search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயிர்களை சேதப்படுத்தும் மான்கள் - விவசாயிகள் கவலை
    X

    கோப்புபடம்.

    பயிர்களை சேதப்படுத்தும் மான்கள் - விவசாயிகள் கவலை

    • உப்பு கரை நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளுக்கு 2 மான்கள் வந்தன.
    • கூட்டமாக நுழையும் மான்களை விவசாயிகளால் கட்டுப்படுத்த முடிவதில்லை.

    திருப்பூர் :

    சில ஆண்டுகளுக்கு முன் பொங்கலூர் கண்டியன்கோவில் பகுதியில் உள்ள உப்பு கரை நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளுக்கு 2 மான்கள் வந்தன.தற்போது அவை பல்கி பெருகி பெரும் கூட்டமாக உருவெடுத்துள்ளன.

    அவை விளை நிலங்களில் புகுந்து விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களை சேதப்படுத்துகின்றன. விவசாயிகளுக்கு இதனால் கணிசமான இழப்பு ஏற்படுகிறது. இரவு நேரங்களில் கூட்டமாக நுழையும் மான்களை விவசாயிகளால் கட்டுப்படுத்த முடிவதில்லை.இதே நிலை தொடர்ந்தால் இன்னும் பல மடங்கு பெருகிவிடும். மான்கள் கூட்டம் பெருகினால் விவசாயம் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படும்.

    அவற்றை பிடித்து வனப்பகுதியில் விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×