search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cauliflower"

    • சியா விதை செரிமானத்தை மெதுவாக்குகிறது.
    • கடல் உணவுகளில் அதிகளவு புரதச்சத்து உள்ளது.

     உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சியா விதை சேர்க்கப்பட்ட உணவுகளை காலை உணவாக எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. ஏனென்றால் இந்த சியா விதை செரிமானத்தை மெதுவாக்குகிறது. இதனால் நாம் அடிக்கடி சாப்பிட்டுக்கொண்டே இருப்பது தவிர்க்கப்படுகிறது.

     பொதுவாகவே கடல் உணவுகளில் அதிகளவு புரதச்சத்து உள்ளது. மேலும் அவை பசியை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கடல் உணவுகளை தேர்வு செய்யலாம். ஏனென்றால் அதில் நம் உணவின் மூலம் மட்டுமே பெறக்கூடிய அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன.

    இவை இதயம் மற்றும் மூளையின் ஆரோக்கியத்தை ஆதரிப்பதுடன் சாலமீன், மத்தி மற்றும் டுனா போன்ற மீன்களில் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடல் எடையை குறைக்க உதவும் என்று 2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     சிலுவை காய்கறிகளான ப்ரோக்கோலி, காளிஃபிளவர், பிரஸ்ஸல்ஸ் முளைகள் மற்றும் முட்டைகோள், அருகுலா போன்ற கருமையான இலை காய்கறிகள் போன்றவை அடங்கும். இந்த காய்கறிகள் அனைத்தையும் வாரம் ஒருமுறை மட்டும் உங்கள் உணவுப்பட்டியலில் சேர்த்துவர உங்களது உடல் எடை எளிதில் குறைவதை நீங்களே பார்க்கலாம்.

     உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் யாராக இருந்தாலும் சரி உங்களது உணவு முறையில் முழு தானியங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த முழு தானியத்தில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பைட்டோ நியூட்ரியன்கள் நிறைந்துள்ளன.

    இதுதவிர முழு தானியங்களான முழுகோதுமை பாஸ்தா, பிரவுன் ரைஸ் போன்றவற்றில் நார்ச்சத்துக்கள் உள்ளன. இவை அனைத்தும் உங்கள் உடல் எடையை குறைக்க உதவிசெய்கிறது.

     டார்க் சாக்லேட் உங்களது உடல் எடையை குறைக்க உதவி செய்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மையில் டார்க் சாக்லேட் உடலெடை குறைக்க உதவி செய்கிறது. தினமும் டார்க் சாக்லேட் சாப்பிட்டு வர உடல் எடை குறையும்.

    எப்படி என்றால் டார்க் சாக்லேட் உங்கள் நீண்டநேர பசியை குறைக்கிறது. இதனால் நீங்கள் அடிக்கடி ஏதாவது சாப்பிட வேண்டிய அவசியம் இருக்காது. இதன்மூலம் உங்களது உடல் எடையை குறைக்கலாம்.

    • கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து காலிபிளவர் அதிக விளைச்சலை தந்துள்ளது.
    • 20 டன் வரை காலிபிளவர் விற்பனைக்கு வருகிறது. இதன் காரணமாக ரூ.30 முதல் ரூ.40 வரை விற்ற 1 காலிபிளவர் பூ , தற்போது ரூ.15 , ரூ.20, ரூ.25, ரூ.30 வரை என அளவைப் பொறுத்து விற்கப்படுகிறது.

    சேலம்:

    தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், குன்னூர், கோத்தகிரி, ஓசூர் , ராயக்கோட்டை, கெலமங்கலம், கர்நாடகா மாநிலம் மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் காலிபிளவர் விளைவிக்கப்படுகிறது. இந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து காலிபிளவர் அதிக விளைச்சலை தந்துள்ளது.

    இதன் காரணமாக சேலம் மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட காலிபிளவர் வரத்து அதிகரித்துள்ளது. சேலம் மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு வழக்கமாக சுமார் 10 டன் வரை காலிபிளவர் பூ விற்பனைக்கு வரும்.

    கடந்த சில நாட்களாக வரத்து அதிகரித்து 20 டன் வரை காலிபிளவர் விற்பனைக்கு வருகிறது. இதன் காரணமாக ரூ.30 முதல் ரூ.40 வரை விற்ற 1 காலிபிளவர் பூ , தற்போது ரூ.15 , ரூ.20, ரூ.25, ரூ.30 வரை என அளவைப் பொறுத்து விற்கப்படுகிறது.

    குழம்பு, பொரியல், மற்றும் காலிபிளவர் சில்லி போட அதிகளவில் விற்பனை ஆகிறது . இன்னும் சில மாதங்களுக்கு அதிகளவில் வரத்து இருக்கும் என தெரிவித்தனர். காலிபிளவரில் நார்ச்சத்து, வைட்டமின்கள் சத்துக்கள், அதிகம் உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதால் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர் என வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்.

    • சீதோஷ்ண நிலை இருப்பதால் காலிபிளவர் சாகுபடிக்கு விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
    • பண்ணைகளில் நாற்று 1-க்கு 50 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர், பல்லடம் சுற்றுப்பகுதியிலும் மிதமான சீதோஷ்ண நிலை இருப்பதால் காலிபிளவர் சாகுபடிக்கு ஏதுவாக உள்ளதால் விவசாயிகள் காலிபிளவர் சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர்.

    குறைந்த அளவு தண்ணீரில் விளையக் கூடிய பயிராகவும் விவசாயிகளுக்கு தினமும் ஏற்படும் பணத்தேவையை தீர்க்கும் பயிராகவும் காலிபிளவர் உள்ளது. காலிபிளவர் நாற்றுகளை, தனியார் நாற்று பண்ணைகளில் நாற்று 1-க்கு 50 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 ஏக்கருக்கு 14 ஆயிரம் முதல் 15 ஆயிரம் நாற்றுகள் வரை நடவு செய்யலாம். காலிபிளவர் சாகுபடியில் பூச்சி தாக்குதல்களுக்கு 2 முறை மருந்து தெளித்து, குறிப்பிட்டநாள் இடைவெளியில், நீரில் கரையும் உரங்களை காலிபிளவர் செடியின் வளர்ச்சிக்காக உபயோக்கின்றனர். காலிபிளவர் செடிநட்ட 80-வது நாளில் இருந்து காலிபிளவர் பூ அறுவடை செய்யலாம். தற்போது மார்க்கெட்டில் காலிபிளவர் 1 கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையாகிறது.

    வடகாடு மலைப்பகுதியில் காலி பிளவர் வரத்து குறைவு காரணமாக விலை உயர்ந்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சத்திரப்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே வடகாடு, வண்டிப்பாதை, பால்கடை, கண்ணணூர், மேட்டுப்பட்டி, பெத்தேல்புரம், புலிக்குத்திக்காடு, சிறுவாட்டுக்காடு உள்பட 14 மலைக்கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் காலிப்பிளவர் நடவு செய்துள்ளனர்.

    தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. மலைப்பகுதிகளில் காலிப்பிளவர் வரத்து குறைவு காரணமாக விலை 2மடங்கு உயர்வடைந்துள்ளது. கடந்த மாதம் 15 காலிப்பிளவர் பூக்கள் கொண்ட ஒரு மூட்டை ரூ.130-க்கு ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது.

    தற்போது காலிப்பிளவர் வரத்து குறைவு காரணமாக ஒரு பை காலிப்பிளவர் ரூ.250-க்கு மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்வதால் மலைப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    ×