என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்புகிறார் மனோகர் பாரிக்கர்?
Byமாலை மலர்14 Oct 2018 12:17 AM GMT (Updated: 14 Oct 2018 12:17 AM GMT)
கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்ப வாய்ப்புள்ளதாக அம்மாநில முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. #ManoharParrikar #AIIMS
பனாஜி :
முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல்-மந்திரியுமான மனோகர் பாரிக்கர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டதால் கோவா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
அதன் பிறகு அமெரிக்காவில் 3 மாதங்கள் வரை அவர் சிகிச்சை பெற்று சமீபத்தில் கோவா திரும்பினார். இங்கு வந்த சில நாட்களிலேயே மீண்டும் கோவா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் மருத்துவர்களின் அலோசனைப்படி கடந்த மாதம் 15-ம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில். அவரது உடல்நலம் வெகுவாகக் முன்னேறியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவர் இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப வாய்ப்புள்ளதாக கோவா மாநில முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து முதல்வர் அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளதாவது :-
முதல்வர் பாரிக்கரின் உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் இன்று அறிக்கை வெளியிட உள்ளனர். அவரது உடல்நலம் வெகுவாகக் முன்னேறியுள்ளதால் டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அவர் பனாஜி அழைத்து வரப்படலாம்.
இங்கு உள்ள அவரது இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு பாரிக்கருக்கு தேவையான மற்ற சிகிச்சைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இல்லத்தில் இருந்தே அரசு அலுவல்களையும் அவர் கவணிப்பார் என அவர் தெரிவித்தார். #ManoharParrikar #AIIMS
முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல்-மந்திரியுமான மனோகர் பாரிக்கர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டதால் கோவா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
அதன் பிறகு அமெரிக்காவில் 3 மாதங்கள் வரை அவர் சிகிச்சை பெற்று சமீபத்தில் கோவா திரும்பினார். இங்கு வந்த சில நாட்களிலேயே மீண்டும் கோவா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் மருத்துவர்களின் அலோசனைப்படி கடந்த மாதம் 15-ம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில். அவரது உடல்நலம் வெகுவாகக் முன்னேறியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவர் இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப வாய்ப்புள்ளதாக கோவா மாநில முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து முதல்வர் அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளதாவது :-
முதல்வர் பாரிக்கரின் உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் இன்று அறிக்கை வெளியிட உள்ளனர். அவரது உடல்நலம் வெகுவாகக் முன்னேறியுள்ளதால் டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அவர் பனாஜி அழைத்து வரப்படலாம்.
இங்கு உள்ள அவரது இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு பாரிக்கருக்கு தேவையான மற்ற சிகிச்சைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இல்லத்தில் இருந்தே அரசு அலுவல்களையும் அவர் கவணிப்பார் என அவர் தெரிவித்தார். #ManoharParrikar #AIIMS
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X