search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dharmapuri"

    தர்மபுரி மண்டலத்தில் இருந்து 8 புதிய அரசு பஸ்களின் இயக்கத்தை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    தர்மபுரி:

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகத்தின் தர்மபுரி மண்டலம் சார்பில் 8 புதிய பஸ்கள் இயக்க தொடக்க விழா தர்மபுரி புறநகர் பஸ்நிலையத்தில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் சிவனருள், அரசு போக்குவரத்துக்கழக மண்டல துணைமேலாளர்கள் சின்னசாமி, ஜெயபால், சிவமணி, அரவிந்தன், ராஜராஜன், கோட்டமேலாளர்கள் மோகன்குமார், ஹர்சத்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு புதிய பஸ்களின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்்கி வைத்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக அரசின் சார்பில் பொதுமக்களின் வசதிக்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட புதிய அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்து கழக தர்மபுரி மண்டலத்திற்கு 8 புதிய பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தர்மபுரியில் இருந்து சென்னைக்கு 2 புதிய அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதேபோன்று அரூர்-பெங்களூரு இடையே ஒரு பஸ்சும், திருவண்ணாமலை- பெங்களூரு இடையே ஒரு பஸ்சும், திருப்பத்தூர்-பெங்களூரு இடையே 1 பஸ்சும், கரூர்- பெங்களூரு இடையே 3 புதிய பஸ்களும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படுகின்றன. இந்த புதிய பஸ்களை பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    இந்தநிகழ்ச்சியில் முன்னாள் நகராட்சி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், முன்னாள் மாவட்ட ஊராட்சித்தலைவர் டி.ஆர்.அன்பழகன், தர்மபுரி நகராட்சி ஆணையர் கிருஷ்ணகுமார், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்னாள் தலைவர் கே.வி.அரங்கநாதன், அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க மண்டல பொதுச்செயலாளர் பரமசிவம், கூட்டுறவு சங்க தலைவர்கள் கோவிந்தசாமி, சிவப்பிரகாசம், பழனிசாமி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். 
    தர்மபுரியில் பஸ் எரிக்கப்பட்டு 3 மாணவிகள் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வரும் அதிமுக நிர்வாகிகள் மூவர் 18 ஆண்டுகளாக சிறையில் உள்ளதால், அவர்களை விடுவிக்க தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.
    சென்னை:

    தமிழக அரசு எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி நீண்டகாலம் ஆயுள் தண்டனை அனுபவித்த கைதிகளை விடுதலை செய்து வருகிறது. அந்தந்த ஜெயில்களில் இருக்கும் கைதிகள் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் அடுத்த கட்டமாக தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அ.தி.மு.க.வினர் 3 பேர் விடுதலையாகிறார்கள். கடந்த 2000-ம் ஆண்டில் தர்மபுரியில் நடந்த பஸ் எரிப்பில் கோகிலவாணி, காயத்திரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் 
    பலியானார்கள்.

    இதுதொடர்பாக தர்மபுரி அ.தி.மு.க. நிர்வாகிகள் நெடுஞ்செழியன், மது, முனியப்பன் ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. இதை எதிர்த்து 3 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர்.

    மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 3 பேரது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது. இவர்கள் மூவரும் வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

    அவர்கள் 18 ஆண்டுகாலம் தண்டனை அனுபவித்து விட்டதால் அவர்களை விடுதலை செய்யலாமா என்பது குறித்து சிறைத்துறை யுடன் தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப் பட்டதால் அவர்களுக்கு அரசு உத்தரவு பொருந்துமா? குடும்பத்தினர் ஏதும் ஆட்சே பனை தெரிவிக்கிறார்களா? 3 பேரின் மனநிலை என்ன? என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    இதேபோல் 1996-ம் ஆண்டு சிதம்பரம், அண்ணா மலை பல்கலைக் கழக மாணவரும் துணைவேந்தர் பொன்னுசாமியின் மகனுமான நாவரசு கொலை செய்யப்பட்டார். அவரது உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸ்களில் அடைத்து பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது கண்டுபிடிக் கப்பட்டது.

    இதுதொடர்பாக அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் அவருடன் படித்த மாணவரான ஜான்டேவிட் கைது செய்யப்பட்டார். அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். 20 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வருவதால் இவரையும் விடுதலை செய்வது குறித்து சிறைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்து வருகிறது.
    தர்மபுரி அருகே குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயால் புகை மூட்டத்தால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
    தர்மபுரி:

    தர்மபுரி நகராட்சி பகுதியில் சேரும் குப்பைகளை கொட்டுவதற்கான கிடங்கு தடங்கம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிடங்கிற்கு தர்மபுரி நகராட்சியின் பல்வேறு பகுதியில் சேரும் குப்பைகள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு கொட்டப்படுகின்றன. இந்த நிலையில் இந்த குப்பை கிடங்கில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளில் திடீரென தீப்பிடித்தது.

    இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று குழாய்களில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். குப்பைகளில் பற்றி தீயால் உருவான கரும்புகை மூட்டம் தீ அணைக்கப்பட்ட பின்னரும் குப்பைகளில் இருந்து தொடர்ந்து வெளியேறியது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

    இதுதொடர்பாக பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், குப்பை கிடங்கில் கொட்டப்படும் குப்பைகளில் அடிக்கடி தீப்பிடித்து கரும்புகை வெளியேறுவதால் இந்த பகுதியில் காற்று மாசு அடைகிறது. இத்தகைய சமயங்களில் சுவாச பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வு காண குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் மறுசுழற்சி செய்வதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். 
    தருமபுரி மாவட்டம் தோக்கம்பட்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த 2 வருடமாக 2 மாணவர்கள், தலைமை ஆசிரியருடன் பள்ளி இயங்கி வருகிறது.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் தடங்கம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட தோக்கம்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.

    இந்த பள்ளி 1952-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சுற்று வட்டார பகுதியான இந்திரா நகர், கற்கஞ்சிபுரம், அதியமான நகர், பெருமாள் கோவில் மேடு, தோக்கம்பட்டி ஆகிய 5 பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் இதுவரை 1264 பேர் பள்ளியில் படித்துள்ளனர். இந்த பள்ளியில் படித்த நிறைய மாணவர்கள் அரசு வேலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    பல அரசு அதிகாரிகளை உருவாக்கிய இந்த சிறப்பு வாய்ந்த பள்ளி கடந்த 4 வருடமாக 4 மாணவர்களும், 3 ஆசிரியர்களுடன் இயங்கி வந்தது. தற்போது கடந்த 2 வருடமாக 2 மாணவர்கள், ஒரு தலைமை ஆசிரியருடன் பள்ளி இயங்கி வருகிறது. தலைமை ஆசிரியரே வகுப்பு ஆசிரியராகவும் இருந்து வருகிறார்.

    மாணவர்களே இல்லாமல் கடந்த 2 வருடமாக 2 மாணவர்களுடனே செயல்பட்டு வருவதற்கு காரணம் மாவட்ட நிர்வாகம் தான் என்று அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

    அரசு பள்ளியை படத்தில் காணலாம்.

    இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    அனைத்து பகுதியை சேர்ந்த மாணவ- மாணவிகள் இந்த தொடக்கப்பள்ளியில் தான் படித்து வந்தனர். தடங்கத்தில் புதியதாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டதால் நிறைய மாணவர்கள் அந்த பள்ளிக்கு சென்றுவிட்டனர்.

    இந்த பள்ளி பழைய கட்டிடத்தில் இயங்குவதாலும், தரம் உயர்த்தப்படாமல் தொடக்கப் பள்ளியாகவே இருப்பதாலும் பெற்றோர்கள் மாணவர்களை இந்த பள்ளிக்கு அனுப்ப மறுக்கின்றனர். அதனால் இந்த பள்ளிக்கு மாவட்ட நிர்வாகம் கான்கிரீட் கட்டிடம் அமைத்து தர வேண்டும். மாணவர்களுக்கு விடுதி வசதியுடன் அரசு அமைத்து கொடுத்தால் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு கண்டிப்பாக அனுப்பி வைப்போம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளுமா? #Tamilnews
    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே வீடு புகுந்து 2 பவுன் செயினை மர்மநபர் திருடி சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கூத்தம்பாடியை அடுத்த கே.அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மனைவி ராணி (வயது 48). இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கருப்பண்ணன் இறந்து விட்டார். ராணி கூலிவேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் இரவு தூங்க செல்வதற்கு முன்பு கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை கழட்டி மேசை மீது வைத்து விட்டு தூங்க சென்றார். இன்று காலையில் எழுந்து பார்த்தபோது மேசையின் மீது வைத்திருந்த 2பவுன் நகையை காணவில்லை. மர்ம நபர் யாரோ வீட்டுக்குள் புகுந்து மேசையின் மீதுவைத்திருந்த நகையை திருடி சென்றது தெரியவந்தது.
    இதுகுறித்து பென்னாகரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடிவருகின்றனர். #tamilnews
    தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்பட 5 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு இன்று 4-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    கிருஷ்ணகிரி:

    தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு விநாடிக்கு 800 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    அணையின் முழு உயரத்துக்கும் தண்ணீர் உள்ளதால், அணைக்கு வரும் நீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது.

    கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறக்கப்பட்டு வரும் தண்ணீர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழை நீரையும் சேர்த்து கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1,068 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. புதிய மதகு அமைக்கும் பணிக்காக நேற்று மாலை 4 மணி அளவில் அணையில் 3 முறை அபாய ஒலி எழுப்பப்பட்டு விநாடிக்கு 1,900 கன அடி நீர், 3 சிறிய மதகுகள் வழியாக தென்பெண்ணை ஆற்றிலும் பாசனக் கால்வாய் வழியாகவும் திறக்கப்பட்டது.

    தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு இன்று 4-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக அணையின் உதவி செயற்பொறியாளர் நடராஜன் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி அணையில் தரைபாலம் மூழ்கி விட்டதால், அணைக்குள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தென்பெண்ணை ஆற்றில் நீரின் வேகம் அதிகமாக உள்ளதால், பொதுப்பணித்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர், அணையின் நீர்மட்டம் 34.80 அடியாக உள்ளது.



    தருமபுரி அருகே நடுரோட்டில் கார் கவிழ்ந்த விபத்தில் கோவையை சேர்ந்த வியாபாரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    தருமபுரி:

    கோவை மாவட்டம் சூலூரை அடுத்த மல்லைபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 51). கொத்தமல்லியை மொத்த விற்பனைக்கு வாங்கி சில்லரை விற்பனை செய்து வந்தார்.

    இவர் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சூளகிரி பகுதியில் கொத்தமல்லி வாங்குவதற்காக காரில் வந்தார். நேற்று மாலை மீண்டும் ஊருக்கு திரும்பினார். அப்போது தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் தடங்கம் பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரி திடீரென்று இடதுபக்கத்தில் இருந்து வலது பக்கமாக திரும்பியது.

    இதனால் காரை ஓட்டி வந்த டிரைவர் திடீரென்று பிரேக் போட்டார். அப்போது அங்கு மழை பெய்து கொண்டிருந்ததால் கார் ரோட்டில் நிலைதடுமாறி கவிழ்ந்தது.

    இதில் கணேசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து இருவரையும் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3 மணியளவில் கணேசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தருமபுரி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர். #Tamilnews
    பாலக்கோடு அருகே 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பாலக்கோடு:

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பெரிய கம்மாலப்பட்டியை சேர்ந்த பூபதி. இவரது மகன் விக்னேஷ் (வயது 16). அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தேர்வு முடிவுக்காக காத்திருந்த விக்னேஷ் தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்த விக்னேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வழக்கம்போல் பஸ்கள் ஓடின. பஸ் நிலையத்தில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    தருமபுரி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    தருமபுரி மாவட்டத்தில் பஸ் நிலையம், சின்னசாமி நாயுடு தெரு, ஆறுமுக ஆசாரி தெரு, முகமது அலி கிளப் ரோடு, நேதாஜி பைபாஸ் சாலை, சேலம் மெயின்ரோடு, கிருஷ்ணகிரி மெயின்ரோடு, ஆகிய பகுதிகளில் வழக்கம்போல் ஓட்டல்கள், டீக்கடைகள், துணிக்கடைகள், பழக்கடைகள் உள்பட கடைகள் அடைக்கப்பட்டன.

    ஆனால் தருமபுரி ரூட் மற்றும் டவுன் பஸ் நிலையங்களில் உள்ளே மட்டுமே மருந்து கடைகள், பூக்கடைகள், டீக்கடைகள் உள்பட ஒரு சில கடைகள் மட்டுமே திறந்து இருந்தன.

    மேலும் பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் தருமபுரி மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கு வழக்கம் போல் டவுன் பஸ்களும் இயங்கின. இதேபோன்று தருமபுரியில் இருந்து சேலம், கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களுக்கும், கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஓசூர் ஆகிய பகுதிகளுக்கு வழக்கம் போல் இயங்கின. ஆட்டோக்களும் இயங்கின.

    பஸ் நிலையத்தில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பென்னாகரம், பொம்மிடி, காரிமங்கலம் உள்பட பகுதிகளில் வழக்கம்போல் கடைகள் திறந்திருந்தன. ஆட்டோகளும், பஸ்களும் வழக்கம்போல் இயங்கின.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன. பஸ் நிலையங்களில் வழக்கம்போல் பஸ்கள் ஓடின. ஆட்டோக்களும் வழக்கம்போல் இயக்கப்பட்டன. பஸ் நிலையத்தில் பூக்கடை, ஓட்டல்கள், மருந்து கடை, டீக்கடை உள்பட கடைகள் திறந்திருந்தன. மேலும் பஸ் நிலையத்தில் எந்த அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.

    இதுபோன்று ராயக்கோட்டை, ஓசூர், வேப்பன அள்ளி, தேன்கனிக் கோட்டை, அஞ்செட்டி, தளி பகுதிகளில் வழக்கம்போல் கடைகள் திறந்து இருந்தன. ஒரு சில கடைகள் மட்டும் மூடியிருந்தன.

    தமிழகம் முழுவதும் இன்று எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் தருமரி மாவட்டம் 95.71 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 16-வது இடத்தை பிடித்துள்ளது.
    தருமபுரி:

    தமிழகம் முழுவதும் இன்று எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

    தருமபுரி மாவட்டத்தில் 209 அரசுபள்ளிகள் உள்பட மொத்தம் 308 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் 11 ஆயிரத்து 187 பேரும், மாணவிகள் 10 ஆயிரத்து 545 பேரும் என மொத்தம் 21 ஆயிரத்து 731 பேர் 80 மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர்.

    தருமபுரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் இன்று காலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி வெளியிட்டார்.

    இதில் மாணவர்கள் 10 ஆயிரத்து 652 பேரும், மாணவிகள் 10 ஆயிரத்து 146 பேரும் என மொத்தம் 20 ஆயிரத்து 798 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தருமபுரி மாவட்டத்தில் உள்ள 209 அரசு பள்ளிகளில் இருந்து 14 ஆயிரத்து 785 பேர் தேர்வு எழுதியதில் 13 ஆயிரத்து 932 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இந்த ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதியவர்களில் 95.71 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 94.25 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டைவிட 1.46 சதவீதம் பேர் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் அரசு பள்ளிகளில் தேர்வு எழுதியவர்களில் 94.23 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் கண் தெரியாதவர்கள் 8 மாணவர்கள் எழுதியதில் 7 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். காதுகேளாத, வாய் பேசாத மாணவ, மாணவிகள் 29 பேர் தேர்வு எழுதியதில் 25 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    மாற்றுத்திறனாளிகள் 30 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 26 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுபோன்று கை மற்றும் உடலில் காயம் அடைந்தவர்கள் போன்ற மாணவர்கள் 36 பேர் தேர்வு எழுதியதில் 32 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இந்த தேர்வில் மாவட்டத்தில் 481-க்கு மேல் மதிப்பெண்கள் 393 பேர் பெற்றுள்ளனர். 450-க்கு மேல் மதிப்பெண்கள் 1564 பேர் பெற்றுள்ளனர். 426-க்கு மேல் மதிப்பெண்கள் 1367 பேர் பெற்றுள்ளனர்.

    சென்ற ஆண்டு தேர்ச்சி விகிதத்தில் 20 இடம் பெற்ற தருமபுரி மாவட்டம் இந்த ஆண்டு 16-வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே சுற்றுலாவுக்கு வந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
    பென்னாகரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம், கீழ அம்பிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 30). இவரது மனைவி சோபனா (25). இவர்களது உறவினர்கள் 17 கொண்ட குழுவினர்கள் சுற்றுலா செல்ல முடிவு செய்து நேற்றிரவு ஒகேனக்கலுக்கு புறப்பட்டு சென்றனர். அதே பகுதியை சேர்ந்த வேனை லட்சுமணன் என்பவர் ஓட்டினார்.

    ஒகேனக்கலுக்கு சுற்றுலா வந்த அவர்கள் பல்வேறு இடங்களில் சென்று சுற்றி பார்த்தனர். பின்னர் ஒகேனக்கலில் இருந்து புறப்பட்டு மேட்டூர் அணையை சுற்றி பார்க்க சென்றனர்.

    அப்போது தருமபுரி மாவட்டம், பென்னாகரம்- மேச்சேரி செல்லும் சாலை சின்னம்பள்ளி அருகே உள்ள வளைவு பாதையில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கட்டுபாட்டை இழந்து வேன் சாலையில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே சோபனா பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் உறவினர்களான 16 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.


    உடனே அக்கம் பக்கத்தினர் ஒடி வந்து விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு பெரும்பாலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இது குறித்து தகவல் அறிந்த பெரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தில் பலியான சோபனா உடலை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews

    தர்மபுரி நகரமே அரண்டுபோகும் அளவில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
    தர்மபுரி:

    கோடை வெயில் தற்போது வாட்டி வதைக்கிறது. இதனால் தர்மபுரி நகரமே கடும் வெப்பத்தால் சுட்டெரிக்கப்பட்டு வருகிறது.

    இதனால் ஆங்காங்கே பொது மக்கள் வீடுகளிலே முடங்கி கிடக்கின்றனர். சிலர் வெப்பத்தை தணிக்க குளிர்ச்சியாக இருக்கக்கூடிய சுற்றுலா தளத்தை தேடிச் செல்கின்றனர்.

    இந்நிலையில் தர்மபுரியில் கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் மழை பெய்வது வழக்கமாகியுள்ளது. அவ்வவ்போது இவ்வாறு மழை பெய்வதால் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை காப்பாற்றி கொள்கின்றனர். இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

    நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் தர்மபுரி நகரமே அரண்டுபோகும் அளவில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும், பலத்த மழையின் காரணமாக நகரின் பெரும்பாலான முக்கிய பகுதிகள் நிலை குலைந்து விட்டன.

    அப்பாவு நகரமே அரண்டுபோகும் அளவில் நேற்று பெய்த மழையினால் சாலையோர மரங்கள் பல வீடுகளின் மேல் சரிந்து விழுந்துள்ளன. இதனால் பெரும்பாலானோர் வீட்டின் கீழ் தளத்தில் இருந்ததால் பெரும் விபத்துக்கள் தவிர்க்கப்பட்டன. சில மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்தது. மரத்தின் கிளைகள் முறிந்து சாலையின் நடுவழியில் செங்குத்தாக நின்றபடியாகவும் காணப்பட்டது. சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேல் பெய்த மழைக்கு பின்னர் அப்பாவுநகர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இதனை பெரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

    மேலும், இதுபோன்று இன்றும் பலத்த காற்றுடன் மழைவரும் என முன் எச்சரிக்கையாக பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.  #Tamilnews

    ×