என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவா முதல்-மந்திரி மரணம்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
Byமாலை மலர்18 March 2019 5:15 AM GMT (Updated: 18 March 2019 5:15 AM GMT)
கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். #ManoharParrikar #EdappadiPalaniswami
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
கோவா மாநிலத்திற்கு பாரதிய ஜனதா கட்சியிலிருந்து முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சர் என்ற பெருமைக்குரியவர் மனோகர் பாரிக்கர். இவர் இரண்டு முறை கோவா மாநிலத்தின் முதல்-அமைச்சராக இருந்து சிறப்பாக மக்கள் பணியாற்றியவர். இவர் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் திறம்பட செயலாற்றியவர் என்ற பெருமைக்குரியவர்.
இவர் சிறந்த ஆட்சியாளராகவும், கடின உழைப்பாளியாகவும், அனைவரிடமும் அன்பாக பழகும் தன்மையுடையவராகவும் இருந்தார். கோவா மாநிலத்தின் முதல்-அமைச்சர் மனோகர் பாரிக்கரின் மறைவு கோவா மாநிலத்திற்கு ஒரு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பாரதிய ஜனதா கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ManoharParrikar #EdappadiPalaniswami
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
கோவா மாநிலத்தின் முதல்-அமைச்சரும், சிறந்த அரசியல் தலைவருமான மனோகர் பாரிக்கர் உடல் நலக்குறைவால் புதுடெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி, நேற்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
கோவா மாநிலத்திற்கு பாரதிய ஜனதா கட்சியிலிருந்து முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சர் என்ற பெருமைக்குரியவர் மனோகர் பாரிக்கர். இவர் இரண்டு முறை கோவா மாநிலத்தின் முதல்-அமைச்சராக இருந்து சிறப்பாக மக்கள் பணியாற்றியவர். இவர் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் திறம்பட செயலாற்றியவர் என்ற பெருமைக்குரியவர்.
இவர் சிறந்த ஆட்சியாளராகவும், கடின உழைப்பாளியாகவும், அனைவரிடமும் அன்பாக பழகும் தன்மையுடையவராகவும் இருந்தார். கோவா மாநிலத்தின் முதல்-அமைச்சர் மனோகர் பாரிக்கரின் மறைவு கோவா மாநிலத்திற்கு ஒரு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பாரதிய ஜனதா கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ManoharParrikar #EdappadiPalaniswami
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X