search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cultivation"

    • தற்போது தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத நிலையில் ஆங்காங்கே சாலையில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது.
    • ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் விலை சரிவை சந்திப்பதும் விவசாயிகள் நஷ்டமடைவதும் தொடர்கதையாகவே உள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக தக்காளி, சின்ன வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் அடிக்கடி ஏற்படும் விலை சரிவு விவசாயிகளின் வாழ்க்கையை அதல பாதாளத்துக்கு தள்ளி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தற்போது தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத நிலையில் ஆங்காங்கே சாலையில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில் சாகுபடி செய்யப்படும் தக்காளி உடுமலை தினசரி சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து வியாபாரிகள் மூலம் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. கேரள மாநிலத்தின் சில பகுதிகளுக்கும் இங்கிருந்து தக்காளி அனுப்பி வைக்கப்படுகிறது. வரத்து மற்றும் தேவையை பொறுத்து தினசரி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் விலை சரிவை சந்திப்பதும் விவசாயிகள் நஷ்டமடைவதும் தொடர்கதையாகவே உள்ளது. தற்போது 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.80 முதல் ரூ.150 வரையே விற்பனையாகிறது. இதனால் போக்குவரத்து, சுங்கம், கூலி என செலவு செய்து சந்தைக்கு கொண்டு வந்து நஷ்டத்துடன் திரும்புவதை விட சாலை ஓரத்தில் வீசி எறிவதே சிறந்தது என்று விவசாயிகள் முடிவு செய்து விடுகின்றனர்.

    பல விவசாயிகள் விரக்தியின் உச்சத்தில், டிராக்டர்கள் மூலம் தக்காளி செடிகளை அழிக்க தொடங்கியுள்ளனர். ஆண்டுதோறும் ஏற்படும் இந்த நிலையால் தக்காளி செடிகள் மட்டும் அழிக்கப்படுவதில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரமும், எதிர்காலமும் சேர்ந்தே அழிந்து போகிறது. இந்தநிலை ஏற்படாமல் தவிர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயம் மட்டுமல்லாமல் விவசாயியும் சேர்ந்தே அழியும் நிலை உருவாகி விடும்.

    எல்லா பொருட்களின் விலைவாசியும் 10 ஆண்டுகளுக்குள் பல மடங்கு விலை உயர்ந்துள்ளது.ஆனால் ஒரு கட்டு கீரை ரூ.10 லிருந்து ரூ.15 ஆக உயர்த்தப்பட்டால் அது அநியாய விலையாக பார்க்கப்படுகிறது. உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்கப்பட வேண்டும். ஆனால் ரூ.5-க்கும் ரூ.10-க்கும் அள்ளி கொடுத்து விட்டு விவசாயி மூலையில் முடங்கி கிடக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் மடத்துக்குளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தக்காளியை கொட்டி உள்ளனர்.

    எனவே விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலையில் தக்காளி சந்தை உருவாக்கி, இருப்பு வைக்கவும், உரிய விலை கிடைக்கும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கவும், மதிப்புக் கூட்டுப்பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    • நல்ல விளைச்சல் இருக்கும் என்ற நம்பிக்கையில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பொங்கல் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது.
    • பருவநிலை மாற்றம், போதிய மழை இல்லாத காரணங்களால், பூச்சி தாக்குதல் கரும்பு பயிர்களை வெகுவாக பாதித்தது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு பிறகு அதிகளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.

    குறிப்பாக திருவையாறு பகுதியில் விளையும் கரும்புகளுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. ஆண்டுதோறும் திருவையாறு மற்றும் சுற்றியுள்ள திருக்காட்டுப்பள்ளி, வளப்பகுடி, நடுபடுகை, நடுக்காவேரி பகுதிகளில், பொங்கலுக்கான செங்கரும்பு ஆண்டுதோறும் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்படும்.

    இப்பகுதிகளில் விளையும் கரும்பின் சுவையும், தன்மையும் சிறப்பாக இருப்பதால், வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஒரு மாதத்திற்கு முன்பே கரும்பை பார்த்து, முன்பணமும் விவசாயிகளிடம் கொடுத்து சென்று விடுவார்கள்.இதனால் தான் இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கரும்பு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த ஆண்டும் நல்ல விளைச்சல் இருக்கும் என்ற நம்பிக்கையில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பொங்கல் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது.

    ஆனால் பருவநிலை மாற்றம், மற்ற மாவட்டங்களில் பெய்த பருவமழையில் பாதியளவு கூட தஞ்சை மாவட்டத்தில் பெய்யாதது போன்ற காரணங்களால் பத்து மாத பயிரான பொங்கல் கரும்பு தற்போது 6 அடிக்கு மேல் வளந்திருக்க வேண்டிய நிலையில் மூன்று அடிக்கு மேல் வளராமல், தோகை பழுப்பு நிறமாக மாறி உள்ளது. மேலும் பூச்சி தாக்குதலால் ஒரு கரும்பு பாதித்தால், அருகில் உள்ள மற்ற கரும்புகள் பாதிப்பை சந்தித்துள்ளது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

    இதனால் பாதிக்கப்பட்ட கரும்புகளை அப்புறப்படுத்த விவசாயிகள் கூடுதல் செலவு செய்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே காவிரியில் போதிய நீர் இல்லாததால் இந்த ஆண்டு குறுவை விளைச்சல் கடுமையாக சரிவை சந்தித்தது. சம்பா, தாளடியும் எதிர்பார்த்த அளவுக்கு விளைச்சல் இருக்குமா என கேள்விக்குறி உள்ளது. அதேபோல் தற்போது பொங்கல் கரும்பு விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து நடுப்படுகையை சேர்ந்த விவசாயி வெங்கடேசன் கூறும்போது:-

    இந்தாண்டு ஏற்பட்ட பருவநிலை மாற்றம், போதிய மழை இல்லாத காரணங்களால், பூச்சி தாக்குதல் கரும்பு பயிர்களை வெகுவாக பாதித்தது.

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 24 நாட்களே உள்ள நிலையில், ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் வரை செலவு செய்தும், பூச்சி தாக்குதலால் பாதிப்பு கரும்புகளை அழிக்கும் நிலை உள்ளது.

    ஒரு ஏக்கரில் பயிரிடப்படுள்ள கரும்பு விதைகள், 50 சதவீதம் முற்றிலும் வீணாகி உள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு நோய் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் வியாபாரிகள் கரும்பை வாங்க ஆர்வம் காட்டாமல், பயிரை பார்த்து விட்டு திரும்பி சென்று விடுகிறார்கள். இருப்பினும் நல்ல முறையில் உள்ள கரும்பை காப்பாற்ற போராடி வருகிறோம். தோட்டக்கலைத்துறையினர் பூச்சி தாக்குதலுக்கு என்ன காரணம், என்ன வகையான நோய் என கண்டறிய வேண்டும்.

    தமிழக அரசு பொங்கல் தொகுப்பில், எங்கள் பகுதியில் நல்ல முறையில் இருக்கும் கரும்பை கொள்முதல் செய்தால், எங்களுக்கு நிவாரணம் வழங்கியது போல் இருக்கும். 50 சதவீதம் செலவு தொகையாவது கிடைக்கும் என்றார்.

    • ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு மழை பெய்ய வில்லை. இதனால் சாகுபடி பணி தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.
    • நிலத்தடி நீரை பயன்படுத்தி சிலர் நெல் சாகுபடியை தொடங்கி உள்ளனர். ஏராளமான விவசாயிகள் உளுந்து, நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட கார்த்திகை பட்டம் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பள்ளிபாளையம்:

    பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் ஏராள மானவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டு தோறும் பருவமழையை பயன்படுத்தி விவசாயிகள் சாகுபடி பணியில் ஈடுபடுவார்கள்.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு மழை பெய்ய வில்லை. இதனால் சாகுபடி பணி தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.

    தற்போது வடகிழக்கு பருவமழை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வந்து அதிகரித்து காணப்படுகிறது. நிலத்தடி நீர் மட்டும் அதிகரித்து உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், விவசாயிகள் தற்போது சாகுபடி பணியை தொடங்கி உள்ளனர்.

    நிலத்தடி நீரை பயன்படுத்தி சிலர் நெல் சாகுபடியை தொடங்கி உள்ளனர். ஏராளமான விவசாயிகள் உளுந்து, நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட கார்த்திகை பட்டம் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • நாற்றுகள் வளர்ந்த இடங்களில் நடவுப்பணிகள் நடக்கிறது.
    • விவசாயிகள் மழைநீரை பயன்படுத்தி நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாபநாசம்:

    தமிழகத்தின் நெற்களஞ்சி யமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது.

    இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து விவசாயிகள் விவசாய பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    வழக்கமாக தஞ்சை மாவட்டத்தில் அதிக அளவில் நெல் சாகுபடி நடைபெறும்.

    ஆனால் காவிரியில் முறையாக தண்ணீர் திறக்கப்படாததால் இந்தாண்டு நெல் உற்பத்தி குறைவான அளவிலே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பம்புசெட் வைத்திருக்கும் விவசாயிகள் தற்போது விவசாயத்தில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    தஞ்சையை அடுத்த பாபநாசம் பகுதியில் உழவுப்பணி, பாய் நாற்றாங்கால் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. மேலும், நாற்றுகள் வளர்ந்த இடங்களில் நடவுப்பணிகள் நடக்கிறது.

    ஒரு சில வயல்களில் எந்திரம் மூலம் நாற்று நடவு செய்யப்பட்டு வருகின்றன.

    இப்பகுதிகளில் பாய் நாற்றங்கால் மூலம் பயிரிப்படும் நாற்றுகள் 20 முதல் 25 நாட்களுக்குள் நடவுக்கு தயாராகி விடுகிறது.

    தற்போது பம்பு செட் வசதியில்லாத விவசாயிகள் மழை நீரை பயன்படுத்தி நாற்றுகளை விலைக்கு வாங்கி நடவு பணிகளை செய்து வருகின்றனர்.

    இதுக்குறித்து முன்னோடி விவசாயி அயோத்தி கூறுகையில் நெல் சாகுபடிக்கு தேவையான உரம் போன்ற இடுபொருட்களையும் தட்டுப்பாடு இல்லாமல் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்"என்றனர்.

    • சுமார் 1000 ஏக்கர் சம்பா பயிர் விளைநிலங்களுக்குள் மழைநீர் புகுந்தது.
    • ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்திருந்த நிலையில் குறுவை பாதிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது.

    இதனால் நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பில்லாளி, அன்னவாசநல்லூர், திருமாளம் பொய்கை, மலட்டேரி, திருப்பயத்தங்குடி உள்ளிட்ட 9 வருவாய் கிராமங்களுக்கான சுமார் 1000 ஏக்கர் சம்பா பயிர் விளை நிலங்களுக்கு மழை நீர் புகுந்தது.

    மேலும் பில்லாளியில் உள்ள வடிகால் வாய்க்கால் கதவணை சரியில்லாததால் மழை நீர் வடியாமல் உள்ளது.

    இதனால் சுமார் 1000 ஏக்கரில் நடவு செய்து 25 நாட்களே ஆன சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி வேர்கள் அழுகும் சூழந்லை ஏற்பட்டுள்ளது.

    சுமார் ஏக்கருக்கு ரூ 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை செலவு செய்திருந்த நிலையில் குறுவை பாதிக்கப்பட்டது.

    இதில் இருந்து மீண்டு தற்போது சம்பா சாகுபடி மேற்கொண்ட விவசாயிகளுக்கு மீண்டும் மழையால் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    எனவே உடனடியாக தடுப்பணையை சரி செய்து கொடுத்தும் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • துரை அண்ராயநல்லூர் பகுதியில் சந்தைதோப்பு அருகே ஏக்கர் நிலத்தில் கரும்பு சாகுபடி செய்து வருகிறார்.
    • 50 சென்ட் மதிப்பிலான கரும்பு தோட்டம் எரிந்து சாம்பலானது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே தி. புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் துரை. விவசாயி, இவர் அண்ராயநல்லூர் பகுதியில் சந்தைதோப்பு அருகே ஏக்கர் நிலத்தில் கரும்பு சாகுபடி செய்து வருகிறார். நேற்று மாலை மின் கசிவு காரணமாக இவரது கரும்பு தோட்டம், திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ கட்டுக்குள் வராததால் திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். 50 சென்ட் மதிப்பிலான கரும்பு தோட்டம் எரிந்து சாம்பலானது. மின் கசிவினால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    • சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளது.
    • மழைநீர் முழுவதும் வடிவதற்கு வடிகால்களை சீரமைக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி ஊராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கன மழையால் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்தது .இதனால் அப்பகுதி மக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வந்தனர்.

    அதேபோல் சம்பா,தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளது.மழையால் பாதிக்கப்பட்ட பகுதியினை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மழைநீர் முழுவதும் வடிவதற்கு வடிகால்களை சீரமைக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.டி.எஸ்.சரவணன்,இளஞ்செழியன், ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி கலியமூர்த்தி, ஊராட்சி செயலர் இளங்கோ மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • திருப்பூர் மாநகரம் இடுவாயில் பயிா் சாகுபடி, ராபி பருவத்துக்கான முதற்கட்ட தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.
    • வட்டார வேளாண்மை அலுவலா் சுகன்யா, அட்மா திட்ட உதவி வேளாண்மை அலுவலா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் , ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் குறித்து பேசினா்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகரம் இடுவாயில், தேசிய உணவு பாதுகாப்பு, ஊட்டச்சத்து மிக்க சிறு தானியங்கள் திட்டத்தின் கீழ் பயிா் சாகுபடி, ராபி பருவத்துக்கான முதற்கட்ட தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது. இதில் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்ட ஆலோசகா் அரசப்பன், வட்டார உதவி வேளாண்மை உதவி இயக்குநா் அன்பழகி, வேளாண் விற்பனை-வணிக துறை வேளாண்மை அலுவலா் ரம்யா, வட்டார வேளாண்மை அலுவலா் சுகன்யா, அட்மா திட்ட உதவி வேளாண்மை அலுவலா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் வேளாண்மை திட்டங்கள் மற்றும் மானியங்கள், ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் குறித்து பேசினா். இதில் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    • தென்னந்தோப்புகளிலும், வட்டப்பாத்திகளிலும், பசுந்தாள் உரங்களை சாகுபடி செய்வது வழக்கமாக உள்ளது. குறிப்பாக சணப்பு பரவலாக பயிரிடப்படுகிறது.
    • நன்கு வளர்ந்த சணப்பு பயிர் பூக்கும் முன் மண்ணுடன் சேர்த்து உழுவதால் 5 முதல் 6 வாரத்துக்குள் நன்றாக மக்கி பயிருக்கு நல்ல உரமாக மாறி விடும்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஆகிய வட்டாரங்களில் உள்ள சுற்றுப்பகுதிகளில் கிணற்றுப்பாசனத்துக்கு பல ஆயிரம் ஏக்கரில் ஆண்டு முழுவதும் பல்வேறு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய விளைநிலங்களில், ஒரே மாதிரியான சாகுபடிகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதால் மண் வளம் குறைந்து விளைச்சலும் பாதிக்கிறது. இதைத்தவிர்க்க சில விவசாயிகள் சாகுபடிக்கு முன்பாக மண் வளத்தை மேம்படுத்த பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடி செய்கின்றனர்.

    தென்னந்தோப்புகளிலும், வட்டப்பாத்திகளிலும், பசுந்தாள் உரங்களை சாகுபடி செய்வது வழக்கமாக உள்ளது. குறிப்பாக சணப்பு பரவலாக பயிரிடப்படுகிறது. காற்றில் உள்ள தழைச்சத்தை தனது வேர் முடிச்சுகளில் உள்ள நுண்ணுயிர்கள் வாயிலாக சேமிக்கும் திறன் கொண்ட சணப்பு பயிர் விதைத்த 45 நாட்களில் சுமார் 2 மீட்டர் உயரத்துக்கு வேகமாக வளர்ந்து ஏக்கருக்கு 4 முதல் 5 டன் தழை உரத்தையும் சுமார் 15 கிலோ தழைச்சத்தையும் தரும் தன்மை கொண்டதாகும். நன்கு வளர்ந்த சணப்பு பயிர் பூக்கும் முன் மண்ணுடன் சேர்த்து உழுவதால் 5 முதல் 6 வாரத்துக்குள் நன்றாக மக்கி பயிருக்கு நல்ல உரமாக மாறி விடும்.

    சணப்பு பயிர் சாகுபடி செய்யப்பட்ட தென்னந்தோப்புகளில் மண் அரிப்பு தடுக்கப்படும் என வேளாண்துறை சார்பில் தெரிவிக்கின்றனர். எனவே வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை சீசனில், சணப்பு பயிரிட்டு செடி வளர்ந்ததும், உழுது மண் வளத்தை மேம்படுத்த விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் அந்த சீசன் சமயங்களில் சணப்பு விதை கிடைப்பதில்லை. எனவே வேளாண்துறை சார்பில் குறிப்பிட்ட சீசன்களில் சணப்பு விதைகளை இருப்பு வைத்து வினியோகிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது.
    • முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழாவும் ஒன்றாகும்.

    திருவண்ணாமலை:

    பஞ்ச பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். இந்த விழாவானது 10 நாட்கள் நடைபெறும்.

    இந்த ஆண்டிற்கான தீபத்திருவிழா வருகிற 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 26-ந்தேதி வரை நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு கோவிலில் மின்விளக்கு அலங்காரம் அமைக்கும் பணி, பந்தல் அமைக்கும் பணி, சாமி வீதி உலா செல்லும் வாகனங்கள் சீரமைக்கும் பணி, வாகனங்களுக்கு வர்ணம் பூசும் பணி, பஞ்சமூர்த்தி தேர்கள் சீரமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நேற்று கோவிலில் தீபத்திருவிழாவை முன்னிட்டு உழவார பணிகள் நடைபெற்றது. திருப்பூரை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் இந்த உழவார பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோவிலில் உள்ள கொடிமரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் கழுவி சுத்தம் செய்வது, விளக்குகளை சுத்தம் செய்வது போன்ற பணிகளை மேற்கொண்டனர்.

    • தேசிய மயமாக்கப்பட்ட வணிக வங்கிகள் ஏதேனும் ஒன்றில் பிரிமியம் செலுத்தி பயன் பெறலாம்.
    • திருமருகல் ஒன்றியத்தில் சம்பா, தாளடி சாகுபடி தொடங்கி உள்ளது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்கலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்க ப்பட்டுள்ளதாவது:-

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் சம்பா,தாளடி சாகுபடி தொடங்கியுள்ளது.நெற்பயிர்களை இயற்கை இடர்பாடுகள், மழை,வெள்ளம் மற்றும் பூச்சி நோய் தாக்கப்பட்டால் விவசாயிகளை பாதுகாப்பதற்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெல் பயிர்களுக்கு 2023-24 ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு ஏக்கருக்கு 1.5 சதவிகித பிரிமியத்தொகை ரூ.539 மட்டும் செலுத்தி விண்ணப்பம்,முன்மொழிவு படிவம்,வங்கி கணக்கு புத்தகம்,ஆதார் நகல்,சிட்டா அடங்கல் ஆவணம் ஆகியவற்றை வரும் 15-ம் தேதிக்குள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வணிக வங்கிகள் ஏதேனும் ஒன்றில் பிரிமியம் செலுத்தி பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நின்றது.
    • மழை சம்பா, தாளடி சாகுபடிக்கு போதுமானதாக இல்லை.

    மன்னார்குடி:

    மன்னார்குடி பகுதியில் உள்ள கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பூதமங்கலம், மரக்கடை, குடிதாங்கிச்சேரி, திருராமேஸ்வரம், ஓவர்ச்சேரி, தண்ணீர்குன்னம், பழையனூர், வடபாதிமங்கலம், நாகங்குடி, பூந்தாழங்குடி, ஓகைப்பேரையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு மற்றும் பகல் நேரங்களில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது.

    நேற்று கூத்தாநல்லூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    இதனால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நின்றது.

    இதேபோல், நீடாமங்கலம் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கி நின்றது.

    இந்த மழை சம்பா, தாளடி சாகுபடிக்கு போதுமானதாக இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதனால் சம்பா, தாளடி பணிகளில் பம்பு செட் வசதி உள்ளவர்கள் மட்டுமே ஈடுபட்டுள்ளனர்.

    ×