search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dharmapuri"

    தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரே நாளில் நடந்த சோதனையில் ரூ. 3 லட்சத்து 64 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வே.முத்தம்பட்டி பிரிவு சாலையில் சுரேஷ் குமார் தலைமையிலான பறக்கும்படை அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் உரிய ஆவணம் இன்றி 1 லட்சத்து 83 ஆயிரத்து 100 ரூபாய் கொண்டு வந்தது தெரியவந்தது. இது குறித்து காரில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் தர்மபுரி அருகே உள்ள ஜருகு பகுதியை சேர்ந்த பஞ்சாட்சரம் (வயது 39), அவரது நண்பர் அன்பழகன் (40) என்பது தெரியவந்தது. பைனான்ஸ் நடத்தி வரும் பஞ்சாட்சரம் டிராக்டர் வாங்குவதற்காக பணத்தை கொண்டு வந்ததாக கூறினார். ஆனால், உரிய ஆவண் இல்லாததால், அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

    தேர்தல் அறிவித்தவுடன் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்தை தடுக்கும் வகையில் அரூர் தொகுதியில் திப்பம்பட்டி கூட்ரோடு, ஆண்டியூர், அனுமன்தீர்த்தம் ஆகிய இடங்களில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்துடன் பறக்கும் படையும் அமைக்கப்பட்டு சோதனை செய்து வருகின்றனர்.

    நேற்று இருமத்தூர் அருகே பறக்கும் படையை சேர்ந்த நெடுஞ்சாலை துறை அதிகாரி பாஸ்கரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி, நாவலன், ரவிகுமார், ராம்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் மினிடோர் வாகனத்தை சோதனை செய்ததில் சித்தன் கொட்டாயை சேர்ந்த கணேசன் (30) என்பவரிடம் இருந்து கணக்கில் வராத ரூ. 73 ஆயிரத்து 900 பணத்தை பறிமுதல் செய்தனர். இவர் பட்டுகூடு விற்பனை செய்து வருகிறார். பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஆர்.டி.ஒ. புண்ணியகோடியிடம் ஒப்படைக்கப்பட்டது.

    கிருஷ்ணகரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, தளி அருகே கும்மளாபுரம் சோதனை சாவடியில், வாகன சோதனை அலுவலர் குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல், காவலர் அனிதா ஆகியோர் கொண்ட தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது உலிவீரனப் பள்ளி கிராமத்தை சேர்ந்த முனிராஜ் என்ற விவசாயி வந்த காரை சோதனை செய்தனர். அந்த காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 950 பணம் இருப்பதை கண்டறிந்த போலீசார் அதை பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முரளியிடம் ஒப்படைத்தனர்.

    தருமபுரி அருகே டாஸ்மாக் ஊழியர் மனைவியிடம் நூதன முறையில் நகை, பணம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் மேல்எண்டப்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவர் டாஸ்மாக் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி பழனியம்மாள் (வயது42). இவர்கள் 2 பேரும் நேற்று காலை வங்கியில் அடகு வைத்திருந்த 18 பவுன் நகையை மீட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தனர்.

    அப்போது, அவர்கள் மதிகோன்பாளையம் ரவுண்டானா அருகே உள்ள பழக்கடையில் பழங்களை வாங்கி கொண்டிருந்தனர்.

    அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2பேரும் ரூபாய் நோட்டை கீழே போட்டு கணேசனையும், பழனியம்மாளையும் திசை திருப்பிவிட்டு வண்டியில் இருந்த 18 பவுன் நகையையும், ரூ.40 ஆயிரத்தையும் எடுத்து கொண்டு அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை தப்பி சென்றுவிட்டனர்.

    இந்த சம்பவத்தால் கணேசன் அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் சம்பவம் குறித்து தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் 2 மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் கணேசனையும், பழனியம்மாளையும் வங்கியில் இருந்து நோட்டமிட்டு பின்தொடர்ந்து வந்தாக தெரிகிறது.

    பின்னர் அவர்கள் மதிகோன்பாளையம் ரவுண்டானாவில் உள்ள பழக்கடை அருகே 2 பேரையும் நூதன முறையில் ஏமாற்றி நகையையும், பணத்தையும் எடுத்து சென்றது உள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள மதிக்கோன்பாளையம் ரவுண்டானா அருகே நூதன முறையில் பெண்ணிடம் நகை, பணத்தை மோட்டார் சைக்கிளில் வந்து மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் பணிக்கு திரும்பினர் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி தெரிவித்தார். #JactoGeo
    தர்மபுரி:

    9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டத்தை கைவிட்டு பணியில் சேர வேண்டும் அல்லது சேருவதாக தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்தது.

    இதைத்தொடர்ந்து நேற்று தர்மபுரி மாவட்டத்தில் 95 சதவீதத்துக்கு மேல் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர் என்றும், அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்பட்டதாகவும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி தெரிவித்தார்.

    மேலும், தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதால் யார் மீதும் சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 90 சதவீத ஆசிரியர்கள் வேலைக்கு வந்து விட்டதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி கூறினார்.

    இன்று வேலைக்கு வராத ஆசிரியர்கள் மீது சஸ்பெண்டு நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்தார்.  #JactoGeo


    தொடர் மழை காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவிட்டுள்ளார். #HeavyRain
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டத்தில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

    இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என மாவட்ட ஆட்சியர் மலர்விழி அறிவித்துள்ளார். #HeavyRain
    தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த அதிமுக பிரமுகர்கள் 3 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய கவர்னர் ஒப்புதல் அளித்ததையடுத்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். #DharmapuriBusBurning #ADMK #TNGovernor #BanwarilalPurohit
    சென்னை:

    பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு கடந்த 2000ம் ஆண்டு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி புறநகரான இலக்கியம்பட்டியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பஸ் மீது அ.தி.மு.க.வினர் பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்தனர். இதில் ஹேமலதா, காயத்ரி, கோகிலவாணி ஆகிய 3 மாணவிகள் தீயில் கருகி பலியானார்கள். 16 மாணவிகள் காயம் அடைந்தனர்.

    இந்த வழக்கில் அ.தி.மு.க. பிரமுகர்கள் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூன்று பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பனின் மரண தண்டனையை கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் ஆயுள் தண்டனையாக குறைத்தது.

    பின்னர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நீண்ட நாட்களாக சிறையில் உள்ள சுமார் 1800 கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. அந்த கைதிகள் பற்றிய விபரம் மற்றும் அவர்கள் எத்தனை ஆண்டுகளாக சிறையில் உள்ளனர் என்பன போன்ற தகவல்களை திரட்டி கோப்புகளாக தயாரித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு தமிழக அரசு அனுப்பியது.



    தமிழக அரசு அனுப்பிய கைதிகள் விடுதலை பரிந்துரை பட்டியலில் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் சிக்கி ஆயுள் தண்டனை பெற்ற நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றிருந்தன. ஆனால் அவர்கள் 3 பேரையும் முன்னதாகவே விடுதலை செய்ய அனுமதிக்க இயலாது என்று கவர்னர் கூறி விட்டார்.  3 பேரை விடுவிப்பதை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தி, அந்த ஆவணத்தையும் கவர்னர் திருப்பி அனுப்பி விட்டார்.

    அதன்பிறகும் அவர்களை விடுவிக்கும் முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட்டது. இது தொடர்பாக கவர்னருக்கு புதிய ஆவணம் அனுப்பப்பட்டது. அதில், “பஸ் எரிப்பு திட்டமிட்டு நடந்தது அல்ல. உணர்ச்சி வேகத்தில் நடந்து விட்ட ஒன்று” என்று தமிழக அரசு குறிப்பிட்டது. தமிழக அரசின் இந்த புதிய விளக்கத்தை ஏற்றுக்கொண்டுள்ளார் கவர்னர் பன்வாரிலால் புரோகித். அத்துடன், 3 பேரையும் விடுவிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

    இதையடுத்து நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவரும் வேலூர் சிறையில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டனர். #DharmapuriBusBurning #ADMK #TNGovernor #BanwarilalPurohit

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். #KamalHaasan
    கிருஷ்ணகிரி:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நாளை (வெள்ளிக்கிழமை) நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    நாளை மதியம் 3.30 மணிக்கு நல்லம்பள்ளியிலும், 4.30 மணிக்கு பாப்பாரப்பட்டியிலும், 5.30 மணிக்கு பாலக்கோட்டிலும், 6.30 மணிக்கு காரிமங்கலத்திலும், இரவு 7 மணிக்கு பெரியாம்பட்டியிலும் நடைபெறும் கூட்டங்களில் வேனில் நின்றபடி பேசுகிறார்.

    இதைத்தொடர்ந்து நாளை இரவு 8 மணிக்கு தர்மபுரி வள்ளலார் திடலில் நடைபெறும் மக்கள் நீதி மய்யம் பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசுகிறார்.

    நாளை மறுநாள் (10-ந்தேதி) பிற்பகல் 3.30 மணிக்கு அரூர் ரவுண்டானாவிலும், மாலை 4.30 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரவுண்டானாவிலும், மாலை 5 மணிக்கு மத்தூரிலும், 6 மணிக்கு பர்கூரிலும், 6.30 மணிக்கு கிருஷ்ணகிரியிலும் பேசுகிறார். பின்னர் இரவு 7.30 மணிக்கு ராயக்கோட்டையிலும், 8.30 மணிக்கு ஓசூரிலும் வேன் மூலம் மக்களை சந்தித்து பேசுகிறார். #KamalHaasan
    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வரும் 9-ந்தேதி மற்றும் 10-ந்தேதிகளில் பொதுமக்களை சந்திக்கிறார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    சென்னை:

    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பூர், சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மேற்கொண்ட ‘மக்களுடனான பயணம்’ அடுத்தக்கட்டமாக தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வரும் 9-ந்தேதி மற்றும் 10-ந்தேதிகளில் மேற்கொள்ளப்பட இருக்கிறது.



    9-ந்தேதி:- நல்லம்பள்ளி, பாப்பாரப்பட்டி, பாலக்காடு, கரிமங்கலம், தர்மபுரி,

    10-ந்தேதி:- அரூர், ஊத்தங்கரை, மத்தூர், பர்கூர், கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, ஓசூர். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    தருமபுரியில் ரூ.50 லட்சம் கேட்டு அதிகாரியின் மகனை கடத்திய ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி காந்தி நகர் 4-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜா, இவர் சேலம் மாவட்டம், மேச்சேரியில் உள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார்.

    இவரது மகன் பிரகதீஸ்வரன் (வயது 14). இவன் காந்திநகர் பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    நேற்று மாலை பள்ளி முடிந்ததும். மாணவன் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அங்கு வந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் உங்கள் உறவினருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி மாணவரை ஆட்டோவில் அழைத்து சென்றார்.

    பின்னர் ஆட்டோ டிரைவர் செல்போனில் தொடர்பு கொண்டு மாணவனின் தந்தை ராஜாவிடம் பேசினார்.

    உங்கள் மகனை கடத்தி வைத்திருப்பதாகவும், அவனை விடுவிக்க ரூ.50 லட்சம் தரவேண்டும் என்றும் கூறினான். இந்த பேச்சை கேட்ட மாணவன் வெங்கடம்பட்டி அருகே ஆட்டோ சென்ற போது அதில் இருந்து குதித்து ஊருக்குள் சென்று, அந்த பகுதி மக்களிடம் தன்னை ஒரு ஆட்டோ டிரைவர் கடத்தி வந்ததாகவும், அதில் இருந்து தப்பி வந்து விட்டதாகவும் கூறினார்.

    இது குறித்து தருமபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் மாணவனை கடத்திய ஆட்டோ டிரைவரை தேடி வருகிறார்கள். மாணவனிடமும் விசாரணை நடந்து வருகிறது.

    சேலம், தர்மபுரி மண்டலத்திற்கு 30 புதிய அரசு பஸ்களை கலெக்டர் ரோகிணி கொடியசைத்து நேற்று தொடங்கி வைத்தார்.
    சேலம்:

    சேலம், தர்மபுரி மண்டலத்திற்கான புதிய அரசு பஸ்கள் இயக்கத்திற்கான விழா சேலம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். பன்னீர்செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வெங்கடாசலம், சக்திவேல், மனோன்மணி, சின்னதம்பி, மருதமுத்து சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சேலம் மண்டலத்திற்கான 13 புதிய அரசு பஸ்கள், தர்மபுரி மண்டலத்திற்கான 17 புதிய அரசு பஸ்கள் என மொத்தம் 30 புதிய அரசு பஸ்களை கலெக்டர் ரோகிணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டம் மேலாண் இயக்குனர் அரவிந்த், துணை இயக்குனர்கள் ஜெயக்குமார் சின்னசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் கலெக்டர் ரோகிணி நிருபர்களிடம் கூறியதாவது:- புதிய அரசு பஸ்கள் சேலத்தில் இருந்து விழுப்புரம் வழியாக சென்னை வரையிலும், செந்தாரப்பட்டியில் இருந்து விழுப்புரம் வழியாக சென்னை வரையிலும், எடப்பாடியில் இருந்து ஜலகண்டாபுரம் வழியாக பெங்களூரு வரையிலும், எடப்பாடியில் இருந்து கும்பகோணம் வரையிலும், சேலத்தில் இருந்து ஈரோடு வழியாக கோவை வரையிலும், கடத்தூரில் இருந்து திருப்பூர் வரையிலும், கோவையில் இருந்து திருவண்ணாமலை வரையிலும், சேலத்தில் இருந்து திருப்பூர் வரையிலும், நங்கவள்ளியில் இருந்து கோவை வரையிலும், சேலத்தில் இருந்து கரூர் வரையிலும், திருச்செங்கோட்டில் இருந்து சேலம் வழியாக பெங்களூரு வரையிலும் உள்ள வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.

    இவ்வாறு கலெக்டர் கூறினார்.
    திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்தததை அடுத்து தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டது. பஸ் நிலையங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    தருமபுரி:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்த தகவல் நேற்று மாலை அறிவிப்பு வெளியானது.

    இதையடுத்து தருமபுரி பஸ் நிலையம், 4 ரோடு, கடைவீதி தெரு, கந்தசாமி வாத்தியார் தெரு, எஸ்.வி.சாலை, முகம்மது அலி கிளப் ரோடு, சின்னசாமி நாயுடு தெரு, ராஜகோபால் கவுண்டர் தெரு, ஆர்.பி.சுந்தரம் தெரு, நேதாஜி பைபாஸ்ரோடு, பென்னாகரம் மெயின்ரோடு, கிருஷ்ணகிரி மெயின் ரோடு, திருப்பத்தூர் மெயின்ரோடு, பாரதிபுரம், ஒட்ப்பட்டி ஆகிய பகுதிகளில் இரவு 7 மணிமுதல் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டன.

    இதேபோன்று பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு புறப்பட்ட புறநகர் மற்றும் நகர அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் நேற்று இரவு முதல் ரத்து செய்யப்பட்டது. வெளியூர்களுக்கு சென்ற பஸ்கள் மீண்டும் தருமபுரி மாவட்டத்துக்கு திரும்பவில்லை. இதனால் பயணிகள் வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். வெளியூர் மற்றும் நகர பஸ்கள் அனைத்தும் போக்குவரத்து பணி மனையில் நிறுத்தப்பட்டன.

    பஸ்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால் ஷேர் ஆட்டோக்கள் மூலம் அதிக கட்டணம் செலுத்தி பயணிகள் சென்றனர்.

    இதேபோன்று தருமபுரி மாவட்டத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கும், ஆந்திரா மாநிலம் திருப்பதிக்கும் நேற்று இரவு முதல் பஸ்கள் ரத்து செய்யப்பட்டது. வெளிமாநிலத்துக்கு செல்ல கூடிய பஸ்கள் அனைத்தும் போக்குவரத்து பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டது.

    தொண்டர்கள் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க பஸ் நிலையம், ஒட்டப்பட்டி முதல் 4 ரோடு வரை ஆங்காங்கே போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோன்று அதியமான்கோட்டை, காரிமங்கலம், மதிகோண் பாளையம், தொப்பூர், கிருஷ்ணாபுரம், பழைய தருமபுரி ஆகிய பகுதிகளிலும் இரவு முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதேபோன்று ஒகேனக்கல் பகுதிகளில் பஸ்கள் இயக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும், கடைகள் முழுவதம் அடைக்கப்பட்டன.

    பென்னாகரம், காரிமங்கலம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பாப்பி ரெட்டிப்பட்டி, அரூர், கம்பை நல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள பஸ் நிலையங்களில் பஸ்கள் இயக்கப்படாமல் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டன. அந்தந்த பகுதிகள் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், எம்.ஜி.ரோடு, நேதாஜி ரோடு, போஸ் பஜார், பாகலூர் சாலை, தாலுகா அலுவலகம் சாலை, பழைய பெங்களூரு ரோடு, ஏரிரோடு ஆகிய பகுதிகளிலும் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன.

    ஓசூர் பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர் மற்றும் கர்நாடக போன்ற வெளி மாநிலங்களுக்கு செல்லக் கூடிய அரசு மற்றும் தனியார் பஸ்கள் இரவு 7 மணி முதல் நிறுத்தப்பட்டன.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு தினசரி ஆயிரக்கணக்கனோர் வேலைக்கு சென்று வருகின்றனர். இதேபோன்று கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு அந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் வந்து செல்வார்கள்.

    இதைத்தொடர்ந்து கர்நாடக மாநிலத்திற்கு இயக்கப்படும் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

    தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் ஓசூருக்கு வந்த தமிழக பஸ்கள் பணிமனைக்கு திருப்பி விடப்பட்டன. கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் தினமும் 800 கர்நாடக அரசு பஸ்கள் இன்றும் இயக்கப்படவில்லை.

    இருமாநிலத்தை சேர்ந்தவர்களும் ஓசூர் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர்.

    கர்நாடக மாநிலத்திற்கு செல்லக்கூடிய பயணிகள் கர்நாடக-தமிழக எல்லையான அத்திப்பள்ளி வரை ஆட்டோக்களில் சென்று அங்கிருந்து கர்நாடக மாநில அரசு பஸ்களில் புறப்பட்டு சென்றனர். இதேபோன்று அங்கிருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் ஆட்டோ மூலம் அத்திப்பள்ளி வரை வந்தனர்.

    ஊத்தங்கரை பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து கடைகள் அடைக்கப்பட்டன. தனியார் மற்றும் அரசு பஸ்கள் அனைத்தும் இயக்கப்படவில்லை. இதேபோன்று மத்தூர், சிங்காரபேட்டை, கல்லாவி ஆகிய பகுதி களிலும் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள் ஏதும் இயக்கப்படாத தால் பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப் பட்டன.

    போச்சம்பள்ளி பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு முதல் பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. போச்சம்பள்ளி பஸ் நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளிலும், 4ரோடு, திருப்பத்தூர்-தருமபுரி மெயின்ரோட்டில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. பாரூர், அரசம்பட்டி, புலியூர், நாகரசம்பட்டி, இருமத்தூர், சந்தூர், மஞ்சமேடு, கண்ணத்தூர் ஆகிய பகுதிகளில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டன. கிராமங்கள் முழுவதும் மக்கள் நடமாட்டம் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டன.

    காவேரிப்பட்டணம் பஸ் நிலையத்தில் நேற்று இரவு முதல் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் இயக்கவில்லை. இரவு 7 மணிக்கு பஸ் நிலையம் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கடைகள் அனைத்தும் கடைகளும் அடைக்கப்பட்டன.

    சூளகிரி தாலுகா சூளகிரி, பேரிகை, வேப்பனஅள்ளி, உத்தனபள்ளி பகுதிகளில் நேற்று மாலை கருணாநிதி இறந்த தகவலை அறிந்த வுடன் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. வாகன போக்குவரத்துகள் குறைந்தது, கடைகள் அடைக்கப்பட்டன. சூளகிரி யில் இன்று காலை முழுவதும் கடை அடைக்கப்பட்டது.

    ஓசூர்-கிருஷ்ணகிரி சாலை, சூளகிரி பேரிகை சாலை, பஸ நிலைய சாலை, கீழ் தெரு சாலை, நெஞ்சாலையில் உள்ள உள்ள பெரிய அளவில் உள்ள ஓட்டல்கள் போன்ற கடைகள் மூடப் பட்டன. சூளகிரியில் பஸ் நிலையத்தில் எந்த பஸ்கள் ஒடாததால் வெறிச்சோடி காணப்பட்டன. வீடுகள் முக்கிய வீதிகளில் கருணா நிதி உருவபட பேனருக்கு அணிவித்து அஞ்சலி செலுத்தினர். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    தருமபுரி அருகே நள்ளிரவில் 2 மினி லாரிகளில் கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே வருமான வரித்துறை சோதனை சாவடி அருகே தொப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேல் மற்றும் போலீசார் நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    சோதனை சாவடி அருகே பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி கர்நாடக மாநில பதிவெண் கொண்ட ஒரு மினிலாரியும், தமிழ்நாடு பதிவெண் கொண்ட ஒரு மினிலாரியும் வந்தது.

    அப்போது அங்கு நின்று வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார் அந்த 2 மினிலாரிகளையும் வழிமறித்து சோதனை நடத்தினர். அப்போது அந்த லாரிகளில் தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே 2 லாரிகளில் வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் எழில்நகரைச் சேர்ந்த டிரைவர் புஷ்பராஜ் (வயது 32) என்பவரையும், போச்சம்பள்ளி அணைகொடி பகுதியைச் சேர்ந்த மதன்குமார் (36) என்பவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் 2 மினிலாரிகளில் ரூ.40 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை 309 அட்டை பெட்டிகளில் பெங்களூருவில் இருந்து மதுரைக்கு கடத்தி செல்வதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது. பெங்களூருவை சேர்ந்த மதன்பாய் என்பவரிடம் இருந்து இந்த குட்கா பொருட்களை லாரிகளில் ஏற்றி மதுரைக்கு கொண்டு செல்வதற்காக கடத்தி வந்தது தெரியவந்தது.

    உடனே போலீசார் 2 மினி லாரிகளின் டிரைவர்களை கைது செய்து 309 அட்டைபெட்டிகளில் இருந்த 7 லட்சத்து 24 ஆயிரத்து 500 குட்கா பாக்கெட்டுகளையும், 2 மினிலாரிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், பெங்களூருவில் உள்ள மதன்பாய் மற்றும் மினிலாரிகளின் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்த உள்ளனர்.

    இந்த தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை அவர்கள் மதுரையில் எந்த வியாபாரிக்கு விற்பனை செய்ய கடத்தி வந்தனர் என்றும், அதன் உரிமையாளர் யார்? என்ற விபரம் குறித்தும் போலீசார் கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூருவில் இருந்து தமிழகத்திற்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை மினிலாரிகளில் கடத்திவந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
    தர்மபுரி மண்டலத்தில் இருந்து 8 புதிய அரசு பஸ்களின் இயக்கத்தை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    தர்மபுரி:

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகத்தின் தர்மபுரி மண்டலம் சார்பில் 8 புதிய பஸ்கள் இயக்க தொடக்க விழா தர்மபுரி புறநகர் பஸ்நிலையத்தில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் சிவனருள், அரசு போக்குவரத்துக்கழக மண்டல துணைமேலாளர்கள் சின்னசாமி, ஜெயபால், சிவமணி, அரவிந்தன், ராஜராஜன், கோட்டமேலாளர்கள் மோகன்குமார், ஹர்சத்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு புதிய பஸ்களின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்்கி வைத்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக அரசின் சார்பில் பொதுமக்களின் வசதிக்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட புதிய அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்து கழக தர்மபுரி மண்டலத்திற்கு 8 புதிய பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தர்மபுரியில் இருந்து சென்னைக்கு 2 புதிய அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதேபோன்று அரூர்-பெங்களூரு இடையே ஒரு பஸ்சும், திருவண்ணாமலை- பெங்களூரு இடையே ஒரு பஸ்சும், திருப்பத்தூர்-பெங்களூரு இடையே 1 பஸ்சும், கரூர்- பெங்களூரு இடையே 3 புதிய பஸ்களும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படுகின்றன. இந்த புதிய பஸ்களை பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    இந்தநிகழ்ச்சியில் முன்னாள் நகராட்சி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், முன்னாள் மாவட்ட ஊராட்சித்தலைவர் டி.ஆர்.அன்பழகன், தர்மபுரி நகராட்சி ஆணையர் கிருஷ்ணகுமார், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்னாள் தலைவர் கே.வி.அரங்கநாதன், அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க மண்டல பொதுச்செயலாளர் பரமசிவம், கூட்டுறவு சங்க தலைவர்கள் கோவிந்தசாமி, சிவப்பிரகாசம், பழனிசாமி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். 
    ×