என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மனோகர் பாரிக்கர் இலாகா இல்லாத முதல்-மந்திரி - பா.ஜனதா மேலிடம் முடிவு
Byமாலை மலர்3 Oct 2018 8:33 AM GMT (Updated: 3 Oct 2018 8:33 AM GMT)
கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் உடல்நலம் பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் இலாகா இல்லாத முதல்-மந்திரியாக அவரை அறிவிக்க பாரதிய ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளது. #manoharparrikar
புதுடெல்லி:
கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் பித்தப்பை கோளாறு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் முதலில் பனாஜி ஆஸ்பத்திரியிலும், பின்னர் அமெரிக்காவிலும் சிகிச்சை பெற்றார்.
அங்கு சிகிச்சை முடிந்து பனாஜி திரும்பிய நிலையில் மீண்டும் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தற்போது டெல்லியில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மனோகர் பாரிக்கர் நீண்டகாலம் சிகிச்சை பெற்று வருவதால் அரசு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியவில்லை. அவ்வப் போது ஆலோசனைகள் மட்டும் வழங்கி வருகிறார். இதனால் தற்காலிகமாக முதல் மந்திரி வகிக்கும் இலாகாக்கள் மற்ற மந்திரிகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மனோகர் பாரிக்கர் நலம்பெற்று திரும்பி முதல்-மந்திரி பொறுப்பை ஏற்பார் என்று மாநில பா.ஜனதா தலைவர் வினய் தெண்டுல்கர் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இதனால் முதல்-மந்திரி இல்லாமலேயே மந்திரிசபை கூட்டம் நடந்து வந்தது.
இதற்கிடையே கோவாவில் பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மராட்டியவாடி கோமந்த கட்சி மற்றும் கோவா பார்வர்டு கட்சிகள் முதல்-மந்திரியாக வேறு ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து மனோகர் பாரிக்கர் இலாக்காக்களை தற்காலிகமாக மற்ற மந்திரிகள் கவனித்து வருகிறார்கள். அதை அவர்கள் நிரந்தரமாக கவனிக்கும் வகையில் பொறுப்புகள் மாற்றப்படுகிறது.
மனோகர் பாரிக்கர் சிகிச்சை பெற்று திரும்பும் வரை இலாகா இல்லாத முதல்-மந்திரியாக இருப்பார் என அறிவிக்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளது. #GoaCM #ManoharParrikar #BJP
கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் பித்தப்பை கோளாறு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் முதலில் பனாஜி ஆஸ்பத்திரியிலும், பின்னர் அமெரிக்காவிலும் சிகிச்சை பெற்றார்.
அங்கு சிகிச்சை முடிந்து பனாஜி திரும்பிய நிலையில் மீண்டும் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தற்போது டெல்லியில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மனோகர் பாரிக்கர் நீண்டகாலம் சிகிச்சை பெற்று வருவதால் அரசு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியவில்லை. அவ்வப் போது ஆலோசனைகள் மட்டும் வழங்கி வருகிறார். இதனால் தற்காலிகமாக முதல் மந்திரி வகிக்கும் இலாகாக்கள் மற்ற மந்திரிகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மனோகர் பாரிக்கர் நலம்பெற்று திரும்பி முதல்-மந்திரி பொறுப்பை ஏற்பார் என்று மாநில பா.ஜனதா தலைவர் வினய் தெண்டுல்கர் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இதனால் முதல்-மந்திரி இல்லாமலேயே மந்திரிசபை கூட்டம் நடந்து வந்தது.
இதற்கிடையே கோவாவில் பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மராட்டியவாடி கோமந்த கட்சி மற்றும் கோவா பார்வர்டு கட்சிகள் முதல்-மந்திரியாக வேறு ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து மனோகர் பாரிக்கர் இலாக்காக்களை தற்காலிகமாக மற்ற மந்திரிகள் கவனித்து வருகிறார்கள். அதை அவர்கள் நிரந்தரமாக கவனிக்கும் வகையில் பொறுப்புகள் மாற்றப்படுகிறது.
மனோகர் பாரிக்கர் சிகிச்சை பெற்று திரும்பும் வரை இலாகா இல்லாத முதல்-மந்திரியாக இருப்பார் என அறிவிக்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளது. #GoaCM #ManoharParrikar #BJP
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X