search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரச்சலூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் திடீர் தற்கொலை
    X

    அரச்சலூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் திடீர் தற்கொலை

    திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரச்சலூர்:

    அரச்சலூர் அடுத்த கஸ்தூரிபா கிராமம் காலனியைச் சேர்ந்தவர் மணி. இவரது மகள் சசிகலா (வயது21). இவர் பி.எஸ்.சி முடித்துவிட்டு தற்போது திருப்பூர் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    இவரது பெற்றோர் கூலி வேலை பார்த்து வருகிறார்கள். ஒரே ஒரு தங்கை. பெயர் கார்த்திகா. பள்ளியில் படித்து வருகிறார்.

    நேற்று சசிகலா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். பெற்றோர் வேலைக்குச் சென்றுவிட்டனர். தங்கையும் பள்ளிக்கு சென்று விட்டார்.

    மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த தங்கை கார்த்திகா வீட்டின் கதவு தாழ்பாள் போட்டு இருப்பதை கண்டு கதவைத் திறக்கும்படி கூறினார்.

    ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினரை அழைத்தார். அவர்களும் கதவை தட்டினர். எனினும் கதவு திறக்கப்படவில்லை.

    இதனால் அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு சசிகலா தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார்.

    சசிகலாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து அரச்சலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சசிகலா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்

    Next Story
    ×