search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Diwali"

    • நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
    • சுப்ரீம் கோர்ட் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் அனுமதி வழங்கியுள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்து மதத்தினரின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி கருதப்படுகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    தீபாவளி நாளில் காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

    இந்நிலையில், சிறுவர் முதல் பெரியவர் வரை புத்தாடை அணிந்து, கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர். அதன்பின், இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும், வாழ்த்துக்களைப் பரிமாறியும் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.

    புதுமணத் தம்பதிகள் பெரியவர்களிடம் ஆசி பெற்று, தலைதீபாவளியை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.

    • அயோத்தியில் 22.23 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டது.
    • தீபத் திருவிழாவில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    லக்னோ:

    உத்தர பிரதேச முதல் மந்திரியாக யோகி ஆதித்யநாத் கடந்த 2017-ல் பதவியேற்றதும் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் 'தீபோத்சவ்' எனப்படும் தீபத் திருவிழாவை அறிவித்தார். அந்த ஆண்டு, அயோத்தி நகரின் சரயு நதிக்கரையில் 51,000 அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன.

    தொடர்ந்து 2019-ம் ஆண்டு 4.10 லட்சம் விளக்குகள், 2020-ம் ஆண்டு 9 லட்சத்துக்கும் அதிகமான விளக்குகள் ஏற்றப்பட்டன.

    கடந்த 2022-ம் ஆண்டு அயோத்தியில் 15 லட்சத்திற்கும் அதிகமான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாளான நேற்று அயோத்தியில் 22.23 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டது. இந்த தீபத் திருவிழாவில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு அகல் விளக்குகளை ஏற்றி வைத்தனர்.

    இதற்கான கின்னஸ் சாதனை சான்றிதழ் முதல் மந்திரி யோகி ஆதித்ய்நாத்திடம் வழங்கப்பட்டது.

    • தீபாவளியை கொண்டாட பிற மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் செல்லக்கூடிய மக்கள் நேற்று முதலே ரெயில், பேருந்துகளில் புறப்பட தொடங்கியுள்ளனர்.
    • ஆளுநர் ஆர்.என் ரவி தமிழில் வாழ்த்துச் செய்தி கூறும் அந்த வீடியோ ராஜ் பவனின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக தமிழகத்தில் தலைநகர் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் செல்லக்கூடிய மக்கள் நேற்று முதலே ரெயில், பேருந்துகளில் புறப்பட தொடங்கியுள்ளனர்.

    இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி தமிழில் பேசி வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

    ஆளுநர் ஆர்.என் ரவி தமிழில் வாழ்த்துச் செய்தி கூறும் அந்த வீடியோ ராஜ் பவனின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    • சென்ட்ரலில் இருந்து 7 லட்சம் பேர் பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களுக்கு பயணம்.
    • வியாழன், வெள்ளி மற்றும் இன்று காலை வரை மொத்தம் 12 லட்சம் பேர் பயணம்.

    தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து ரெயிலில் 12 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

    சென்னை சென்ட்ரலில் இருந்து 7 லட்சம் பேர் பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களுக்கு பயணம் செய்துள்ளனர்.

    இதேபோல், எழும்பூரில் இருந்து 5 லட்சம் பேர் தென் மாவட்டங்களுக்கு ரெயிலில் பயணம் செய்துள்ளதாக ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

    வியாழன், வெள்ளி மற்றும் இன்று காலை வரை மொத்தம் 12 லட்சம் பேர் சென்னையில் இருந்து ரெயில்களில் பயணம் செய்துள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • முக்கிய நகரப் பகுதிகளில் நேற்று முதல் வறண்ட கால நிலை நிலவ தொடங்கியது.
    • தென்மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை வறண்ட வானிலை காணப்படும்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படும் நிலையில் அன்று சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை. வறண்ட வானிலை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தாலும் தீபாவளி தினத்தில் மழை இருக்காது என தனியார் கணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். முக்கிய நகரப் பகுதிகளில் நேற்று முதல் வறண்ட கால நிலை நிலவ தொடங்கியது.

    தென்மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை வறண்ட வானிலை காணப்படும். 14-ந்தேதி மீண்டும் மழை பெய்யக்கூடும் என்று வானிலை பதிவர் பிரதீப்ஜான் கூறினார்.

    • தீபாவளி சீட்டு மற்றும் தங்க நகை திட்டங்களை அறிவித்து மோசடி செய்து ஏமாற்றிய உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.
    • கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களையும் அவர்களது செல்போன் எண்களை வைத்து தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி மற்றும் அம்மாபேட்டை சிங்கமெத்தை பகுதியில் வீராணம் அருகே உள்ள வலசையூர் பகுதியை சேர்ந்த ஒருவர் நகை கடை நடத்தி வருகிறார்.

    இந்த கடையில் தீபாவளி சீட்டு நடத்தியும், மேலும்தங்க நகை சேமிப்பு திட்டம் மற்றும் தங்க நகை முதலீடு போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வாடிக்கையாளர்களிடம் லட்சகணக்கில் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கடை உரிமையாளர் திடீரென தலைமறைவானார். உரிமையாளர் கடையை திறக்க வராததால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சம்பளம் வரும் என எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில் ஏமாற்றம் அடைந்ததால் இதுகுறித்து நேற்று மாலை அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தனர்.

    இதனிடையே சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள கடை பூட்டிய நிலையில் இருப்பதால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் கடை முன்பு இன்று காலை முதலே திரண்டனர். பின்னர் தீபாவளி சீட்டு மற்றும் தங்க நகை திட்டங்களை அறிவித்து மோசடி செய்து ஏமாற்றிய உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர். சிலர் கடை மீது கல்வீசி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    இதையடுத்து அன்னதானப்பட்டி போலீசார் அங்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு வரும் வாடிக்கையாளர்களையும் அவர்கள் சமரசப்படுத்தி வருகிறார்கள்.

    கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களையும் அவர்களது செல்போன் எண்களை வைத்து தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த கடையின் உரிமையாளர் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கவர்ச்சி திட்டங்கள் மூலம் பல கோடி வசூல் செய்து பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திலும் முதலீட்டாளர்கள் புகார் தெரிவித்து உள்ளதால் போலீசார் சபரிசங்கரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • நெல்லையில் புத்தாடைகள், பட்டாசுகள் வாங்குவதற்காக கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
    • டவுன் ரதவீதிகளில் வாகனங்கள் செல்வதற்கு வழி இல்லாமல் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    நெல்லை:

    தீபாவளி பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொதுவாக தீபாவளி தினத்தன்று அதிகாலையிலே அனைவரும் எழுந்து எண்ணை தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்த பின்னர் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி மகிழ்வார்கள். பின்னர் வீடுகளில் பாரம்பரிய பலகாரங்கள் செய்து குடும்பத்துடன் சாப்பிடுவார்கள்

    இதனால் நெல்லையில் புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் வாங்குவதற்காக கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகளிலும் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இன்று தீபாவளிக்கான இறுதி நாள் விற்பனை என்பதால் நெல்லையில் தீபாவளி பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    டவுன் ரதவீதிகளில் வாகனங்கள் செல்வதற்கு வழி இல்லாமல் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக வடக்கு ரதவீதியில் உள்ள ஜவுளிகடைகளில் புத்தாடைகள் வாங்க பெரும்பாலானோர் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். மேலும் அங்கு சாலையின் இருபுறமும் உள்ள பிளாட்பார கடைகளில் பொதுமக்கள் ஆடைகள் எடுப்பதற்கு அதிக அளவில் குவிந்து வருகின்றனர். இதனால் வாகன போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது. வண்ணார்பேட்டையிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. பிரதான சாலைகளில் நீண்ட வரிசைகளில் வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்கின்றன. நெல்லை சந்திப்பில் இருந்து வண்ணார்பேட்டைக்கு வாகனங்களில் செல்வதற்கு சுமார் அரை மணி நேரமாகிறது.

    இதேபோன்று பாளை சமாதானபுரம் உள்ளிட்ட இடங்களிலும், மார்க்கெட் பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அங்கு பாரம்பரிய பலகாரங்கள் தயாரித்து விற்பனை செய்யும் கடைகளில் பொதுமக்கள் சென்று சீடை, முறுக்கு, அதிரசம், முந்திரி கொத்து உள்ளிட்ட பலகாரங்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதுதவிர வீட்டு உபயோக பொருட்களான டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மிஷன் உள்ளிட்டவைகள் வாங்குவதற்கும் பாளை முருகன்குறிச்சி பகுதியில் உள்ள கடைகளில் பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இதனால் வண்ணார்பேட்டை சாலையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    இதற்கிடையே கூட்ட நெரிசலில் நகை, பணம் திருடு போவதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஸ்வரி உத்தரவின்பேரில், துணை கமிஷனர்கள் ஆதார்ஷ் பசேரா, அனிதா, சரவணகுமார் ஆகியோரின் மேற்பார்வையில், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகரில் 600 போலீசார் மற்றும் பட்டாலியன் போலீசார், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 1,000 போலீசாரும், வள்ளியூர், களக்காடு, அம்பை, திசையன்விளை உள்ளிட்ட புறநகர் மாவட்ட பகுதிகளில் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில் 1,500 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நெல்லை டவுன் ரதவீதிகள், வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பா லம், முருகன்குறிச்சி சாலை, சமாதானபுரம் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் ரோந்து ஜீப்புகள், மோட்டார் சைக்கிள்களிலும் போலீசார் ரோந்து சென்று வருகின்றனர். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான டவுன் ரதவீதி, வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலம் ஆகிய இடங்களில் தற்காலிக உயர்கோபுரம் அமைத்து, அதில் இருந்து போலீசார் பைனாகுலர் மூலம் கண்காணித்து வருகிறார்கள்.

    டவுன் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு காமிராக்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பழைய குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணும் நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட காமிராக்களும் அமைக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகையை யொட்டி கடந்த சில நாட்களாக இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் மூலம் வெளியூர்களில் இருந்து ஏராள மானவர்கள் நெல்லைக்கு வந்தனர். இன்று காலையிலும் ஏராளமான பயணிகள் குடும்ப த்தினருடன் வந்திறங்கினர். அவர்களுக்கு விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ரெயில்க ளில் பட்டாசு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், ரெயில்வே போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதேபோன்று சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த சிறப்பு பஸ்கள் மூலமாக ஏராளமானவர்கள் நெல்லை புதிய பஸ் நிலையத்துக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தூத்துக்குடி, தென்காசி, பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், ராதாபுரம், திசையன்விளை உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. சிலர் வாடகை கார், ஆட்டோ போன்றவற்றிலும் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதேபோன்று தென்காசி, ஆலங்குளம், சங்கரன்கோவில், பாவூர்சத்திரத்திலும் தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது.

    • நெல்லையில் வியாபாரிகள் தற்காலிக கடைகளை அமைத்து விற்பனையை தொடங்கியுள்ளனர்.
    • பம்பரம் வெடி, ஒரே பூச்சட்டியில் 5 நிறங்கள் வரும் பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன.

    நெல்லை:

    தீபாவளி பண்டிகைக்கு நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் நெல்லையில் பட்டாசு விற்பனை விறு விறுப்படைந்து ள்ளது.

    தற்காலிக கடைகள்

    தமிழகத்தின் பட்டாசு நகரமான சிவகாசிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே மொத்த வியாபாரிகள் நேரடியாக சென்று பட்டாசுகளை வாங்கி நெல்லைக்கு கொண்டு வந்துள்ளனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தற்காலிக கடைகளை அமைத்து தங்களது விற்பனையை தொடங்கியுள்ளனர். நவீன காலத்தில் நாம் உடுத்தும் உடைகளில் புதுமை இருப்பதைப்போல பட்டாசுகளிலும்  ஆண்டுதோறும் புதுப்புது ரகங்கள் பல்வேறு விலைகளில் கடைகளுக்கு விற்பனைக்கு வந்துள்ளன.

    வழக்கம்போல் இந்த ஆண்டும் மத்தாப்பு, தரைச்சக்கரம், சாட்டை வகைகள், பேன்சி பட்டாசுகள், 28 வாலா முதல் 3,000 வாலா வரையிலான சரவெடிகள், புல்லட், ராக்கெட்டுகள், அணுகுண்டுகள், குருவி வெடி, லட்சுமி வெடி, டபுள் ஷாட், டிரிபிள் ஷாட் உள்ளிட்டவை விற்பனைக்கு வந்துள்ளன.

    புதுரக பட்டாசுகள்

    மேலும் பம்பரம் வெடி, ஒரே பூச்சட்டியில் 5 நிறங்கள் வரும் பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த ஆண்டு கிரிக்கெட் மட்டை-பந்து வெடிகள், லெமன் சோடா வெடிகள், மயில் வெடிகள் ஆகியவை விற்பனைக்கு வந்துள்ளன. இதுதவிர ரூபாய் நோட்டு வெடி விற்பனை செய்யப்படுகிறது. அந்த வெடியை பற்றவைத்த பின் அது வெடிக்கும்போது ரூபாய் நோட்டுகள் சிதறுவது போல் தயாரிக்கப்பட்டு ள்ளது.

    இந்த ஆண்டு புதிய வரவாக ஆங்கில சேனல்களின் பெயர்களில் குழந்தைகளுக்கான வெடிகள் வந்துள்ளன. சோட்டா பீம், காளியா, லாலிபாப் மிட்டாய் போன்ற வெடிகளின் வரவால் குழந்தைகள் குதூகலத்துடன் வாங்கி செல்கின்றனர்.

    நெல்லை மாநகரில் டவுன் பகுதியில் தொடங்கி பெரும்பாலான இடங்களில் சாலையோர கடைகளும் போடப்பட்டுள்ளன. டவுன், பேட்டை, வண்ணார்பே ட்டை, சந்திப்பு, பாளை, சமாதான புரம் பெருமாள்புரம், என்.ஜி.ஓ. காலனி, புதிய பஸ் நிலையம் பகுதிகளிலும் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரிகள் பட்டாசு விற்பனையை தொடங்கி யுள்ளனர். நாளை தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு விற்பனை விறுவிறுப்ப டைந்துள்ளது.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பெரும்பாலான பட்டாசுகளின் விலை 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகவும், ஆனாலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் அதிக அளவில் வாங்கி செல்வதாகவும் வியாபாரிகள் தெரிவி க்கின்றனர். இதுகுறித்து டவுன் பகுதியை சேர்ந்த பட்டாசு வியாபாரி ஒருவா் கூறியதாவது:-

    காகிதம், அலுமினிய பவுடா் போன்ற மூலப் பொருள்கள் விலையேற்றம், போக்குவரத்து செலவு அதிகரிப்பு ஆகியவற்றால் பட்டாசுகளின் விலை கணிசமாக உயா்ந்துள்ளது. பட்டாசு ரகங்களில் பாக்ஸ்கள் அதிகம் விற்பனையாகின்றன. ரூ. 250, 350, 500, 1,000, 1,500 என பல்வேறு விலைகளில் பாக்ஸ்கள் உள்ளன. பல வண்ண ஒளிதரும் பட்டாசுகளை மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனா்.

    வானில் பல்வேறு வண்ணங்களில் வெடித்து சிதறும் புதிய ரக வானவெடி தொகுப்புகள் ரூ. 1,000 முதல் ரூ. 15,000 வரையிலான விலைகளில் கிடைக்கின்றன. 10 முதல் 30 நிமிடங்கள் வரை தொடா்ச்சியாக ஒளி தரும் பட்டாசுகளை இளம் வயதினர் விரும்பி வாங்கிச் செல்கின்றனா். சில வெடிகள் அரை மணி நேரம் வெடிக்கும் வகையிலும் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட இறைவனின் அருள் கிடைக்கட்டும்.
    • மக்களுக்கு மகிழ்ச்சி மீண்டும் கிடைக்க வேண்டும் என்றால், சமூகத் தீமைகள் அனைத்தும் விலக வேண்டும்; நன்மை ஒளி மாநிலம் முழுவதும் பரவ வேண்டும்.

    சென்னை:

    நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:-

    தீபாவளி திருநாள் நாட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்வையும் சகோதரத்துவத்தையும் பலப்படுத்துகிறது. சாதி மத பேதங்களைக் கடந்து கொண்டாடப்படும் இந்த தீபாவளித் திருநாள் அனைவரது வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டுவர வாழ்த்துகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் 'சுய சார்பு இந்தியா' கொள்கையை பின்பற்றி தீபாவளியைக் கொண்டாடுவோம். இந்திய கலைஞர்கள் உற்பத்தி செய்த பரிசு பொருட்களை வாங்கி பிறருக்கு கொடுத்து, நம் நாட்டு நெசவாளர்கள் தயாரித்த உடைகளை உடுத்தி தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம். இந்த தீபாவளி கொண்டாட்டம் பாரத தேசத்தை பொருளாதார ரீதியில் உயர்த்துவதாக இருக்கட்டும்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-

    மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரன் எனும் அரக்கனை திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள், இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர் விட்டு பிரகாசிக்கும் தினமாகவும் மக்களால் கருதப்படுகிறது.

    தீபாவளித் திருநாளில் மக்கள் அதிகாலை எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, தங்கள் இல்லங்களில் தீபங்களை ஏற்றி, வளமான வாழ்விற்கு இறைவனை வழிபட்டு, உற்றார் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி, விருந்துண்டு, பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.

    தித்திக்கும் இந்த தீபாவளித் திருநாளில், துன்பங்கள் நீங்கி என்றும் இன்பங்கள் மலரும் தீப ஒளியாக இந்த தீபாவளி அமையட்டும்; மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட இறைவனின் அருள் கிடைக்கட்டும்; இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றும் நிலைக்கட்டும். மக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட வேண்டும் என்று மனதார வாழ்த்தி, அனைவருக்கும் எம்.ஜி.ஆர். , அம்மா ஆகியோரது நல்வழியில், இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு உரித்தாக்கிக்கொள்கிறேன்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-

    பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடுங்கள். வழக்கம்போல் மற்ற மதத்தவரோடு வாழ்த்துகளையும் இனிப்புகளையும் பகிர்ந்து கொள்வோம். வெறுப்புணர்வு வளர்த்தெடுக்கப்பட்டுள்ள சூழலில் இந்த தீபாவளி பண்டிகையை மத நல்லிணக்கத்தின் அடையாளமாகக் கொள்வோம். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:-

    தீபாவளி பண்டிகை நாளில் அனைவரும் நல்ல உடல் நலத்தோடு வாழவும், வாழ்வில் துன்பம் விலகி, இன்பம் பெருகவும், செல்வம் செழித்து எல்லோரது இல்லத்திலும், உள்ளத்திலும் மகிழ்ச்சி பெருகவும், அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    மக்களுக்கு மகிழ்ச்சி மீண்டும் கிடைக்க வேண்டும் என்றால், சமூகத் தீமைகள் அனைத்தும் விலக வேண்டும்; நன்மை ஒளி மாநிலம் முழுவதும் பரவ வேண்டும். அதற்கு கல்வியும், வேலைவாய்ப்பும் கட்டாயமாகும். கல்வி, வேலைவாய்ப்பு மட்டுமின்றி, சமூக நீதி, அமைதி, வளம், வளர்ச்சி, ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவம், பன்முகத்தன்மை உள்ளிட்டவை பெருகவும், மக்களின் வாழ்வில் இல்லாமை இருள் விலகி இன்ப ஒளி நிறையவும் தீப ஒளி வகை செய்யட்டும் என்று வாழ்த்துகிறேன்.

    பா.ம.க. தலைவர் டாகடர் அன்புமணி ராமதாஸ்:-

    நாட்டிலும், வீட்டிலும் இருளை நீக்கி, ஒளியை நிறைக்கும் தீபஒளித் திருநாள் இனிவரும் ஆண்டுகள் அனைத்தும் மகிழ்ச்சியையும், வளர்ச்சியையும் மட்டுமே வழங்க வேண்டும். அதற்கு தமிழகத்தில் உழவும், தொழிலும் சிறக்க வேண்டும். தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் முன்னேற வேண்டும். மக்களிடையே அன்பு, நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர வேண்டும்; போட்டி, பொறாமை, பகைமை, வெறுப்பு போன்றவை விலக வேண்டும் என்று கூறி தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்:-

    நாட்டு மக்களை பெருந்துன்பத்திற்குள்ளாக்கிய நரகாசூரன் எனும் அரக்கனை திருமால் அழித்த இந்த தினமே தீபாவளிப் பண்டிகையாக அனைவராலும் கொண்டாடப்படுகிறது. அதர்மம் என்றைக்கும் நிலைத்ததில்லை என்பதை உணர்த்தி, தீமைகள் எனும் இருளை விலக்கி, நன்மை எனும் வெளிச்சத்தை பரப்பும் இத்திருநாளில் அனைவரிடத்திலும் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிறைந்து அன்பு தழைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

    புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்:-

    நம்நாடு இன்றைக்கு உலகின் வல்லரசு நாடுகளுக்கு இணையாக வல்லரசு நாடாக வளர்ந்து வருகிறது. விஞ்ஞானம், மருத்துவம், வேளாண்மை, அறிவியல் தொழில்நுட்பம், கணினி தொழில்நுட்பம் என்று அனைத்து துறைகளிலும் நம்நாடு அபரிமிதமான வளர்ச்சி அடைந்து உள்ளது. நாட்டினை சூழ்ந்துள்ள தீமைகளை நாம் அனைவரும் ஒன்றுபட்டு வெல்வோம் என்று சபதம் ஏற்போம். நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:-

    தீபாவளி திருநாளில் அனைவரும் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து தீபாவளி திருநாளை கொண்டாடி மகிழ்வார்கள். தீபஒளி ஏற்றி இஷ்ட தெய்வங்களை வணங்கி அனைவரும் புத்தாடைகள் அணிந்து புதுப்பொலிவுடன் தீபாவளி திருநாளை கொண்டாடி மகிழ வாழ்த்துகிறேன்.

    தொழில் அதிபர் டாக்டர் வி.ஜி.சந்தோசம்:-

    தீபாவளி நன்நாளில் பரஸ்பர நல்லுறவுடன் ஏழை, எளியோர்க்கு உதவிகள் செய்து, நண்பர்கள் உறவினர்கள் இடையே இனிப்புகள், பரிசுகள் வழங்கி நம் இதய அன்பைப் பகிர்ந்து கொள்வோம். இந்த இன்பத் திருநாளில் நாம் எல்லோரும் ஒற்றுமையுடன் நல்லுறவுடன் ஒருமைப்பாட்டைக் காத்து வாழவேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கின்றேன். அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்:-

    அனைவரின் வாழ்க்கையிலும் இருளும், துன்பமும் நீங்கி மத்தாப்பு போல வெளிச்சமும், மகிழ்ச்சியும் கிடைத்திட தீபாவளி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

    சாதி, மத, இன, மொழி, பேதங்கள் கடந்து, இந்திய மக்கள் மனதில் சமத்துவம் என்னும் புனித எண்ணம் தழைத்தோங்கட்டும். எளியவர்க்கான தேவையும், உழைப்புக்கேற்ற ஊதியமும், உரிமையும் கிடைக்கப்பெற்று, எல்லாரும் எல்லாமும் பெறும் நிலைக்கு உயர உறுதியுடன் ஒன்றிணைந்து செயலாற்றுவோம். உலகெங்கும் வாழும் இந்திய மக்களுக்கு இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன்:-

    ஏழை, எளியவர்கள், தொழிலாளர்கள் பிற்படுத்தப்பட்டவர்களை சூழ்ந்திருக்கும் கொடிய துன்பங்கள், வறுமைகள் என்கிற நரகாசுரனை வீழ்த்தி அனைவரது வாழ்விலும் தீபாவளி திருநாளில் தீபமாக ஒளி ஏற்றுவோம்.

    சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் விதமாகவும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை வாங்கி, அரசு அறிவுறுத்தல் படி விபத்தில்லா தீபாவளியாக கொண்டாடுவோம். தீபாவளி திருநாள் காணும் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்.

    தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் நாசே ராமச்சந்திரன்:-

    உங்கள் வாழ்க்கையில் துன்பங்கள் கரைந்து இன்பங்கள் மலர்ந்து ஒளிமயமான எதிர்காலம் அமைந்து உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்க.... அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் சங்க அகில இந்திய தலைவர் வி.என்.கண்ணன்:-

    தீப ஒளியினை போல் தமிழக மக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலாளர்கள் கட்டுமான தொழிலாளர்கள் வாழ்க்கை பிரகாசமாக மேம்பட எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும் காங்கிரஸ் எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், விஜயகுமார் என்ற விஜய் வசந்த், திரிணாமுல் காங்கிரஸ் தமிழக பொருளாளர் மு.மாரியப்பன், இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடென்ட் அபு பக்கர், தமிழக சமாஜ்வாதி கட்சி தலைவர் லோகநாதன் யாதவ், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் மாநில தலைவர் டாக்டர் மணி அரசன், தேசிய தலைவர் பா.இசக்கிமுத்து, ஆகியோர் தீபாவளி வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பட்டாசு புகையால் 4 விதமான அலர்ஜி வரலாம்.
    • பொதுவாக எலுமிச்சை, தக்காளி ஆகியவற்றை முகத்தில் தேய்க்கும் பழக்கம் பலரிடம் உள்ளது.

    சென்னை:

    தீபாவளி வந்தாச்சு. இன்று இரவு முதல் நாளை இரவு வரை பட்டாசு வெடித்து மகிழ்வார்கள். அதே நேரம் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது முக்கியம்.

    மருத்துவ ரீதியாக என்ன மாதிரி பிரச்சனைகள் வரலாம்? அதில் இருந்து தப்பிக்க கையாள வேண்டிய வழிமுறைகள் என்ன? என்பது பற்றி பிரபல ஊட்டச்சத்து நிபுணரான நடிகர் சத்யராஜின் மகள் டாக்டர் திவ்யா சத்யராஜ் கூறியதாவது:-

    தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும். அதே நேரம் பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் ஆபத்துக்களில் இருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பட்டாசு புகையால் 4 விதமான அலர்ஜி வரலாம். இருமல், தும்மல், கண், சருமம் ஆகிய அலர்ஜியை சிலர் சந்திக்கலாம்.

    இந்த மாதிரி அலர்ஜி வந்தால் உணவு வகைகளில் தக்காளி, கத்தரிக்காய், ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, மீன், இறால், கோழிக்கறி, செயற்கை பொடி வகை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். கண்ணில் வரும் அலர்ஜியை தவிர்க்க குளிர்ந்த தண்ணீரில் கண்களை கழுவ வேண்டும். அழகு நிலையங்களுக்கு சென்று சரும பராமரிப்பு, மேக்-அப் போடுவதை தவிர்க்க வேண்டும். பொதுவாக எலுமிச்சை, தக்காளி ஆகியவற்றை முகத்தில் தேய்க்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. அது தவறு. எலுமிச்சையை முகத்தில் தேய்ப்பதால் தோல் உரியும். அரிப்பை ஏற்படுத்தும். இயற்கையான பொருள் தானே என்று கருதக் கூடாது. கிச்சன் பொருட்களை சமையலுக்கும், சாப்பிடுவதற்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    அலர்ஜி ஏற்பட்டால் 10 நாட்கள் முதல் 2 வாரங்கள் வரை இருக்கலாம். அதன் பிறகு சரியாகி விடும். மருத்துவர்களை அணுகி அலர்ஜி எதிர்ப்பு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். அந்த மாதிரி எடுத்துக் கொள்பவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் அது உதடு, நாவை வற்ற வைக்கும். பட்டாசு புகைகளில் இருந்து அலர்ஜி எதுவும் அண்டாமல் இருக்க வாய், மூக்கு பகுதிகளை மறைக்கும்படி முக கவசம், கண்களில் கண்ணாடி அணிந்து கொண்டு பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசு வெடித்த பிறகு கை மற்றும் முகத்தை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருச்சிராப்பள்ளி சாசன தலைவர் முகமதுஷபி தலைமையில் "மகிழ்ஒளி" தீபாவளி விழா நடை பெற்றது.
    • இறுதியாக அருவி முதியோர் இல்லத்தின் நிர்வாகி சையத் தாஹா நன்றி கூறினார்.

    திருச்சி

    திருச்சிராப்பள்ளி சாசன தலைவர் முகமதுஷபி தலைமையில் "மகிழ்ஒளி" தீபாவளி விழா நடை பெற்றது.

    324 எப் மாவட்ட அவை இணை செயலாளர் ஆனந்த கிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி சேவை திட்டத்தை தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்ட நூலக வாசகர் வட்டம் தலைவர் தமிழ் செம்மல் கவிஞர் கோவிந்தசாமி, தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் குடிமக்கள் பாதுகாப்பு இயக்கம் தலைவர் கோவிந்தராஜ், உதவும் கரங்கள் அறக்கட்டளை மாநில தலைவி உஷா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தி, சேவை திட்டங்கள் வழங்கினார்கள்.

    விழாவில் செயலாளர் பிரசன்ன வெங்கடே ஷன்,பொருளாளர் ரெங்கராஜன், சேவை திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன், சங்கத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் பிளட்சாம், இணைசெயலாளர் கரண்லூயிஸ், உறுப்பினர் வளர்ச்சி தலைவர் கார்த்திக், தலைமை பண்பு ஒருங்கி ணைப்பாளர் சரவணன், இணை செயலாளர் அப்துல் அஜிஸ், சாசன உறுப்பினர்கள் சோனா, பிரசன்னா, ஹோமலதா, ராஜூ ஜோசப், மகேஸ்வரி மற்றும் நண்பர்கள் முதியோர் இல்லத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியாக அருவி முதியோர் இல்லத்தின் நிர்வாகி சையத் தாஹா நன்றி கூறினார்.

    • டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்திலும் தீபாவளி கொண்டாட்டங்கள் விமர்சையாக நடைபெற்றது.
    • வீடியோ வலைதளங்களில் வைரலாகி பயனர்களை கவர்ந்து வருகிறது.

    தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகை இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்திலும் தீபாவளி கொண்டாட்டங்கள் விமர்சையாக நடைபெற்றது. இதில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்ஷெட்டி கலந்து கொண்டு நடனமாடிய காட்சிகள் இணையத்தி வைரலாகி வருகிறது.

    அதில், ஊதா நிற குர்தா அணிந்த எரிக் கார்ஷெட்டி 1998-ம் ஆண்டு வெளியான ஷாருக்கானின் தில்சே படத்தில் இடம்பெற்ற 'சையா சையா' பாடலுக்கு நடனமாடி அசத்தி உள்ளார். இந்த வீடியோ வலைதளங்களில் வைரலாகி பயனர்களை கவர்ந்து வருகிறது.

    ×