search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RABID DOGS"

    • அண்மை காலமாக தோட்டத்தில் கட்டப்பட்டிருக்கும் ஆடுகளை வெறி நாய்கள் கடித்து கொல்லும் நிகழ்வு தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
    • நல்லம்மாள் என்பவருக்கு சொந்தமான 18 ஆடுகளை அவரது தோட்டத்தில் கட்டி இருந்தார். நள்ளிரவு நேரத்தில் அவரது தோட்டத்திற்குள் நுழைந்த வெறி நாய்கள், அங்கு கட்டிருந்த 8 ஆடுகளை கடித்து குதறி கொன்றது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் அண்மை காலமாக தோட்டத்தில் கட்டப்பட்டிருக்கும் ஆடுகளை வெறி நாய்கள் கடித்து கொல்லும் நிகழ்வு தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

    கடந்த சில வாரங்களில் மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் கொல்லப்பட்டதால் இப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தூர் ஊராட்சி, மேல்சித்தூர் பகுதியை சேர்ந்த பாலன் மனைவி நல்லம்மாள் என்பவருக்கு சொந்தமான 18 ஆடுகளை அவரது தோட்டத்தில் கட்டி இருந்தார். நள்ளிரவு நேரத்தில் அவரது தோட்டத்திற்குள் நுழைந்த வெறி நாய்கள், அங்கு கட்டிருந்த 8 ஆடுகளை கடித்து குதறி கொன்றது. மேலும் சில ஆடுகள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

    ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த பழனியம்மாள் குடும்பத்தினர் ஆடுகள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து வருவாய் துறை மற்றும் கால்நடை துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கால்நடை துறையினர். உயிரிழந்த 8 ஆடுகளை அப்புறப்படுத்தி, காயம் அடைந்த ஆடுகளுக்கு தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நைனிகா (வயது 2) என்ற பெண் குழந்தை தனது வீட்டின் வாசல் முன்பு விளையாடிக்கொண்டிருந்தாள்.
    • கதறல் சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஓேடாடி வந்து அங்குள்ள வெறி நாய்களை துரத்தினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகரம் பெரியாண்டிபாளையம் பிரிவு அருகே உள்ள ஆண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி, 2 பெண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று நைனிகா (வயது 2) என்ற பெண் குழந்தை தனது வீட்டின் வாசல் முன்பு விளையாடிக்கொண்டிருந்தாள்.

    அப்போது திடீரென 5 வெறிநாய்கள் அப்பகுதிக்கு வந்தது. வந்தவேகத்தில் குழந்தையை சரமாரியாக கடிக்க தொடங்கியது. இதில் குழந்தை வலி தாங்க முடியாமல் கதறினாள். கதறல் சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஓேடாடி வந்து அங்குள்ள வெறி நாய்களை துரத்தினர்.

    இதில் குழந்தைக்கு கை, கால் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே குழந்தையை திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • பொதுமக்கள் கூறுகையில், கன்னியம்பட்டி மட்டுமல்லாது சின்னமனூர் சுற்றுவட்டார பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
    • இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் அச்சத்துடனேயே சாலையில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே கன்னியம்பட்டி நடுத்தெரு பகுதியில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதில் ஒரு நாய்க்கு வெறிபிடித்து சாலையில் ஆவேசமாக ஓடியது.

    அந்த பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி ரியாசினி மற்றும் வெள்ளத்தாய் என்ற 70 வயது மூதாட்டி உள்பட 4 பேரை கடித்து குதறியது. இதனைதொடர்ந்து அவர்கள் சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ரியாசினிக்கு காயம் பெரியஅளவில் இருந்ததால் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கன்னியம்பட்டி மட்டுமல்லாது சின்னமனூர் சுற்றுவட்டார பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

    இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் அச்சத்துடனேயே சாலையில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சிலர் ஆட்டோவில் பயணிக்கும் நிலையும் தொடர்ந்து வருகிறது. தெருநாய்களால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.

    எனவே இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

    • இதுவரை நூற்றுக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.
    • எந்த விலங்காக இருந்தாலும் அவற்றை பிடிக்கும் வகையில் வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

    குடிமங்கலம்:

    குடிமங்கலத்தையடுத்த கோட்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயி பெரியசாமி என்பவரது தோட்டத்து கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டிருந்த 14 ஆடுகள் மற்றும் ஒரு கன்றுக்குட்டி வெறிநாய்களால் கடித்து கொல்லப்பட்ட சம்பவம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,

    இதுவரை நூற்றுக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.ஆரம்ப காலத்தில் ஏதோ ஒரு மர்ம விலங்கு கடித்து குதறுவதாக எண்ணி வந்த நிலையில் கண்காணிப்புக் கேமரா மற்றும் நேரில் பார்த்தவர்கள் மூலம் நாய்கள் தான் இந்த வெறிச்செயலில் ஈடுபடுகின்றன என்று உறுதிப்படுத்தினர்.இதனால் வனத்துறையினர் இந்த பிரச்சினையிலிருந்து விலகி விட்டனர். தற்போது இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது யார் என்று தெரியாத நிலையில் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

    இப்போதும் விவசாயிகளுக்கு சில சந்தேகங்கள் இருக்கிறது. வீட்டுக்கு அருகில் கட்டப்பட்டிருக்கும் ஆடுகள் கடித்து குதறப்படும்போது ஏன் சத்தம் கேட்பதில்லை. காட்டு விலங்குகள் போல நாய்களும் சத்தமெழும்பாத வகையில் மூச்சுக் குழாயை கடித்து வேட்டையாடுமா? . கால்நடைகளை வேட்டையாடுவது நாய்கள்தானா? அல்லது ஏதேனும் வேட்டை விலங்குகளா என்பதை கண்டறியும் வகையில் முழுமையான ஆய்வுகள் செய்ய வேண்டும்.எந்த விலங்காக இருந்தாலும் அவற்றை பிடிக்கும் வகையில் வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.கால்நடைகளை வேட்டையாடும் விலங்குகளுக்கு குழந்தைகள் இலக்காகும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும் என்று விவசாயிகள் கூறினர்.

    • ஆட்டுப் பட்டிக்குள் 5 ஆடுகள் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தன.
    • கால்நடை மருத்துவரை வரவழைத்து காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தாா்.

    காங்கயம்:

    காங்கயம் அருகே சிவன்மலை, ராமபட்டினம் பகுதியைச் சோ்ந்தவா் மூா்த்தி (வயது 40). விவசாயியான இவா், 20 செம்மறி ஆடுகள் வளா்த்து வந்துள்ளாா். இந்த நிலையில் ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு, வீட்டுக்கு சென்றுள்ளாா்.காலை வந்து பாா்த்தபோது, ஆட்டுப் பட்டிக்குள் 5 ஆடுகள் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தன.

    மேலும் 5க்கும் மேற்பட்ட ஆடுகள் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன. இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த மூா்த்தி, கால்நடை மருத்துவரை வரவழைத்து காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தாா். வெறிநாய்கள் கடித்ததில் ஆடுகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கால்நடைகளைத் தாக்கி வரும் வெறிநாய்களைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். 

    • கடந்த ஒன்றரை வருடமாக கோரிக்கை விடுத்தும் புதிய ஈமகிரியை மண்டபம் அமைத்து தரவில்லை
    • நகராட்சி பகுதியில் சுற்றித் திரியும் பன்றிகளை விரைவில் பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சியின் சாதாரண கூட்டம் நகர் மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி தலைமையில் நடந்தது. நகராட்சி ஆணையர் வாசுதேவன், பொறியாளர் சித்ரா, நகரமைப்பு ஆய்வர் மரகதம், கணக்கர் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தர் ராஜகணேஷ் தீர்மானங்களை படித்தார்.

    கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு;-

    ரமாமணி (அ.தி.மு.க)- மாதம் தோறும் நகர் மன்ற கூட்டம் நடத்தப்பட வேண்டும். பொறை வாய்க்கால் பகுதியில் மின்விளக்குகள் ஏற்படுத்திட வேண்டும் . ராஜசேகர் (தே.மு.தி.க)- நகராட்சிக்குட்பட்ட பகுதியில் புதிதாக போடப்படும் சாலைகளுக்கு அந்தந்த பகுதியில் மதிப்பீட்டு, வேலையின் விபரம் அடங்கிய அறிவிப்பு பலகை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வைக்க வேண்டும்.

    ரேணுகா ( தி.மு.க)- எனது வார்டில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. உடனடியாக பன்றிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜாஜி தெருவில் பழுதடைந்த மோட்டாரை பழுது நீக்கம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    நித்யாதேவி:- மாரியம்மன் கோவில் தெருவில் புதிய தார் சாலை அமைக்க வேண்டும். பாலமுருகன்:- கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த கொசு மருந்து அடிக்க வேண்டும். கடந்த ஒன்றரை வருடமாக கோரிக்கை விடுத்தும் புதிய ஈமகிரியை மண்டபம் அமைத்து தரவில்லை. உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    வள்ளி (தி.மு.க)- மேட்டு தெருவில் சிமெண்ட் சாலை அமைக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. தெருவில் சுற்றித் திரியும் வெறி நாய்களை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்.

    சாமிநாதன் (தி.மு.க)- குப்பைகளை தினசரி அகற்ற வேண்டும். குப்பைகளை அகற்றும் தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு, நகராட்சி சார்பில் வழங்கப்படும் உபகரணங்கள் என்னென்ன? என்பதை கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    இதனை தொடர்ந்து இதற்கு பதில் அளித்து தலைவர் துர்கா பரமேஸ்வரி பேசும்போது :- நகராட்சி பகுதியில் 88 இடங்களுக்கு மின் கம்பி பொருத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்பொழுது வரவேண்டிய 123 புதிய மின்விளக்கு பிட்டிங்கில், 64 வந்துள்ளது. இதில் அனைத்து வார்டுகளுக்கும் பிரித்து அமைக்கப்படும். நகராட்சி பகுதியில் சுற்றித் திரியும் பன்றிகளை விரைவில் பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    நிதி நிலைமைக்கு ஏற்றவாறு அனைத்து வார்டு தேவைகளும் படிப்படியாக பூர்த்தி செய்யப்படும் என்றார்.

    • 15 வார்டுகள் உள்ளது. கடந்த சில நாட்களாக இந்த பகுதியில், தெரு நாய்கள் தொல்லை அதிகமாகி வருகிறது.
    • சுற்றியுள்ள கிராமங்களில் வெறிநாய்கள் பொதுமக்களை துரத்தி துரத்தி கடித்து வருகிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் பயந்து தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. கடந்த சில நாட்களாக இந்த பகுதியில், தெரு நாய்கள் தொல்லை அதிகமாகி வருகிறது.

    சாலையில் செல்லும் பொதுமக்களையும், ஆடு மற்றும் கன்று குட்டிகளையும் கடித்து வருவதால், தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டி பாதிக்கப்பட்டவர்கள் பரமத்தி பேரூராட்சி இளநிலை உதவியாளர் அண்ணாதுரையிடம் புகார் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பரமத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட இடங்களிலும் தெருநாய்கள் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. பரமத்தி கடைவீதி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் வெறிநாய்கள் பொதுமக்களை துரத்தி துரத்தி கடித்து வருகிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் பயந்து தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளா கின்றனர்.

    கடந்த 1-ந் தேதி வெள்ளாளபாளையம் ராமசாமி என்பவர் வீட்டில் புகுந்த வெறிநாய், 5 ஆடுகளை கடித்ததில், அவை இறந்து விட்டது. நேற்று வெள்ளாளபாளையம் பாலக்காடு பகுதியில் ராஜா என்பவர் மாட்டு கொட்டையில் புகுந்து ஒரு நாளே ஆன கன்று குட்டியை தெரு நாய்கள் கடித்ததில், அந்த கன்று குட்டி இறந்து விட்டது.

    மேலும் இந்த பகுதியில் வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகளையும் தினந்தோறும் நாய்கள் கடித்து விடுகிறது. எனவே பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் வெறி நாய்களை, கட்டுப்படுத்த பரமத்தி பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    • ஆடுகளை மர்ம விலங்கு கடித்து குதறியுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • கால்நடை டாக்டர் சிகிச்சை அளித்தார்.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே செம்மங்காளிபாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி பழனிசாமி. இவர் 15-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள், கோழிகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் பழனிசாமி நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு இரவு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை 6.30 மணிக்கு பட்டியில் அடைத்து வைத்திருந்த ஆடுகளை பார்க்க வந்துள்ளார். அப்போது 10 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து குதறியுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் 4 ஆடுகள் செத்துவிட்டன. 6 ஆடுகள் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. அவற்றை மீட்டு கால்நடை டாக்டர் சிகிச்சை அளித்தார்.

    ஆடுகளை கடித்து குதறிய மர்ம விலங்கு என்னவாக இருக்கும் என சந்தேகத்தில் காங்கயம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த காங்கயம் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் வெறிநாய்கள் கடித்தது போல் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.இதேபோல் ஊதியூர் பகுதியிலும் ஒரு விவசாயியின் பட்டியில் இருந்த ஒரு ஆட்டையும் மர்ம விலங்கு கடித்து கொன்று சிறிது தொலைவில் போட்டுவிட்டு சென்றுள்ளது. இதுகுறித்து காங்கயம் வனத்துறையினர் கூறும்போது " செம்மங்காளிப்பாளையம் மற்றும் ஊதியூர் பகுதியில் ஆடுகளை கடித்து குதறியது வெறிநாய்களாக இருக்க வாய்ப்புள்ளது. சிறுத்தையாக இருப்பதற்கு வாய்ப்பு குறைவு. இருப்பினும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் இதுவரை சிறுத்தை குறித்த உறுதியான தகவல் ஏதும் கிடைக்கவில்லை.சம்பந்தப்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதில் வெறிநாய்கள் தவிர வேறு ஏதாவது மர்ம விலங்கு நடமாட்டம் தெரிகிறதா? என கண்காணிக்க உள்ளோம். இருப்பினும் பொதுமக்கள் கவனமுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்றார். செத்துப்போன ஆடுகளின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவம் நடந்த இடமான காங்கேயம் நகராட்சி 15 வது வார்டு கவுன்சிலர் ஏ.சி. மணி சம்பவ இடத்தை பார்வையிட்டு விவசாயிக்கு ஆறுதல் கூறினார். இச்சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , விவசாயிக்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும் திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் மனு ஒன்றையும் அளித்தார்.

    • கிடையில் இருந்த 10 ஆடுகள் வெறிநாய்கள் கடித்து இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • வெறிநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா மல்லபுரம் ஊராட்சி பல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். விவசாயி. மேலும் இவர் சொந்தமாக கிடை அமைத்து ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று இரவு ஆடுகளை அடைத்து வைத்து விட்டு இன்று காலை அதனை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல முயன்றார். அப்போது கிடையில் இருந்த 10 ஆடுகள் இறந்து கிடந்தன. வெறிநாய்கள் அதனை கடித்து ெகான்று சென்றது தெரிய வந்தது.

    கிராமங்களில் இரவு நேரங்களில் வெறிநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் கால்நடைகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடும் கிடைப்பதில்லை.

    எனவே வெறிநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வெறிநாய்கள் கடித்து குதறியதில் 5 ஆடுகள் உயிரிழந்தன.
    • மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியம் பாவிடுதி ஊராட்சி பொன்னாகவுண்டனூரை சேர்ந்தவர் குணசேகரன் பட்டி போட்டு செம்மறியாடுகள் வளர்த்து வருகிறார். இவரது செம்மறியாடுகளை வெறிநாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழந்தன. 2 ஆடுகள் காயமடைந்தன. அதேபோல் பெருமாள் பட்டியில் இருந்த ஆடுகளை வெறிநாய்கள் கடித்ததில் 2 ஆடுகள் உயிரிழந்தன. 2 ஆடுகள் காயமடைந்தன. முள்ளிப்பாடி பகுதியில் கடந்த வாரம் வெறிநாய்கள் கடித்ததில் 17 ஆடுகள் உயிரிழந்துள்ளன. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் ஊராட்சி மன்றத்தலைவர் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. தரகம்பட்டி, ஆதனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் வெறிநாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழந்துள்ளன. மேலும் காயம் அடைந்தன.

    இதனால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வேல்முருகன் கூறுகையில், கடவூர் பகுதியில் விவசாயிகளின் வாழ்வாதாரமான கால்நடை வளர்ப்புக்கு இடையூறாக வெறிநாய்கள் உள்ளன. ஆடுகளை வெறிநாய்கள் கடிப்பதால் ஆடுகள் உயிரிழப்பு மற்றும் காயமடைகின்றன. வெறிநாய் தொல்லை அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

    ×