என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "drone"
- ரஷிய- உக்ரைன் போர் தற்போது 530 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது
- இரு நாடுகளும் ஆளில்லா விமானங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றன
ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை 2022, பிப்ரவரி மாதம் தனது ராணுவத்தால் ஆக்ரமித்தது.
சிறப்பு ராணுவ நடவடிக்கை என பெயரிட்டு ரஷியா மேற்கொண்ட இந்த ஆக்ரமிப்பிற்கு எதிர்வினையாக உக்ரைன், அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை கொண்டு ரஷியாவை தீவிரமாக எதிர்த்து வருகிறது.
இந்த ரஷிய-உக்ரைன் போர் தற்போது 530 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இதில் இரு தரப்பிலும் வீடுகளும், கட்டிடங்களும் சேதமடைந்து பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது. சில மாதங்களாக தாக்குதல்களில் இரு நாடுகளும் டிரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றன.
இந்நிலையில் உக்ரைன் இரு டிரோன்களை ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவை நோக்கி ஏவியது. இவற்றை ரஷியாவின் விமானப்படை தாக்கி அழித்தது. மாஸ்கோவின் தெற்கு புறநகரில் உள்ள டொமோடிடோவோ (Domodedovo) பகுதியின் மீது ஏவப்பட்ட ஒரு டிரோனை ரஷியா இடைமறித்து வீழ்த்தியது.
தலைநகரின் மேற்கு பகுதியில் உள்ள மின்ஸ்க் நெடுஞ்சாலையின் மேலே இன்னொரு டிரோனை ரஷியா இடைமறித்து வீழ்த்தியது. வீழ்த்தப்பட்ட டிரோன்களின் பாகங்கள் தாக்கப்பட்டு காயமடைந்ததாகவோ அல்லது உயிர்ச்சேதம் ஏற்பட்டதாகவோ இதுவரை தகவல்கள் இல்லை.
ரஷியாவின் மாஸ்கோ நகரை குறிவைத்து ஒரே வாரத்தில் 3-வது முறையாக உக்ரைன் தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
- உணவு வினியோகம் செய்வதற்காக ஜொமோட்டோ ஊழியர் ஒருவர் சுயமாக ஒரு டிரோனை உருவாக்கி அசத்தி உள்ளார்.
- வீடியோ 70 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளையும், 12 லட்சத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களையும் குவித்துள்ளது.
சமீபகாலமாக ஆன்லைன் மூலம் ஓட்டல்களில் உணவு ஆர்டர் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், உணவு வினியோகம் செய்யும் நிறுவனங்களும் அதிகரித்து வருகின்றன. உணவு வினியோகம் செய்யும் ஊழியர்கள் பெரும்பாலும் மோட்டார் சைக்கிளில் செல்வார்கள். ஆனால் உணவு வினியோகம் செய்வதற்காக ஜொமோட்டோ ஊழியர் ஒருவர் சுயமாக ஒரு டிரோனை உருவாக்கி அசத்தி உள்ளார்.
சோஹன்ராய் என்ற அந்த ஊழியர் நீண்ட தூரம் பயணித்து உணவு வினியோகம் செய்ய வேண்டி இருந்ததால் அடிக்கடி போக்குவரத்தில் சிக்கி கொண்டதோடு, களைத்தும் போனார். இதனால் விரைவாக உணவு வினியோகம் செய்வதற்காக திட்டமிட்ட அவர் 'டிரோன்' உருவாக்கி உணவு வினியோகத்திற்கு பயன்படுத்த சோதனைகளை மேற்கொண்ட காட்சிகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ 70 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளையும், 12 லட்சத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களையும் குவித்துள்ளது. இதைப்பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- ரஷியா மீதான உக்ரைனின் டிரோன் தாக்குதல்கள் சென்ற வாரம் தீவிரமடைந்தது.
- ரஷியாவின் தாக்குதலின் விளைவை, ரஷிய மக்கள் அனுபவிக்கிறார்கள்
2022 பிப்ரவரி மாதம், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை தீவிரமாக எதிர்த்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியோடு உக்ரைன் போரிட்டு வருகிறது. போர் தொடங்கி 18 மாதங்கள் கடந்து சுமார் 520 நாட்கள் ஆன நிலையில் இரு தரப்பும் மாறிமாறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளிலும் பலத்த சேதங்களும் உயிர்பலிகளும் தொடர்கிறது.
இந்நிலையில் ரஷியா மீதான உக்ரைனின் டிரோன் தாக்குதல்கள் சென்ற வாரம் தீவிரமடைந்தது.
நேற்று ரஷியாவின் தலைநகர் மாஸ்கோ மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒருவர் காயமடைந்தார். மேலும், 2 கட்டிடங்கள் சேதமடைந்தன. இதனால் ரஷியாவின் வ்னுகோவோ (Vnukovo) விமான நிலையம் மூடப்பட்டது.
இத்தாக்குதல்கள் குறித்து தனது மக்களுக்கு ஆற்றிய உரையில் கருத்து தெரிவித்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியிருப்பதாவது:
ரஷியாவின் எல்லைக்குள் போர் நுழைந்து விட்டது. ரஷியாவின் அடையாள சின்னங்கள், ராணுவ தளங்கள் இலக்குகளாகும். இது ஒரு தவிர்க்க முடியாத ஆனால், இயற்கையான செயல்முறை. உக்ரைன் வலுப்பெற்று வருகிறது. இருந்தாலும் ரஷிய தீவிரவாதிகள் நமது எரிசக்தி கட்டமைப்பை தாக்கக்கூடும். எனவே நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலின் விளைவை, ரஷிய மக்கள் அனுபவிக்கிறார்கள் என உக்ரைன் விமானப்படை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த தாக்குதல்கள் நேட்டோ நாடுகளும், அமெரிக்காவும் உக்ரைனுக்கு உதவியதால் நடந்திருக்கின்றன என ரஷியாவின் வெளியுறவுத்துறை தெரிவித்திருக்கிறது.
இதற்கிடையே ரஷியா கைப்பற்றிய கிரிமியாவின் மீது உக்ரைன் நடத்திய 25 டிரோன் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்ததாக ரஷியா அறிவித்துள்ளது.
- 30 நிமிடத்தில் ஒரு எக்டர் விதைப்பு செய்யலாம்.
- ட்ரோன் மூலம் களைக்கொல்லிகளை மிக குறுகிய நேரத்தில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
திருநாகேஸ்வரம்:
கும்பகோணம் அருகே உள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், சென்னை மதுரவாயல் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை இணைந்து ட்ரோன் மூலம் நேரடி நெல் விதைப்பு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசுகையில்:-
நேரடி நெல் விதைப்பின் முக்கியத்துவத்தையும், நெல் சாகுபடி முறையில் ஏற்படக்கூடிய ஆள் பற்றாக்குறையை சமாளிக்க ட்ரோன் தொழில்நுட்பம் மிகச்சிறந்தது.
மேலும், 45-50 கிலோ விதையை பயன்படுத்தி 30 நிமிடத்தில் ஒரு எக்டர் விதைப்பு செய்யலாம். களைகளை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் களைக்கொல்லிகளை மிக குறுகிய நேரத்தில் தெளித்து கட்டுப்படுத்தலாம் என்றார்.
இதில் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் பழனிச்சாமி, இயக்குனர் ரகுநாதன் மற்றும் கமலஹாசன் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை உளவியல் இணை பேராசிரியர் இளமதி செய்திருந்தார்.
- மாநாட்டில் வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
- பிரதிநிதிகள், பிரமுகர்கள் பயணம் செய்யும் வழிதடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு.
ஜி-20 மாநாட்டை தொடர்ந்து சென்னையில் 5 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாமல்லபுரத்தில் வரும் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை ஜி-20 மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
இதனால், ஜி-20 மாநாட்டை முன்னிட்டு வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை 5 நாட்கள் சென்னையில் டிரோன்கள் பறக்க காவல்துறை தடை விதித்துள்ளது.
மேலும், பிரதிநிதிகள் வருகை, தங்கும் இடங்கள் மற்றும் மேற்படி பிரமுகர்கள் பயணம் செய்யும் வழிதடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பிரிடேட்டர் டிரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் பலஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது.
- நவீன டிரோன்களை வாங்க இந்தியா முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் நட்பு நாடாக இந்தியா இருந்து வருகிறது. இரு நாடுகள் இடையே பல்வேறு துறைகளில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவிடம் இருந்து நவீன டிரோன்களை (ஆளில்லா விமானம்) வாங்குவது தொடர்பாக இந்தியா இன்று முடிவு செய்ய உள்ளது.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பிரிடேட்டர் டிரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் பலஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது. ஆனால் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே அமெரிக்காவின் பிரிடேட்டர் டிரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இன்று முடிவு செய்ய உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இன்று நடைபெறும் கூட்டத்தில் ஒப்பந்தம் குறித்து இறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகிற 21-ந் தேதி அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக செல்வதற்கு முன்பாக பாதுகாப்பு அமைச்சக கூட்டம் நடைபெறுகிறது.
பிரதமர் மோடியின் அமெரிக்க வருகைக்கு முன்பாக இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசை அமெரிக்க அதிபர் ஜோபைடன் நிர்வாகம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகின.
அமெரிக்க வெளியுறவுத் துறை, பென்டகன் மற்றும் வெள்ளை மாளிகை ஆகியவை இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள இந்தியாவிடம் கேட்டு கொண்டன. இதையடுத்து அமெரிக்க நவீன டிரோன்களை வாங்க இந்தியா முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த டிரோன்கள் அதிக உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது. ஏவுகனைகளை ஏந்தி சென்று இலக்குகளை அதிக துல்லியத்துடன் தாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா தற்போது ஒரு அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து டிரோன்களை குத்தகைக்கு எடுத்து இயக்கி வருகிறது. அந்த டிரோன்கள் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் கண்காணிக்க கடற்படைக்கு உதவுகின்றன.
- கோடை சாகுபடியாக பல ஏக்கரில் விவசாயிகள் உளுந்து பயிர்கள் சாகுபடி செய்துள்ளனர்.
- ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதற்கு ஏக்கருக்கு ரூ. 500 முதல் 800 வரை செலவாகிறது.
மெலட்டூர்:
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா மெலட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை சாகுபடியாக பல ஏக்கரில் விவசாயிகள் உளுந்து பயிர்கள் சாகுபடி செய்துள்ளனர்.
இந்த நிலையில் சாகுபடி செய்துள்ள உளுந்து பயிர்கள், பூ பூத்து காய் காய்க்கும் தருவாயில் செம்பேன் காய்புலுவால் பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது.
பூச்சிகள் தாக்குதலை கட்டுப்படுத்த டிரோன் மூலம்பூச்சிக்கொல்லி மருந்தினை தெளித்து வருகின்றனர்.
மேலும் விவசாய பணிக்கு ஆள் பற்றாக்குறை மற்றும் ஆட்கள் கூலி உயர்வு காரணமாக ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது தனியார் ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதற்கு ஏக்கருக்கு ரூ. 500 முதல் 800 வரை செலவு ஆகிறது.
எனவே வேளாண்மைதுறை மூலம் இலவசமாக அல்லது மான்ய முறையில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சர்வதேச எல்லையை தாண்டி பாகிஸ்தான் டிரோன் சந்தேகத்திற்கு இடமாக பறந்தது
- கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தினார்கள்.
அமிர்தசரஸ்:
இந்திய எல்லையில் அவ்வப்போது பாகிஸ்தான் டிரோன்கள் அத்துமீறி நுழைந்து வருகிறது. கடந்த வாரம் 3 கிலோ கஞ்சா கட்டப்பட்டிருந்த பாகிஸ்தான் டிரோன் பஞ்சாப் மாநிலத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு அமிர்தசரசில் உள்ள பைனி ராஜ்புட்னா என்ற கிராமத்தில் சர்வதேச எல்லையை தாண்டி பாகிஸ்தான் டிரோன் சந்தேகத்திற்கு இடமாக பறந்தது.
இதை பார்த்த அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தினார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது,
- மீனவர்கள் வலையில் சிக்கிய டிரோனை மீட்டு காசி மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
- மீனவர்கள் வலையில் டிரோன் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராயபுரம்:
திருவொற்றியூர் அப்பர் நகரைச் சேர்ந்தவர் அன்பு. மீனவர். இவர் அதே பகுதியை சேர்ந்த மேலும் 3 மீனவர்களுடன் பைபர் படகு மூலம் திருவொற்றியூர் கடல் பகுதியில் வலை வீசி நண்டு பிடித்தார். அப்போது அவர்களது வலையில் டிரோன் ஒன்று சிக்கியது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் வலையில் சிக்கிய டிரோனை மீட்டு காசி மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் டிரோனை சோதனை செய்த போது, அது 2 அடி நீளம், 1 அடி உயரமாக இருந்தது. 6 இறக்கைகளும் காணப்பட்டன. மேலும் அதில் சாகர் பாதுகாப்பு தொழில்நுட்பம் என்று எழுதப்பட்டிருந்தது. இது கடலோர காவல் படைக்கு இன்னும் சொந்தமானது என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த டிரோன் குறித்து போலீசார் கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்தனர். அந்த டிரோனை கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணிக்கு பறக்க விட்டபோது தொழில் நுட்ப கோளாறால் கடலில் விழுந்து இருக்கலாம் என்று தெரிகிறது.
இது பற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். மீனவர்கள் வலையில் டிரோன் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இந்த நிறுவனம் ரூ.10 லட்சத்தில் டிரோன் வாங்க உள்ளது.
- 300 பேர் ரூ.2 ஆயிரம் செலுத்தினார்கள் என்றால் முதலீடு ரூ. 6 லட்சமாகும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் சீனிவாசன்பி ள்ளை ரோட்டில் உள்ள தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடெட்டில் வேளாண் வணிகத்தை விவசாயிகளுக்கு கற்றுக் கொடுப்பது, பொருட்களை உற்பத்தி செய்வது மட்டு மின்றி சந்தைப்படுத்துவதில் சிறந்து விளங்குவது எப்படி என்பது குறித்து விவசாயிக ளுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
மாவட்ட வளர்ச்சி மேலாளர் (நபார்டு) அனீஸ்குமார் தலைமை தாங்கினார்.
தஞ்சை தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடெட் சேர்மன் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.
இதில் ஈரோடு ஆதார நிறுவனம் திட்ட அலுவலர் முனைவர் வடிவேல் கலந்து கொண்டு பேசியதாவது:-
பத்தாயிரம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை இந்தியா முழுவதும் உருவாக்குகிற மத்திய அரசின் சிறப்பு திட்டம்.
இதில் 10 ஆயிரத்தில் 3000 நிறுவனங்களை நபார்டு வங்கி மூலம் உருவாக்குவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடெட் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தின் நோக்கம் என்னவென்றால் விவசாயிகளுக்கு உற்பத்தி தளத்தில் தலைமுறை தலைமுறையாக அனுபவ அறிவு இருக்கும்.
ஆனால் சந்தைப்படுத்துதல் என்ற தளத்தில் அவர்களுக்கு அனுபவம் மிகவும் குறைவு.
இதனால் 300 விவசாயிகள் ஒன்றாக சேர்ந்து நிறுவ னத்தை உருவாக்கினால் சந்தைபடுத்துதலில் ஒரு வலிமையை கொடுக்கும்.
இந்த திட்டம் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்வது மட்டுமல்லாமல் சந்தையிலும் ஒரு வியாபாரி போல் பொருட்களை விற்க முடியும்.
இந்த திட்டத்தில் குறைந்தபட்ச உறுப்பினர்கள் 300 பேர்.
கம்பெனியின் ஒரு பங்கு என்பது ரூ.100 ஆகும்.
ஒவ்வொரு விவசாயியும் 20 பங்கு வாங்கலாம். அப்படி என்றால் ரூ.2000 செலுத்த வேண்டும்.
300 பேர் 2000 செலுத்தினார்கள் என்றால் முதலீடு ரூ.6 லட்சமாகும்.
இதில் இணைப்பங்காக மத்திய அரசு ரூ.6 லட்சம் கொடுக்கிறது. இதனால் முதலீடு ரூ.6 லட்சமாகிவிடும். இது 750 நபர் வரை கொடுப்பார்கள்.
உச்சபட்ச முதலீடு ரூ.30 பங்காகும்.
இந்த கம்பெனியில் 10 பேர் கொண்ட இயக்குனர் குழு வந்துவிடும். அதில் முதன்மை செயல் அலுவலர், அக்கவுண்ட் மேனேஜர் நியமனம் செய்யப்படுவார்கள்.
இவர்கள் விவசாயிகள் இடம் அறுவடை காலத்தில் பொருட்களை வாங்கி விடுவார்கள்.
பின்னர் அந்த பொருட்களை சுத்தப்படுத்தி விலை ஏறும் போது மதிப்புக்கூட்டி சந்தைபடுத்துவார்கள்.
வணிகத்தை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும்.
இது 3 ஆண்டுகளுக்கான நிதி வழங்கும் திட்டமாகும்.
இவர்களை வழி நடத்துவதற்கு ஆதார நிறுவனங்கள் என்று 247 பேரை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது.
ஈரோடு துள்ளியல் பண்ணை உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் என்பது ஆதார நிறுவனம் ஆகும்.
தஞ்சாவூர் தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடெட்டை வளர்த்து எடுக்கும் பொறுப்பை நாங்கள் எடுத்துள்ளோம்.
நாங்கள் இவர்களுடன் 5 ஆண்டு பயணம் செய்வோம்.
ஆரம்ப காலகட்டத்தில் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ரூ.18 லட்சத்தை மத்திய அரசு கொடுக்கிறது.
ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ரூ.2 கோடி வரைக் கடன் உதவி வழங்கப்படுகிறது.
தஞ்சாவூர் நிறுவனமானது தென்ன ங்கன்று, நாற்றங்காலை கையில் எடுத்துள்ளது. கண்டிதம்பட்டு அருகே சொக்காலி கிராமத்தில் அரை ஏக்கரில் தென்னை நர்சரி அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்த திட்டம் என்னவெ ன்றால் தேங்காயைடன் கணக்கில் கொள்முதல் செய்து பெரிய கம்பெனிகளுக்கு கொடுப்பது. குறிப்பிட்டு சொல்வது என்னவென்றால் இந்த நிறுவனம் ரூ.10 லட்சத்தில் டிரோன் வாங்க உள்ளது.
அனைத்து பயிர்களுக்கும் இந்த டிரோன் மூலம் மருந்து தெளிக்கலாம்.
அதேபோல் தென்னைக்கு வேர் வழி நுன்னூட்டம் கொடுப்பதால் தென்னை செழித்து வளரும்.
தென்னை மற்றும் பிற பொருட்களில் இருந்து மதிப்பு கூட்டல் உணவுப் பொருட்கள் தயாரிப்பது மற்றொரு திட்டமாகும். இதற்கான எந்திரங்கள் ரூ.4 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளது.
இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டம் வந்த பிறகு தரமான உணவு பொருட்கள் தயார் செய்து உள்நாடு, வெளிநாடுகளுக்கு சந்தைப்படுத்த முடியும்.
எதிர்கா லத்தில் தஞ்சாவூரில் உள்ள இந்த கம்பெனி விவசாயிகளுக்கு பொருளாதார வளர்ச்சியை கொடுக்கும்.
வேளாண் வணிகத்தை விவசாயிகளுக்கு கற்று கொடுப்பது அடிப்படை நோக்கமாகும்.
ஜூலை மாதத்தில் சென்னையில் உணவு உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான கண்காட்சி நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் முதன்மை செயல் அலுவலர் நவீன் அரசன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பல்வேறு ட்ரோன் செயல் விளக்கங்கள், 70-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் ஆளில்லா விமானங்களின் பல்வேறு பயன்பாட்டு நிகழ்வுகளையும் காட்சிப்படுத்தப்பட்டன.
பின்னர் இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
தொழில்நுட்பத்தால் விவசாயத்தில் புரட்சி ஏற்பட்டு வருகிறது. மண் சுகாதார அட்டைகள், இ-நாம் அல்லது ட்ரோன்கள் எதுவாக இருந்தாலும் அவை விவசாயத் துறையில் கேம் சேஞ்சராக உருவாகி வருகின்றன.
கடந்த எட்டு ஆண்டுகளில், தொழில்நுட்பத்தில் மேம்பாடுகளை நாங்கள் கண்டுள்ளோம். விவசாயிகள் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்வதை நாங்கள் கண்டுள்ளோம்.
விவசாயத் துறை இப்போது தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாறுகிறது. கடைசி மைல் சுகாதார விநியோகத்தை மேம்படுத்துவதில் ட்ரோன்கள் முக்கியமானதாக இருக்கும். கோவிட் காலத்தில் கூட ட்ரோன்கள் தடுப்பூசிகளை நாட்டின் தொலைதூர பகுதிகளுக்கு வழங்க உதவியது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. சென்னை விமான நிலையத்தில் சந்திப்பு- அ.தி.மு.க. தலைவர்களை சமரசம் செய்த மோடி
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்