search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mad dogs"

    • ஒருசில இடங்களில் தெருநாய்கள் குழந்தைகளை விரட்டி, விரட்டி கடிக்கவும் செய்கின்றன.
    • குழந்தைகள், மாணவ-மாணவிகள் வெளியே வருவதற்கு அச்சப்படுகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநகரின் முக்கிய வீதிகள் மற்றும் சாலைகளில் கூட்டம், கூட்டமாக படையெடுத்து செல்லும் தெருநாய்கள் பொதுமக்களை தொடர்ந்து பதம் பார்த்து வருகின்றன.

     ஒருசில இடங்களில் தெருநாய்கள் குழந்தைகளை விரட்டி, விரட்டி கடிக்கவும் செய்கின்றன. வீதிகளில் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதியாக செல்ல முடியாமல் உயிரை கையில் பிடித்தபடியே ஒருவித அச்சத்துடனேயே போக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் சாலையோரம் படுத்திருக்கும் தெருநாய்கள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை திடீரென விரட்டுவதால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுவதுடன், விபத்து ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்பட காரணமாக அமைகிறது. இந்த நிலையில் திருப்பூர் அனுப்பர்பாளையம் தபால் அலுவலகம் வீதியில் கடந்த 2 நாட்களில் தொடர்ந்து இரவு நேரங்களில் வீடுகளில் இருந்த ஆட்டுக்குட்டி மற்றும் கோழிகளை தெருநாய்கள் கடித்து குதறி உள்ளன. இதில் மறுநாள் காலை ஆடு, கோழிகள் பரிதாபமாக செத்துக்கிடந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அனுப்பர்பாளையம்-ஆத்துப்பாளையம் சாலை, கோகுலம் காலணி, தபால் அலுவலகம் வீதி உள்பட அனுப்பர்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் தெருநாய்கள் கூட்டமாக வெறித்தனத்துடன் சுற்றி வருவதால் அப்பகுதி மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக குழந்தைகள், மாணவ-மாணவிகள் வெளியே வருவதற்கு அச்சப்படுகின்றனர்.இதேப்போல் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, நத்தக்காடையூர், வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளில் வெறிநாய் ஆடு , மாடுகளை கடித்து கொன்று வருகின்றன. குறிப்பாக கடந்த ஒரு வாரமாக வெறிநாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

     எனவே அந்த பகுதிகளில் சுற்றி திரியும் வெறிநாய்களை உடனடியாக பிடித்து செல்ல மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கீழக்கரையில் வெறி நாய்கள் நடமாட்டத்தால் மாணவ-மாணவிகள் பீதியடைந்துள்ளனர்.
    • கீழக்கரை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் வழக்கமாக பள்ளிக்கு நடந்து சென்று வந்தனர், தற்போது கீழக்கரையில் அனைத்து பகுதிகளிலும் வெறி நாய் வலம் வருவதால் அச்சமடைந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வாகனங்களில் பள்ளிக்கு அனுப்பி விடுகின்றனர்.

    மக்களை அச்சுறுத்தும் வெறி நாய்களை அப்புறப்படுத்த கீழக்கரை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை என பகிரங்க குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக நகராட்சி அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிலையில், கீழக்கரை நகர் மக்களை நாய் கடி தொல்லையில் இருந்து பாதுகாக்க தவறிய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கீழக்கரை பொதுமக்கள்

    100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • சந்தானம் அன்றாட வாழ்வாதாரத்திற்காக ஆடுகள் வளர்த்து வருகிறார்.
    • 12 ஆடுகளை கடித்து குதறிய நாய்கள் அடுத்த கட்டமாக மனிதரை தாக்கவும் வாய்ப்புள்ளது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சிறுமுலை கிராமத்தில் வசித்து வரும் சந்தானம்( 53) கூலி தொழிலாளி. இவர் அன்றாட வாழ்வாதாரத்திற்காக ஆடுகள் வளர்த்து வருகிறார். இவர் தனது வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் ஒரு கொட்டகை அமைத்து அதில் 15 ஆடுகளை கட்டி வைத்துள்ளார். நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் நேற்று அப்பகுதியில் உள்ள தெரு நாய்கள் ஆடுகளை கடித்துக் குதறி உள்ளது. இதில் 12 ஆடுகள் இறந்து போனது இறந்து போன ஆடுகள் மீதமுள்ள 3 ஆடுகளை ஒரு மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு இன்று காலை திட்டக்குடி காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்துள்ளார். இது போன்று அப்பகுதியில் தொடர்ந்து ஆடுகளை தெரு நாய்கள் வெகுவாக வேட்டையாடுவது தொடர் கதையாக உள்ளது.

    இது சம்பந்தமாக ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை நேரில் தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்ள வில்லை கூறி எட்டடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஒரே நாளில் 12 ஆடுகளை கடித்து குதறிய நாய்கள் அடுத்த கட்டமாக மனிதரை தாக்குவதற்கு முன்பு தெருநாய்களை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×