fatelikeSriLanka #BJPworkerstogether #ManoharParrikar
    கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கரின் உடல் நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. கடவுளின் கருணையால் அவர் வாழ்ந்து வருவதாக கோவா சட்டசபை துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ தெரிவித்தார். #ManoharParrikar
    புதுடெல்லி:

    கோவா மாநிலத்தில் முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் தலைமையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    அந்த கூட்டணியில் கோவா பார்வர்டு கட்சி, மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி மற்றும் மூன்று சுயேட்சைகள் முக்கிய அங்கம் வகித்து வருகிறார்கள்.

    கடந்த ஆண்டு முதல்-மந்திரி மனோகர் பாரிக்கருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மீள முடியாத நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து மனோகர் பாரிக்கர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பினார்.

    இடையிடையே உடல் நலக்குறைவு ஏற்பட்டபோதெல்லாம் அவர் டெல்லி, மும்பை, பனாஜியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் அவர் உடல் நலம் மேலும் பாதிக்கப்பட்டது. இதனால் மூக்கில் ‘டியூப்’ பொருத்தப்பட்ட நிலையில் அவர் கோவா சட்டசபைக்கு வந்து பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    இந்த நிலையில் கடந்த 31-ந்தேதி முதல்-மந்திரி மனோகர் பாரிக்கரின் உடல் நிலையில் மேலும் பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் டெல்லி அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.



    அங்கு அவருக்கு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. அவரை பா.ஜ.க. மூத்த தலைவர்கள் சிலர் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.

    இதற்கிடையே நேற்றிரவு முதல்-மந்திரி மனோகர் பாரிக்கரின் உடல் நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. அவரது உடல்நிலை சற்று மோசமாக இருப்பதாகவும், கடவுளின் கருணையால் அவர் வாழ்ந்து வருவதாகவும் கோவா சட்டசபை துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ தெரிவித்தார். இதனால் கோவா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    மனோகர் பாரிக்கர் பதவி விலகினாலோ அல்லது அவருக்கு ஏதாவது ஆகி விட்டாலோ கோவாவில் அரசியல் குழப்பம் ஏற்படும் என்று துணை சபாநாயகர் லோபோ கூறியுள்ளார். மனோகர் பாரிக்கர் பதவி விலகினால் புதிய முதல்-மந்திரியாக தங்கள் கட்சியை சேர்ந்த சுதீன் தவலிக்கரை தேர்வு செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி கூறி வருகிறது. #ManoharParrikar


    பிரதமர் மோடி தலைமையிலான மந்திரி சபையில் முன்னர் ராணுவ மந்திரியாகவும் தற்போது கோவா முதல்-மந்திரியாகவும் உள்ள மனோகர் பாரிக்கரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து நலம் விசாரித்தார். #RahulGandhi #ManoharParrikar
    பனாஜி:

    காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி கோவாவில் ஓய்வு எடுத்து வருகிறார். இதேபோல காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும், 3 நாள் பயணமாக கோவா சென்றுள்ளார்.



    இந்த நிலையில் கோவா பா.ஜனதா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கரை, ராகுல் காந்தி இன்று காலை சந்தித்தார். உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் அவர் வேகமாக குணமடைவதற்காகவும், மரியாதை நிமித்தமாகவும் இந்த சந்திப்பு நடந்ததாக ராகுல்காந்தி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். #RahulGandhi #ManoharParrikar


    உடல் நலக்குறைவுக்காக சிகிச்சை பெற்றுவந்த கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று அரசு தலைமை செயலகத்துக்கு வந்தபோது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. #GoaCM #ManoharParrikar
    பனாஜி:

    முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல்-மந்திரியுமான மனோகர் பாரிக்கர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால் கோவா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
     
    அதன் பிறகு அமெரிக்காவில் 3 மாதங்கள் வரை அவர் சிகிச்சை பெற்று கோவா திரும்பினார். இங்கு வந்த சில நாட்களிலேயே மீண்டும் கோவா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    நோயின் தன்மை தீவிரம் அடைந்ததால் 15-9-2018 அன்று  மனோகர் பாரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள தனி வார்டில் டாக்டர் பிரமோத் கார்க் தலைமையில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

    மனோகர் பாரிக்கர் தொடர்ந்து சிகிச்சைக்கு சென்று விடுவதால் அரசு நிர்வாகம் சரியாக செயல்படவில்லை என கோவாவில் ஆளும் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள மராட்டிய கோமந்தவாடி கட்சி தலைவர் தடீபக் தவாபிகர் குறிப்பிட்டிருந்தார்.

    எனவே மாநிலத்தின் நிர்வாக பொறுப்புகளை மூத்த மந்திரி ஒருவரிடம் வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இதே கோரிக்கையை காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தி வருகிறது.

    இதற்கு பதிலளித்த கோவா பா.ஜ.க. தலைவர் வினய் தெண்டுல்கர், கோவா முதல் மந்திரி பதவியில் மாற்றம் என்ற பேச்சுக்கு இடமில்லை. மனோகர் பாரிக்கர் முதல் மந்திரியாக தொடர்ந்து நீடிப்பார் என அறிவித்தார்.

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுமார் ஒருமாத காலம் சிகிச்சை பெற்றுவந்த மனோகர் பாரிக்கர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவருக்கு கணையத்தில் புற்றுநோய் பாதித்திருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், நீண்ட நாட்களாக தனது வீட்டில் இருந்தவாறு முதல் மந்திரியின் அலுவலகம் சார்ந்த பணிகளை கவனித்து வந்த மனோகர் பாரிக்கர் புத்தாண்டு தினமான இன்று போர்வோரிம் நகரில் உள்ள அரசு தலைமை செயலகத்துக்கு வந்தார்.

    மூக்கில் சுவாச குழாயுடன் மிகவும் சோர்வாக காணப்பட்ட மனோகர் பாரிக்கருக்கு கோவா மந்திரிகள், அரசு உயரதிகாரிகள் மற்றும் தலைமை செயலகப் பணியாளர்கள் மலர் செண்டுகளை அளித்து, வரவேற்பு தந்ததுடன், புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.




    அவர்கள் அனைவருக்கும் தனது புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்த மனோகர் பாரிக்கர், முதல் மந்திரி அலுவலக அறைக்கு சென்று சில கோப்புகளை பரிசீலனை செய்து கையொப்பமிட்டார். பின்னர், மந்திரிகள் மற்றும் உயரதிகாரிகளுடன் அவர்களின் துறைசார்ந்த முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசித்தார். #GoaCM #ManoharParrikar
    கோவாவில் 3 மாதங்களுக்குப் பிறகு முதல்வர் மனோகர் பாரிக்கர் தலைமையில் அவரது இல்லத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. #Goa #ManoharParrikar
    பனாஜி:

    கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் அமெரிக்கா சென்று உயர்சிகிச்சைகள் எடுத்துக் கொண்டு திரும்பினார்.

    இந்த நிலையில் மீண்டும் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதன் பிறகு மீண்டும் கோவா திரும்பி பனாஜியில் தனது வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.

    முதல்-மந்திரிக்கு பல மாதங்களாக உடல்நலக் கோளாறு ஏற்பட்டு செயல்பட முடியாததால் கோவாவில் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டது. முதல்- மந்திரியின் இலாகாக்கள் மந்திரிகளுக்கு பிரித்து அளிக்கப்பட்டது. முதல்-மந்திரி செயல்பட முடியாததால் வேறு ஒருவரை நியமிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

    இந்த நிலையில் முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் பனாஜியில் உள்ள தனது இல்லத்தில் நேற்று மாநில அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார். இதன் மூலம் 3 மாதங்களுக்குப் பிறகு கோவா மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்று இருக்கிறது.

    முன்னதாக நேற்று முன்தினம் தனது வீட்டில் மாநில முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் ஆலோசனை கூட்டத்தை மனோகர் பாரிக்கர் நடத்தினார்.

    இந்த நிலையில் அமைச்சரவை கூட்டத்தை வீட்டில் நடத்தியுள்ளார். அப்போது மந்திரிகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக வரவழைத்து பேசினார்.

    இதன் தொடர்ச்சியாக இன்று கட்சி நிர்வாகிகளையும் மனாகர்பாரிக்கர் தனது வீட்டுக்கு வரவழைத்து கட்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    இதுபற்றி மூத்த மந்திரி விஜய்சர்தேசாய் கூறும் போது, “பாரிக்கர் முழு உடல்நலத்துடன் உள்ளார். அவர் மந்திரிகளுடன் முக்கிய வி‌ஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    தலைமைச் செயலகத்தில் கூட்டம் நடைபெறவில்லையே தவிர மற்ற அனைத்துவிதத்திலும் கூட்டம் திருப்திகரமாக இருந்தது. சுரங்க தொழிலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை நீட்டிப்பது உள்பட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. முதல்-மந்திரிக்கு ஓய்வு தேவைப்பட்டதால் அவரது வீட்டில் கூட்டம் நடத்தப்பட்டது” என்றார். #Goa #ManoharParrikar
    கனையப் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்றுவந்த கோவா முதல் மந்திரி மனோகர் பரிக்கர் நீண்ட நாட்களுக்கு பின்னர் தனது அலுவலகம்சார்ந்த பணிகளை இன்று வீட்டில் இருந்தவாறு கவனிக்கத் தொடங்கினார். #ManoharParrikar #ManoharParrikarbacktowork
    பனாஜி:

    முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல்-மந்திரியுமான மனோகர் பரிக்கர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால் கோவா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
     
    அதன் பிறகு அமெரிக்காவில் 3 மாதங்கள் வரை அவர் சிகிச்சை பெற்று கோவா திரும்பினார். இங்கு வந்த சில நாட்களிலேயே மீண்டும் கோவா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    நோயின் தன்மை தீவிரம் அடைந்ததால் 15-9-2018 அன்று  மனோகர் பரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள தனி வார்டில் டாக்டர் பிரமோத் கார்க் தலைமையில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

    மனோகர் பரிக்கர் தொடர்ந்து சிகிச்சைக்கு சென்று விடுவதால் கடந்த 8 மாதங்களாக அரசு நிர்வாகம் சரியாக செயல்படவில்லை என கோவாவில் ஆளும் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள மராட்டிய கோமந்தவாடி கட்சி தலைவர் தடீபக் தவாபிகர் குறிப்பிட்டிருந்தார்.

    எனவே மாநிலத்தின் நிர்வாக பொறுப்புகளை மூத்த மந்திரி ஒருவரிடம் வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இதே கோரிக்கையை காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தி வருகிறது.

    இதற்கு பதிலளித்த கோவா பா.ஜ.க. தலைவர் வினய் தெண்டுல்கர், கோவா முதல் மந்திரி பதவியில் மாற்றம் என்ற பேச்சுக்கு இடமில்லை. மனோகர் பரிக்கர் முதல் மந்திரியாக தொடர்ந்து நீடிப்பார் என அறிவித்தார்.

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுமார் ஒருமாத காலம் சிகிச்சை பெற்றுவந்த மனோகர் பரிக்கர் கடந்த 14-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவருக்கு கனையத்தில் புற்றுநோய் பாதித்திருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பின்னர் தனது வீட்டில் இருந்தவாறு முதல் மந்திரியின் அலுவலகம்சார்ந்த பணிகளை மனோகர் பரிக்கர் இன்று கவனிக்கத் தொடங்கினார்.

    கோவா முதலீட்டு மேம்பாட்டுத்துறை வாரியம் சார்ந்த அதிகாரிகள் கூட்டம் இன்று அவரது இல்லத்தில் நடைபெற்றது. தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரோஹன் கவுன்ட்டே, சுற்றுலாத்துறை மந்திரி மனோகர் அஜ்கவுன்கர் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் பல்பேறு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

    இன்றைய கூட்டத்தில் 230 கோடி ரூபாய் அளவிலான 7 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் இதன் மூலம் சுமார் 400 பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் எனவும் கோவா அரசு இன்று இரவு வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #ManoharParrikar #ManoharParrikarbacktowork
    காங்கிரஸ் கட்சியின் கோவா மாநில செய்தித்தொடர்பாளார் செய்தியாளர்களை சந்தித்தபோது, கோவா மாநிலத்தின் மீது அக்கறை கொண்டு பாஜகவில் இருந்து விலகுமாறு பாஜகவின் கூட்டணி கட்சிகளுக்கு வலியுறுத்தியுள்ளார். #Congress #Goa #BJP #ManoharParrikar #YatishNaik
    பனாஜி:

    கோவா மாநிலத்தின் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் யடிஷ் நாயக், பாஜக ஒரு குழப்பமான கட்சி என்றும், கூட்டணி கட்சிகள் ஆட்சியை பார்வையிடலாமே தவிர முக்கிய முடிவுகள் எடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், கோவாவில் தலைமை இல்லாத பாஜக இருந்து வருவதாகவும், முதல்வர் இல்லாத நேரத்தில் பொறுப்பு முதல்வரை நியமிக்கவே அவர்களால் முடியவில்லை எனவும் சாடிய நாயக், அரசை எப்படி வழிநடத்துவது எனவே அவர்களால் முடிவெடுக்க முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், முதல்மந்திரி பாரிக்கர், மும்பை மருத்துவமனையிலும், டெல்லி, அமெரிக்க மருத்துவமனைகளுக்கும் சென்று வந்ததை நாம் பார்த்தோம் ஆனால் கடந்த பல மாதங்களாக தலைமை செயலகத்தில் அவரை காண முடியவில்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

    அரசின் இயக்கம் முற்றிலும் சீர்கெட்டுவிட்டதாக விமர்சித்துள்ள கோவா மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர், பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் மாநிலத்தின் மீது அக்கறை கொண்டு கூட்டணியில் இருந்து விலக நேர்மையாக முடிவெடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார். #Congress #Goa #BJP #ManoharParrikar #YatishNaik
    கல்லீரல் நோய் பாதிப்புக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒருமாதம் தங்கி சிகிச்சை பெற்றுவந்த கோவா முதல் மந்திரி மனோகர் பரிக்கர் இன்று டிஸ்சார்ஜ் ஆனார். #ManoharParrikar #Parrikardischarged #dischargedfromAIIMS
    புதுடெல்லி:

    முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல்-மந்திரியுமான மனோகர் பரிக்கர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால் கோவா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
     
    அதன் பிறகு அமெரிக்காவில் 3 மாதங்கள் வரை அவர் சிகிச்சை பெற்று கோவா திரும்பினார். இங்கு வந்த சில நாட்களிலேயே மீண்டும் கோவா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    நோயின் தன்மை தீவிரம் அடைந்ததால் 15-9-2018 அன்று  மனோகர் பரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள தனி வார்டில் டாக்டர் பிரமோத் கார்க் தலைமையில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

    மனோகர் பரிக்கர் தொடர்ந்து சிகிச்சைக்கு சென்று விடுவதால் கடந்த 8 மாதங்களாக அரசு நிர்வாகம் சரியாக செயல்படவில்லை என கோவாவில் ஆளும் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள மராட்டிய கோமந்தவாடி கட்சி தலைவர் தடீபக் தவாபிகர் குறிப்பிட்டிருந்தார்.

    எனவே மாநிலத்தின் நிர்வாக பொறுப்புகளை மூத்த மந்திரி ஒருவரிடம் வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இதே கோரிக்கையை காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தி வருகிறது.

    இதற்கு பதிலளித்த கோவா பா.ஜ.க. தலைவர் வினய் தெண்டுல்கர், கோவா முதல் மந்திரி பதவியில் மாற்றம் என்ற பேச்சுக்கு இடமில்லை. மனோகர் பரிக்கர் முதல் மந்திரியாக தொடர்ந்து நீடிப்பார் என அறிவித்தார்.

    இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுமார் ஒருமாத காலம் சிகிச்சை பெற்றுவந்த மனோகர் பரிக்கர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் உடனடியாக கோவா திரும்புவாரா? அல்லது, சில நாட்கள் டெல்லியில் தங்கி இருப்பாரா? என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.  #ManoharParrikar #Parrikardischarged #dischargedfromAIIMS
    கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்ப வாய்ப்புள்ளதாக அம்மாநில முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. #ManoharParrikar #AIIMS
    பனாஜி :

    முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல்-மந்திரியுமான மனோகர் பாரிக்கர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டதால் கோவா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    அதன் பிறகு அமெரிக்காவில் 3 மாதங்கள் வரை அவர் சிகிச்சை பெற்று சமீபத்தில் கோவா திரும்பினார். இங்கு வந்த சில நாட்களிலேயே மீண்டும் கோவா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் மருத்துவர்களின் அலோசனைப்படி கடந்த மாதம் 15-ம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில். அவரது உடல்நலம் வெகுவாகக் முன்னேறியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவர் இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப வாய்ப்புள்ளதாக கோவா மாநில முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து முதல்வர் அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

    முதல்வர் பாரிக்கரின் உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் இன்று அறிக்கை வெளியிட உள்ளனர். அவரது உடல்நலம் வெகுவாகக் முன்னேறியுள்ளதால் டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அவர் பனாஜி அழைத்து வரப்படலாம்.

    இங்கு உள்ள அவரது இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு பாரிக்கருக்கு தேவையான மற்ற சிகிச்சைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இல்லத்தில் இருந்தே அரசு அலுவல்களையும் அவர் கவணிப்பார் என அவர் தெரிவித்தார். #ManoharParrikar #AIIMS
    ×