search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "marriage engagement"

    முத்திரையர்பாளையத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை முத்திரையர் பாளையம் சேரன் நகர் கம்பன் வீதியை சேர்ந்தவர் பூங்காவனம். இவரது மனைவி சுதா. இவர்களது மகள் சூர்யா (வயது 18). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூங்காவனம் இறந்து விட்டார். இதனால் சுதா கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். இதற்கிடையே சூர்யாவுக்கு திருமண வயது எட்டியதால் அவருக்கு ஒரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்தார்.

    இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்ததால் திருமண செலவுக்காக சுதா பல இடங்களில் பணம் கடன் கேட்டார். ஆனால், அவர் கேட்ட இடங்களில் எல்லாம் பணம் இல்லை என்று கூறி விட்டனர்.

    சம்பவத்தன்று இதுபற்றி சுதா தனது மகள் சூர்யாவிடம் உனது ராசி என்ன ராசியோ கேட்ட இடங்களில் எல்லாம் பணம் தர மறுக்கிறார்கள் என கூறினார்.

    தாய் இதுபோன்று கூறியதால் சூர்யா மன முடைந்தார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் இருந்த எலி மருந்தை (வி‌ஷம்) தின்று விட்டார்.

    இதில், மயங்கி விழுந்த சூர்யாவை அவரது தாய் சுதா மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சூர்யா நேற்று இரவு பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இனியன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண் உள்பட 3 பெண்கள் மற்றும் ஒரு கூலி தொழிலாளி என 4 பேர் மாயமாகி உள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண் உள்பட 3 பெண்கள் மற்றும் ஒரு கூலி தொழிலாளி என 4 பேர் மாயமாகி உள்ளனர். இதுபற்றிய விபரம் வருமாறு:-

    கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் பிச்சுமணி. இவரது மகள் முருகேஸ்வரி (வயது19). இவர் கடையநல்லூரில் உள்ள கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் முருகேஸ்வரிக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயம் செய்தனர்.

    நாளை மறுநாள் 13-ந்தேதி (புதன்கிழமை) திருமணம் நடக்க உள்ளது. இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி அதிகாலையில் வீட்டில் இருந்த முருகேஸ்வரியை காணவில்லை. இது குறித்து அவரது தந்தை பிச்சுமணி கடையநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேஸ்வரியை தேடி வருகிறார்கள்.

    நெல்லை தாழையூத்து சங்கர்நகரை சேர்ந்தவர் வெங்கட சுப்பிரமணியன். இவரது 17 வயது மகள் பாளையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 8-ந்தேதி கல்லூரிக்கு சென்ற மாணவி அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து வெங்கட சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாளையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள மேலசெவல் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர் ராஜ் (வயது56). இவரது மனைவி சரஸ்வதி (38). கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி ராதாபுரத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்ற சரஸ்வதி, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. தாய் வீட்டுக்கும் செல்லவில்லை. அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.

    இதுகுறித்து சுந்தர்ராஜ் முன்னீர்பள்ளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சரஸ்வதியை தேடி வருகிறார்கள்.

    களக்காடு அருகே உள்ள சிங்கிகுளத்தை அடுத்த தச்சங்குளம் பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது35), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஜெயலட்சுமி (33), கடந்த 3-ந்தேதி கூலி வேலைக்கு சென்ற சொக்கலிங்கம் வீடு திரும்ப வில்லை. இதுகுறித்து ஜெயலட்சுமி, களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சொக்கலிங்கத்தை தேடி வருகிறார்கள்.

    திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் 30 பவுன் நகையுடன் மாயமான சம்பவம் மன்னார்குடி பகுதி பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த ஒவல்குடியை சேர்ந்த சிற்றரசு என்பவரின் மகள் ரசிகா (வயது 23). பி.ஏ.பட்டதாரி. இவருக்கும் திருமக்கோட்டை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கடந்த 4-ந்தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரசிகா வெளிநாடு செல்வதாக வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு திடீரென மாயமாகி விட்டார். அவர் தனது பாஸ்போர்ட் மற்றும் 30 பவுன் நகை ரூ.35 ஆயிரம் மதிப்பிலான செல்போன் ஆகியவற்றையும் எடுத்து சென்று விட்டார்.

    அவரை பல இடங்களில் உறவினர்கள் தேடியும் அவர் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிற்றரசு வடுவூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரசிகா திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் மாயமாக என்ன காரணம்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் மன்னார்குடி பகுதி பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் திடீரென்று மாயமானார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    பேரையூர்:

    மதுரை அருகே உள்ள நல்லூர் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் பாத்தையா. இவரது மகள் காளீஸ்வரி (வயது21). இவருக்கும், பாறப்பட்டியைச் சேர்ந்த பூசாரி மகன் சின்னபூசாரி (24) என்பவருக்கும், கடந்த 11-ந்தேதி திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் நடந்தது. அன்று இரவு மணமகன் வீட்டின் அருகே உள்ள வீட்டில் காளீஸ்வரி தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் அதிகாலையில் திடீரென்று அவரை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த காளீஸ்வரியின் பெற்றோர் மற்றும் மணமகனின் உறவினர்கள் அந்த பகுதியில் காளீஸ்வரியை தேடினர். பலன் இல்லை.

    எனவே திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான காளீஸ்வரியை தேடி வருகிறார்கள். திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியது.

    கோவையில் 4 வயது சிறுமியை சில்மி‌ஷம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    வடவள்ளி:

    கோவை வீரகேரளம் தென்றல் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (26). இவர் பீளமேடு பகுதியில் போஸ்டர் ஒட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    மணிகண்டன் அப் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமியை சில்மி‌ஷம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அச் சிறுமி தனது தாயிடம் கூறினார். அவர் வடவள்ளி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் விரைந்து சென்று சிறுமியிடம் சில் மி‌ஷம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மணிகண்டனுக்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதால் நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்டது.

    திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரச்சலூர்:

    அரச்சலூர் அடுத்த கஸ்தூரிபா கிராமம் காலனியைச் சேர்ந்தவர் மணி. இவரது மகள் சசிகலா (வயது21). இவர் பி.எஸ்.சி முடித்துவிட்டு தற்போது திருப்பூர் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    இவரது பெற்றோர் கூலி வேலை பார்த்து வருகிறார்கள். ஒரே ஒரு தங்கை. பெயர் கார்த்திகா. பள்ளியில் படித்து வருகிறார்.

    நேற்று சசிகலா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். பெற்றோர் வேலைக்குச் சென்றுவிட்டனர். தங்கையும் பள்ளிக்கு சென்று விட்டார்.

    மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த தங்கை கார்த்திகா வீட்டின் கதவு தாழ்பாள் போட்டு இருப்பதை கண்டு கதவைத் திறக்கும்படி கூறினார்.

    ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினரை அழைத்தார். அவர்களும் கதவை தட்டினர். எனினும் கதவு திறக்கப்படவில்லை.

    இதனால் அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு சசிகலா தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார்.

    சசிகலாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து அரச்சலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சசிகலா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்

    திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது முத்துப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள அதஞ்சவிளாகத்தை சேர்ந்த கணேசன் என்பவர் மகள் காயத்ரி (வயது 18). கணேசன் இறந்து விட்டதால் அவரது மனைவி கூலிவேலைக்கு சென்று வந்தார். காயத்ரி பிளஸ்-2 வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். 

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காயத்ரிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த திருமணத்தில் அவருக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது. நேற்று வீட்டில் தனியாக இருந்த காயத்ரி தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகிய காயத்ரியை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். 

    இந்த பரிதாப சம்பவம் குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது முத்துப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நிச்சயதார்த்தம் இன்று நடைபெறும் நிலையில் இளம்பெண் மாயமான சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் சென்னை பைபாஸ் சாலை ஆட்டோ நகரை சேர்ந்தவர் ராஜன் தொழில் அதிபர். இவரது மகள் லட்சுமி (வயது 24) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் பி.எஸ்.சி. படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் லட்சுமிக்கும் கும்பகோணம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுவதாக இருந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த லட்சுமி வெளியே சென்றுவிட்டு வருவதாக புறப்பட்டு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவரை காணவில்லை.

    இதையடுத்து கும்பகோணம் தாலுக்கா போலீசில் லட்சுமியின் தாய் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான லட்சுமியை தேடி வருகிறார்கள்.

    இன்று நிச்சயதார்த்தம் நடைபெறும் நிலையில் இளம்பெண் மாயமான சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கும்பகோணத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மற்றும் கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் இருவரையும் தேடி வருகிறார்கள்.

    கும்பகோணம்:

    கும்பகோணம், செட்டி மண்டபம் அருகே உள்ள கணேஷ் நகரை சேர்ந்தவர் வடிவேலன். இவரது மனைவி நாகலட்சுமி. இவருடைய சகோதரி ரேவதி (வயது 19). கும்பகோணத்தில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார்.

    ரேவதி, அவரது அக்கா நாகலட்சுமியின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருக்கும், ஒரு வாலிபருக்கும் இடையே திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 17-ந் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

    இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி மில்லிற்கு வேலைக்கு சென்ற ரேவதி அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த நாகலட்சுமி, ரேவதியை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்க வில்லை.

    இதையடுத்து நாகலட்சுமி கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மாயமான ரேவதியை தேடி வருகின்றனர்.

    இதேபோல் மயிலாடுதுறை அருகே காவேரிகரைப் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினவேல். இவரது மகள் கவுசல்யா என்கிற ரங்கநாயகி. இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் பால்டெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற கவுசல்யா மாலையில் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ரத்தினவேல் கவுசல்யா செல்போனிற்கு தொடர்பு கொண்டார். ஆனால் செல்போன் ஆப் செய்திருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரத்தினவேல் பல இடங்களில் தேடி பார்த்தார் எங்கும் கிடைக்க வில்லை.

    இதனால் ரத்தினவேல் கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    ×