search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்துப்பேட்டை அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
    X

    முத்துப்பேட்டை அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

    திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது முத்துப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள அதஞ்சவிளாகத்தை சேர்ந்த கணேசன் என்பவர் மகள் காயத்ரி (வயது 18). கணேசன் இறந்து விட்டதால் அவரது மனைவி கூலிவேலைக்கு சென்று வந்தார். காயத்ரி பிளஸ்-2 வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். 

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காயத்ரிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த திருமணத்தில் அவருக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது. நேற்று வீட்டில் தனியாக இருந்த காயத்ரி தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகிய காயத்ரியை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். 

    இந்த பரிதாப சம்பவம் குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது முத்துப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×