search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "eat"

    ஆசனூர் வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த புள்ளிமானை வேட்டையாடிய 10-க்கும் மேற்பட்ட செந்நாய்கள் ஒன்று சேர்ந்து கூட்டமாக மான் இறைச்சியை கடித்து குதறி சாப்பிட்டது.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசிக்கின்றன. குறிப்பாக பவானிசாகர், தலமலை, ஆசனூர் மற்றும் தாளவாடி வனப்பகுதியில் செந்நாய்கள் அதிகளவில் காணப்படுகிறது.

    செந்நாய்கள் எப்போதும் கூட்டமாக நடமாடுவதோடு மான் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டை யாடும்போது 10-க்கும் மேற்பட்ட நாய்கள் ஒன்று சேர்ந்து வேட்டையாடி பின்னர் இறைச்சியை உண்பது வழக்கம்.

    இந்நிலையில் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை யோரத்தில் ஆசனூர் வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த புள்ளி மானை வேட்டையாடிய 10-க்கும் மேற்பட்ட செந்நாய்கள் ஒன்று சேர்ந்து கூட்டமாக மான் இறைச்சியை கடித்து குதறி தின்றன.

    தற்போது பெய்த மழையால் ஆசனூர் வனப்பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது. இதனால் பசுமையாக இருந்து புற்களை சாப்பிட வரும் புள்ளிமான்களை செந்நாய்கள் கூட்டம் கூட்டமாக தாக்கி வேட்டையாடி வருகின்றன.

    உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வாழப்பாடியில் விவசாயிகள் மண்ணை சாப்பிடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சேலம் :

    தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உயர்மின் கோபுரங்கள் விவசாய நிலங்களில் அமைக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சேலம் மாவட்டம் வாழப்பாடியில் விவசாயிகள் நேற்று 12-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் 6-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதமும் இருந்தனர். தொடர்ந்து விவசாயிகள் மண்ணை சாப்பிடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள்.

    இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது:-

    வாழப்பாடியில் ஏற்கனவே விவசாய நிலங்களில் அமைக் கப்பட்ட மின் கோபுரங்களுக் காக உரிய இழப்பீடு தொகை வழங்கப்படாமல் உள்ளது. தற்போது மீண்டும் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படுகிறது. இதை கண்டித்து கடந்த 12 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எதிர்காலத்தில் விவசாயம் செய்ய வழியில்லாமல் போனால் அடுத்த தலைமுறை மண்ணைதான் சாப்பிட வேண்டி இருக்கும். இதை வலியுறுத்தி மண்ணை சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டோம். எங்களது கோரிக்கைகளை அரசு உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இந்த போராட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது பந்தலில் அமர்ந்திருந்த சிறுவனுக்கு மண்ணை ஊட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    ஸ்ரீமுஷ்ணம் அருகே கோவில் பிரசாதம் சாப்பிட்டு 40 பேர் மயங்கி விழுந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது குமாரகுடி குளத்து மேடு. இந்த கிராமத்தை சேர்ந்த சிலர் அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறார்கள்.

    அவர்கள் குளத்துமேட்டு பகுதியில் ஓலை கொட்டகை அமைத்து அதில் அய்யப்பசாமி படத்தை வைத்து பூஜை நடத்தி வந்தனர். நேற்று மாலை அங்கு கன்னி பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மற்றும் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    பூஜை மற்றும் பஜனை முடிந்தவுடன் பக்தர்களுக்கு பிரசாதமாக சர்க்கரை பொங்கல், புளியோதரை, சுண்டல் போன்றவை வழங்கப்பட்டது. பிரசாதம் சாப்பிட்டுவிட்டு அனைவரும் வீடுகளுக்கு சென்றனர். சிறிது நேரத்தில் பிரசாதம் சாப்பிட்டவர்களுக்கு திடீரென்று வாந்தி- மயக்கம் ஏற்பட்டது.

    உடனே அக்கம் பக்கத்தினர் மயங்கி விழுந்த விஜயகாந்த் (33), துரை (44), விஷால் (21), தமயந்தி (22), ராம்கி (28) உள்பட 40 பேரை 4 ஆம்புலன்சுகளில் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கோவில் பிரசாதம் சாப்பிட்டு 40 பேர் மயங்கி விழுந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வடமதுரையில் சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளர் தாக்கப்பட்டார்.

    வடமதுரை:

    வடமதுரை அருகே வேல்வார்கோட்டை புதுகளரம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் வடமதுரை ரெயில் நிலைய சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

    இங்கு செங்குளத்துப் பட்டியை சேர்ந்த மகாலிங்கம், போஜனம்பட்டியை சேர்ந்த முருகபெருமாள் ஆகியோர் உணவு சாப்பிட வந்துள்ளனர். விரும்பிய பொருட்களை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர்.

    பின்னர் சாப்பிட்டதற்கான பில் தொகையை செந்தில்குமார் அவர்களிடம் கேட்டுள்ளார். ஆனால் 2 பேரும் பணத்தை தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த மகாலிங்கம் மற்றும் முருகபெருமாள் செந்தில்குமாரை கடுமையாக தாக்கினர். படுகாயம் அடைந்த செந்தில்குமார் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து வடமதுரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சூரியதிலகராணி 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×