search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "operating"

    தர்மபுரி மண்டலத்தில் இருந்து 8 புதிய அரசு பஸ்களின் இயக்கத்தை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    தர்மபுரி:

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகத்தின் தர்மபுரி மண்டலம் சார்பில் 8 புதிய பஸ்கள் இயக்க தொடக்க விழா தர்மபுரி புறநகர் பஸ்நிலையத்தில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் சிவனருள், அரசு போக்குவரத்துக்கழக மண்டல துணைமேலாளர்கள் சின்னசாமி, ஜெயபால், சிவமணி, அரவிந்தன், ராஜராஜன், கோட்டமேலாளர்கள் மோகன்குமார், ஹர்சத்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு புதிய பஸ்களின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்்கி வைத்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக அரசின் சார்பில் பொதுமக்களின் வசதிக்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட புதிய அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்து கழக தர்மபுரி மண்டலத்திற்கு 8 புதிய பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தர்மபுரியில் இருந்து சென்னைக்கு 2 புதிய அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதேபோன்று அரூர்-பெங்களூரு இடையே ஒரு பஸ்சும், திருவண்ணாமலை- பெங்களூரு இடையே ஒரு பஸ்சும், திருப்பத்தூர்-பெங்களூரு இடையே 1 பஸ்சும், கரூர்- பெங்களூரு இடையே 3 புதிய பஸ்களும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படுகின்றன. இந்த புதிய பஸ்களை பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    இந்தநிகழ்ச்சியில் முன்னாள் நகராட்சி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், முன்னாள் மாவட்ட ஊராட்சித்தலைவர் டி.ஆர்.அன்பழகன், தர்மபுரி நகராட்சி ஆணையர் கிருஷ்ணகுமார், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்னாள் தலைவர் கே.வி.அரங்கநாதன், அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க மண்டல பொதுச்செயலாளர் பரமசிவம், கூட்டுறவு சங்க தலைவர்கள் கோவிந்தசாமி, சிவப்பிரகாசம், பழனிசாமி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். 
    ×