search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Goa CM"

    உடல் நலக்குறைவுக்காக சிகிச்சை பெற்றுவந்த கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று அரசு தலைமை செயலகத்துக்கு வந்தபோது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. #GoaCM #ManoharParrikar
    பனாஜி:

    முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல்-மந்திரியுமான மனோகர் பாரிக்கர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால் கோவா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
     
    அதன் பிறகு அமெரிக்காவில் 3 மாதங்கள் வரை அவர் சிகிச்சை பெற்று கோவா திரும்பினார். இங்கு வந்த சில நாட்களிலேயே மீண்டும் கோவா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    நோயின் தன்மை தீவிரம் அடைந்ததால் 15-9-2018 அன்று  மனோகர் பாரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள தனி வார்டில் டாக்டர் பிரமோத் கார்க் தலைமையில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

    மனோகர் பாரிக்கர் தொடர்ந்து சிகிச்சைக்கு சென்று விடுவதால் அரசு நிர்வாகம் சரியாக செயல்படவில்லை என கோவாவில் ஆளும் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள மராட்டிய கோமந்தவாடி கட்சி தலைவர் தடீபக் தவாபிகர் குறிப்பிட்டிருந்தார்.

    எனவே மாநிலத்தின் நிர்வாக பொறுப்புகளை மூத்த மந்திரி ஒருவரிடம் வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இதே கோரிக்கையை காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தி வருகிறது.

    இதற்கு பதிலளித்த கோவா பா.ஜ.க. தலைவர் வினய் தெண்டுல்கர், கோவா முதல் மந்திரி பதவியில் மாற்றம் என்ற பேச்சுக்கு இடமில்லை. மனோகர் பாரிக்கர் முதல் மந்திரியாக தொடர்ந்து நீடிப்பார் என அறிவித்தார்.

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுமார் ஒருமாத காலம் சிகிச்சை பெற்றுவந்த மனோகர் பாரிக்கர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவருக்கு கணையத்தில் புற்றுநோய் பாதித்திருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், நீண்ட நாட்களாக தனது வீட்டில் இருந்தவாறு முதல் மந்திரியின் அலுவலகம் சார்ந்த பணிகளை கவனித்து வந்த மனோகர் பாரிக்கர் புத்தாண்டு தினமான இன்று போர்வோரிம் நகரில் உள்ள அரசு தலைமை செயலகத்துக்கு வந்தார்.

    மூக்கில் சுவாச குழாயுடன் மிகவும் சோர்வாக காணப்பட்ட மனோகர் பாரிக்கருக்கு கோவா மந்திரிகள், அரசு உயரதிகாரிகள் மற்றும் தலைமை செயலகப் பணியாளர்கள் மலர் செண்டுகளை அளித்து, வரவேற்பு தந்ததுடன், புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.




    அவர்கள் அனைவருக்கும் தனது புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்த மனோகர் பாரிக்கர், முதல் மந்திரி அலுவலக அறைக்கு சென்று சில கோப்புகளை பரிசீலனை செய்து கையொப்பமிட்டார். பின்னர், மந்திரிகள் மற்றும் உயரதிகாரிகளுடன் அவர்களின் துறைசார்ந்த முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசித்தார். #GoaCM #ManoharParrikar
    கனையப் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்றுவந்த கோவா முதல் மந்திரி மனோகர் பரிக்கர் நீண்ட நாட்களுக்கு பின்னர் தனது அலுவலகம்சார்ந்த பணிகளை இன்று வீட்டில் இருந்தவாறு கவனிக்கத் தொடங்கினார். #ManoharParrikar #ManoharParrikarbacktowork
    பனாஜி:

    முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல்-மந்திரியுமான மனோகர் பரிக்கர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால் கோவா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
     
    அதன் பிறகு அமெரிக்காவில் 3 மாதங்கள் வரை அவர் சிகிச்சை பெற்று கோவா திரும்பினார். இங்கு வந்த சில நாட்களிலேயே மீண்டும் கோவா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    நோயின் தன்மை தீவிரம் அடைந்ததால் 15-9-2018 அன்று  மனோகர் பரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள தனி வார்டில் டாக்டர் பிரமோத் கார்க் தலைமையில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

    மனோகர் பரிக்கர் தொடர்ந்து சிகிச்சைக்கு சென்று விடுவதால் கடந்த 8 மாதங்களாக அரசு நிர்வாகம் சரியாக செயல்படவில்லை என கோவாவில் ஆளும் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள மராட்டிய கோமந்தவாடி கட்சி தலைவர் தடீபக் தவாபிகர் குறிப்பிட்டிருந்தார்.

    எனவே மாநிலத்தின் நிர்வாக பொறுப்புகளை மூத்த மந்திரி ஒருவரிடம் வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இதே கோரிக்கையை காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தி வருகிறது.

    இதற்கு பதிலளித்த கோவா பா.ஜ.க. தலைவர் வினய் தெண்டுல்கர், கோவா முதல் மந்திரி பதவியில் மாற்றம் என்ற பேச்சுக்கு இடமில்லை. மனோகர் பரிக்கர் முதல் மந்திரியாக தொடர்ந்து நீடிப்பார் என அறிவித்தார்.

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுமார் ஒருமாத காலம் சிகிச்சை பெற்றுவந்த மனோகர் பரிக்கர் கடந்த 14-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவருக்கு கனையத்தில் புற்றுநோய் பாதித்திருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பின்னர் தனது வீட்டில் இருந்தவாறு முதல் மந்திரியின் அலுவலகம்சார்ந்த பணிகளை மனோகர் பரிக்கர் இன்று கவனிக்கத் தொடங்கினார்.

    கோவா முதலீட்டு மேம்பாட்டுத்துறை வாரியம் சார்ந்த அதிகாரிகள் கூட்டம் இன்று அவரது இல்லத்தில் நடைபெற்றது. தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரோஹன் கவுன்ட்டே, சுற்றுலாத்துறை மந்திரி மனோகர் அஜ்கவுன்கர் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் பல்பேறு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

    இன்றைய கூட்டத்தில் 230 கோடி ரூபாய் அளவிலான 7 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் இதன் மூலம் சுமார் 400 பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் எனவும் கோவா அரசு இன்று இரவு வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #ManoharParrikar #ManoharParrikarbacktowork
    கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு கணைய புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அரசு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது. #GoaCM #ManoharParrikar

    பனாஜி:

    கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர். முன்னாள் பாதுகாப்பு துறை மந்திரியான அவர் கடந்த 7 மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் சிகிச்சை பெற்றார்.

    கோவா, மும்பை, நியூயார்க், டெல்லி ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மனோகர் பாரிக்கர் இல்லாததால் கோவா ஆட்சி அதிகாரத்தில் வெற்றிடம் ஏற்பட்டது.

    கடந்த 14-ந் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தது முதல் அவர் பொது வெளியில் முகத்தை காட்டவில்லை. தற்போது வீட்டில் படுக்கையில் தான் இருக்கிறார். டாக்டர்கள், மருத்துவ உதவியாளர்கள் 24 மணி நேரமும் அவரது அறையில் கடமையாற்றி வருகிறார்கள்.

    மனோகர் பாரிக்கருக்கு என்ன நோய் என்பதை மாநில அரசும், பா.ஜனதாவும் ரகசியமாக வைத்து இருந்தன. அவரது உடல் நிலை குறித்து விளக்க வேண்டும் என்று எதிர்கட்சியான காங்கிரஸ் மாநிலத்தை வலியுறுத்தியது.

    மனோகர் பாரிக்கர் உடல் தகுதியுடன் இருக்கிறாரா? என்பதை 4 நாட்களுக்குள் நிரூபிக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் காங்கிரஸ் கெடு விதித்தது.


    இந்த நிலையில் மனோகர் பாரிக்கருக்கு என்ன நோய் என்ற விவரத்தை மாநில பா.ஜனதா அரசு வெளியிட்டுள்ளது. அவர் கணைய புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கோவா மாநில சுகாதாரத்துறை மந்திரி விஸ்வஜித் ரானே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    மனோகர் பாரிக்கர் கோவா முதல்-மந்திரி . அவருக்கு கணைய புற்று நோய் ஏற்பட்டுள்ளது. இந்த உண்மையை மறைப்பதற்கு ஒன்றுமில்லை.

    அவர் தன் குடும்பத்துடன் அமைதியாக வாழட்டும். இதற்காகவே எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து அழைத்து வரப்பட்டார்.

    அவர் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட விரும்பினால் அதை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை. அவர் குடும்பம்தான் அதை தெரிவிக்க வேண்டும்.

    காங்கிரஸ் கட்சி கோர்ட்டுக்கு போய் மனோகர் பாரிக்கரின் நோயை தெரிந்து கொள்ள விரும்பினால் அது அவர்களது விருப்பமாகும்.

    இவ்வாறு சுகாதார மந்திரி ரானே தெரிவித்துள்ளர். #GoaCM #ManoharParrikar

    கல்லீரல் நோய் பாதிப்புக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒருமாதம் தங்கி சிகிச்சை பெற்றுவந்த கோவா முதல் மந்திரி மனோகர் பரிக்கர் இன்று டிஸ்சார்ஜ் ஆனார். #ManoharParrikar #Parrikardischarged #dischargedfromAIIMS
    புதுடெல்லி:

    முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல்-மந்திரியுமான மனோகர் பரிக்கர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால் கோவா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
     
    அதன் பிறகு அமெரிக்காவில் 3 மாதங்கள் வரை அவர் சிகிச்சை பெற்று கோவா திரும்பினார். இங்கு வந்த சில நாட்களிலேயே மீண்டும் கோவா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    நோயின் தன்மை தீவிரம் அடைந்ததால் 15-9-2018 அன்று  மனோகர் பரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள தனி வார்டில் டாக்டர் பிரமோத் கார்க் தலைமையில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

    மனோகர் பரிக்கர் தொடர்ந்து சிகிச்சைக்கு சென்று விடுவதால் கடந்த 8 மாதங்களாக அரசு நிர்வாகம் சரியாக செயல்படவில்லை என கோவாவில் ஆளும் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள மராட்டிய கோமந்தவாடி கட்சி தலைவர் தடீபக் தவாபிகர் குறிப்பிட்டிருந்தார்.

    எனவே மாநிலத்தின் நிர்வாக பொறுப்புகளை மூத்த மந்திரி ஒருவரிடம் வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இதே கோரிக்கையை காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தி வருகிறது.

    இதற்கு பதிலளித்த கோவா பா.ஜ.க. தலைவர் வினய் தெண்டுல்கர், கோவா முதல் மந்திரி பதவியில் மாற்றம் என்ற பேச்சுக்கு இடமில்லை. மனோகர் பரிக்கர் முதல் மந்திரியாக தொடர்ந்து நீடிப்பார் என அறிவித்தார்.

    இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுமார் ஒருமாத காலம் சிகிச்சை பெற்றுவந்த மனோகர் பரிக்கர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் உடனடியாக கோவா திரும்புவாரா? அல்லது, சில நாட்கள் டெல்லியில் தங்கி இருப்பாரா? என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.  #ManoharParrikar #Parrikardischarged #dischargedfromAIIMS
    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கோவா முதல் மந்திரியின் உடல்நிலை தேறி வருவதாகவும் கோப்புகளில் அவர் கையொப்பமிடுவதாகவும் தெரியவந்துள்ளது. #ManoharParrikar #Goaminister
    புதுடெல்லி:

    ராணுவ மந்திரியும் கோவா முதல்-மந்திரியுமான மனோகர் பரிக்கர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால் கோவா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
     
    அதன் பிறகு அமெரிக்காவில் 3 மாதங்கள் வரை அவர் சிகிச்சை பெற்று சமீபத்தில் கோவா திரும்பினார். இங்கு வந்த சில நாட்களிலேயே மீண்டும் கோவா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    நோயின் தன்மை தீவிரம் அடைந்ததால் கடந்த 15-ம் தேதி மனோகர் பரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள தனி வார்டில் டாக்டர் பிரமோத் கார்க் தலைமையில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    மனோகர் பரிக்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் கடந்த 8 மாதங்களாக அரசு நிர்வாகம் சரியாக செயல்படவில்லை என கோவாவில் ஆளும் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள மராட்டிய கோமந்தவாடி கட்சி தலைவர் தடீபக் தவாபிகர் குறிப்பிட்டிருந்தார்.

    எனவே மாநிலத்தின் நிர்வாக பொறுப்புகளை மூத்த மந்திரி ஒருவரிடம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    மராட்டிய கோமந்தவாடி கட்சி தலைவர் தடீபக் தவாபிகர் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த கோவா பா.ஜ.க. தலைவர் வினய் தெண்டுல்கர், கோவா முதல் மந்திரி பதவியில் மாற்றம் என்ற பேச்சுக்கு இடமில்லை. மனோகர் பரிக்கர் முதல் மந்திரியாக தொடர்ந்து நீடிப்பார் என அறிவித்தார்.

    இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கோவா முதல் மந்திரியின் உடல்நிலை தேறி வருவதாகவும் கோப்புகளில் அவர் கையொப்பமிடுவதாக கோவா பொதுப்பணித்துறை மந்திரி சுதின் தவலிக்கர் இன்று தெரிவித்துள்ளார்.

    அவருடைய துறைசார்ந்த அனைத்து கோப்புகளை படித்துப் பார்த்து மனோகர் பரிக்கர் உடனடியாக கையொப்பமிட்டு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் எங்களுக்கு அனுப்பி வைக்கிறார். இதுவரை எந்த கோப்பும் நிலுவையில் இல்லை.

    முதல் மந்திரியின் உத்தரவின்படி வாரந்தோறும் மந்திரிசபை கூட்டம் நடத்தி பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக முடிவு எடுக்கப்படுகிறது. இந்த முடிவுகள் அறிக்கையாக முதல் மந்திரிக்கு அனுப்பி வைக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். #ManoharParrikar #Goaminister
    உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் மனோகர் பாரிக்கர் கோவா முதல் மந்திரியாக தொடர்ந்து நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. #ManoharParrikar #GoaCM #VinayTendulkar
    பனாஜி:

    முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல்-மந்திரியுமான மனோகர் பாரிக்கர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டதால் கோவா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    அதன் பிறகு அமெரிக்காவில் 3 மாதங்கள் வரை அவர் சிகிச்சை பெற்று சமீபத்தில் கோவா திரும்பினார். இங்கு வந்த சில நாட்களிலேயே மீண்டும் கோவா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    நோயின் தன்மை தீவிரம் அடைந்ததால் நேற்று மனோகர் பாரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள தனி வார்டில் டாக்டர் பிரமோத் கார்க் தலைமையில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. அவரது உடல்நிலை பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் வெளியிடவில்லை.

    கோவாவில் ஆளும் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள மராட்டிய கோமந்தவாடி கட்சி தலைவர் தடீபக் தவாபிகர் பனாஜியில் நிருபர்களிடம் கூறுகையில், மனோகர் பாரிக்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் கடந்த 8 மாதங்களாக அரசு நிர்வாகம் சரியாக செயல்படவில்லை. 

    எனவே மாநிலத்தின் நிர்வாக பொறுப்புகளை மூத்த மந்திரி ஒருவரிடம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மனோகர் பாரிக்கரை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று சென்று பார்த்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றி டாக்டர்களிடம் அவர் கேட்டறிந்தார்.

    இந்நிலையில்,  மராட்டிய கோமந்தவாடி கட்சி தலைவர் தடீபக் தவாபிகர் தெரிவித்த கருத்துக்கு இன்று பதிலளித்த கோவா பா.ஜ.க. தலைவர் வினய் தெண்டுல்கர், கோவா முதல் மந்திரி பதவியில் மாற்றம் என்ற பேச்சுக்கு இடமில்லை. மனோகர் பாரிக்கர் முதல் மந்திரியாக தொடர்ந்து நீடிப்பார் என அறிவித்துள்ளார். #ManoharParrikar #GoaCM #VinayTendulkar
    அமெரிக்காவில் தனது சிகிச்சையை முடித்துக்கொண்டு கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று நாடு திரும்பினார். #ManoharParrikar #ReturnIndia
    புதுடெல்லி:

    கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கருக்கு கணையத்தில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. அதற்காக கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றா. அதைத்தொடர்ந்து, மும்பை லீலாவதி மருத்துவமனையிலும் சிகிச்சைகள் பெற்றார்.

    ஆனாலும், மேல் சிகிச்சைக்காக மனோகர் பாரிக்கர் அமெரிக்கா சென்றார். கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    தற்போது அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை நிறைவுற்றுள்ளது. இதையடுத்து, மனோகர் பாரிக்கார் இன்று நாடு திரும்பினார். அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் வந்த மனோகர் பாரிக்கர், மும்பை வந்தார். அங்கிருந்து கோவா செல்கிறார். #ManoharParrikar #ReturnIndia
    ×