என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயம்
Byமாலை மலர்17 Sep 2018 11:16 AM GMT (Updated: 17 Sep 2018 11:16 AM GMT)
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் திடீரென்று மாயமானார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
பேரையூர்:
மதுரை அருகே உள்ள நல்லூர் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் பாத்தையா. இவரது மகள் காளீஸ்வரி (வயது21). இவருக்கும், பாறப்பட்டியைச் சேர்ந்த பூசாரி மகன் சின்னபூசாரி (24) என்பவருக்கும், கடந்த 11-ந்தேதி திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் நடந்தது. அன்று இரவு மணமகன் வீட்டின் அருகே உள்ள வீட்டில் காளீஸ்வரி தங்கி இருந்தார்.
இந்த நிலையில் அதிகாலையில் திடீரென்று அவரை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த காளீஸ்வரியின் பெற்றோர் மற்றும் மணமகனின் உறவினர்கள் அந்த பகுதியில் காளீஸ்வரியை தேடினர். பலன் இல்லை.
எனவே திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான காளீஸ்வரியை தேடி வருகிறார்கள். திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X