search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் 5 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை
    X

    சென்னையில் 5 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை

    • மாநாட்டில் வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
    • பிரதிநிதிகள், பிரமுகர்கள் பயணம் செய்யும் வழிதடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு.

    ஜி-20 மாநாட்டை தொடர்ந்து சென்னையில் 5 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை மாமல்லபுரத்தில் வரும் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை ஜி-20 மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

    இதனால், ஜி-20 மாநாட்டை முன்னிட்டு வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை 5 நாட்கள் சென்னையில் டிரோன்கள் பறக்க காவல்துறை தடை விதித்துள்ளது.

    மேலும், பிரதிநிதிகள் வருகை, தங்கும் இடங்கள் மற்றும் மேற்படி பிரமுகர்கள் பயணம் செய்யும் வழிதடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×