search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewelery shop owner"

    • கடந்த 18-ந் தேதி மாலை 4 மணியளவில் நகைகடையில் ஊழியர்கள் ரஞ்சித் மணிகண்டன் ஆகியோர் இருந்தனர்.
    • அவர்கள் கையில் வைத்திருந்த கத்தி, உருட்டுகட்டை, பீர் பாட்டில்கள், கற்களை கொண்டு கடைகண்ணாடியை அடித்து உடைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை வைசாள் வீதியை சேர்ந்தவர் முருகன் (வயது 52) இவர் கொசக்கடைவீதியில் நகைக்கடை வைத்துள்ளார்.

    கடந்த 18-ந் தேதி மாலை 4 மணியளவில் நகைகடையில் ஊழியர்கள் ரஞ்சித் மணிகண்டன் ஆகியோர் இருந்தனர். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்தபடி கடைக்குள் புகுந்தனர்.

    அவர்கள் கையில் வைத்திருந்த கத்தி, உருட்டுகட்டை, பீர் பாட்டில்கள், கற்களை கொண்டு கடைகண்ணாடியை அடித்து உடைத்தனர். பின்னர் அங்கிருந்த பொருட்களை சூறையாடிவிட்டு உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து கடை உரிமையாளர் முருகன் பெரியகடை போலீசார் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நகை கடையை சூறையாடியதாக 8 பேரை போலீசார் கைது செய்தனர். நகைக்கடை உரிமையாளர் முருகனின் சம்மந்தி கடலூரில் வசித்து வருகிறார். அவர் சிலரிடம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை அவர் கட்டவில்லை என தெரிகிறது.

    இந்த பிரச்சனையில் முருகன் தனது சம்மந்திக்கு ஆதரவாக செயல் பட்டதால் எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் ஆத்திரமடைத்து முருகன் கடையை சூறையாடியதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    கைதானவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரியில் வாலிபரிடம் நகை கடை அதிபர் ஒருவர் ரூ.17 லட்சம் கடனுக்கு வாங்கிவிட்டு மனைவியுடன் தலைமறைவாகி விட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    தருமபுரி:

    தருமபுரி சூடாமணி தெருவைச் சேர்ந்தவர்குமார் (வயது 46). இவரது மனைவி நீலா. கடைவீதி பகுதியில் குமார் சொந்தமாக நகை கடை வைத்து நடத்தி வந்தார்.

    இவர் தருமபுரியை அடுத்த பழையதருமபுரி பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் வேலவன் என்பவரிடம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நகை கடையில் ஏற்பட்ட இழப்பை சரி செய்ய ரூ.17 லட்சம் கடனாக வாங்கினார்.

    கடன் வாங்கி 2 மாதங்களில் திருப்பி தருவதாக கூறிய குமார் பணத்தை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்தார். வேலவன் பலமுறை குமாரிடம் சென்று கேட்டபோது, பணம் தராமல் இழுத்தடித்து வந்தார்.

    கடந்த ஆகஸ்ட் மாதம் 19-ந் தேதி அவரது வீட்டிற்கு சென்று மீண்டும் பணத்தை திருப்பி தருமாறு வேலவன் கேட்டார். அப்போது அவரும், அவரது மனைவியும் வேலவனை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும் திருப்பி அனுப்பினர்.

    இதுகுறித்து தருமபுரி டவுன் போலீசாரிடம் வேலன் புகார் தெரிவித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாக தெரியவந்தது.

    இதனால் விரக்தியடைந்த அவர் ரூ.17 லட்சம் பணத்தை குமாரிடம் இருந்து மீட்டு தருமாறு தருமபுரி குற்றவியல் நீதிமன்றத்தில் வேலவன் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை நீதிபதி ஜீவாபாண்டியன் விசாரித்து குமார் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்க உத்தரவு விட்டார். நீதிபதி உத்தரவிட்டதன் பேரில் தருமபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் வேலவனிடம் பணம் மோசடி செய்த குமார் மற்றும் அவரது மனைவி மீது வழக்கு பதிவு செய்தார்.

    மேலும் கணவன்- மனைவி 2 பேரையும் விசாரிக்க போலீஸ் நிலையத்திற்கு அவர்களை அழைத்து வர குமார் வீட்டிற்கு போலீசார் சென்றனர்.

    அங்கு குமாரும், அவரது மனைவி நீலாவும் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டது தெரியவந்தது. பணம் மோசடி செய்து விட்டு தலைமறைவாக உள்ள கணவன்- மனைவி 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். #tamilnews
    ×