search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suicide by drinking poison"

    • ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
    • பிரேமா அடிக்கடி செத்துப் போய் விடுவதாக கூறிவந்துள்ளார்.

    கோபி, 

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த பொலவக்காளி பாளையம், பூசாரி வலசு பகுதியைச் சேர்ந்தவர் பிரேமா (60). கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பிரேமா வீட்டில் தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் இடது பக்க இருப்பில் பலத்த அடிபட்டு கோபியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் மாவு கட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    எனினும் வலி பொறுக்க முடியாமல் பிரேமா அடிக்கடி செத்துப் போய் விடுவதாக கூறிவந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வலி தாங்க முடியாமல் வீட்டிலிருந்த சாணிபவுடரை (விஷம்) குடித்து வாந்தி எடுத்தார். அக்கம் பக்கத்தி னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு கோபி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி பிரேமா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • மகனுடன் கருத்து வேறுபாடு

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள களபம் ஊராட்சி துவரன்கொல்லைப்பட்டி கிராமத்தைச்சேர்ந்தவர் பழனிவேல் (வயது 65 ) விவசாயியான இவருக்கும், மகனுடன் கருத்து வேறுபாடு நடந்துள்ளது. இதனால் மன விரக்தியில் இருந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை அருந்தி மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பழனிவேல் உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து ஆலங்குடி போலீ சில் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசரானை நடத்தி வருகிறார்.

    • நிதிநிறுவனம் நெருக்கடியால் அண்ணன் வாங்கிய கடனுக்கு தம்பி தற்கொலை செய்துகொண்டார்.
    • விழுப்பு ரம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் நேரடி விசாரணை நடத்தினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை வாணக்கார வீதியை சேர்ந்தவர் பாபுஜி (வயது 30). கட்டிட தொழிலாளி. இவரது சகோதரர் ரவிக்குமார். இவர் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு பாபுஜி விழுப்புரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் தனது பெயரில் கடன் வாங்கினார்.தற்போது தவணை கட்டும் தேதி வந்தது. எனவே, நிதிநிறுவன ஊழியர் மேகநாதன், கட்டிட தொழிலாளி பாபுஜி வீட்டுக்கு சென்றார். ஆனால், அவர் அங்கு இல்லை.

    அப்போது பாபுஜியின் சகோதரர் ரவிக்குமார் அங்கு வந்தார். அவரை பார்த்த நிதிநிறுவன ஊழியர் மேகநாதன் ஆபாசமாக திட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த ரவிக்குமார் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அப்போது அக்கம் பக்கம் உள்ளவர்கள் அங்கு வந்தனர். உயிருக்கு போராடிய ரவிக்குமாரை தூக்கி கொண்டு விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ரவிக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்துவிழுப்பு ரம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் நேரடி விசாரணை நடத்தினார். விசாரணையில் நிதிநிறுவன ஊழியர் நெருக்கடி கொடுத்ததால் ரவிக்குமார் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது.இது தொடர்பாக நிதிநிறுவன ஊழியர் மேகநாதனை போலீசார் தேடிவருகிறார்கள்.

    ×