search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவிநாசி"

    • வந்தாரை வாழவைக்கும் திருப்பூருக்கு வந்திருக்கிறேன் - முதல்வர் ஸ்டாலின்
    • நேற்று நடந்த ராகுல் காந்தியின் கூட்டம் பாகுபலி படம் போல பிரமாண்டமாக இருந்தது

    கோவை அவிநாசியில், நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா மற்றும் திருப்பூர் தொகுதி சி.பி.ஐ வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது பேசிய அவர், "வந்தாரை வாழவைக்கும் திருப்பூருக்கு வந்திருக்கிறேன். மலைகளின் அரசியாகவும், நீர் வீழ்ச்சியின் எழுச்சியாகவும். மக்கள் மனங்களில் மகிழ்ச்சியாகவும் உள்ள இடத்திற்கு வந்துள்ளேன்.

    நேற்று நடந்த ராகுல் காந்தியின் கூட்டம் பாகுபலி படம் போல பிரமாண்டமாக இருந்தது. ஒரே ஒரு கூட்டம் டோட்டல் பாஜகவும் குளோஸ். ராகுல் காந்தியின் ஒரு நாள் வருகையே பிரதமர் மோடியின் மொத்த பிரசார பயணத்தையும் காலி செய்துவிட்டது.

    தமிழ்நாட்டு மக்களை உண்மையான அன்பால் மட்டுமே ஆள முடியும் என்பதை ராகுல் காந்தி நிரூபித்துவிட்டார். ராகுல் எந்த அளவுக்கு தமிழ்நாட்டை மதிக்கிறார். என்பது அவரின் பேச்சின் மூலம் தெரிந்திருக்கும்.

    மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தார் என்றால், முதலில் இட ஒதுக்கீட்டைதான் ரத்து செய்வார். ஏனென்றால் சமூகநீதி என்றாலே பாஜகவுக்கு அலர்ஜி.

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா விளங்க காரணம், இந்திய அரசியலமைப்பு சட்டம். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால், புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய அந்த அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றிவிடுவார்.

    திருப்பூரில் ஜி.எஸ்.டி குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை, பாஜகவினர் தாக்கியுள்ளனர். இதுதான் பாஜக மக்களை மதிக்கும் லட்சணம். இதுதான் பாஜக பெண்களுக்கு கொடுக்கிற மதிப்பு. மக்களை மதிக்காமல் அராஜகம் செய்கிற பாஜகவினர் திருப்பூரை மணிப்பூராக்கிவிடுவார்கள். மோடியும், பாஜகவும் வீட்டுக்கும் கேடு; நாட்டுக்கும் கேடு.

    கலவரம் செய்வது பாஜகவின் DNAவில் ஊறிப் போன ஒன்று. அமைதியான இடத்தில்தான் தொழில் வளரும், தொழில் வளர்ச்சி இருக்கும், நிறுவனங்களை நடத்த முடியும். பாஜக போன்ற கலவரக் கட்சிகளை உள்ளே விட்டால், அமைதி போய்விடும். தொழில் வளர்ச்சி போய்விடும்.. நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியாது" என்று தெரிவித்தார்.

    மோடி ஆட்சியில் பத்திரிக்கையாளர்களும், ஊடக நிறுவனங்களும் நிம்மதியாக செயல்பட முடியவில்லை. பத்திரிக்கையாளர்கள் படுகொலையை ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்கிறது. மோடி ஆட்சியில் பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டதன் விளைவுதான், ஊடக சுதந்திரத்தில் 161 இடத்தில் இந்தியா இருக்கிறது. நமது பழம்பெரும் ஜனநாயகத்திற்கு மோடி ஏற்படுத்திய அவமானம் இது

    பன்னீர் செல்வத்தை தர்ம யுத்தம் நடத்த வைத்தது, பழனிசாமியை முதலமைச்சராக கொண்டுவந்தது, இரு துருவங்களாக இருந்த பன்னீரையும், பழனிசாமியையும் சேர்த்தது, தினகரனை கைது செய்து தங்களின் அடிமையாக மாற்றியது, அரசியலுக்குள் சசிகலாவை வரவிடாமல் தடுத்தது, தற்போது பன்னீரையும், தினகரனையும் மிரட்டி தேர்தலில் நிற்க வைத்திருப்பதும் பாஜகதான். இப்படி டிவி சீரியல்களில் வருவதுபோல், திடீர் திடீர் என காட்சிகளை மாற்றி சதி நாடகம் நடத்துகிறது பாஜக" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். 

    • புதுச்சேரி மாநிலத்தில் சா்வதேச குறும்படம், ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் நடைபெற்றன.
    • அவிநாசி கிளை நிா்வாகிகள் சம்பத்குமாா், தினகரன் ஆகியோா் உடன் பங்கேற்றனா்.

    அவிநாசி:

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் புதுச்சேரி மாநிலத்தில் சா்வதேச குறும்படம், ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் நடைபெற்றன. 9 நாடுகளை சோ்ந்த 11 மொழிகளில் 30 திரைப்படங்கள் திரையிட்டதில், தமுஎகச., திரைப்பள்ளியில் பயிற்சி பெற்ற அவிநாசி கிளை இளைஞா்கள் பகத்சிங், ரமேஷ்கவின் ஆகிய இருவா் பங்கேற்று, 'ஜன்னல்' என்ற குறும்படமும், 'லவ்வீஸ் லவ்' ஆகிய குறும்படமும் இயக்கி வெளியிட்டனா்.

    இவா்களுக்கு தமுஎகச., மாநில பொதுச் செயலாளா் ஆதவன் தீட்சண்யா, மாநிலக் குழு உறுப்பினா் தமிழ்ச்செல்வன், திரைப்பள்ளி நிா்வாகிகள் அருள்மணி, சிவக்குமாா், களபிரன் ஆகியோா் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவுபரிசு வழங்கினா். அவிநாசி கிளை நிா்வாகிகள் சம்பத்குமாா், தினகரன் ஆகியோா் உடன் பங்கேற்றனா்.

    • பூட்டை உடைத்து 39 பவுன் தங்கநகை, ரூ.60 ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தொடர்புடையவர்களை தேடி வந்தனர்.

    அவிநாசி :

    அவிநாசி சக்திநகர் பகுதியை சேர்ந்த விஷ்ணுபிரபு என்பவர் கடந்த ஜூலை மாதம் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்ற போது, அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளிருந்த 39 பவுன் தங்கநகை, ரூ.60 ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதேபோல அவிநாசி ராஜாஜி வீதியை சேர்ந்த வஹாப் என்பவர் கடந்த வாரம் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்ற போது அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளிருந்த 60 பவுன் தங்கநகை, ரூ.6 லட்சம் ரொக்கப்பணம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

    மேலும் அவிநாசி பகுதியில் பல்வேறு இடங்களில் தொடர் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வந்ததையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தொடர்புடையவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் இவ்வழக்குகளில் தொடர்புடையவர்களான கோவை கணபதி மணியகாரன்பாளையத்தில் வசித்து வரும் மதுரை காளவாசலை சேர்ந்த ஜெயமணி மகன் மகேந்திரன்(30), அதே பகுதியில் வசித்து வரும் மதுரை பழங்காநத்தம் தண்டக்காரன்பட்டியை சேர்ந்த பாலமுருகன் மகன் சதீஷ்(24), மதுரை காளவாசலை சேர்ந்த மகாலிங்கம் மகன் ராஜ்கண்ணன்(28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 350 கிராம் தங்கம், 2 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தொடர் திருட்டு வழக்கில் தொடர்புடைய முக்கியமானவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி மக்கள் எழுச்சி திருவிழா செங்காடு திடலில் நடந்தது.
    • இமயம் முதல் குமரி வரை ஒரே தேசமாக இருக்க வேண்டும் என்ற குறிக்கோளை கொண்டுள்ளன.

    அவிநாசி :

    அவிநாசியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி மக்கள் எழுச்சி திருவிழா செங்காடு திடலில் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் கேசவன் முன்னிலை வகித்தார்.

    இதில் மேகாலயா மாநில முன்னாள் கவர்னர் சண்முகநாதன் பேசியதாவது:- ஆர்.எஸ்.எஸ்.,இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க., ஆகியவை இமயம் முதல் குமரி வரை ஒரே தேசமாக இருக்க வேண்டும் என்ற குறிக்கோளை கொண்டுள்ளன. நாட்டின் ஒவ்வொரு அங்குல நிலமும் புனிதமானது.அனைத்து மக்களும் ரத்த சகோதரர்கள் என்ற உணர்வை வலியுறுத்துகின்றன. பிரதமர் மோடி தேசத்தின் ஒற்றுமைக்காக, வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.இந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார் பேசுகையில், விநாயகர் சதுர்த்திக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து தெரிவிக்காததால் தி.மு.க.,வில் இருக்கும் இந்து தொண்டர்கள் வெட்கப்பட்டு தலைகுனிந்துள்ளனர். 'பிரிவினையை முறிடிப்போம், தேசிய சிந்தனையை வளர்ப்போம் என்ற கருத்து இந்தாண்டை குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறோம் என்றார்.

    • தேர்வு செய்யப்பட்ட இடம், பல காலமாக பாறைக்குழி போன்று உள்ளது.
    • டெண்டர் விடப்பட்டு 3 மாதமாகியும் ஆரம்பக்கட்ட பணி கூட துவங்காமல் இருந்தது.

    அவிநாசி :

    தமிழகத்தில் திருப்பூர், வேலூர், தூத்துக்குடியில் மினி டைடல் பார்க் அமைக்கும் பணி நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி ராக்கியபாளையத்தில் 39 கோடி மதிப்பில் 7 அடுக்கில் மினி டைடல் பார்க் கட்ட அரசு புறம்போக்கில் இருந்த 2 ஏக்கர் நிலம் பெறப்பட்டு, பணி துவக்க டெண்டரும் விடப்பட்டது.

    தேர்வு செய்யப்பட்ட இடம், பல காலமாக பாறைக்குழி போன்று உள்ளது. சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஆண்டுக்கணக்கில் அங்கு தேங்கியுள்ளது. அந்த கழிவுநீரை முற்றிலும் வெளியேற்றினால் தான் கட்டுமானப் பணி துவக்க முடியும் என்ற நிலையில், அதற்கான வழி தெரியாமல் கட்டுமான நிறுவனத்தினர் திணறி வந்தனர்.

    இதனால் டெண்டர் விடப்பட்டு 3 மாதமாகியும் ஆரம்பக்கட்ட பணி கூட துவங்காமல் இருந்தது.அந்த இடத்தை பார்வையிட்ட டைடல் பார்க் தலைமை பொறியாளர் மற்றும் அதிகாரிகள், மாநிலத்தின் பிற இடங்களில் கட்டுமானப்பணி துவங்கி வேகமாக நடந்து வரும் நிலையில் இங்கு ஆரம்பக்கட்ட பணி கூட துவங்கப்படாமல் இருப்பது சரியல்ல என அதிருப்தி தெரிவித்தனர்.

    இந்தநிலையில் தேங்கியிருந்த கழிவுநீர் அங்குள்ள வி.ஜி.வி., கார்டன் குடியிருப்புகளின் இடையே உள்ள வடிகால் வழியாக வெளியேற்றப்பட்டது. இதனால் கடும் துர்நாற்றம் எழுந்ததால் குடியிருப்புவாசிகள் அதிர்ச்சியடைந்து கழிவுநீரை வெளியேற்ற ஆட்சேபனை தெரிவித்தனர்.திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனர் முகமது சம்சுதீன், நகராட்சி தலைவர் குமார், இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் ஆகியோர் மக்களை சமாதானப்படுத்தினர்.

    டைடல் பார்க் கட்டுமானப்பணி மேற்கொள்ளும் நிறுவனத்தினர் கூறுகையில், கட்டுமானப் பணி மேற்கொள்ள உள்ள இடத்தில் தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்றினால் தான் அந்த இடத்தின் வடிவமைப்பை தெளிவாக அறிந்துக் கொள்ள முடியும். அதன் பின்னரே கட்டுமானப் பணிக்கான வடிமைப்பு இறுதி செய்யப்படும் என்றனர்.

    • அசைவ உணவு 9 கிலோ கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
    • 3 கிலோ தகாத முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது பறிமுதல் செய்யப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் அவிநாசி சுற்றுவட்டார பகுதியில் செயல்படும் அசைவ ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அசைவஓட்டல்களில் சேமித்து வைக்கப்படும் குளிர்சாதன பெட்டிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? காலாவதியான உணவு பொருட்கள் கொண்டு சமைக்கப்படுகிறதா? என்று ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது குளிர்சாதன பெட்டியில் சமைத்த அசைவ உணவு 9 கிலோ கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சமைத்த சுண்டல் மற்றும் சன்னா 3 கிலோ தகாத முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது பறிமுதல் செய்யப்பட்டது. மற்றும் அதிக நிறங்கள் சேர்த்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சிக்கன் 22 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் காலாவதியான காளான் பாக்கெட்டுகள் 4 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. அதேபோல் பேக்கரிகளில் உணவு பொருட்களை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பாதுகாக்க அறிவுறுத்தப்பட்டது.

    • தொழிற்பேட்டை வளாகத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் அடர்வனம் அமைக்க மரக்கன்று நட்டு வளர்த்து வருகின்றன.
    • அரியவகை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

    அவிநாசி :

    குறு, சிறு தொழில் தொழிற்பேட்டை சங்கம், அவிநாசி ரோட்டரி இணைந்து வேட்டுவபாளையம் ஊராட்சியில் உள்ள சிறுதொழில் தொழிற்பேட்டை வளாகத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் அடர்வனம் அமைக்க மரக்கன்று நட்டு வளர்த்து வருகின்றன.இதில், அரிய வகை மரங்களான பாவட்டம், மலை பூவரசு, கள்ளிச்சி, சரக்கொன்றை, வாகை, வெப்பாலை, இலந்தை உள்ளிட்ட 80 வகைகளில் 800 மரக்கன்றுகள், சுற்றுச்சூழல் அரியவகை மரக்கன்றுகள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்களால் நடவு செய்யப்பட்டது.

    இப்பகுதியில் மழைப்பொழிவு, நீர் வளம் குறைவு என்பதால் தேவைக்கேற்ப தண்ணீர் பாய்ச்ச வசதியாக, சொட்டுநீர் பாசன கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு 'போர்வெல்' மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. கால்நடைகளால் மரக்கன்று சேதமாவதை தவிர்க்க கம்பி வேலியும் அமைக்கப்பட்டுள்ளது.

    • 20 கிராம் கஞ்சா அடைக்கப்பட்ட பாக்கெட் 200 முதல் 300 ரூபாய் வரை விற்கப்படுவதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
    • பெற்றோர் தங்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும்.

    அவிநாசி :

    அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா புழக்கம் இருப்பதாக தொடர்ந்து புகார் வருகிறது.பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒரு இளைஞரிடம் இருந்து கஞ்சா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.பனியன் நிறுவனங்களில் பணிநேரம் போக எஞ்சிய நேரத்தில் இதுபோன்று கஞ்சா வியாபாரம் செய்து வருகிறார் என்பது விசாரணையில் தெரிந்தது. 20 கிராம் கஞ்சா அடைக்கப்பட்ட பாக்கெட் 200 முதல் 300 ரூபாய் வரை விற்கப்படுவதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

    போலீசார் கூறுகையில், திருப்பூர் நகரம் மட்டுமின்றி, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் என பல இடங்களில் இருந்து கஞ்சா வாங்கி வருவதாக பிடிபடுபவர்கள் தெரிவிக்கின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கஞ்சாவுக்கு அடிமையாவது தான் வருத்தமளிக்கிறது, அவர்களது உடல், மனம் பாதிக்கும்.எனவே, பெற்றோர் தங்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி ஆசிரியர்களும், மாணவர்களை கண்காணிக்க வேண்டும். கஞ்சா பழக்கம் வைத்துள்ள மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து அவர்களை திருத்த வேண்டும் என்றனர்.

    • ஒரு குடும்பத்துக்கு தலா 3 தென்னங்கன்று வழங்கப்படுகிறது.
    • ஒவ்வொரு கிராமத்துக்கும் 5 கைத்தெளிப்பான், 5 பேட்டரி தெளிப்பான் வீதம் வழங்கப்பட்டுள்ளது.

    அவிநாசி :

    அரசின் ஒருங்கிணைந்த வேளாண் கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் அவிநாசி வட்டாரத்தில் கடந்த ஆண்டு , செம்பியநல்லூர், புதுப்பாளையம், நம்பியாம்பாளையம், சேவூர், பழங்கரை, ஆலத்தூர், பாப்பன்குளம் என, 7 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    இந்த கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருவது, நீர்வள ஆதாரங்களை பெருக்குவது, சூரிய சக்தி பம்ப் செட்டுகளுடன் நுண்ணீர் பாசன வசதி ஏற்படுத்துவது, வேளாண் விளைப் பொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துவது, ஊரக வளர்ச்சித்துறையின் மூலம், பண்ணைக்குட்டை அமைப்பது, கிராம வேளாண் உட்கட்டமைப்பு மேம்படுத்துவது போன்ற பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு கிராமத்திலும், 200 விவசாய குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒரு குடும்பத்துக்கு தலா 3 தென்னங்கன்று வழங்கப்படுகிறது. அவ்வகையில் ஒரு கிராமத்துக்கு, 600 வீதம் 7 கிராமங்களுக்கு 4,200 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு கிராமத்துக்கும் 5 கைத்தெளிப்பான், 5 பேட்டரி தெளிப்பான் வீதம் வழங்கப்பட்டுள்ளது. தானியப்பயிர் சாகுபடியை ஊக்குவிக்க, விவசாயிகளை ஒருங்கிணைத்து, 15 எக்டர் பரப்பளவுக்கு, மானிய விலையில் உளுந்து விதை வழங்கப்பட்டுள்ளது.அவிநாசி வேளாண்மை துறை உதவி இயக்குனர் அருள்வடிவு மேற்பார்வையில், தோட்டக்கலை உதவி அலுவலர்கள், தென்னங்கன்று வழங்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

    • புனித தோமையார் கத்தோலிக்க தேவாலயத்தில் கொடியேற்றத்துடன் ஆண்டுத்திருவிழா துவங்கியது.
    • 9 வாரங்களாக பிரதி ஞாயிறு தோறும் சிறப்பு நவநாள் திருப்பலி நடத்தப்பட்டது.

     அவிநாசி :

    அவிநாசி சேவூர் சாலையில் உள்ள புனித தோமையார் கத்தோலிக்க தேவாலயத்தில் கடந்த, 3ந்தேதி கொடியேற்றத்துடன் ஆண்டுத்திருவிழா துவங்கியது.நேற்று முன்தினம் திருவிழா கொண்டாடப்பட்டது.

    காலை 8:30 மணிக்கு கோவை நல்லாயன் குருத்துவ கல்லூரி பேராசிரியர் லாரன்ஸ் தலைமையில் தேவாலய பங்கு குரு கென்னடி முன்னிலையில் ஆடம்பர கூட்டுப்பாடல் திருப்பலி நடத்தப்பட்டது. திருப்பலி முடிவில் திவ்ய நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது. பின் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பாண்டு வாத்தியம் முழங்க புனித தோமையார் சுரூபம், தேவாலய வளாகத்தை சுற்றி பவனியாக எடுத்து வரப்பட்டது. முன்னதாக கடந்த 9 வாரங்களாக பிரதி ஞாயிறு தோறும் சிறப்பு நவநாள் திருப்பலி நடத்தப்பட்டது.

    கிறிஸ்தவர்கள் வணங்கும் ஏசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவராக இருந்த புனித தோமையாருக்கான தேவாலயம் கோவை கத்தோலிக்க மறை மாவட்ட அளவில் அவிநாசியில் மட்டுமே அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. இக்கோவில் கோபுரம் புதுப்பிப்பு பணி தற்போது நடந்து வரும் நிலையில் ஆண்டு விழா எளிமையாக நடத்தப்பட்டது.விழா ஏற்பாடுகளை பங்கு குரு, பங்கு பேரவையினர் , அன்பிய பொறுப்பாளர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

    • அவிநாசி மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.
    • மின் நுகா்வோா் கலந்துகொண்டு மின் சம்பந்தமான தங்களது குறைகளை தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம்.

    தாராபுரம் :

    அவிநாசியில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நாளை 13-ந்தேதி நடைபெற உள்ளது.

    இது குறித்து அவிநாசி கோட்ட செயற்பொறியாளா் விஜயஈஸ்வரன் கூறியதாவது:- அவிநாசி மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில், திருப்பூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் கலந்துகொண்டு மின் நுகா்வோா் குறைகளைக் கேட்டறிந்து நிவா்த்தி செய்ய உள்ளாா்.எனவே, இக்கூட்டத்தில் மின் நுகா்வோா் கலந்துகொண்டு மின் சம்பந்தமான தங்களது குறைகளை தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என்றாா்.

    பல்லடம் மின் பகிா்மான வட்டம், தாராபுரம் கோட்டத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நாளை நடைபெறுகிறது.இது குறித்து தாராபுரம் மின் வாரிய செயற்பொறியாளா் வ.பாலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பல்லடம் மின் பகிா்மான வட்டம், தாராபுரம் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் தாராபுரம் செயற்பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது.இக்கூட்டத்துக்கு பல்லடம் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் தலைமை வகிக்கிறாா்.இதில், மின் நுகா்வோா் கலந்துகொண்டு தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சோலார் பேனல் மற்றும் வால்வு பொருத்தும் பணி நடந்து வருகிறது.
    • கம்ப்யூட்டர் உதவியுடன் அறித்து அதற்கேற்ப தண்ணீர் திறந்துவிட முடியும்.

    அவினாசி,

    அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டப்பட உள்ளது. அவிநாசி நகரப்பகுதியில் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவச்சேரி, சாலைப்பாளையம் பகுதியிலுள்ள குளம், குட்டைகளில், அவுட்லெட் சென்சார் சிஸ்டம்எனப்படும் உபகரணம் பொருத்தப்பட்டுள்ளது.

    இதற்கான சோலார் பேனல் மற்றும் வால்வு பொருத்தும் பணி நடந்து வருகிறது.இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், குளத்தில் ஏற்கனவே உள்ள தண்ணீரின் அளவு, திட்டத்தின் படி திறந்து விடப்பட வேண்டிய தண்ணீரின் அளவு ஆகியவற்றை கம்ப்யூட்டர் உதவியுடன் அறித்து அதற்கேற்ப தண்ணீர் திறந்துவிட முடியும். குழாயில் ஆங்காங்கே ஏற்படும் அடைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை சரி செய்யும் போது, குழாய்கள் நீரோட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி பணி செய்ய வால்வு பொருத்தப்பட்டுள்ளது என்றனர்.

    ×