என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விவசாயிகளுக்கு உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவது குறித்த பயிற்சி
- இந்த நிறுவனம் ரூ.10 லட்சத்தில் டிரோன் வாங்க உள்ளது.
- 300 பேர் ரூ.2 ஆயிரம் செலுத்தினார்கள் என்றால் முதலீடு ரூ. 6 லட்சமாகும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் சீனிவாசன்பி ள்ளை ரோட்டில் உள்ள தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடெட்டில் வேளாண் வணிகத்தை விவசாயிகளுக்கு கற்றுக் கொடுப்பது, பொருட்களை உற்பத்தி செய்வது மட்டு மின்றி சந்தைப்படுத்துவதில் சிறந்து விளங்குவது எப்படி என்பது குறித்து விவசாயிக ளுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
மாவட்ட வளர்ச்சி மேலாளர் (நபார்டு) அனீஸ்குமார் தலைமை தாங்கினார்.
தஞ்சை தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடெட் சேர்மன் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.
இதில் ஈரோடு ஆதார நிறுவனம் திட்ட அலுவலர் முனைவர் வடிவேல் கலந்து கொண்டு பேசியதாவது:-
பத்தாயிரம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை இந்தியா முழுவதும் உருவாக்குகிற மத்திய அரசின் சிறப்பு திட்டம்.
இதில் 10 ஆயிரத்தில் 3000 நிறுவனங்களை நபார்டு வங்கி மூலம் உருவாக்குவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடெட் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தின் நோக்கம் என்னவென்றால் விவசாயிகளுக்கு உற்பத்தி தளத்தில் தலைமுறை தலைமுறையாக அனுபவ அறிவு இருக்கும்.
ஆனால் சந்தைப்படுத்துதல் என்ற தளத்தில் அவர்களுக்கு அனுபவம் மிகவும் குறைவு.
இதனால் 300 விவசாயிகள் ஒன்றாக சேர்ந்து நிறுவ னத்தை உருவாக்கினால் சந்தைபடுத்துதலில் ஒரு வலிமையை கொடுக்கும்.
இந்த திட்டம் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்வது மட்டுமல்லாமல் சந்தையிலும் ஒரு வியாபாரி போல் பொருட்களை விற்க முடியும்.
இந்த திட்டத்தில் குறைந்தபட்ச உறுப்பினர்கள் 300 பேர்.
கம்பெனியின் ஒரு பங்கு என்பது ரூ.100 ஆகும்.
ஒவ்வொரு விவசாயியும் 20 பங்கு வாங்கலாம். அப்படி என்றால் ரூ.2000 செலுத்த வேண்டும்.
300 பேர் 2000 செலுத்தினார்கள் என்றால் முதலீடு ரூ.6 லட்சமாகும்.
இதில் இணைப்பங்காக மத்திய அரசு ரூ.6 லட்சம் கொடுக்கிறது. இதனால் முதலீடு ரூ.6 லட்சமாகிவிடும். இது 750 நபர் வரை கொடுப்பார்கள்.
உச்சபட்ச முதலீடு ரூ.30 பங்காகும்.
இந்த கம்பெனியில் 10 பேர் கொண்ட இயக்குனர் குழு வந்துவிடும். அதில் முதன்மை செயல் அலுவலர், அக்கவுண்ட் மேனேஜர் நியமனம் செய்யப்படுவார்கள்.
இவர்கள் விவசாயிகள் இடம் அறுவடை காலத்தில் பொருட்களை வாங்கி விடுவார்கள்.
பின்னர் அந்த பொருட்களை சுத்தப்படுத்தி விலை ஏறும் போது மதிப்புக்கூட்டி சந்தைபடுத்துவார்கள்.
வணிகத்தை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும்.
இது 3 ஆண்டுகளுக்கான நிதி வழங்கும் திட்டமாகும்.
இவர்களை வழி நடத்துவதற்கு ஆதார நிறுவனங்கள் என்று 247 பேரை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது.
ஈரோடு துள்ளியல் பண்ணை உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் என்பது ஆதார நிறுவனம் ஆகும்.
தஞ்சாவூர் தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிடெட்டை வளர்த்து எடுக்கும் பொறுப்பை நாங்கள் எடுத்துள்ளோம்.
நாங்கள் இவர்களுடன் 5 ஆண்டு பயணம் செய்வோம்.
ஆரம்ப காலகட்டத்தில் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ரூ.18 லட்சத்தை மத்திய அரசு கொடுக்கிறது.
ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ரூ.2 கோடி வரைக் கடன் உதவி வழங்கப்படுகிறது.
தஞ்சாவூர் நிறுவனமானது தென்ன ங்கன்று, நாற்றங்காலை கையில் எடுத்துள்ளது. கண்டிதம்பட்டு அருகே சொக்காலி கிராமத்தில் அரை ஏக்கரில் தென்னை நர்சரி அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்த திட்டம் என்னவெ ன்றால் தேங்காயைடன் கணக்கில் கொள்முதல் செய்து பெரிய கம்பெனிகளுக்கு கொடுப்பது. குறிப்பிட்டு சொல்வது என்னவென்றால் இந்த நிறுவனம் ரூ.10 லட்சத்தில் டிரோன் வாங்க உள்ளது.
அனைத்து பயிர்களுக்கும் இந்த டிரோன் மூலம் மருந்து தெளிக்கலாம்.
அதேபோல் தென்னைக்கு வேர் வழி நுன்னூட்டம் கொடுப்பதால் தென்னை செழித்து வளரும்.
தென்னை மற்றும் பிற பொருட்களில் இருந்து மதிப்பு கூட்டல் உணவுப் பொருட்கள் தயாரிப்பது மற்றொரு திட்டமாகும். இதற்கான எந்திரங்கள் ரூ.4 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளது.
இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டம் வந்த பிறகு தரமான உணவு பொருட்கள் தயார் செய்து உள்நாடு, வெளிநாடுகளுக்கு சந்தைப்படுத்த முடியும்.
எதிர்கா லத்தில் தஞ்சாவூரில் உள்ள இந்த கம்பெனி விவசாயிகளுக்கு பொருளாதார வளர்ச்சியை கொடுக்கும்.
வேளாண் வணிகத்தை விவசாயிகளுக்கு கற்று கொடுப்பது அடிப்படை நோக்கமாகும்.
ஜூலை மாதத்தில் சென்னையில் உணவு உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான கண்காட்சி நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் முதன்மை செயல் அலுவலர் நவீன் அரசன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்