என் மலர்

    நீங்கள் தேடியது "bride missing"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணப்பெண் ஜவுளிக்கடையில் இருந்து திடீரென்று மாயமான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • கார்த்திகேயன் கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் மாயமான பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    திருச்சி:

    தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அக்ரகாரம் விஷ்ணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 60). இவரது மகள் வைஷ்ணவி (26). என்ஜினீயரிங் படித்து முடித்துள்ள இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் பெற்றோர் மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்தனர். இந்த திருமணம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுவதாக இருந்தது. இதற்கிடையே நேற்று கார்த்திகேயன் மற்றும் குடும்பத்தினர் வைஷ்ணவியை அழைத்துக் கொண்டு திருச்சியில் உள்ள ஒரு ஜவுளி கடைக்கு முகூர்த்த புடவைகள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆடைகள் எடுப்பதற்காக வந்தனர். பின்னர் அவர்கள் துணி தேர்வு செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது வைஷ்ணவி கழிவறைக்கு சென்று வருவதாக கூறிச்சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திகேயன் உள்ளிட்ட உறவினர்கள் வைஷ்ணவியை ஜவுளிக்கடை முழுவதும் தேடிப் பார்த்தனர். ஆனால் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

    நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணப்பெண் ஜவுளிக்கடையில் இருந்து திடீரென்று மாயமான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இது தொடர்பாக கார்த்திகேயன் கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் மாயமான பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    பெற்றோரின் விருப்பத்திற்காக மனமின்றி திருமணத்திற்கு சம்மதித்தாரா? அல்லது யாரையாவது காதலித்து வந்தாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் சென்னை, திருச்சி, தஞ்சாவூரில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாகூர் அருகே திருமணமான 1½ மாதத்தில் புதுப்பெண் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாகூர்:

    பாகூரை அடுத்த பெரியகாட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகவேல் (வயது 28). கட்டிட தொழிலாளி. இவருக்கும், பாகூரை அடுத்த குடியிருப்புபாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ராமமூர்த்தியின் மகள் செரினா (25) என்பவருக்கும் கடந்த 1½ மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.

    திருமணம் முடிந்ததும் முருகவேல் தனது மாமனார் வீட்டில் தங்கி இருந்து வந்தார்.

    இந்த நிலையில் செரினாவுக்கு தனது கணவரை பிடிக்கவில்லை என்று தெரிகிறது. கடந்த 23-ந்தேதி செரினா பாகூரில் உள்ள மார்க்கெட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்றார்.

    அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த தந்தை ராமமூர்த்தி பல இடங்களில் தனது மகளை தேடினார். எங்கும் அவரை காணவில்லை. இதனை தொடர்ந்து ராமமூர்த்தி பாகூர் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள்மணி வழக்குபதிவு செய்து மாயமான புதுப்பெண் செரினாவை தேடி வருகிறார்.

    திருமணமான 1½ மாதத்தில் புதுப்பெண் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நெல்லை மாவட்டத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண் உள்பட 3 பெண்கள் மற்றும் ஒரு கூலி தொழிலாளி என 4 பேர் மாயமாகி உள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண் உள்பட 3 பெண்கள் மற்றும் ஒரு கூலி தொழிலாளி என 4 பேர் மாயமாகி உள்ளனர். இதுபற்றிய விபரம் வருமாறு:-

    கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் பிச்சுமணி. இவரது மகள் முருகேஸ்வரி (வயது19). இவர் கடையநல்லூரில் உள்ள கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் முருகேஸ்வரிக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயம் செய்தனர்.

    நாளை மறுநாள் 13-ந்தேதி (புதன்கிழமை) திருமணம் நடக்க உள்ளது. இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி அதிகாலையில் வீட்டில் இருந்த முருகேஸ்வரியை காணவில்லை. இது குறித்து அவரது தந்தை பிச்சுமணி கடையநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேஸ்வரியை தேடி வருகிறார்கள்.

    நெல்லை தாழையூத்து சங்கர்நகரை சேர்ந்தவர் வெங்கட சுப்பிரமணியன். இவரது 17 வயது மகள் பாளையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 8-ந்தேதி கல்லூரிக்கு சென்ற மாணவி அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து வெங்கட சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாளையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள மேலசெவல் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர் ராஜ் (வயது56). இவரது மனைவி சரஸ்வதி (38). கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி ராதாபுரத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்ற சரஸ்வதி, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. தாய் வீட்டுக்கும் செல்லவில்லை. அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.

    இதுகுறித்து சுந்தர்ராஜ் முன்னீர்பள்ளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சரஸ்வதியை தேடி வருகிறார்கள்.

    களக்காடு அருகே உள்ள சிங்கிகுளத்தை அடுத்த தச்சங்குளம் பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது35), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஜெயலட்சுமி (33), கடந்த 3-ந்தேதி கூலி வேலைக்கு சென்ற சொக்கலிங்கம் வீடு திரும்ப வில்லை. இதுகுறித்து ஜெயலட்சுமி, களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சொக்கலிங்கத்தை தேடி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தருமபுரி அருகே புதுப்பெண் மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் மாரவாடி அருகே உள்ள பழையூர் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசன் (வயது 27). இவர் தனியார் டிராக்டர் கம்பெனி நிறுவனத்தில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் வெள்ளாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த நவீனா என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.

    சம்பவத்தன்று கணவன்- மனைவி 2 பேரும் முத்தம் பட்டியில் உள் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றுவிட்டு வரும் வழியில் ஒரு ஓட்டலுக்கு சாப்பிடுவதற்காக சென்றனர். அப்போது தான் கழிவறைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற நவீனா நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை.

    இதனால் பதறிப்போன கணவர் அன்பரசன் பல இடங்களில் தேடி பார்த்தார். எங்கும் தேடியும் நவீனா கிடைக்காததால் அவர் மாயமானது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து அன்பரசன் தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணப்பெண் மாயமான சம்பவம் கடையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கடையம்:

    நெல்லை மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்தவர் பார்வதிநாதன். இவரது மகள் ஜான்சி (வயது 22). இவர் தென்காசி அருகேயுள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வருகிறார். இவருக்கும் கடையம் அருகே உள்ள சேர்வைகாரன்பட்டி மயிலானூரை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

    இன்று கடையத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் அவர்களது திருமணம் நடப்பதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இரு வீட்டாரும் திருமண அழைப்பிதழ்கள் அச்சிட்டு உறவினர்களுக்கு வழங்கினர்.

    திருமணத்திற்கு மணமகன் வீட்டார் இன்று காலை கடையத்துக்கு புறப்பட்டு நின்றனர். மணமகளை அலங்காரம் செய்வதற்காக உறவினர்கள் மணப்பெண்ணை கூப்பிட சென்றனர். அப்போது மணப்பெண் ஜான்சியை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இதனால் திருமண வீட்டாரும், அங்கு வந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். திருமண வீடு களை இழந்தது. இது குறித்து கடையம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஜான்சி எங்கு சென்றார்? திருமணம் பிடிக்காமல் சென்றாரா? அல்லது அவரை யாரும் கடத்தி சென்றார்களா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணப்பெண் மாயமான சம்பவம் கடையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பவானிசாகர் தொகுதி அதிமுக எம்எல்ஏவுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் வீட்டை விட்டு சென்றதால் வேறு வரன் பார்த்து 2 மாதத்தில் திருமணம் செய்ய எம்எல்ஏ வீட்டார் முடிவு செய்துள்ளனர். #ADMK #EswaranMLA
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஈஸ்வரன் (வயது 43).

    இவருக்கும் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள பனையம் பள்ளியை சேர்ந்த சந்தியா (23) என்ற பட்டாதாரி பெண்ணுக்கும் இன்று (புதன்கிழமை) சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியம்மன் கோவிலில் திருமணம் நடக்க இருந்தது.

    திருமணம் நடக்க 9 நாட்கள் இருந்த நிலையில் மணமகள் சந்தியா திடீரென மாயமானார். அக்கா வீட்டுக்கு போவதாக கூறி விட்டு சென்றவர் மாயமாகி விட்டார். நண்பருடன் சென்று விட்டதாகவும் அவரை மீட்டு தர வேண்டும் என அவரது தாயாரே கடத்தூர் போலீசில் புகார் செய்தார்.

    எம்.எல்.ஏ.வுடனான திருமணம் பிடிக்காத மணமகள் சந்தியா மணப்பாறையில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. போலீசார் மணப்பாறை சென்று புதுப்பெண் சந்தியாவை மீட்டு வந்தனர்.

    அப்போது சந்தியா கூறும் போது, ‘‘எம்.எல்.ஏ.வுக்கு வயது அதிகம் என்பதால் எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. பெற்றோர் என்னை கட்டாயப்படுத்தியதால் வீட்டை விட்டு சென்றேன்’’ என வாக்குமூலத்தில் கூறி இருந்தார்.

    சந்தியா

    இதையொட்டி திருமணம் நிச்சயிக்கப்பட்ட அதே நாளில் (இன்று) எப்படியும் வேறு ஒரு நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்ய எம்.எல்.ஏ. மற்றும் அவரது உறவினர்களும் தீவிரமாக இருந்தனர்.

    திருமணத்துக்கு தமிழக முதல்- அமைச்சர், துணை முதல்- அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ள இருந்ததால் பெண் பார்க்கும் படலம் முடுக்கி விடப்பட்டது. ஆனால் நாட்கள் மிகவும் குறைவாக இருந்ததால் பெண் பார்த்து முடிவு செய்ய தாமதம் ஏற்பட்டது.

    எப்படியும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளில் நடத்தி காட்ட வேண்டும் என்ற எம்.எல்.ஏ. தரப்பினர் முயற்சி நடக்கவில்லை. இன்று ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வுக்கு திருமணம் நடக்கவில்லை.

    இன்னும் 2 மாதத்தில் அதாவது ஐப்பசி மாதத்தில் நல்ல வரன் பார்த்து எம்.எல்.ஏ.வுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். #ADMK #EswaranMLA
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தஞ்சையில் இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுப்பெண் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மானோஜிப்பட்டி அருள்பிரகாஷ் நகரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி பிரேமலதா. இவர்களது மகள் ராகப்பிரியா (வயது 25). இவர் எம்.எஸ்சி, எம்.பில் படித்துள்ளார்.

    இந்த நிலையில் ராகப்பிரியாவுக்கும், தஞ்சை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திருமணம் பேசி நிச்சயத்தார்த்தம் செய்யப்பட்டு இருந்தது. இவர்களது திருமணம் இன்று தஞ்சையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்தது.

    இதனால் இருவீட்டார் குடும்பத்தினரும் திருமண ஏற்பாடுகளை தடபுடலாக செய்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று புதுப்பெண் ராகப்பிரியா, தனது தாய் பிரேமலதாவிடம் வெளியே சென்று விட்டு வருவதாக கூறி விட்டு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் பிரேமலதா, மகளை பல இடங்களில் தேடி பார்த்தார். எந்த தகவலும் இல்லாததால் , தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மணமகள் ராகப்பிரியா, திருமணத்தில் விருப்பம் இல்லாமல் மாயமாகி விட்டாரா? அல்லது காதல் விவகாரத்தில் சென்று விட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    மணமகள் திடீரென மாயமாகி விட்டதால் இன்று நடக்க இருந்த திருமணம் நின்றுபோனது. இதனால் இருவீட்டார் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வருகிற 12-ந்தேதி திருமணம் நடக்க உள்ள நிலையில் நகை, பணத்துடன் புதுப்பெண் மாயமான சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஞானரூபி பரிமளா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் முப்பிடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வடிவேலு. இவரது மகள் கார்த்திகை ஜோதி. பட்டதாரி. இவருக்கும் சிவகாசி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற 12-ந்தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதற்கான வேலைகள் நடைபெற்று வந்தன. இந் நிலையில் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக வடிவேலு குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது வீட்டில் கார்த்திகை ஜோதி மட்டும் இருந்தார். பின்னர் அழைப்பிதழை கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் கார்த்திகை ஜோதியை காணவில்லை.

    மேலும் வீட்டில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த 8 பவுன் நகைகள், ரூ.48 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் துணிமணிகள் ஆகியவையும் மாயமாகி இருந்தன. அக்கம்பக்கம் உள்ளிட்ட உறவினர் வீடுகளில் தேடியும் அவரை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த வடிவேலு இதுகுறித்து கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகளை குமந்தாபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான செல்வம், அவரது மனைவி சிவகாமி, அவர்களது மகன் சூர்யா (23) ஆகியோர் சேர்ந்து கடத்தி உள்ளதாக தெரிகிறது என கூறியிருந்தார்.

    இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஞானரூபி பரிமளா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் புதுப்பெண் கடத்தப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஈஸ்வரனுக்கு நிச்சயிக்கப்பட்டு, காணாமல் போன புதுப்பெண் மணப்பாறையில் உள்ள தோழி வீட்டில் இருந்து மீட்கப்பட்டார். #EswaranMLA
    கடத்தூர்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வுக்கும், கோபி அருகே உள்ள உக்கரம் பெரியார் நகரை சேர்ந்த சந்தியா (வயது 23) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. சந்தியா எம்.சி.ஏ. பட்டதாரி. இவர்கள் 2 பேருக்கும் வருகிற 12-ந் தேதி சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவிலில் திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி சந்தியா, உறவினர் வீட்டுக்கு சென்று வருவதாக வீட்டில் உள்ள தன்னுடைய பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் அன்று இரவு வரை அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மணப்பெண்ணின் பெற்றோர் கடத்தூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சந்தியாவை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சந்தியா, திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள அவருடைய தோழி வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து போலீசார் மணப்பாறைக்கு விரைந்து சென்று சந்தியாவை மீட்டனர். விசாரணையின்போது சந்தியா கூறுகையில், ‘எனக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை. எனவே, கடந்த 1-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி திருச்சி அருகே மணப்பாறையில் உள்ள எனது தோழி வீட்டுக்கு சென்றுவிட்டேன். ஆனால் போலீசார் என் இருப்பிடத்தை கண்டுபிடித்து விட்டனர்’ என்றார்.

    இதையடுத்து சந்தியாவை போலீசார் கோபி கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு பாரதி பிரபா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதைத்தொடர்ந்து சந்தியா தனது பெற்றோரிடம் சென்றார்.  #EswaranMLA
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஈஸ்வரனுக்கு நிச்சயிக்கப்பட்டு, காணாமல் போன புதுப்பெண் மணப்பாறையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். #EswaranMLA
    கோபி:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஈஸ்வரன் (வயது 43).

    இவருக்கும் சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியார் நகரை சேர்ந்த ரத்தினசாமி என்பவரது மகள் சந்தியா (வயது 23) என்ற எம்.சி.ஏ. பட்டதாரி பெண்ணுக்கும் வருகிற 12-ந் தேதி திருமணம் நடக்க இருந்தது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் பண்ணாரி அம்மன் கோவிலில் திருமணம் நடக்க இருந்தது.

    திருமண ஏற்பாடுகள் தடல்புடலாக நடந்தது. உறவினர்களுக்கு பத்திரிகை கொடுக்கப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் எம்.எல்.ஏ.வுடனான திருமணம் பிடிக்காமல் சந்தியா வீட்டை விட்டு வெளியேறி அக்காள் வீட்டுக்கு சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றவர் மாயமாகி விட்டார்.

    திருமணம் செய்ய இருந்த ஈஸ்வரன் எம்.எல்.ஏ-சந்தியா ஜோடியாக எடுத்த படம்.

    மணப்பெண் திடீரென மாயமானதால் இருவர் வீட்டிலும் பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டது. இது குறித்து மணப்பெண்ணின் தாய் தங்கமணி கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புகாரில் தனது மகளுக்கும், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள கொளத்துப்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ் (25) என்பவருடன் பழக்கம் இருந்ததாகவும் மகளை மீட்டு தரும்படியும் கூறி இருந்தார். இதையொட்டி கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மணமகளை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் மணமகள் சந்தியாவின் செல்போன் எண்ணை வைத்து செல்போன் டவர் மூலம் விசாரித்தபோது திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருப்பதாக காட்டியது.

    இதனால் சந்தியா தனது ஆண் நண்பர் விக்னேசுடன் மணப்பாறையில் தங்கி இருப்பது தெரியவந்தது. எனவே கடத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் தலைமையில் தனிப்படை போலீசார் மணப்பாறைக்கு விரைந்துள்ளனர். #EswaranMLA