search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "debt"

    • வில்வம் மகன் செல்வகுமாரிடம் 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார்.
    • கடனாக கொடுத்த பணத்தை கேட்டும் திருப்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள சாத்தியம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி சீமாட்டி (33), இவர் திட்டக்குடி தாலுகா அரியநாச்சி கிராமத்தை சேர்ந்த வில்வம் மகன் செல்வகுமாரிடம் 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார். வாங்கிய கடனை செல்வக்குமார் பலமுறை திருப்பி கேட்டுள்ளார். அதில் ஒரு சில நேரங்களில் அசிங்கமாக திட்டியும் கடனாக கொடுத்த பணத்தை கேட்டும் திருப்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    கடந்த 9- ந் தேதி சீமாட்டியை அசிங்கமாக திட்டி வேப்பூர் பத்திரபதிவு அலுவலகத்திற்கு வர வழைத்து செல்வக்குமாரும் அவரது மனைவி விஷ்ணு பிரியாவும் சீமாட்டியை மிரட்டி கையால் அடித்து அவரது சொத்தை எழுதி வாங்கிவிட்டதாக வேப்பூர் போலீஸ் நிலையத்தில் சீமாட்டி புகார் அளித்தார். அதன் பேரில் வேப்பூர் போலிசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நமது தேசத்தின் மீது மாணவர்கள் அளவில்லா பற்று கொண்டிருக்க வேண்டும் என்றார்.
    • மாணவர்கள் நீங்கள் உங்கள் கடமைகளை நாட்டுக்காகவும், நாட்டின் பற்றின் மீதும் அதிகம் ஆர்வம் கொள்ள வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் தனியார் பள்ளி சார்பில் 1971-ம் ஆண்டு கால கட்டத்தில் பணியில் இருந்த போர் வீரர்களை கவுரவிக்கும் வகையில் வீரரைப் போற்றுவோம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக லெப்டினன்ட் ஜெனரல் ஏ.அருண் கலந்து கொண்டு முன்னாள் ராணுவ போர்வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசும்போது "போர் வீரர்கள் நாட்டுக்காக செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்தார்கள். அதேபோல் மாணவர்கள் நீங்கள் உங்கள் கடமைகளை நாட்டுக்காகவும், நாட்டின் பற்றின் மீதும் அதிகம் ஆர்வம் கொள்ள வேண்டும். மாணவர்கள் அனைவரும், அனைத்து துறைகளிலும் சிறந்தவர்களாக விளங்க வேண்டும். மேலும் இந்தியா ஒற்றுமைக்கு போர் வீரர்கள் மட்டும் காரணம் இல்லை, ஆசிரியர்கள் மருத்துவர்கள் மற்றும் அனைத்து துறையிலும் பணியாற்றுபவர்களும் முக்கிய காரணமாகும். நமது தேசத்தின் மீது மாணவர்கள் அளவில்லா பற்று கொண்டிருக்க வேண்டும் என்றார்.

    • கடன் வாங்கியவர்கள் பணத்தை செலுத்திய பிறகும் வீட்டு பத்திரங்களை கொடுக்காமல் கந்து வட்டி கேட்டு மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
    • ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கங்காதரனை கைது செய்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பெரிய மாயாகுளத்தை சேர்ந்தவர் கலீல் ரகுமான். இவர் ராமநாதபுரத்தில் மிளகாய் கமிசன் கடை வைத்திருந்த போது வட்டிக்கு பணம் கொடுக்கும் அதே பகுதியை சேர்ந்த கங்காதரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    கலீல் ரகுமான் மகளின் திருமணத்திற்கு பணம் தேவைப்பட்டதால் கங்காதரனிடம் சென்று பணம் கேட்டார். 100 ரூபாய்க்கு 1 ரூபாய் வட்டி வீதம் ரூ.4 லட்சம் பெற்று மாதம் தவறாமல் வட்டி செலுத்தி வந்துள்ளார்.

    உறவினர்களுக்கு பணம் தேவைபட்டால் வாங்கி கொடுங்கள் என்று கூறியதால் கலீல் ரகுமான் உறவினர்கள் மற்றும் ஊரில் உள்ள 19 பேருக்கு மொத்தம் ரூ.46 லட்சம் கடனாக பெற்றுகொடுத்தார். அந்த பணத்திற்கு பதிலாக 19 பேரின் வீட்டு பத்திரங்களை வாங்கி கொடுத்தார்.

    பின்னர் கொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டதால் பணம் வாங்கிய சிலர் வட்டி செலுத்த முடியாமல் போனதால் ரூ.100-க்கு 3 ரூபாய், 100 ரூபாய்க்கு 10 ரூபாய், 100 ரூபாய்க்கு 13 ரூபாய் வட்டி வீதமும் மற்றும் அபராத தொகையும் சேர்த்து ரூ.1 ½ கோடி கட்டினர்.

    பெரும்பாலானோர் அசல் தொகையை செலுத்தி விட்டதால் அசல் தொகை அனைத்தையும் வட்டி தொகையில் வரவு வைத்து தற்போது ரூ.50 லட்சம் தர வேண்டும் என்று கங்காதரன் மிரட்டியுள்ளார். பணம் பெற்றவர்கள் அசல் தொகை செலுத்தியதால் வீட்டு பத்திரத்தை திருப்பி கேட்டும் கொடுக்கவில்லை.

    ரூ.46 லட்சம் அசல் தொகைக்கு ரூ. 1 ½ கோடி செலுத்தியும் கங்காதரன் பத்திரத்தை கொடுக்காமல் அடியாட்களை வீட்டிற்கு அனுப்பி வைத்து மிரட்டி உள்ளார். இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரையிடம் கலீல் ரகுமான் மனைவி உம்முல் ஹபீபா புகார் செய்தார்.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கங்காதரனை கைது செய்தனர்.

    • நிதிநிறுவனம் நெருக்கடியால் அண்ணன் வாங்கிய கடனுக்கு தம்பி தற்கொலை செய்துகொண்டார்.
    • விழுப்பு ரம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் நேரடி விசாரணை நடத்தினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை வாணக்கார வீதியை சேர்ந்தவர் பாபுஜி (வயது 30). கட்டிட தொழிலாளி. இவரது சகோதரர் ரவிக்குமார். இவர் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு பாபுஜி விழுப்புரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் தனது பெயரில் கடன் வாங்கினார்.தற்போது தவணை கட்டும் தேதி வந்தது. எனவே, நிதிநிறுவன ஊழியர் மேகநாதன், கட்டிட தொழிலாளி பாபுஜி வீட்டுக்கு சென்றார். ஆனால், அவர் அங்கு இல்லை.

    அப்போது பாபுஜியின் சகோதரர் ரவிக்குமார் அங்கு வந்தார். அவரை பார்த்த நிதிநிறுவன ஊழியர் மேகநாதன் ஆபாசமாக திட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த ரவிக்குமார் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அப்போது அக்கம் பக்கம் உள்ளவர்கள் அங்கு வந்தனர். உயிருக்கு போராடிய ரவிக்குமாரை தூக்கி கொண்டு விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ரவிக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்துவிழுப்பு ரம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் நேரடி விசாரணை நடத்தினார். விசாரணையில் நிதிநிறுவன ஊழியர் நெருக்கடி கொடுத்ததால் ரவிக்குமார் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது.இது தொடர்பாக நிதிநிறுவன ஊழியர் மேகநாதனை போலீசார் தேடிவருகிறார்கள்.

    • பண்ருட்டி அருகே கடனை திருப்பி கேட்ட வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
    • ஏற்கனவே தரவேண்டிய பாக்கிபணத்தை சஞ்சீவிகேட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த அர்ஜுனன் கத்தியை எடுத்து காட்டி உள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே கட்டமுத்துபாளையம் கிராமத்தை ச்சேர்ந்தவர்சஞ்சீவி (வயது 53). இவர் அதே பகுதியில்பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு அதே பகுதியை சேர்ந்த அர்ஜுணன் என்பவர் வந்தார். அவர் ஏற்கனவே தரவேண்டிய பாக்கிபணத்தை சஞ்சீவிகேட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்தஅர்ஜுனன் வியாபாரியை சஞ்சீவியை அசிங்கமாக திட்டி கத்தியை எடுத்து காட்டிகொலை மிரட்டல் விடுத்து உள்ளார். இதுபற்றி புதுப்பேட்டை போலீசில் சஞ்சீவிகொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நந்தகுமார்சப்.இன்ஸ்பெக்ட ர்செல்வம்ஆகியோர் வழக்குப்பதிவுசெய்து கொலைமிரட்டல் விடுத்த அர்ஜுனனை தேடிவருகின்றனர்.

    வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த கோவை கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    நாகப்பட்டினம்:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பகுதி மாசாணி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 45) கூலி தொழிலாளி. இவர் கடந்த 24-ம் தேதி மாலை நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்துள்ளார். அப்போது பேராலயம் அருகே வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்த அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். மாரிமுத்து வி‌ஷம் குடித்த இடத்தில் அவர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் கடன் தொல்லை காரணமாகதான் தற்கொலை செய்து கொள்வதாக அவர் எழுதி இருந்தார். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கடனை திரும்ப செலுத்த முடியாத விவசாயிகளை சிறைக்கு அனுப்ப மாட்டோம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். #rahulgandhi #congress
    உத்தரபிரதேச மாநிலம் தாதாகஞ்ச் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, இப்போது கோடிகளில் கடன் வாங்கிய வர்த்தக பிரமுகர்கள் கடனை திரும்ப செலுத்தாவிட்டால் அவர்களை சிறைக்கு அனுப்புவதை தவிர்த்து நாட்டைவிட்டு பறந்துசெல்ல அனுமதிக்கிறார்கள்.

    அதேசமயம் ரூ.20 ஆயிரம் கடன் வாங்கிய விவசாயி கடனை திரும்ப செலுத்த முடியவில்லை என்றால் சிறையில் தள்ளி விடுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இது நடக்காது. கடனை செலுத்தாத பெரும்புள்ளிகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். கடனை செலுத்தாத ஒரு விவசாயி கூட சிறைக்கு அனுப்பப்படமாட்டார். 

    மத்தியபிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்து வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம். அதேபோன்று நாடு முழுவதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். #rahulgandhi #congress 
    முத்திரையர்பாளையத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை முத்திரையர் பாளையம் சேரன் நகர் கம்பன் வீதியை சேர்ந்தவர் பூங்காவனம். இவரது மனைவி சுதா. இவர்களது மகள் சூர்யா (வயது 18). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூங்காவனம் இறந்து விட்டார். இதனால் சுதா கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். இதற்கிடையே சூர்யாவுக்கு திருமண வயது எட்டியதால் அவருக்கு ஒரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்தார்.

    இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்ததால் திருமண செலவுக்காக சுதா பல இடங்களில் பணம் கடன் கேட்டார். ஆனால், அவர் கேட்ட இடங்களில் எல்லாம் பணம் இல்லை என்று கூறி விட்டனர்.

    சம்பவத்தன்று இதுபற்றி சுதா தனது மகள் சூர்யாவிடம் உனது ராசி என்ன ராசியோ கேட்ட இடங்களில் எல்லாம் பணம் தர மறுக்கிறார்கள் என கூறினார்.

    தாய் இதுபோன்று கூறியதால் சூர்யா மன முடைந்தார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் இருந்த எலி மருந்தை (வி‌ஷம்) தின்று விட்டார்.

    இதில், மயங்கி விழுந்த சூர்யாவை அவரது தாய் சுதா மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சூர்யா நேற்று இரவு பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இனியன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ராமநாதபுரம் அருகே கடனை கேட்டு துன்புறுத்தியதால் பா.ஜனதா நிர்வாகி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அருகேயுள்ள காருகுடியை சேர்ந்தவர் சவுந்திரபாண்டி (வயது42). லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் பா.ஜனதா கட்சியின், முன்னாள் ஒன்றிய பொதுச் செயலாளராக இருந்தவர். கடந்த சில நாட்களாக கடன் தொல்லையால் மன உளைச்சல் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் காருகுடி தென்னந்தோப்பு பகுதியில் வேப்ப மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்தார். அவர், ‘‘நான் பணப்பிரச்சினையால் கடன் வாங்கியிருந்தேன். என்னை அடித்து அவமானப்படுத்தியதால் மன வேதனையடைந்தேன். என்று கடிதம் எழுதி வைத்துள்ளார்.

    அவரது உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. இந்த நிலையில் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

    போலீசார் அவர்களிடம் சமரசம் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இது குறித்து அவரது மனைவி சாந்தி கொடுத்த புகாரின்பேரில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு தூண்டிய லாரி உரிமையாளர் பக்ருதீன், கலீல் மற்றும் சிலர் மீது பஜார் இன்ஸ்பெக்டர் தனபாலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விவசாயிகள் வருமானம், கடன் ஆகியவை குறித்து மத்திய அரசு இந்த ஆண்டு ஆய்வு நடத்த உள்ளது. #Agriculture #farmers #CentralGovernment
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படும் என்று மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. விவசாயிகளின் வருமானம், 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பு ஆக்கப்படும் என்றும் கூறியுள்ளது.



    இந்நிலையில், விவசாயிகள் நிலை குறித்து ஆய்வு செய்யப்போவதாக மத்திய அரசு நேற்று தெரிவித்தது. இதுபற்றி மத்திய வேளாண்துறை இணை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத், பாராளுமன்ற மக்களவையில் எழுத்துமூலம் கூறியதாவது:-

    தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு, இந்த ஆண்டு 77-வது சுற்று ஆய்வு நடத்த உள்ளது. அப்போது, விவசாய குடும்பங்களின் நிலை பற்றியும் ஆய்வு நடத்தப்படும்.

    விவசாய குடும்பங்களின் நிலை எப்படி இருக்கிறது என்பது பற்றிய விரிவான மதிப்பீடு அளிப்பதே இதன் நோக்கம். அதாவது, விவசாயிகளின் வருமானம், செலவு, கடன் ஆகியவை பற்றி இதில் கணக்கு எடுக்கப்படும்.

    இதற்கு முன்பு, 2012-2013-ம் சாகுபடி ஆண்டில்தான் இதுபோன்ற ஆய்வு நடத்தப்பட்டது. அதன் பிறகு இத்தகைய ஆய்வு நடத்தப்படாததால், விவசாயிகளின் வருமான அதிகரிப்பு பற்றிய தகவல் இல்லை.

    புதிய சூழ்நிலை, தேவை, நிதி ஆதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் இத்தகைய சோதனை நடத்தும் முடிவு எடுக்கப்படுகிறது.

    குடும்பங்களின் நுகர்வோர் செலவு, வேலைவாய்ப்பு-வேலைவாய்ப்பின்மை ஆகியவை பற்றி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு நடத்தப்படுகிறது.

    இவ்வாறு கஜேந்திரசிங் ஷெகாவத் கூறினார். #Agriculture #farmers #CentralGovernment

    வீட்டு கடன் பெற்றவர் திருப்பி செலுத்த முடியாமல் போவதற்கு கடும் நோய் (அ)இறப்பு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. அதுபோன்ற நிலையில் கடன் பெற்று வாங்கிய வீட்டின்மீது செய்யப்பட்ட காப்பீடு பெரும் உதவியாக இருக்கும்.
    வீட்டு கடன் பெறுவதன் மூலம் சொந்த வீடு வாங்குவதுதான் இன்றைய சூழலில் பெரும்பாலானோர் வழக்கமாக உள்ளது. அவ்வாறு பெறப்படும் கடனை மாத தவணைகளாக திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் 10 முதல் 25 வருடங்களாக இருக்கும் நிலையில் அந்த நீண்ட கால அவகாசத்தில் கடன் பெற்றவருக்கு ஏற்படக்கூடிய ஆரோக்கிய குறைவு அல்லது இறப்பு ஆகிய காரணங்களால் கடனை திருப்பி செலுத்துவது தடைபடலாம். அதன் காரணமாக அவர் குடும்பத்தினர் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகும் வாய்ப்பு உண்டு என்று நிதி ஆலோசகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

    உதவும் காப்பீட்டு திட்டங்கள்

    அவர்களது கருத்துப்படி, கடன் பெற்றவர் திருப்பி செலுத்த முடியாமல் போவதற்கு கடும் நோய் அல்லது இறப்பு ஆகிய இரண்டும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. அதுபோன்ற நிலையில் கடன் பெற்று வாங்கிய வீட்டின்மீது செய்யப்பட்ட காப்பீடு பெரும் உதவியாக இருக்கும் என்றும் ஆலோசகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    கடன் மறு சீரமைப்பு

    வீட்டு கடனை முற்றிலும் செலுத்தாத நிலையில் கடன்தாரருக்கு இறப்பு நேரிடும் பட்சத்தில் கடனுக்கான இணை விண்ணப்பதாரர் அல்லது அவரது சட்ட ரீதியான வாரிசு ஆகியோர் கடனை திருப்பி செலுத்தவேண்டும். அதுபோன்ற தருணங்களில் கடன் அளித்த நிதி நிறுவனம் அல்லது வங்கி ஆகியவற்றை அவர்கள் அணுகினால் விதிமுறைகளின்படி கடனை மறுகட்டமைப்பு செய்தோ அல்லது இ.எம்.ஐ செலுத்துவதற்கான கால அவகாச நீட்டிப்பு அளித்தோ உதவிகள் செய்ய வாய்ப்புகள் உண்டு.

    கூடுதல் தொகை காப்பீடு

    பெரும்பாலான வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் வீட்டு கடன் வழங்குவதற்கு முன்னர் போதுமான தொகைக்கு காப்பீடு செய்யும்படி வலியுறுத்துகின்றன. அத்தகைய நிலையில் வீட்டு கடனுக்கு ‘டெர்ம் காப்பீடு’ செய்யும் முன்னர் காப்பீட்டு தொகை, பெறப்பட்ட கடன் தொகையை விட அதிகமாக இருந்தால்தான் கடன் பெற்றவரது வாரிசுகளுக்கு சிக்கல்கள் ஏற்படாமல் தவிர்க்கப்படும்.

    வங்கிகள் அளிக்கும் சலுகைகள்

    காப்பீடு மூலம் கிடைத்த தொகை போதுமானதாக இல்லை என்ற நிலையில் கடனுக்கான சொத்தை விற்பதன் மூலம் நிலுவை தொகையை வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் திரும்ப பெறும் சூழல் ஏற்படலாம். ஆனால், வீட்டு கடனை பொறுத்தவரை வங்கிகள் உடனடியாக சொத்துக்களை விற்பனை செய்யும் வழிமுறைகளை மேற்கொள்வதில்லை.

    கடன் பெற்றவர்கள் அல்லது அவர்களது வாரிசுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கடன் மறு சீரமைப்பு அல்லது இ.எம்.ஐ செலுத்த கூடுதல் கால அவகாசம் போன்ற சலுகைகளை வழங்க முன் வருகின்றன.

    கடனோடு இணைந்த காப்பீடு

    வீட்டு கடன் தணைகளை செலுத்தும்போது வரக்கூடிய எதிர்பாராத சங்கடங்களை சமாளிக்க காப்பீடு அவசியம் என்ற நிலையில் வீட்டு கடன் அளிக்கும் நிறுவனங்கள் கடன் பெற்றவர்களுக்கு உதவும் விதமாக ‘பில்ட் இன்’ காப்பீடு திட்டங்களை அளிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
    தருமபுரியில் வாலிபரிடம் நகை கடை அதிபர் ஒருவர் ரூ.17 லட்சம் கடனுக்கு வாங்கிவிட்டு மனைவியுடன் தலைமறைவாகி விட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    தருமபுரி:

    தருமபுரி சூடாமணி தெருவைச் சேர்ந்தவர்குமார் (வயது 46). இவரது மனைவி நீலா. கடைவீதி பகுதியில் குமார் சொந்தமாக நகை கடை வைத்து நடத்தி வந்தார்.

    இவர் தருமபுரியை அடுத்த பழையதருமபுரி பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் வேலவன் என்பவரிடம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நகை கடையில் ஏற்பட்ட இழப்பை சரி செய்ய ரூ.17 லட்சம் கடனாக வாங்கினார்.

    கடன் வாங்கி 2 மாதங்களில் திருப்பி தருவதாக கூறிய குமார் பணத்தை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்தார். வேலவன் பலமுறை குமாரிடம் சென்று கேட்டபோது, பணம் தராமல் இழுத்தடித்து வந்தார்.

    கடந்த ஆகஸ்ட் மாதம் 19-ந் தேதி அவரது வீட்டிற்கு சென்று மீண்டும் பணத்தை திருப்பி தருமாறு வேலவன் கேட்டார். அப்போது அவரும், அவரது மனைவியும் வேலவனை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும் திருப்பி அனுப்பினர்.

    இதுகுறித்து தருமபுரி டவுன் போலீசாரிடம் வேலன் புகார் தெரிவித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாக தெரியவந்தது.

    இதனால் விரக்தியடைந்த அவர் ரூ.17 லட்சம் பணத்தை குமாரிடம் இருந்து மீட்டு தருமாறு தருமபுரி குற்றவியல் நீதிமன்றத்தில் வேலவன் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை நீதிபதி ஜீவாபாண்டியன் விசாரித்து குமார் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்க உத்தரவு விட்டார். நீதிபதி உத்தரவிட்டதன் பேரில் தருமபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் வேலவனிடம் பணம் மோசடி செய்த குமார் மற்றும் அவரது மனைவி மீது வழக்கு பதிவு செய்தார்.

    மேலும் கணவன்- மனைவி 2 பேரையும் விசாரிக்க போலீஸ் நிலையத்திற்கு அவர்களை அழைத்து வர குமார் வீட்டிற்கு போலீசார் சென்றனர்.

    அங்கு குமாரும், அவரது மனைவி நீலாவும் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டது தெரியவந்தது. பணம் மோசடி செய்து விட்டு தலைமறைவாக உள்ள கணவன்- மனைவி 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். #tamilnews
    ×