search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "goa chief minister"

    முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல் மந்திரியுமான மனோகர் பரிக்கர் உடல் நலக்குறைவால் இன்றிரவு காலமானார். #GoaCM #ManoharParrikar #RIPManoharParrikar
    பனாஜி:

    முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல்-மந்திரியுமான மனோகர் பரிக்கர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால் கோவா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
      
    அதன் பிறகு அமெரிக்காவில் 3 மாதங்கள் வரை அவர் சிகிச்சை பெற்று கோவா திரும்பினார். இங்கு வந்த சில நாட்களிலேயே மீண்டும் கோவா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    நோயின் தன்மை தீவிரம் அடைந்ததால் 15-9-2018 அன்று  மனோகர் பரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள தனி வார்டில் டாக்டர் பிரமோத் கார்க் தலைமையில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். 

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுமார் ஒருமாத காலம் சிகிச்சை பெற்றுவந்த மனோகர் பரிக்கர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவருக்கு கனையத்தில் புற்றுநோய் பாதித்திருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    இதற்காக சிகிச்சை பெற்றவாறு தனது இல்லத்தில் இருந்தபடி முதல் மந்திரிக்கான பணிகளை கவனித்துவந்த மனோகர் பரிக்கர், சிகிச்சை பலனின்றி இன்றிரவு காலமானார்.

    இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். #GoaCM #ManoharParrikar #RIPManoharParrikar  
    பிரதமர் மோடி தலைமையிலான மந்திரி சபையில் முன்னர் ராணுவ மந்திரியாகவும் தற்போது கோவா முதல்-மந்திரியாகவும் உள்ள மனோகர் பாரிக்கரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து நலம் விசாரித்தார். #RahulGandhi #ManoharParrikar
    பனாஜி:

    காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி கோவாவில் ஓய்வு எடுத்து வருகிறார். இதேபோல காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும், 3 நாள் பயணமாக கோவா சென்றுள்ளார்.



    இந்த நிலையில் கோவா பா.ஜனதா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கரை, ராகுல் காந்தி இன்று காலை சந்தித்தார். உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் அவர் வேகமாக குணமடைவதற்காகவும், மரியாதை நிமித்தமாகவும் இந்த சந்திப்பு நடந்ததாக ராகுல்காந்தி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். #RahulGandhi #ManoharParrikar


    கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் உடல்நலம் பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் இலாகா இல்லாத முதல்-மந்திரியாக அவரை அறிவிக்க பாரதிய ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளது. #manoharparrikar
    புதுடெல்லி:

    கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் பித்தப்பை கோளாறு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் முதலில் பனாஜி ஆஸ்பத்திரியிலும், பின்னர் அமெரிக்காவிலும் சிகிச்சை பெற்றார்.

    அங்கு சிகிச்சை முடிந்து பனாஜி திரும்பிய நிலையில் மீண்டும் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தற்போது டெல்லியில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மனோகர் பாரிக்கர் நீண்டகாலம் சிகிச்சை பெற்று வருவதால் அரசு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியவில்லை. அவ்வப் போது ஆலோசனைகள் மட்டும் வழங்கி வருகிறார். இதனால் தற்காலிகமாக முதல் மந்திரி வகிக்கும் இலாகாக்கள் மற்ற மந்திரிகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் மனோகர் பாரிக்கர் நலம்பெற்று திரும்பி முதல்-மந்திரி பொறுப்பை ஏற்பார் என்று மாநில பா.ஜனதா தலைவர் வினய் தெண்டுல்கர் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இதனால் முதல்-மந்திரி இல்லாமலேயே மந்திரிசபை கூட்டம் நடந்து வந்தது.

    இதற்கிடையே கோவாவில் பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மராட்டியவாடி கோமந்த கட்சி மற்றும் கோவா பார்வர்டு கட்சிகள் முதல்-மந்திரியாக வேறு ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து மனோகர் பாரிக்கர் இலாக்காக்களை தற்காலிகமாக மற்ற மந்திரிகள் கவனித்து வருகிறார்கள். அதை அவர்கள் நிரந்தரமாக கவனிக்கும் வகையில் பொறுப்புகள் மாற்றப்படுகிறது.

    மனோகர் பாரிக்கர் சிகிச்சை பெற்று திரும்பும் வரை இலாகா இல்லாத முதல்-மந்திரியாக இருப்பார் என அறிவிக்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளது. #GoaCM #ManoharParrikar #BJP
    கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் உடல்நல குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் புதிய முதல்-மந்திரி நாளை தேர்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #manoharparrikar
    புதுடெல்லி:

    கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டதால் கோவா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    அதன் பிறகு அமெரிக்காவில் 3 மாதங்கள் வரை அவர் சிகிச்சை பெற்று கோவா திரும்பினார். இங்கு வந்த சில நாட்களிலேயே மீண்டும் கோவா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் நேற்று மனோகர் பாரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள தனி வார்டில் டாக்டர் பிரமோத் கார்க் தலைமையில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. அவரது உடல்நிலை பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் வெளியிடவில்லை.

    இதற்கிடையே கோவா மாநிலத்தில் ஆளும் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள மராட்டிய கோமந்தவாடி கட்சி தலைவர் தடீபக் தவாபிகர் பனாஜியில் நிருபர்களிடம் கூறுகையில் மனோகர் பாரிக்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் கடந்த 8 மாதங்களாக அரசு நிர்வாகம் சரியாக செயல்படவில்லை. எனவே மாநிலத்தின் நிர்வாக பொறுப்புகளை மூத்த அமைச்சரிடம் வழங்க வேண்டும் என்றார்.

    அவர் முதல்-மந்திரியை மாற்ற வேண்டும் என்று கூறுவதால் அதுபற்றி பா.ஜனதா மேலிடம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. டெல்லி ஆஸ்பத்திரியில் அனுதிக்கப்படும் முன் மனோகர் பாரிக்கர் பனாஜியில் இருந்து பா.ஜனதா தலைவர் அமித்ஷாவுடன் டெலிபோனில் பேசினார். இதில் முதல்-மந்திரி பொறுப்புகளை மூத்த மந்திரிக்கு வழங்குவது பற்றி ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து நாளை பனாஜியில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது. இதில் புதிய முதல்-மந்திரி தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது. புதிய முதல்- மந்திரி பதவிக்கு சபாநாயகர் பிரமோத் சவந்த், துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ, பொதுப் பணித் துறை மந்திரி சுதின் தவாலிகர் ஆகியோர் பெயர்கள் அடிபடுகிறது.

    கோவாவில் தற்போதுள்ள நிலையில் காங்கிரஸ் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயற்சிக்காது என்று மாநில காங்கிரஸ் தெரிவித்துள்ளது. #manoharparrikar
    ×