search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெறிநாய்கள்"

    • அண்மை காலமாக தோட்டத்தில் கட்டப்பட்டிருக்கும் ஆடுகளை வெறி நாய்கள் கடித்து கொல்லும் நிகழ்வு தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
    • நல்லம்மாள் என்பவருக்கு சொந்தமான 18 ஆடுகளை அவரது தோட்டத்தில் கட்டி இருந்தார். நள்ளிரவு நேரத்தில் அவரது தோட்டத்திற்குள் நுழைந்த வெறி நாய்கள், அங்கு கட்டிருந்த 8 ஆடுகளை கடித்து குதறி கொன்றது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் அண்மை காலமாக தோட்டத்தில் கட்டப்பட்டிருக்கும் ஆடுகளை வெறி நாய்கள் கடித்து கொல்லும் நிகழ்வு தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

    கடந்த சில வாரங்களில் மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் கொல்லப்பட்டதால் இப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தூர் ஊராட்சி, மேல்சித்தூர் பகுதியை சேர்ந்த பாலன் மனைவி நல்லம்மாள் என்பவருக்கு சொந்தமான 18 ஆடுகளை அவரது தோட்டத்தில் கட்டி இருந்தார். நள்ளிரவு நேரத்தில் அவரது தோட்டத்திற்குள் நுழைந்த வெறி நாய்கள், அங்கு கட்டிருந்த 8 ஆடுகளை கடித்து குதறி கொன்றது. மேலும் சில ஆடுகள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

    ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த பழனியம்மாள் குடும்பத்தினர் ஆடுகள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து வருவாய் துறை மற்றும் கால்நடை துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கால்நடை துறையினர். உயிரிழந்த 8 ஆடுகளை அப்புறப்படுத்தி, காயம் அடைந்த ஆடுகளுக்கு தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நைனிகா (வயது 2) என்ற பெண் குழந்தை தனது வீட்டின் வாசல் முன்பு விளையாடிக்கொண்டிருந்தாள்.
    • கதறல் சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஓேடாடி வந்து அங்குள்ள வெறி நாய்களை துரத்தினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகரம் பெரியாண்டிபாளையம் பிரிவு அருகே உள்ள ஆண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி, 2 பெண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று நைனிகா (வயது 2) என்ற பெண் குழந்தை தனது வீட்டின் வாசல் முன்பு விளையாடிக்கொண்டிருந்தாள்.

    அப்போது திடீரென 5 வெறிநாய்கள் அப்பகுதிக்கு வந்தது. வந்தவேகத்தில் குழந்தையை சரமாரியாக கடிக்க தொடங்கியது. இதில் குழந்தை வலி தாங்க முடியாமல் கதறினாள். கதறல் சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஓேடாடி வந்து அங்குள்ள வெறி நாய்களை துரத்தினர்.

    இதில் குழந்தைக்கு கை, கால் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே குழந்தையை திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • இதுவரை நூற்றுக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.
    • எந்த விலங்காக இருந்தாலும் அவற்றை பிடிக்கும் வகையில் வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

    குடிமங்கலம்:

    குடிமங்கலத்தையடுத்த கோட்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயி பெரியசாமி என்பவரது தோட்டத்து கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டிருந்த 14 ஆடுகள் மற்றும் ஒரு கன்றுக்குட்டி வெறிநாய்களால் கடித்து கொல்லப்பட்ட சம்பவம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,

    இதுவரை நூற்றுக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.ஆரம்ப காலத்தில் ஏதோ ஒரு மர்ம விலங்கு கடித்து குதறுவதாக எண்ணி வந்த நிலையில் கண்காணிப்புக் கேமரா மற்றும் நேரில் பார்த்தவர்கள் மூலம் நாய்கள் தான் இந்த வெறிச்செயலில் ஈடுபடுகின்றன என்று உறுதிப்படுத்தினர்.இதனால் வனத்துறையினர் இந்த பிரச்சினையிலிருந்து விலகி விட்டனர். தற்போது இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது யார் என்று தெரியாத நிலையில் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

    இப்போதும் விவசாயிகளுக்கு சில சந்தேகங்கள் இருக்கிறது. வீட்டுக்கு அருகில் கட்டப்பட்டிருக்கும் ஆடுகள் கடித்து குதறப்படும்போது ஏன் சத்தம் கேட்பதில்லை. காட்டு விலங்குகள் போல நாய்களும் சத்தமெழும்பாத வகையில் மூச்சுக் குழாயை கடித்து வேட்டையாடுமா? . கால்நடைகளை வேட்டையாடுவது நாய்கள்தானா? அல்லது ஏதேனும் வேட்டை விலங்குகளா என்பதை கண்டறியும் வகையில் முழுமையான ஆய்வுகள் செய்ய வேண்டும்.எந்த விலங்காக இருந்தாலும் அவற்றை பிடிக்கும் வகையில் வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.கால்நடைகளை வேட்டையாடும் விலங்குகளுக்கு குழந்தைகள் இலக்காகும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும் என்று விவசாயிகள் கூறினர்.

    • ஆட்டுப் பட்டிக்குள் 5 ஆடுகள் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தன.
    • கால்நடை மருத்துவரை வரவழைத்து காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தாா்.

    காங்கயம்:

    காங்கயம் அருகே சிவன்மலை, ராமபட்டினம் பகுதியைச் சோ்ந்தவா் மூா்த்தி (வயது 40). விவசாயியான இவா், 20 செம்மறி ஆடுகள் வளா்த்து வந்துள்ளாா். இந்த நிலையில் ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு, வீட்டுக்கு சென்றுள்ளாா்.காலை வந்து பாா்த்தபோது, ஆட்டுப் பட்டிக்குள் 5 ஆடுகள் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தன.

    மேலும் 5க்கும் மேற்பட்ட ஆடுகள் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன. இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த மூா்த்தி, கால்நடை மருத்துவரை வரவழைத்து காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தாா். வெறிநாய்கள் கடித்ததில் ஆடுகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கால்நடைகளைத் தாக்கி வரும் வெறிநாய்களைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். 

    • கடந்த ஒன்றரை வருடமாக கோரிக்கை விடுத்தும் புதிய ஈமகிரியை மண்டபம் அமைத்து தரவில்லை
    • நகராட்சி பகுதியில் சுற்றித் திரியும் பன்றிகளை விரைவில் பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சியின் சாதாரண கூட்டம் நகர் மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி தலைமையில் நடந்தது. நகராட்சி ஆணையர் வாசுதேவன், பொறியாளர் சித்ரா, நகரமைப்பு ஆய்வர் மரகதம், கணக்கர் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தர் ராஜகணேஷ் தீர்மானங்களை படித்தார்.

    கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு;-

    ரமாமணி (அ.தி.மு.க)- மாதம் தோறும் நகர் மன்ற கூட்டம் நடத்தப்பட வேண்டும். பொறை வாய்க்கால் பகுதியில் மின்விளக்குகள் ஏற்படுத்திட வேண்டும் . ராஜசேகர் (தே.மு.தி.க)- நகராட்சிக்குட்பட்ட பகுதியில் புதிதாக போடப்படும் சாலைகளுக்கு அந்தந்த பகுதியில் மதிப்பீட்டு, வேலையின் விபரம் அடங்கிய அறிவிப்பு பலகை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வைக்க வேண்டும்.

    ரேணுகா ( தி.மு.க)- எனது வார்டில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. உடனடியாக பன்றிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜாஜி தெருவில் பழுதடைந்த மோட்டாரை பழுது நீக்கம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    நித்யாதேவி:- மாரியம்மன் கோவில் தெருவில் புதிய தார் சாலை அமைக்க வேண்டும். பாலமுருகன்:- கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த கொசு மருந்து அடிக்க வேண்டும். கடந்த ஒன்றரை வருடமாக கோரிக்கை விடுத்தும் புதிய ஈமகிரியை மண்டபம் அமைத்து தரவில்லை. உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    வள்ளி (தி.மு.க)- மேட்டு தெருவில் சிமெண்ட் சாலை அமைக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. தெருவில் சுற்றித் திரியும் வெறி நாய்களை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்.

    சாமிநாதன் (தி.மு.க)- குப்பைகளை தினசரி அகற்ற வேண்டும். குப்பைகளை அகற்றும் தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு, நகராட்சி சார்பில் வழங்கப்படும் உபகரணங்கள் என்னென்ன? என்பதை கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    இதனை தொடர்ந்து இதற்கு பதில் அளித்து தலைவர் துர்கா பரமேஸ்வரி பேசும்போது :- நகராட்சி பகுதியில் 88 இடங்களுக்கு மின் கம்பி பொருத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்பொழுது வரவேண்டிய 123 புதிய மின்விளக்கு பிட்டிங்கில், 64 வந்துள்ளது. இதில் அனைத்து வார்டுகளுக்கும் பிரித்து அமைக்கப்படும். நகராட்சி பகுதியில் சுற்றித் திரியும் பன்றிகளை விரைவில் பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    நிதி நிலைமைக்கு ஏற்றவாறு அனைத்து வார்டு தேவைகளும் படிப்படியாக பூர்த்தி செய்யப்படும் என்றார்.

    • சந்தானம் அன்றாட வாழ்வாதாரத்திற்காக ஆடுகள் வளர்த்து வருகிறார்.
    • 12 ஆடுகளை கடித்து குதறிய நாய்கள் அடுத்த கட்டமாக மனிதரை தாக்கவும் வாய்ப்புள்ளது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சிறுமுலை கிராமத்தில் வசித்து வரும் சந்தானம்( 53) கூலி தொழிலாளி. இவர் அன்றாட வாழ்வாதாரத்திற்காக ஆடுகள் வளர்த்து வருகிறார். இவர் தனது வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் ஒரு கொட்டகை அமைத்து அதில் 15 ஆடுகளை கட்டி வைத்துள்ளார். நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் நேற்று அப்பகுதியில் உள்ள தெரு நாய்கள் ஆடுகளை கடித்துக் குதறி உள்ளது. இதில் 12 ஆடுகள் இறந்து போனது இறந்து போன ஆடுகள் மீதமுள்ள 3 ஆடுகளை ஒரு மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு இன்று காலை திட்டக்குடி காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்துள்ளார். இது போன்று அப்பகுதியில் தொடர்ந்து ஆடுகளை தெரு நாய்கள் வெகுவாக வேட்டையாடுவது தொடர் கதையாக உள்ளது.

    இது சம்பந்தமாக ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை நேரில் தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்ள வில்லை கூறி எட்டடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஒரே நாளில் 12 ஆடுகளை கடித்து குதறிய நாய்கள் அடுத்த கட்டமாக மனிதரை தாக்குவதற்கு முன்பு தெருநாய்களை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வெறிநாய்கள் கடித்து குதறியதில் 5 ஆடுகள் உயிரிழந்தன.
    • மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியம் பாவிடுதி ஊராட்சி பொன்னாகவுண்டனூரை சேர்ந்தவர் குணசேகரன் பட்டி போட்டு செம்மறியாடுகள் வளர்த்து வருகிறார். இவரது செம்மறியாடுகளை வெறிநாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழந்தன. 2 ஆடுகள் காயமடைந்தன. அதேபோல் பெருமாள் பட்டியில் இருந்த ஆடுகளை வெறிநாய்கள் கடித்ததில் 2 ஆடுகள் உயிரிழந்தன. 2 ஆடுகள் காயமடைந்தன. முள்ளிப்பாடி பகுதியில் கடந்த வாரம் வெறிநாய்கள் கடித்ததில் 17 ஆடுகள் உயிரிழந்துள்ளன. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் ஊராட்சி மன்றத்தலைவர் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. தரகம்பட்டி, ஆதனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் வெறிநாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழந்துள்ளன. மேலும் காயம் அடைந்தன.

    இதனால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வேல்முருகன் கூறுகையில், கடவூர் பகுதியில் விவசாயிகளின் வாழ்வாதாரமான கால்நடை வளர்ப்புக்கு இடையூறாக வெறிநாய்கள் உள்ளன. ஆடுகளை வெறிநாய்கள் கடிப்பதால் ஆடுகள் உயிரிழப்பு மற்றும் காயமடைகின்றன. வெறிநாய் தொல்லை அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

    • விவசாயிகளுக்கு பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
    • கிராமத்தின் அதிகபட்ச வழிகாட்டி மதிப்பை கணக்கில் கொண்டு இழப்பீடு வழங்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் கோட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆர்.டி.ஓ. பண்டரிநாதன் தலைமை தாங்கினார். திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், ஊத்துக்குளி, திருப்பூர் வடக்கு தாசில்தார்கள், வருவாய்த்துறையினர், விவசாயிகள் பங்கேற்றனர். விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஊத்துக்குளி தாலுகா புஞ்சை தளவாய்பாளையம், வடுகபாளையம், காவுத்தம்பாளையம், பல்லவராயன்பாளையம் கிராமங்களில் வெறிநாய் கடியால் ஆடுகள், கன்றுகள் ஏராளமானவை பலியாகி வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெறிநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஊத்துக்குளி, அவினாசி, பொங்கலூர் ஒன்றியங்களில் மான்கள் இனப்பெருக்கம் அதிகரித்து, கூட்டம் கூட்டமாக வந்து விவசாய பயிர்களை அழித்து வருகிறது. இதனால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கிறார்கள். இதை ஈடுகட்ட வனத்துறை இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயத்தை அழிக்கும் மான்களை அப்புறப்படுத்தி வனப்பகுதியில் விடவும், வனத்தில் இருந்து மான்கள் வெளியேறாத வகையிலும் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு வாரந்தோறும் கால்நடை மருத்துவர்கள் வந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

    அரசூர்-ஈங்கூர் உயர்மின் கோபுர திட்டத்தால் அவினாசி, திருப்பூர் வடக்கு, ஊத்துக்குளி தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பணிகளை தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழக அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலத்துக்கான இழப்பீடு எதுவும் வழங்கவில்லை. ஆனால் மின்வாரிய அதிகாரிகள் விவசாயிகளிடம் பொதுவாக பணம் கொடுப்பதாக கூறுகிறார்கள்.

    இழப்பீடு குறித்து தனித்தனி பட்டியல் வழங்கவும், வெளிப்படைத்தன்மை இருக்கவும் வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீடு தொகை அந்த கிராமத்தின் அதிகபட்ச வழிகாட்டி மதிப்பை கணக்கில் கொண்டு இழப்பீடு வழங்க வேண்டும். பொங்குபாளையம் ஊராட்சி காளம்பாளையம் ரேஷன் கடை பழுதடைந்த கட்டிடத்தில் செயல்படுகிறது. இதை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். பொங்குபாளையம் ஊராட்சியில் உள்ள குட்டையை தூர்வார வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    • அவினாசி சுற்றுவட்டார பகுதியில் கடும் வெப்பம் காணப்படுகிறது.
    • வனத்துறையினர் மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.

    அவினாசி:

    அவினாசி ஒன்றியம் தெக்கலூர், புதுப்பாளையம், சாமந்தங்கோட்டை உள்ளிட்ட காட்டுப்பகுதியில் ஏராளமான மான்கள் வசிக்கின்றன. இரைத்தேடியும், தண்ணீருக்காகவும் மான்கள் காட்டைவிட்டு வெளியேறும். அப்போது நாய்கள் மான்களை கடித்து குதறுகின்றன. கடந்த ஒரு மாத காலமாக அவினாசி சுற்றுவட்டார பகுதியில் கடும் வெப்பம் காணப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று தெக்கலூர் காட்டுப்பகுதியிலிருந்து இரண்டு மான்கள் தண்ணீர் தேடி தெக்கலூர் ஏரிப்பாளையத்தில் ஒரு கோவில் அருகே வந்துள்ளது. இதைப் பார்த்து அங்கிருந்த தெருநாய்கள் மான்களை துரத்தி சென்று கடித்துள்ளது. இதில் ஒரு மான்காட்டுக்குள் மறைந்து தப்பியது. மற்றொரு 4 வயது மான் நாய்கள் கடித்ததில் உயிரிழந்தது. தகவலறிந்த வனத்துறையினர் மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.

    ×