search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deer"

    • வாகனம் மோதி மான் பலியானார்.
    • பின்னர் ராயபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு கட்டி வைத்தனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே ராயபாளையம், சமத்து வபுரம், சிவரக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. இரை தேடி வரும் மான்கள் நாய்களால் வேட்டையாட பட்டும், சாலை விபத்தில் உயிரிழப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை ராயபாளையம் கிராமத்தில் இரை தேடி வந்த 2 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமானை அப்பகுதியில் இருந்த நாய்கள் துரத்தி கடித்தன. இதை கண்ட கிராம மக்கள் நாய்களை துரத்திவிட்டு மானை மீட்டனர். பின்னர் ராயபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு கட்டி வைத்தனர்.

    இதுபற்றி சாப்டூர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வனவர் ஜெய்சங்கர் தலை மையிலான வனத்துறை அலுவலர்கள் வந்து கயமடைந்த மானுக்கு சிகிச்சை அளித்தனர்.

    இதேபோல் திருமங்கலம் -விருதுநகர் 4 வழிச்சாலையில் மேலக்கோட்டை தனியார் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள ஊரணியில் தண்ணீர் அருந்திவிட்டு சாலையை கடக்க முயன்ற ஒரு புள்ளி மான் விபத்தில் பலியானது. இந்த புள்ளிமான் விருதுநகரில் இருந்து மதுரைக்குச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தது. இது பற்றி தகவல் கிடைத்தது. சாப்டூர் வனவர் ஜெய்சங்கர் தலைமையிலான வனத்துறை அலுவலர்கள் மானை மீட்டு பிேரத பரிசோதனைக்கு கொண்டுச்சென்றனர்.

    திருமங்கலம் அருகே ஒரே நாளில் நாய்கள் கடித்து ஆண் புள்ளிமான் காயமடைந்த சம்பவமும், வாகன விபத்தில் சிக்கி பெண் புள்ளிமான் உயிரிழந்த சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே வனத்துறை அதிகாரிகள் அலட்சியம் செய்யாமல் திருமங்கலம் பகுதியில் வனச்சரகம் அமைத்து வனவிலங்குகளை காக்க வேண்டும் என்று கூறினர்.

    • வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்தது
    • சாலையின் நடுவே இறந்து கிடந்தது

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள செம்பூதி சாலையில் பொன்னமராவதியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 4 முதல் 5 வயது வரை மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் ஒன்று சம்பவ இடத்திலேயே பலியானது. சாலையின் நடுவே இறந்து கிடந்த புள்ளி மானை வனத்துறையினர் மீட்டு உடற்கூறு ஆய்விற்கு பின்னர் வனத்துறை பகுதியில் புதைத்தனர். சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் சற்று கவனமாக வாகனத்தி ஓட்டி வன விலங்குகளை காக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டனர்.

    • உப்பு கரை நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளுக்கு 2 மான்கள் வந்தன.
    • கூட்டமாக நுழையும் மான்களை விவசாயிகளால் கட்டுப்படுத்த முடிவதில்லை.

    திருப்பூர் :

    சில ஆண்டுகளுக்கு முன் பொங்கலூர் கண்டியன்கோவில் பகுதியில் உள்ள உப்பு கரை நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளுக்கு 2 மான்கள் வந்தன.தற்போது அவை பல்கி பெருகி பெரும் கூட்டமாக உருவெடுத்துள்ளன.

    அவை விளை நிலங்களில் புகுந்து விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களை சேதப்படுத்துகின்றன. விவசாயிகளுக்கு இதனால் கணிசமான இழப்பு ஏற்படுகிறது. இரவு நேரங்களில் கூட்டமாக நுழையும் மான்களை விவசாயிகளால் கட்டுப்படுத்த முடிவதில்லை.இதே நிலை தொடர்ந்தால் இன்னும் பல மடங்கு பெருகிவிடும். மான்கள் கூட்டம் பெருகினால் விவசாயம் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படும்.

    அவற்றை பிடித்து வனப்பகுதியில் விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மயில்கள் பெருகியதால் சிறுதானியங்கள், நிலக்கடலை, பயறு வகைகள் போன்றவற்றை பயிரிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
    • மான்களிடம் இருந்து தப்ப, அதிக பொருட்செலவில் கம்பி வேலி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    ஒரு காலத்தில் வனத்தில் மட்டுமே மான்கள் வாழ்ந்தது. வனத்தை சிறிது சிறிதாக மனிதர்கள் ஆக்கிரமிக்க துவங்கிய பின்விலங்குகளின் வாழ்விடம் பறிபோனது. இதனால் மான், யானை, கரடி உட்பட பல விலங்குகள் கூட்டம் உணவு தேடி சமவெளிப் பகுதிக்கு வரத் துவங்கியுள்ளன.குறிப்பாக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மான்கள் உணவு தேட வந்த இடத்தையே தங்கள் வாழ்விடமாக மாற்றி விடுகின்றன.

    அவிநாசி அருகே புதுப்பாளையம் குளத்தில் மான்கள் பெருகியதால் விவசாயிகள் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.தற்போது பொங்கலூர் அருகே உப்புக்கரை நதியை சுற்றியுள்ள சின்னாரியபட்டி, தங்காய்புதுார், பெரியாரியபட்டி போன்ற பகுதிகளில் மான்கள் கூட்டம் பெருகி வருகிறது. இவை பயிர்களை தின்று விடுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

    மயில்கள் பெருகியதால் சிறுதானியங்கள், நிலக்கடலை, பயறு வகைகள் போன்றவற்றை பயிரிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மான்கள் பெருகி வருவதால் மாட்டுத்தீவனம் பயிர்கள், காய்கறி பயிர்கள் போன்றவற்றை சாப்பிட்டு விடுகின்றன.இரவு நேரத்தில் அவை மேய்ச்சலுக்கு வருவதால் கட்டுப்படுத்துவது சிரமமாக உள்ளது. மழைக்காலங்களில் பெரிய அளவில் பாதிப்பில்லை.வறட்சி காலங்களில் கால் ஏக்கர், அரை ஏக்கர் மட்டுமே விவசாயம் செய்கிறோம். அவற்றையும் மான்கள் முடித்து விடுகின்றன. மான்களிடம் இருந்து தப்ப, அதிக பொருட்செலவில் கம்பி வேலி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அனைத்து விவசாயிகளாலும் லட்சக்கணக்கில் பணம் செலவழிக்க முடியாது.பெருகிவரும் மான் கூட்டம் விவசாயிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஆசனூர் வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த புள்ளிமானை வேட்டையாடிய 10-க்கும் மேற்பட்ட செந்நாய்கள் ஒன்று சேர்ந்து கூட்டமாக மான் இறைச்சியை கடித்து குதறி சாப்பிட்டது.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசிக்கின்றன. குறிப்பாக பவானிசாகர், தலமலை, ஆசனூர் மற்றும் தாளவாடி வனப்பகுதியில் செந்நாய்கள் அதிகளவில் காணப்படுகிறது.

    செந்நாய்கள் எப்போதும் கூட்டமாக நடமாடுவதோடு மான் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டை யாடும்போது 10-க்கும் மேற்பட்ட நாய்கள் ஒன்று சேர்ந்து வேட்டையாடி பின்னர் இறைச்சியை உண்பது வழக்கம்.

    இந்நிலையில் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை யோரத்தில் ஆசனூர் வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த புள்ளி மானை வேட்டையாடிய 10-க்கும் மேற்பட்ட செந்நாய்கள் ஒன்று சேர்ந்து கூட்டமாக மான் இறைச்சியை கடித்து குதறி தின்றன.

    தற்போது பெய்த மழையால் ஆசனூர் வனப்பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது. இதனால் பசுமையாக இருந்து புற்களை சாப்பிட வரும் புள்ளிமான்களை செந்நாய்கள் கூட்டம் கூட்டமாக தாக்கி வேட்டையாடி வருகின்றன.

    • கடந்த 5 ஆண்டுக்கு முன்பு வரை 300க்கும் மேற்ப்பட்ட மான்கள் வசித்து வந்தன.
    • மான்களை மொத்தமாக இடமாற்றம் செய்வது அதிகப்படியான உயிரிழப்புகளை ஏற்படுத்தும்.

    திருப்பூர்:

    திருப்பூர் அருகே தெக்கலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது புதுப்பாளையம் கிராமம். இக்கிராமத்தை சுற்றி மூனுகட்டி பாளையம், கோதபாளையம், வஞ்சி பாளையம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு விவசாயம் மற்றும் விசைத்தறி தொழில் நடைபெற்று வருகிறது.

    புதுப்பாளையம் கிராமத்தில் 70 ஏக்கர் பரப்பளவில் புதுப்பாளையம் குளம் அமைந்துள்ளது. முன்பு குளம் முழுக்க சீமை முள் மரங்களும், குறைந்த அளவில் கருவேல மரங்களும் நிறைந்து காணப்பட்டது. இந்த குளமானது கௌசிகா ஆறு மூலம் மழை நீரால் நிரம்பும் வகையில், வண்ணாற்றங்கரையில் உள்ள தடுப்பணை மூலமாக நீர் பெற்று வருகிறது.

    குளத்தில் இருந்த சீமை கருவேல மரங்களின் பாதுகாப்பில் இக்குளத்தில் கடந்த 5 ஆண்டு முன்பு வரை 300க்கும் மேற்ப்பட்ட மான்கள் இக்குளத்தில் வசித்து வந்தன. சமீபமாக குளத்தில் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டதால், தற்போது மான்கள் அனைத்தும் அருகில் உள்ள கௌசிகா ஆற்றை ஒட்டி உள்ள புதர் பகுதிகளிலும், விவசாய நிலப் பகுதிகளிலும் தஞ்சமடைந்துள்ளன‌.

    இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், சுமார் 25 வருடங்களுக்கு முன் 5-க்கும் குறைவான மான்கள் வழி தவறி இங்கு வந்ததாகவும், அவை இனபெருக்கம் செய்து தற்போது 300ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இக்குளம் மட்டுமின்றி அருகில் உள்ள நல்லியம்பாளையம் , சாமந்தன்கோட்டை, கோதபாளையம், காமநாயக்கன்பாளையம், மூனுகட்டிபாளையம் உள்ளிட்ட 8 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள சிறு குட்டைகள், ஓடைகளிலும் மான்கள் வசித்து வருகின்றன.

    தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அவிநாசி சங்கமாங்குளம், சேவூர் குளம் வரை மான்கள் வசித்து வருகின்றன. மான்களின் அதிகபடியான எண்ணிக்கையால் புதுப்பாளையம், தெக்கலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் கடந்த பல வருடங்களாக உணவு தானிய பயிர்கள் உட்பட எந்த விவசாயமும் செய்யமுடியாமல் தவித்து வருகின்றனர்.

    மான்களின் பெருக்கம் காரணமாக அவை போதிய உணவு கிடைக்காமல் விவசாய நிலங்களுக்கு கூட்டம் கூட்டமாக வருவதால் கால்நடைகளுக்கான சோளம், சீமை தட்டு உள்ளிட்ட தீவனங்களை கூட கம்பி வேலியிட்டு பாதுகாத்து வருவதாகவும் இருக்கும் நீரைக்கொண்டு ஏதேனும் பயிர்சாகுபடி செய்திருந்தாலும் ஒரே இரவில் மொத்த பயிரையும் கூட்டமாக வந்து மேய்ந்து விடுவதாகவும் ஆதலால் தாங்கள் எந்த ஒரு விவசாயமும் செய்வதில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

    மேலும் தென்னை மரங்களை காக்க தாங்கள் அமைத்துள்ள ஆழ்துளை கிணற்று குட்டைகளில் நீரை அருந்தி விட்டு தங்கள் நிலங்களிலேயே வசித்து வருவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். பெருகிவிட்ட மான்களை இங்கிருந்து பாதுகாப்பாக இடம் மாற்ற வேண்டும் என விவசாயிகள் கூறி வருகின்றனர்.

    இப்பகுதியில் பொதுபணித்துறை கட்டுபாட்டில் உள்ள இக்குளங்களுக்கு அருகிலேயே சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலை , திருப்பூர் - கோவை சாலை, திருப்பூர் - அவிநாசி சாலைகள் அமைந்துள்ளன. இவற்றை மான்கள் கடக்கும் போது வாகனங்களில் அடிபட்டு இறந்து போவது அடிக்கடி நிகழ்கிறது. நீர் மற்றும் உணவு தேடி மான்கள் குளத்தை விட்டு வெளியே வரும் போது நாய்களிடம் சிக்கியும், மான் வேட்டையாலும் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர் பொதுமக்கள்.

    மிகவும் பயந்த குணமுள்ள மான்களை மொத்தமாக இடமாற்றம் செய்வது அதிகப்படியான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்பதாலும், தொடர்ந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது மாவட்ட நிர்வாகத்துக்கும் , வனத்துறைக்கும் முடிவெடுக்க முடியாத ஒரு நிலையை ஏற்ப்படுத்தி உள்ளது. தகுந்த வல்லுநர்களை கொண்டு உயிர்ச் சேதமில்லாமல் மான்களை இடமாற்றம் செய்து தங்களின் வாழ்வாதாரத்தை காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

    • அவினாசி சுற்றுவட்டார பகுதியில் கடும் வெப்பம் காணப்படுகிறது.
    • வனத்துறையினர் மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.

    அவினாசி:

    அவினாசி ஒன்றியம் தெக்கலூர், புதுப்பாளையம், சாமந்தங்கோட்டை உள்ளிட்ட காட்டுப்பகுதியில் ஏராளமான மான்கள் வசிக்கின்றன. இரைத்தேடியும், தண்ணீருக்காகவும் மான்கள் காட்டைவிட்டு வெளியேறும். அப்போது நாய்கள் மான்களை கடித்து குதறுகின்றன. கடந்த ஒரு மாத காலமாக அவினாசி சுற்றுவட்டார பகுதியில் கடும் வெப்பம் காணப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று தெக்கலூர் காட்டுப்பகுதியிலிருந்து இரண்டு மான்கள் தண்ணீர் தேடி தெக்கலூர் ஏரிப்பாளையத்தில் ஒரு கோவில் அருகே வந்துள்ளது. இதைப் பார்த்து அங்கிருந்த தெருநாய்கள் மான்களை துரத்தி சென்று கடித்துள்ளது. இதில் ஒரு மான்காட்டுக்குள் மறைந்து தப்பியது. மற்றொரு 4 வயது மான் நாய்கள் கடித்ததில் உயிரிழந்தது. தகவலறிந்த வனத்துறையினர் மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.

    தருமபுரி அருகே புள்ளி மானை வேட்டையாடி இறைச்சியை விற்க முயன்ற வாலிபருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    அரூர்:

    தருமபுரி மாவட்டம், மொரப்பூர் வனச்சரகர் கிருஷ்ணன் தலைமையில் வனத்துறையினர் வாதாப்பட்டி காப்பு காட்டையொட்டி அனுமன் தீர்த்தம்-அரூர் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது இருசக்கர வாகனத்தில் மூட்டையுடன் வந்த ஒரு நபர் வாகனத்தை அங்கேயே போட்டு விட்டு தப்பியோடிவிட்டார். அந்த இருசக்கர வாகனத்தை சோதனையிட்ட போது அதில் பிளாஸ்டிக் பைகளில் பொட்டலங்களாக மான் இறைச்சி கட்டப்பட்டு மூட்டைக்குள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணையில் தப்பியோடிய நபர் ஊத்தங்கரை அடுத்துள்ள நல்லவம்பட்டி புதூரை சேர்ந்த மகேஷ் (வயது35) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் உத்தரவின் பேரில் மகேஷை வனத்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் புள்ளிமானை வேட்டையாடி அதன் கறியை விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

    பின்னர் அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மேலும் ஒருவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர். 
    சீர்காழி அருகே உடலில் காயங்களுடன் கிடந்த மானை மீட்ட வனத்துறையினர் எப்படி இறந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழி:

    சீர்காழியை அடுத்த தென்னலக்குடி வனப்பகுதியில் மான்கள்கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன.

    இந்த நிலையில் தென்னலக்குடியை அடுத்த கருக்குடி அய்யனார் கோவில் பகுதியில் உள்ள சேக்கணையில் ஆண் புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்தது. இதுபற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் புள்ளி மானை மீட்டனர். அப்போது மானின் உடலில் காயங்கள் இருப்பது தெரிய வந்தது. இதனால் அந்த மான் எப்படி இறந்தது என்று வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்னலக்குடி பகுதியில் வசிக்கும் புள்ளி மான்களை வனத்துறையினர் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.#tamilnews

    வடமதுரை அருகே தெருநாய்கள் கடித்ததில் புள்ளிமான் பறிதாபமாக இறந்தது.
    வடமதுரை:

    வடமதுரையை அடுத்த பாறைப்பட்டிக்கு அருகேயுள்ள வனப்பகுதியில் இருந்து புள்ளிமான் ஒன்று நேற்று வந்தது. அந்த புள்ளி மானை அப்பகுதியில் உள்ள தெருநாய்கள் துரத்தி கடித்தன. இதில் காயம் அடைந்த அந்த புள்ளிமான் மிரண்டு ஓடி அந்த பகுதியில் உள்ள தண்ணீரில்லாத கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதைத்தொடர்ந்து அந்த புள்ளிமானை, அப்பகுதியை சேர்ந்தவர்கள் கிணற்றுக்குள் இறங்கி மீட்டனர். தெருநாய்கள் கடித்ததில் புள்ளிமான் படுகாயம் அடைந்ததால் உயிருக்கு போராடி கொண்டிருந்தது.

    இதுகுறித்து அய்யலூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வருவதற்குள் புள்ளிமான் பரிதாபமாக இறந்தது. பின்னர் இறந்த மானின் உடலை வனத்துறையினர் கைப்பற்றினர். அது, சுமார் 2 வயது உடைய பெண் புள்ளிமான் என்றும், கால்நடை மருத்துவ குழுவினர் மூலம் மானின் உடலை பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். 
    அருப்புக்கோட்டை அருகே நாய்கள் கடித்து குதறியதில் மான் சிகிச்சை பலனின்றி பலியானது.
    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டை அருகேயுள்ள சின்னான்செட்டிப்பட்டி கிராமத்துக்குள் நேற்றுமுன்தினம் இரவு ஒரு புள்ளிமான் வந்துள்ளது. அதனை நாய்கள் விரட்டியுள்ளன. சத்தம் கேட்டு எழுந்த கிராமத்தினர் நாய்களை அங்கிருந்து விரட்டிவிட்டுள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று காலை ஊருக்கு வெளியே முட்புதருக்குள் புள்ளிமான் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. அதன் உடலில் நாய்கள் கடித்த காயங்கள் இருந்தன. இது குறித்து பந்தல்குடி போலீசாருக்கு கிராமத்தினர் தகவல் கொடுத்தனர். போலீசார், கால்நடை டாக்டர் சத்யபாமாவை அழைத்து வந்து மானுக்கு சிகிச்சை அளித்தனர். எனினும் அதனை காப்பாற்ற இயலவில்லை. மான் இறந்துபோனது குறித்து வனத்துறையினருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். உயிரிழந்த அந்த ஆண் மானுக்கு 2½ வயது இருக்கும் என்று டாக்டர் தெரிவித்தார். 
    சுவாமிமலை அருகே விவசாயி கரும்பு தோட்டத்துக்கு தண்ணீர் பாய்க்க சென்ற போது நாய்கள் துரத்தி வந்த 5 வயது புள்ளிமானை பொதுமக்கள் உதவியுடன் மீட்டார்.

    சுவாமிமலை:

    சுவாமிமலை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட மேலாத்துகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். விவசாயி. இவர் இன்று காலை தனது கரும்பு தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது ஒரு புள்ளிமானை நாய்கள் துரத்தி வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக நாய்களை விரட்டி விட்டு அப்பகுதி மக்கள் உதவியுடன் மானை மீட்டு அங்குள்ள மாரியம்மன் கோவில் வாசலில் கட்டி வைத்தார். பின்னர் அவர் இதுபற்றி சுவாமிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த இன்ஸ் பெக்டர் ரேகாராணி மானை பார்வையிட்டார். அவர் வனத்துறைக்கு கொடுத்த தகவலின் பேரில் அங்கு வந்த வனக்காவலர்கள் மானை மீட்டு கும்பகோணம் கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    பின்னர் அவர்கள் கூறுகையில், இந்த மான் கொள்ளிடம் ஆற்றங்கரையில் இருந்து வழி தவறி வந்திருக்கலாம். இது 5 வயது உடைய ஆண் மான் ஆகும். சிகிச்சைக்கு பின் இந்த மானை நாங்கள் வேதாரண்யம் வனத்துறையிடம் ஒப்படைப்போம். அவர்கள் அதனை அப்பகுதி வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடுவர் என்று தெரிவித்தனர்.

    ×